Jump to content

கொரோனாவுக்குப் பிந்தைய பிறப்பு விகிதம்: இந்தியா முதலிடம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவுக்குப் பிந்தைய பிறப்பு விகிதம்: இந்தியா முதலிடம்!

spacer.png

 

யுனிசெஃப் அறிக்கையின்படி, இந்த ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் பெரிய அளவில் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஆண்டின் மீதமுள்ள மாதங்களில் 20 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கும் என்று கூறுகிறது. "இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் பெரும்பாலானவை தொற்றுநோய்க்கு முன்பே அதிக குழந்தை பிறந்த இறப்பு விகிதங்களைக் கொண்டிருந்தன. மேலும் இந்த அளவுகள் கோவிட்-19 நிலைமைகளுடன் அதிகரிப்பதைக் காணலாம்," எனக் கூறியுள்ளது. ஒப்பீட்டளவில், இந்தியாவின் பிறப்பு விகிதங்கள் 2018-2019 ஆம் ஆண்டில் ஒரு சதவீத வீழ்ச்சியைக் கண்டதாக குறிப்பிட்டுள்ளது யுனிசெஃப்.

 

யுனிசெஃப், தனது அறிக்கையில், புதிய தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக பிறப்பு விகிதங்கள் கொஞ்சம் கவலையாக இருக்கக்கூடும் என்று கூறுகிறது. பலருக்கு இன்னும் சரியான மகப்பேறுக்கு முற்பட்ட சுகாதார வசதி கிடைக்கவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருக்கக்கூடும் என்கிறது.

மேலும் யுனிசெஃப், "புதிய தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளை கடுமையான யதார்த்தங்கள் தான் முதலில் வரவேற்கும். கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பிரசவ பராமரிப்பு போன்ற உயிர்காக்கும் சுகாதார சேவைகளை சீர்குலைத்து, மில்லியன் கணக்கான கர்ப்பிணித் தாய்மார்களையும் அவர்களின் குழந்தைகளையும் பெரும் ஆபத்தில் ஆழ்த்தும் ” எனக் கூறி அதிர்ச்சியளிக்கிறது.

உலகளவில் கொரோனா நெருக்கடிக்கு பயந்து அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டு பிரசவ கேஸ்கள் விரைந்து வருகின்றன. பல பெண்கள், கிராமப்புறங்களில் அவசர காலத்திற்கு உதவும் மருத்துவச்சிகளை நியமிக்க முடியாமல் திணறுவதாகவும் தகவல்கள் கிடைத்து வருகின்றன என்கிறது ஆய்வறிக்கை. அரசின் முழுக்கவனமும் கொரோனாவின் மீதிருப்பதால், நோய்த்தடுப்பு மற்றும் குடும்ப நல திட்டங்களும் ஆபத்தில் உள்ளன.

spacer.png

யுனிசெஃப் இந்தியா போலவே இதேபோன்ற குழந்தை வளர்ச்சியை அனுபவிக்கும் மற்ற நாடுகளில் சீனா (13.5 மில்லியன்), நைஜீரியா (6.4 மில்லியன்), பாகிஸ்தான் (5 மில்லியன்) மற்றும் இந்தோனேசியா (4 மில்லியன்) ஆகியவை அடங்கும் என பட்டியலிட்டுள்ளது. இந்த நெருக்கடியால் பணக்கார நாடுகள் கூட பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, எதிர்பார்த்த எண்ணிக்கையிலான பிறப்புகளின் அடிப்படையில் ஆறாவது மிக உயர்ந்த நாடாக வரும் என ஆய்வு குறிப்பிடுகிறது. மார்ச் 11 முதல் டிசம்பர் 16 வரை 3.3 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் அமெரிக்காவில் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாய்மையை மறுபரிசீலனை செய்ததை கற்பனை செய்து பார்ப்பதற்கு கடினமாக இருக்கிறது" என்று யுனிசெப் நிர்வாக இயக்குநர் ஹென்றிட்டா ஃபோர் கூறினார். மேலும் தாய்மார்களை முன்னெச்சரிக்கையும் கவனிப்பையும் கடைப்பிடிக்கக் கூறியுள்ளார்.
 

https://minnambalam.com/entertainment/2020/05/08/27/India-projected-to-witness-highest-births-since-Covid-19-pandemic

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் வரும் டிசம்பர் 16ஆம் திகதி வரையில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் கூறி உள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரசால் பிரசவ பராமரிப்பில் பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் திகதி முதன் முதலாக தென்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த கொலைகார வைரஸ் தொற்று, உலகளாவிய தொற்று நோய் என சென்ற மார்ச் மாதம் 11ஆம் திகதி உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.

இந்த கொரோனா வைரஸ் தொற்று மென்மேலும் பரவாமல் தடுப்பதற்காக உலக நாடுகள் பலவும் ஊரடங்கு நடவடிக்கையை எடுத்தது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

இந்த நிலையில், உலகமெங்கும் பெண்கள் கருத்தரிப்பது அதிகமாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த கர்ப்பங்களால் உலகமெங்கும் 11 கோடியே 60 இலட்சம் குழந்தைகள் பிறக்கப்போகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 11ஆம் திகதிக்கு பின்னர் 9 மாதங்களில் உலகில் இதுவரை இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையில் குழந்தை பிறப்பு இருக்கும். இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் பிறக்கும். அதாவது, மார்ச் 11ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 16ஆம் திகதி வரையில் 2 கோடியே 10 இலட்சம் குழந்தைகள் பிறக்கும் என்று ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பு யுனிசெப் கணித்துள்ளது. இதே போன்று கொரோனா வைரஸ் தோன்றிய நாடான சீனாவில் 1 கோடியே 35 இலட்சம் குழந்தைகள் பிறக்கும்.

நைஜீரியாவில் 64 இலட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 50 லட்சம் குழந்தைகளும், இந்தோனேசியாவில் 40 இலட்சம் குழந்தைகளும் பிறக்கும் என்று யுனிசெப் கூறி உள்ளது. எதிர்பார்க்கப்படுகிற குழந்தைகளின் எண்ணிக்கையில் 6 வது இடத்தில் உள்ள அமெரிக்க நாட்டில் மார்ச் 11 முதல் டிசம்பர் 16 வரையில் 32 .இலட்சம் குழந்தைகள் பிறக்கும்.

இந்த நாடுகளில் எல்லாம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தோன்றுவதற்கு முன்பாகவே புதிதாக பிறந்த குழந்தைகளின் இறப்புவீதம் அதிக அளவில் இருந்ததாகவும், இது கொரோனா வைரஸ் பரவியுள்ள சூழ்நிலையில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் யுனிசெப் எச்சரித்துள்ளது.

நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையில் இந்தியாவில் 2 கோடியே 41 இலட்சம் குழந்தைகள் பிறக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் பிரசவ பராமரிப்பு, உயிர்காக்கும் சுகாதார சேவைகள் பாதிக்கும், கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக பணக்கார நாடுகள் கூட பாதிப்புக்கு ஆளாகுமாம். புதிய தாய்மார்களும், புதிய குழந்தைகளும் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள கடுமையான எதார்த்தங்களுக்கு மத்தியில் வரவேற்கப்படுகிற சூழல் உருவாகும். இதையொட்டி யுனிசெப் அமைப்பின் செயல் இயக்குனர் ஹென்ரிட்டா போரே கூறியதாவது:-

உலகமெங்கும் கோடிக்கணக்கான பெண்கள் தாயாகும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் சுகாதார மையங்களுக்கு செல்லலாம். அவர்கள் சுகாதார பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் அவசர சிகிச்சையை இழக்க நேரிடலாம். எந்த ஒரு சூழலிலும் இப்போது அமையக்கூடிய வாழ்க்கை சூழலுக்கு அவர்கள் தங்களை பக்குவப்படுத்தி கொண்டு தயாராக வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் சூழல், தாய்மை அடைவதை மறுபரிசீலனை செய்ய வைக்கும் என்றெல்லாம் கற்பனை செய்ய முடியாது. இந்த ஆண்டு சர்வதேச அன்னையர் தினம் ஒரு கடுமையான தினமாக அமைகிறது. ஏனென்றால், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பல குடும்பங்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இது ஒற்றுமைக்கான நேரம். அனைவரையும் ஒன்றிணைக்கும் நேரம்.

ஒவ்வொரு கர்ப்பிணி தாயும், அவளுக்கு தேவையான ஆதரவை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் அடுத்தடுத்த மாதங்களில் பாதுகாப்பாக குழந்தை பிறக்கவும், உயிரைக்காப்பாற்றவும் நாங்கள் உதவ முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

வரும் மாதங்களில் உயிர்களை காப்பதற்கு அரசாங்கங்கள் தேவையான சுகாதார பராமரிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று யுனிசெப் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை பெறவும் நல்ல விதமாக குழந்தைகளை பெற்றெடுக்கவும், பிரசவத்துக்கு பிந்தைய கவனிப்புகளை சரியாக பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யுனிசெப் கேட்டுக்கொண்டுள்ளது.

http://www.pagetamil.com/122636/?fbclid=IwAR3MUW6R3k-vNAG-QsZ7OVD8IwpE2LO1_eJvyPkZakHHVQSQbbKjljA570s

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.