Jump to content

விசாகப்பட்டிணம் வாயுக்கசிவு: அதிகாலை 3 மணிக்கு அலறிய சைரன்.. கதவை உடைத்து மக்களை வெளியேற்றிய போலீஸ்- முகத்தை ஈரத்துணியால் மறைக்க அறிவுறுத்தல்-2,000 பேர் வெளியேற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விசாகப்பட்டிணம் வாயுக்கசிவு: அதிகாலை 3 மணிக்கு அலறிய சைரன்.. கதவை உடைத்து மக்களை வெளியேற்றிய போலீஸ்- முகத்தை ஈரத்துணியால் மறைக்க அறிவுறுத்தல்-2,000 பேர் வெளியேற்றம்

 

many-fall-sick-after-gas-leak-at-lg-polymers-plant-in-visakhapatnam

 

விசாகப்பட்டிணம் கோபால்பட்டிணத்தில் உள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிவினால் 3 கிமீ தூரம், 5 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இதில் 5 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது, சுமார் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலர் மூச்சுவிடச் சிரமம், மற்றும் வாந்தி ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது, சுமார் 1000 பேர் வரை இந்த வாயு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று அதிகாலை 2.30-3 மணியளவில் இந்த வாயுக்கசிவு ஏற்பட்டது. இதில் வெங்கடாபுரம், பத்மபுரம், பி.சி.காலனி, கம்பாபலேம் ஆகிய கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.

அதிகாலை 3 மணிக்கு சைரனில் போலீஸார் மக்களை எச்சரித்தனர். ஆம்புலன்ஸ்கள், ஆந்திர அரசுப் பேருந்துகள், போலீஸ் வேன்கள் மக்களை வெளியேற்ற பயன்பட்டன.

1588826738298.jpg

போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார் மீனா கூறும்போது, “சுமார் 100 முதல் 200 பேருக்கு மூச்சுத் திணறல், வாந்தி ஏற்பட்டது. இவர்கள் நகரில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் இதுவரை யாரும் பலியானதாக அதிகாரப் பூர்வ தகவல்கள் இல்லை. ஆனால் 3 பேர் பலியானதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டைரீன் என்ற இந்த வாயுக் கசிந்துள்ளது, ஆனால் மக்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. குடியிருப்புப் பகுதிகளில் போலீசார் கதவுகளை உடைத்து வீட்டில் உள்ளவர்களை வெளியேற்றியுள்ளனர்.

2000 பேர் வெளியேற்றம்

வாயுக்கசிவினால் சுமார் 2000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர், பல ஊர்வாசிகள் தாங்களாகவே வெளியேறிவிட்டனர்.

மாவட்ட கலெக்டர் வி.வினய் சந்த், 300 படுக்கைகள் தயாராக இருப்பதாகவும் மக்கள் ஈரம் தோய்ந்த முகக்கவசம் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

தேசியப் பேரிடர் குழு மக்களை வெளியேற்ற அங்கு விரைந்துள்ளனர்.

முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி இந்த வாயுக்கசிவு குறித்து விசாரிக்க விசாகப்பட்டிணத்துக்கு வரவிருக்கிறார். மாவட்ட ஆட்சியர் துரித நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது

https://www.hindutamil.in/news/india/553222-many-fall-sick-after-gas-leak-at-lg-polymers-plant-in-visakhapatnam-2.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3-dead-after-gas-leak-at-chemical-plant-in-Visakhapatnam.jpg

3 கிமீக்கு பரவியது.. 5000 பேர் மயக்கம்.. 8 பேர் பலி.. விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவு!

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 8 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் எல்ஜி பாலிமர் ரசாயன தொழிற்சாலை மிகவும் பிரபலமானது. அங்கு இருக்கும் ஆர்ஆர் வேங்கடபுரம் கிராமத்தில் இந்த தொழிற்சாலை உள்ளது. 1961ம் ஆண்டில் இருந்து இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

ஹிந்துஸ்தான் பாலிமர் என்று தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் Mc Dowell & Company Limited நிறுவனத்துடன் 1978ல் இணைக்கப்பட்டது. இங்கு பாலிமர் ரசாயன பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எல்ஜி பாலிமர் தொழிற்சாலையில் இன்று அதிகாலை பெரும் வெடிப்பு சத்தத்துடன் விபத்து ஏற்பட்டது. அதிகாலை 3 மணிக்கு விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் இருந்து அதிக அளவில் புகைகள் வந்த வண்ணம் இருந்தது. இந்த புகை அருகில் இருக்கும் கிராமங்களுக்கு பரவ தொடங்கியது. இதற்கு அருகே நிறைய வீடுகள் உள்ளது.

இந்த நிலையில் இந்த தொழிற்சாலைக்கு அருகே இருக்கும் வீட்டில் இருந்த 8 பேர் தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்த நச்சுப்புகை தாக்கி சம்பவ இடத்திலேயே 8 பேர் பலியானார்கள். இதில் ஒரு குழந்தை அடக்கம். அந்த இடத்தில் இருந்து அருகில் இருக்கும் கிராமங்களுக்கு எல்லாம் இந்த விஷவாயு பரவியது. மக்கள் சாலையிலேயே விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர். அதிகாலை வெளியே வந்த பலர் மயங்கி விழுந்தனர்.

மூச்சு விட முடியவில்லை

இந்த புகை காரணமாக ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டவர்களை மற்றவர்களை பைக்கில், காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். கிடைக்கும் வாகனங்களில் மருத்துவமனைக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அருகாமையில் உள்ள கிராமத்தில் வசிப்பவர்கள் சுவாசிக்க முடியாமல் மயங்கி விழுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
என்ன காரணம்

இந்த விஷவாயு கசிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. விபத்து எப்படி ஏற்பட்டது என்றும் தெரியவில்லை. தற்போது தீயணைப்பு படை வீரர்கள் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் தேசிய மற்றும் பேரிடர் மீட்பு படையினர் அங்கு களமிறங்கி உள்ளனர். இந்த விபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து எல்ஜி பாலிமர் உற்பத்தி நிறுவனமும் விளக்கம் அளிக்கவில்லை.

Read more at: https://tamil.oneindia.com/news/hyderabad/8-persons-including-one-child-dead-after-gas-leakage-at-vishakhapatnam-lg-polymers-industry-384741.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஷவாயு தாக்கி 9 பேர் பலி; ஆயிரக் கணக்கானோர் பாதிப்பு!

 

 

5eb3837f85f540541a23e8f5-960x540.jpg?189db0&189db0

இந்தியா – ஆந்திரபிரதேசம், விசாசகப்பட்டிணம் நகர தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் 9 பேர் உயிரிழந்ததுடன் சுமார் ஆயிரம் பேர் வரையில் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எல்.ஜி. பொலிமர்ஸ் இந்தியா எனும் பொலிமர் தொழிற்சாலையொன்றில் இன்று (7) அதிகாலை 3.00 மணியளவில் இச்சம்பவம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சிறுவர்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் விலங்குகளும் பல பாதிக்படைந்துள்ளன.

https://newuthayan.com/விஷவாயு-தாக்கி-9-பேர்-பலி/

ஆந்திராவில் விஷவாயு கசிவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்- ஜெகன் மோகன் ரெட்டி

விசாகப்பட்டிணம் கோபால்பட்டிணத்தில் உள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிவினால் 3 கிமீ தூரம், 5 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இதில் 10 பேர் பலியாகியுள்ளனர், சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பலர் மூச்சுவிடச் சிரமம், மற்றும் வாந்தி ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது, சுமார் 1000 பேர் வரை இந்த வாயு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாலை ஏற்பட்ட இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது.  தகவலறிந்ததும் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்த  தேசியப் பேரிடர் குழு, மீட்பு பணிகளில் ஈடுபட்டது. 
 
ஆந்திர முதல்வர்  ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி இந்த வாயுக்கசிவு குறித்து விசாரிக்க விசாகப்பட்டிணத்துக்கு சென்றார். விஷவாயுக்கசிவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களை நேரில் சந்தித்து ஜெகன் மோகன் ரெட்டி நலம் விசாரித்தார். 
 
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி, விஷவாயுக்கசிவினால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும்  எனவும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும்  தெரிவித்தார். மேலும், விஷவாயுக்கசிவு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.
 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/07151221/Visakhapatnam-Updates-11-dead-govt-announces-Rs-1.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

ஆந்திர பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தின்,  "எல்.ஜி பாலிமர்" தொழிற்சாலையில் ...
விசவாயு கசிவினால்,  ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிலர் இறந்துவிட்டனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் உயிருக்கு போராடி வருகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:
ஆந்திர பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தின்,  "எல்.ஜி பாலிமர்" தொழிற்சாலையில் ...
விசவாயு கசிவினால்,  ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிலர் இறந்துவிட்டனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் உயிருக்கு போராடி வருகின்றனர்.

ஒரு வாயுக்கசிவுக்கே இப்படியென்றால் அணு உலைகளில் கசிவு ஏற்பட்டால் என்னவாகும் நாடுகளின் நிலமை 

 கொரானேக்கே ஈடுகொடுக்க முடியல வல்லரசு நாடுகள்  வேற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூச்சுத் திணறியது..ஒரே குழப்பம்.. குழந்தைகள் மயங்கி விழுந்தனர்: விஷவாயுக் கசிவு திகில் தருணத்தை விவரிக்கும் பெண்

i-thought-i-ll-die-vizag-gas-leak-survivor கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தின் விஷவாயு கசிவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். | சி.வி.சுப்ரமணியம்.
 

விசாகப்பட்டினம்

விசாகப்பட்டினம் கோபால்பட்டினத்தில் உள்ள வேங்கடாபுரம் கிராமத்தில் இருக்கும் எல்.ஜி.பாலிமர்ஸ் தொழிற்சாலையிலிருந்து ஸ்டைரீன் விஷவாயுக் கசிவு ஏற்பட்ட தருணத்தை பாதிக்கப்பட்ட நபர்கள் விவரித்தனர்.

இதுவரை 8 பேர் பலியாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். 200 பேருக்கும் மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் ஒருவர் கூறும்போது, “என்ன நடக்கிறது என்றே புரியவில்லை, அனைவரும் ஓடிக்கொண்டிருந்தனர்.

என் குழந்தைகள் மூச்சுத் திணறலால் விழித்துக் கொண்டனர். ஒரே குழப்பம், அனைவரும் ஓடினர், நாங்களும் வீட்டை விட்டு வெளியே வந்தோம். அனைவரும் நினைவிழந்தோம், என்னால் ஒழுங்காகப் பேசக்கூட முடியவில்லை. குழந்தைகள் தற்போது மீண்டு வருகின்றனர்.

1588840648298.jpg

இன்னொரு நபர் “ஏதோ ஒரு துர்நாற்றம் வீச நாங்கள் வாந்தி எடுத்தோம். என்ன நடந்தது ஏன் இந்த நாற்றம் ஏன் வாந்தி என்பது புரியவேயில்லை. பிறகு மருத்துவமனையில் முடிந்தோம்” என்றார்.

அதிகாலை மக்கள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது இப்படி விஷவாயுக் கசிந்தால் என்னதான் அவர்களால் செய்ய முடியும்?

ஆலைக்கு அருகில் உள்ள 5 கிராமங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் 6 வயது சிறுமி உட்பட 8 பேர் இதுவரை பலியாகியுள்ளனர், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதன் நீண்ட கால ஆரோக்கிய பாதிப்பு என்னவென்பது இனிமேல்தான் தெரியவரும்.

அனைவரையும் ஈரமான முகக்கவசம் அணியுமாறு ஒலிபெருக்கியில் போலீஸார் அறிவுறுத்தினர்.

1588840711298.jpg

உயிரைக் கையில் பிடித்து கொண்டு ஓடியதில் இருட்டில் கண் தெரியாமல் ஒருவர் கால்வாயில் விழுந்து பலியானதாகவும் இன்னொருவர் இருட்டில் கிணற்றில் விழுந்து பலியானதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இதில் மீட்புப் பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகரி ஒருவரும் பாதிக்கப்பட்டார், பலரும் தங்கள் குழந்தைகளை வாரி அணைத்து கொண்டு மருத்துவமனை நோக்கிச் சென்றது நெஞ்சை பிசையும் சோகக் காட்சியாக இருந்தது என்று அங்கு நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

 

https://www.hindutamil.in/news/india/553277-i-thought-i-ll-die-vizag-gas-leak-survivor-2.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Visakhapatnam-Gas-Leak-CM-Jagan-announces-Rs1-crore.jpg

இரசாயன வாயு கசிவு: உயிரிழப்பு 11 ஆக அதிகரிப்பு- உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி நிவாரணம்!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் இரசாயன ஆலையில் வாயுக் கசிவினால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் எல்.ஜி. பொலிமர்ஸ் என்ற இரசாயன தொழிற்சாலையில் இன்று (வியாழக்கிழமை) இரசாயன வாயு கசிந்து வெளியேறியுள்ளது.

அதிக அழுத்தத்துடன் வெளியேறிய வாயு, ஆலைக்கு வெளியே 3 கிலோமீற்றர் தொலைவுக்குப் பரவியது. காற்றில் கலந்த இரசாயன வாயுவால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் உட்பட 11 பேர் மரணித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, விசாகப்பட்டினம் கிங் ஜோர்ஜ் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். சிகிச்சை பெறுவோருக்கு 10 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு உதவி செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதேவேளை, வாயு கசிவு ஏற்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

http://athavannews.com/இரசாயன-வாயு-கசிவு-உயிரிழ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு வாயுக்கசிவுக்கே இப்படியென்றால் அணு உலைகளில் கசிவு ஏற்பட்டால் என்னவாகும் நாடுகளின் நிலமை 

 கொரானேக்கே ஈடுகொடுக்க முடியல வல்லரசு நாடுகள்  வேற

இந்தியா என்பது கிந்தியர்கள் நல்வாழ்வுக்கு பல முன்னாள் நாடுகளை கொண்டு உருவாக்கப்பட்ட தேசம் கிந்தியர்களின் பூமியில் இவ்வாறான ஆபத்தான  தொழில்சாலைகள் பாதுகாப்பற்ற  அணுஉலைக்கூடங்கள் அமைப்பது கிடையாது பேருக்கு அமைத்தாலும் அதிக பாதுகாப்பு கட்டமைப்பு இருக்கும் அதிக வரியை சும்மா இருந்துகொண்டு மத்திய டெல்லி தென்மாநிலங்களை சுரண்டுகின்றது என்பதை இப்போதைய காலகட்டத்தில் உணர தொடங்கி விட்டன ஆங்கிலேயர் காலத்திலும் வரி என்று சுரண்டினார்கள் ஆங்கிலேயர்கள் சுதந்திரம் என்று பெயருக்கு சொல்லி விட்டு இப்பவும் இந்தியா எனும் பெயரை வைத்து சுரண்டுகிறார்கள் தென்  மாநில மக்களை கிந்தியர்கள் . மத்திய டெல்லி மூலம் தென்  மாநிலத்துக்கு கிடைத்த 10 நன்மைகளை பட்டியல் இட  சொல்லுங்கள் பார்ப்பம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

இந்தியா என்பது கிந்தியர்கள் நல்வாழ்வுக்கு பல முன்னாள் நாடுகளை கொண்டு உருவாக்கப்பட்ட தேசம் கிந்தியர்களின் பூமியில் இவ்வாறான ஆபத்தான  தொழில்சாலைகள் பாதுகாப்பற்ற  அணுஉலைக்கூடங்கள் அமைப்பது கிடையாது பேருக்கு அமைத்தாலும் அதிக பாதுகாப்பு கட்டமைப்பு இருக்கும் அதிக வரியை சும்மா இருந்துகொண்டு மத்திய டெல்லி தென்மாநிலங்களை சுரண்டுகின்றது என்பதை இப்போதைய காலகட்டத்தில் உணர தொடங்கி விட்டன ஆங்கிலேயர் காலத்திலும் வரி என்று சுரண்டினார்கள் ஆங்கிலேயர்கள் சுதந்திரம் என்று பெயருக்கு சொல்லி விட்டு இப்பவும் இந்தியா எனும் பெயரை வைத்து சுரண்டுகிறார்கள் தென்  மாநில மக்களை கிந்தியர்கள் . மத்திய டெல்லி மூலம் தென்  மாநிலத்துக்கு கிடைத்த 10 நன்மைகளை பட்டியல் இட  சொல்லுங்கள் பார்ப்பம் ?

பெருமாள்... எந்த நன்மைகளும், கண்ணுக்கு தெரியவில்லை.
ஆயிரம் தீமைகள்... கண் முன்னே வந்து போகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

பெருமாள்... எந்த நன்மைகளும், கண்ணுக்கு தெரியவில்லை.
ஆயிரம் தீமைகள்... கண் முன்னே வந்து போகின்றது.

ஆனால் தென் மாநிலத்தவரின் இந்திய தேசபற்று  எனும் மாயை உண்மைகளை மறைக்க  பண்ணுது அவர்களை தொடர் அடிமைகளாகவே வைத்திருக்க கிந்தியர்கள் நீண்டகால திட்டம்களை நடைமுறைப்படுத்துகிறார்கள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.