Jump to content

“விண்வெளியில் பூமிக்கு மிக அருகில் புதிய கருந்துளை கண்டுபிடிப்பு”


Recommended Posts

இரண்டு நட்சத்திரங்களுடன் தொடர்பு கொள்ளும் விதத்தை அடிப்படையாக கொண்டு இந்த கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

பூமிக்கு அருகிலுள்ள கருந்துளையை கண்டறியும் முயற்சியில் வெற்றியடைந்துள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விண்மீன் தொலைநோக்கியில் இருந்து பார்க்கும்போது சுமார் 1,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த கருந்துளை உள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

இது உங்களுக்கு அருகில் இருப்பது போன்ற உணர்வை தராமல் இருக்கலாம். ஆனால், உண்மையில் பூமியின் அளவுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, இது பக்கத்து வீட்டுக்குள்ள தொலைவே என்று வானியலாளர்கள் கூறுகின்றனர்.

இரண்டு நட்சத்திரங்களுடன் தொடர்பு கொள்ளும் விதத்தை அடிப்படையாக கொண்டு இந்த கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

பொதுவாக, கருந்துளைகள் வாயு மற்றும் தூசி ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளும் விதத்தில் இருந்து கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த செயல்முறையின்போது ஏராளமான எக்ஸ்-கதிர்கள் வெளியேறுகின்றன.

இதற்கு முன்பு வரை, இந்த உயர் ஆற்றல் வெளிப்பாட்டை தொலைநோக்கிகள் வாயிலாக பார்த்தே அங்கு கருந்துளைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து வந்தனரே தவிர, அவர்கள் நேரடியாக கருந்துளையை கண்டறிந்தது இல்லை.

அந்த வகையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கண்டுபிடிப்பு, அசாதாரணமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கருந்துளையுடன் தொடர்பில் உள்ள இரண்டு நட்சத்திரங்களுக்கு ஒன்றாக எச்ஆர் 6819 என்று பெயர்.

"இதை நீங்கள் ஓர் 'இருண்ட கருந்துளை' என்று அழைக்கலாம்; இது உண்மையிலேயே கருப்பு என்ற அர்த்தத்தை உறுதிப்படுத்துகிறது" என்று ஜெர்மனியின் கார்ச்சிங்கில் உள்ள ஐரோப்பிய தெற்கு ஆய்வக (ESO) அமைப்பின் வானியலாளரான டீட்ரிச் பேட் கூறினார்.

“இந்த வகையில், கருந்துளை ஒன்று கண்டறியப்படுவது இதுவே முதல்முறை என்று நான் கருதுகிறேன். அதுமட்டுமின்றி, பூமிக்கு அருகே புதிதாக உருவாகி வரும் கருந்துளைகளையும் சேர்த்து பார்த்தாலும், தற்போது கண்டறியப்பட்டுள்ள கருந்துளைதான் பூமிக்கு மிக அருகில் உள்ள ஒன்று” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

இந்த கதையின் ஒரு வியத்தகு அம்சம் என்னவென்றால், HR 6819 நட்சத்திரங்களை வெறும் கண்ணால் பார்க்க முடியும். ஆனால், அதற்கு தெற்கு வானத்தை காணும் வாய்ப்பு நமக்கு இருக்க வேண்டும். அது மட்டும் இருந்துவிட்டால், தொலைநோக்கி அல்லது பைனாக்குலர் என எதுவும் தேவையில்லை. ஆனால், நட்சத்திர அமைப்பு சூரியனின் பின்னால் இருந்துதான் வெளிப்படுகிறது என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

விஞ்ஞானிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு Be நட்சத்திரம் என்று அழைக்கப்படும் ஒன்றை தேடும்போதே HR 6819 பற்றிய ஆய்வைத் தொடங்கினர். மிகவும் வேகமாகச் சுழலும் இந்த நட்சத்திரம், தன்னைத்தானே சிதைவுற செய்கிறது.

நீண்ட காலமாக நடைபெற்று வந்த இதுகுறித்த ஆராய்ச்சி சமீபத்தில்தான் முடிவுக்கு வந்தது.

சிலியில் உள்ள லா சில்லா ஆய்வகத்தில் 2.2 மீட்டர் தொலைநோக்கியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரண்டு நட்சத்திரங்களின் உட்புற பகுதியும் 40 நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு தெரியாத பொருள் ஒன்றை சுற்றி வருவதை வெளிப்படுத்தின.

கருந்துளை எனக் கருதப்படும் இந்த பொருள் சூரியனைவிட குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிக நிறையை கொண்டிருக்கலாம்.

இதுவரை நமது பால்வழி அண்டத்தில் இருபதிற்கும் மேற்பட்ட கருந்துளைகளைதான் வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை தனது அகந்திரள் வளிம வட்டுகளுடன் (Accretion Discs) வலுவான தொடர்பை கொண்டுள்ளன.

ஆனால் புள்ளிவிவரங்களோ, பால்வழி அண்டத்தில் இன்னும் பல்வேறு கருந்துளைகள் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது.

"பால்வழி அண்டத்தில், சுமார் 100 மில்லியன் கருந்துளைகள் இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. எனவே, பூமிக்கு மிக அருகில் இன்னும் எண்ணற்ற கருந்துளைகள் இருக்கலாம்" என்று வானியல் ஆராய்ச்சியாளரான மரியான் ஹெய்டா பிபிசி செய்தியிடம் தெரிவித்தார்.

இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக விளக்க கட்டுரையொன்று, ஆஸ்ட்ரோனோமி & ஆஸ்ட்ரோபிசிக்ஸ் எனும் சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

 

https://www.bbc.com/tamil/science-52579240

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் கொரோனாவுக்கு மருந்தை கண்டு பிடியுங்கோ 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

முதலில் கொரோனாவுக்கு மருந்தை கண்டு பிடியுங்கோ 
 

நான் எழுதுவம் என்டு வந்தால் நீங்கள் முந்தீட்டிங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
    • க‌னிமொழி போர‌ வார‌ இட‌ங்க‌ளில் எல்லாம் ம‌க்க‌ள் விர‌ட்டி அடிக்கின‌ம் ஆனால் அவா முன் நிலையில்................................
    • 40 இல் (பாண்டிச்சேரி உட்பட) எதுவும் எதிர்க்கட்சிகளுக்குக் கிடையாது. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும்,  வாக்குச்சாவடிக்குப் போய் போட்டால்தான் வாக்கை எண்ணுவார்கள்.😉  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.