Jump to content

புதிய அரசியல் கலாசாரம் ஒன்றின் ஊடாகவே வடக்கின் கல்வியை கட்டி எழுப்பலாம்; கணேஷ் வேலாயுதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசியல் கலாசாரம் ஒன்றின் ஊடாகவே வடக்கின் கல்வியை கட்டி எழுப்பலாம்; கணேஷ் வேலாயுதம்

  • பானகமுவ நிருபர்

இம்முறை வெளியான க. பொ. த சாதாரணப் பரீட்சைப் பெறு பேறுகளின் அடிப்படையில் வட மாகாணம் தொடர்ந்து ஒன்பதாவது நிலையில் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. புதிய அரசியல் கலாசாரம் ஒன்றின் மூலமாகவே இதை மாற்றியமைக்க முடியும். தொடர்ந்து எதிர்ப்புவாத அரசியலை மட்டும் பேசிக் கொண்டிப்;பதில் எவ்விதமான அர்த்தமுமில்லை என்று சிவன் அறக்கட்டளையின் இயக்குனரும், ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

கணிசமாளவு பிரத்தியேக வகுப்புக்கள் ஏனைய மாவட்டங்களில் விட யாழ்ப்பாண மாவட்டத்திலேயே நடைபெறுகிறது. 24 மணித்தியாலத்தில் 365 நாட்களிலும் முழு நேரப்படிப்பே காணப்படுகிறது. ஓய்வு நிலையில்லாமல் இப்படியான படிப்பு ஒரு போதும் வெற்றியளிக்கப் போவதில்லை. பிள்ளைகள் மூச்சுவிடுவதற்கு நேரமில்லை. குறிப்பாக ஓய்வு இல்லாத கல்வியே எம்முடைய தோல்விக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.

யாழ்ப்பாண மாவட்ட கல்வி நிலை தொடர்பில் இம்மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் சரியானமுறையில் தலையீடுகள் செய்வதில்லை. அவர்கள் வெறுமனே எதிர்ப்புவாத அரசியலை மட்டும் பேசி தங்களுடைய இருப்பைத் தக்க வைத்து வருகின்றனர். எனவே புதிய அரசியல் கலாசாரத்தின் ஊடாகத்தான் யாழ் மாவட்டத்தின் கல்வி வீழ்ச்சியை கட்டி எழுப்ப முடியும்.

யாழ் மாவட்ட தமிழ் சமுதாயம்; இந்நாட்டிலே வாழுகின்ற ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகையில் கல்வியில் பின்தங்கியவாகளாகவே காணப்படுகின்றனர். யுத்த காலத்திற்குப் பிற்பாடு இது மூடி மறைக்கப்பட்ட விடயமல்ல. வழக்கம் போல் பஸ்ஸைத் தவறவிட்டு நிற்கின்ற காட்சிகளே காட்டப்படுகின்றன. சகல வளங்களும் இல்லா விட்டாலும் இருக்கின்ற வளங்களைப் பயன்படுத்தி கல்வி மேம்பாடு தொடர்பில் ஆவல் கொண்டு உழைப்பவர்கள் மிகவும் அரிதாகவே உள்ளனர். மாணவர்களின் கல்விப் பெறு பேற்றுக் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் எவராக இருந்தாலும் சரி, யாழ் மாவட்டத்தின் கல்வித் தேவையின் நன்றாக உணர்ந்து செயற்படக் கூடிய நிலையில் எவரும் இல்லை.

கடந்த காலங்களில் வட மாகாண கல்வி மேம்பாட்டுக்காக எமது மூதையர்கள் அல்லும் பகலும் அயராது உழைத்தார்கள். மாணவர்களின் கல்வி முன்னேற்றம் ஒன்றையே கருத்திற் கொண்டு வேளைக்கு உணவெடுக்காது விடுமுறை நாட்கள் அத்தனையையும் மாணவர்களின் படிப்புக்கு என்றே தியாகஞ் செய்து அரும்பெரும் சேவை செய்தமையால் வட மாகாணத்தின் கல்விப் பெருமை எமது நாட்டிலும் மட்டுமல்ல உலகமெங்கும் பேசப்பட்டு வந்;தது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். அதை எவராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. ஆனால் இன்று நாங்கள் ஒரு துரதிருஷ்டமான கால கட்டத்தில் இருக்கின்றோம்.

வட மாகாணத்தின் கல்வி சீர் திருத்தம் என்று கோரிக் கொண்டு சீர் திருத்தப் பணிகளை மேற்கொண்டாலும் தீரும்ப திரும்ப தோல்வி நிலையினையே காணுகின்றோம். இதுவரையிலும் ஒரு மாற்றத்தைக் காண முடியவில்லை. இன்றுள்ள அரசல்வாதிகள் கல்வியில் எப்படி புதிய மாற்றத்தை உருவாக்க முடியும்? வட மாகாண கல்விச் சூழலை ; நாசம் பண்ணும் செயற்பாடுகள் எவை என ஆராய்ந்து பார்த்து இதுவரையும் சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

எவ்வாறாயினும் எமது மாணவர் சமூகத்தின் எதிர்கால நலனை கருதிற் கொண்டு புதிய அரசியல் கலாசாரத்தின் ஊடகத்தான் ஆக்கபூர்வமான மாற்றங்களை முன்னெடுக்க வேண்டி இருக்கிறது. ;ஆகவே யாழ் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும் விருத்திற்காகவும் எடுக்கின்ற முயற்சிகளும் செலவிடுகின்ற காலமும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அவையே வெற்றிக்கு வழிகோலும் என்று அவர் மேலும் தெரிவித்தார்

 

http://thinakkural.lk/article/40615

Link to comment
Share on other sites

இப்போதைய வடமாகாண கல்வி நிலவரம் குறித்து சிங்களவர்களிடம் கதைத்தபோது , அவர்கள் அதை நம்ப மறுத்தார்கள்। அதாவது அவர்களிடேமே ஒரு நல்ல எண்ணம் இருந்தது। எனவே கல்விமான்கள் இதை மீண்டும் ஒரு முறை சீர்தூக்கி பார்ப்பது நல்லது। புலம்பெயர் இலங்கை தமிழர்கள் இதில் கவனம் செலுத்தவேண்டும்। பணம் மட்டுமல்ல , ஒழுக்கமும் மிக முக்கியம்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்விக்கும் புதிய அரசியல் கலாச்சாரத்திற்கும் இடையே என்ன தொடர்பு ? 🤔

ஆ....ங் .... விளங்கவேயில்லையே  😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

கல்விக்கும் புதிய அரசியல் கலாச்சாரத்திற்கும் இடையே என்ன தொடர்பு ? 🤔

ஆ....ங் .... விளங்கவேயில்லையே  😜

95 க்கு முதல் யாழில் இருந்த கலாச்சாரமாக இருக்குமோ?

Link to comment
Share on other sites

10 hours ago, Vankalayan said:

இப்போதைய வடமாகாண கல்வி நிலவரம் குறித்து சிங்களவர்களிடம் கதைத்தபோது , அவர்கள் அதை நம்ப மறுத்தார்கள்। அதாவது அவர்களிடேமே ஒரு நல்ல எண்ணம் இருந்தது। எனவே கல்விமான்கள் இதை மீண்டும் ஒரு முறை சீர்தூக்கி பார்ப்பது நல்லது। புலம்பெயர் இலங்கை தமிழர்கள் இதில் கவனம் செலுத்தவேண்டும்। பணம் மட்டுமல்ல , ஒழுக்கமும் மிக முக்கியம்। 

முதலில் இந்த வெளி நாட்டுக்கு போகும் கலாச்சாரம் ஒழிய வேணும்; இலங்கை மண்ணில் தான் எமது வருங்காலம் என்ற சிந்தனை வர வேணும்; தாயகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, புலம்பெயர் நாட்டிலும் தான். ஒருவருக்கு £20,000. கொடுத்து இங்கு வந்ததை விட அதே பணத்தை தாயகத்தில் முதலிட்டு இருந்தால் .....??

Link to comment
Share on other sites

12 hours ago, உடையார் said:

புதிய அரசியல் கலாசாரம் ஒன்றின் ஊடாகவே வடக்கின் கல்வியை கட்டி எழுப்பலாம்; கணேஷ் வேலாயுதம்

ஊரை ஏமாத்த கணேஷ் கோஷ்டி கிளம்பி இருக்கு.

அரசியல் கலாச்சாரம் மூலம் கல்வி அபிவிருத்தியாம். இப்பிடி மோட்டு சிந்தனைக் கோஷ்டிகள் உலாவரும் வரையில் கல்வி முன்னேற்றம் கஷ்டம் தான்.

Link to comment
Share on other sites

14 hours ago, Dash said:

முதலில் இந்த வெளி நாட்டுக்கு போகும் கலாச்சாரம் ஒழிய வேணும்; இலங்கை மண்ணில் தான் எமது வருங்காலம் என்ற சிந்தனை வர வேணும்; தாயகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, புலம்பெயர் நாட்டிலும் தான். ஒருவருக்கு £20,000. கொடுத்து இங்கு வந்ததை விட அதே பணத்தை தாயகத்தில் முதலிட்டு இருந்தால் .....??

அப்படி பணம் செலவழித்து கெடடவர்களும், ஏமாற்றப்படடவர்களும் நிறையவே உண்டு। அத்துடன் மூளைசாலிகளின் வெளியேற்றமும் இலங்கை தமிழர்களை நிறையவே பாதித்துவிட்ட்து।

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.