Jump to content

நானும் யாழ் இணையமும் - கோமகன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யாழ் இணையமும் - கோமகன்

நான் யாழ் இணையத்தின் கருத்துக்களத்தில் 2011 இல் இணைந்தேன். எனது முதல் எழுத்தான 'நெருடிய நெருஞ்சி ' குறுநாவலும் அங்கேதான் உருவாக்கியது. நான் அங்கு இருந்த காலம் மிகக்குறுகியது. ஏறத்தாழ 2013 வரை அங்கு இருந்தேன். அப்பொழுதெல்லாம் இந்த முகநூல் பெரிய பிரபல்யம் அடையாத நேரம். கருத்துக்களம் எமக்கு பெரும் புதினமாக இருந்தது. அங்கேயே பாய் போட்டு படுத்திருந்தோம். ஒருவருக்குப்  பல முகங்கள் இருந்தன. சிலமுகங்கள்  சர்வதேசரீதியாக ஒரே தடவையில் கருத்துக்களத்தில் கருத்தாடுவார்கள். மட்டுநிறுத்தினர்கள் முழி பிதுங்குவார்கள், காரணம் அப்பொழுது பெரிதாக தொழில் நுட்பம் வளரவில்லை. கருத்துக்கள் பொறி பறக்கும். சண்டை சமாதானம் என்று எல்லாமே இருந்தது. அது ஒரு பொற்காலம் என்றே சொல்வேன். பலருக்குப் பலரை இன்னார் என்றே தெரியாது. ஆனால் அண்ணன் தம்பி போல் கட்டிப்பிரண்டு இருக்கின்றோம். ஐ டி க்களைப்பற்றி அறியும் ஆர்வம் எமக்கு இருந்தது. ஆனால் இன்றுவரை அவர்கள் யார் என்றே தெரியாது. ஆனால் இன்று முகநூல் ஒரு சிலரை அடையாளப்படுத்தி இருக்கின்றது அதில் முக்கியமானவர் எனது எழுத்து ஆசான்களில் ஒருவரான கிருபன் ஜி. அதே வெளியில் நான் சுருக்கு சுறுக்கராக வலம்வந்து பனங்கொட்டைத்தமிழில் எழுதுவதற்கு எனக்கு ஆதர்சமாக இருந்தவர் குமாரசாமி மற்றும் சுப்பையா. இன்று இங்கு உலாத்தும் உழவாரத்தை சில வேளைகளில் நான் குமாரசாமியோ என்று கூட எண்ணுவதுண்டு. இன்றும் கூட முகநூலில் யாழ் நண்பர்கள் நிதானம் தப்பாது நாகரிகமாக கருத்தாடுவதற்குரிய பயிற்சியை யாழ் கருத்துக்களுமே தந்தது.    

இன்று இலக்கியப்பரப்பில் நட்சத்திர எழுத்தாளர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் எழுத்தாளப்பெருமக்களின் ஆதி மூலம் யாழ் இணையம் தான். அதுதான் புலம்பெயர் ஈழத்து தமிழ் எழுத்துப்பரப்பிற்குப் பெரும்கொடையாளியாக இருந்தது. அதில் முக்கியமானவர்களை இங்கு வரிசைப்படுத்துகின்றேன். 

தமிழ்நதி 
வல்வைசஹாரா 
சந்திரவதனா 
கறுப்பி சுமதி 
சாந்தி 
நிவேதா உதயராஜன் ( மொசப்பத்தேமியா சுமேரியர் )
மயோ மனோ 
சாத்திரி 
சயந்தன் 
கானா பிரபா 
கோமகன் 
சஞ்சயன் 
ஜே கே படலை 
நெற்கொழுதாசன் 
இணுவையூர் மயூரன் 

இவர்கள் அனைவரும் தாங்கள் புனைந்த நூல்களின் அடிப்படையில் பொதுவெளியில் அறியப்பட்டவர்கள். சில பேர்கள் தவறவிடப்பட்டிருக்கலாம். அறியத்தந்தால் மிக்க நன்றியுடையவனாக இருப்பேன். நன்றி .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முகநூலில் இட்ட பதில்

 

///எனது எழுத்து ஆசான்களில் ஒருவரான கிருபன் ஜி. //

கோமகன் அண்ணா, இது ரொம்ப ஓவர்!

பல எழுத்தாளர்களின்/கருத்தாளர்களின் எழுத்துக்களை வாசிப்பது மட்டும்தான் நான் செய்வது. யாழ் களத்தில் புனைபெயர்களூடாக அறிமுகமான பலர் இன்று எழுத்துலகில் முன்னணியில் திகழ்வதையிட்டு எனக்கும் நிறைய பெருமிதம் உள்ளது.😀

கனதியான எழுத்துக்களைப் புரிய நுணுக்கமான வாசிப்புப் பயிற்சி அவசியம் என்று புகழ் பூத்த சிற்றிலக்கிய/பேரிலக்கிய எழுத்துவனைஞர்கள் தொடர்ந்தும் சொல்லிவருவதால் கிடைக்கும் ஐந்து நிமிட இடைவெளியிலும் எதையாவது வாசித்துக்கொண்டே இருக்கின்றேன். யாழ் களத்திலும் அதற்கு வெளியிலும் தொடர்ந்தும் எழுதுவர்களின் வாசிப்பில் இன்னும் பயில நிறைய இருக்கின்றது. 😃
 

Link to comment
Share on other sites

இதில் தமிழ் நதி, ஜே கே படலை, கறுப்பி சுமதி ஆகியோர் யாழில் முதன் முதலில் எழுதாகாமலேயே பிரபலமானவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

இதில் தமிழ் நதி, ஜே கே படலை, கறுப்பி சுமதி ஆகியோர் யாழில் முதன் முதலில் எழுதாகாமலேயே பிரபலமானவர்கள்.

இவர்களும் யாழில் எழுதினார்கள் என்று இன்றைக்கு தான் தெரியும் ...கறுப்பி சுமதி என்பவர் அர்ஜுன் அண்ணாவின் தங்கச்சியா?
 

5 hours ago, கிருபன் said:

நான் முகநூலில் இட்ட பதில்

 

///எனது எழுத்து ஆசான்களில் ஒருவரான கிருபன் ஜி. //

கோமகன் அண்ணா, இது ரொம்ப ஓவர்!

பல எழுத்தாளர்களின்/கருத்தாளர்களின் எழுத்துக்களை வாசிப்பது மட்டும்தான் நான் செய்வது. யாழ் களத்தில் புனைபெயர்களூடாக அறிமுகமான பலர் இன்று எழுத்துலகில் முன்னணியில் திகழ்வதையிட்டு எனக்கும் நிறைய பெருமிதம் உள்ளது.😀

கனதியான எழுத்துக்களைப் புரிய நுணுக்கமான வாசிப்புப் பயிற்சி அவசியம் என்று புகழ் பூத்த சிற்றிலக்கிய/பேரிலக்கிய எழுத்துவனைஞர்கள் தொடர்ந்தும் சொல்லிவருவதால் கிடைக்கும் ஐந்து நிமிட இடைவெளியிலும் எதையாவது வாசித்துக்கொண்டே இருக்கின்றேன். யாழ் களத்திலும் அதற்கு வெளியிலும் தொடர்ந்தும் எழுதுவர்களின் வாசிப்பில் இன்னும் பயில நிறைய இருக்கின்றது. 😃
 

 

அவர் உங்களை புகழுவார் ...நீங்கள் தான் அவர் கதைகளை யாழில் கொண்டு வந்து இணைக்கிறீர்கள் tw_lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

அவர் உங்களை புகழுவார் ...நீங்கள் தான் அவர் கதைகளை யாழில் கொண்டு வந்து இணைக்கிறீர்கள் tw_lol:

Vadivelu Thank You GIF - Vadivelu ThankYou Advocate GIFs

ஆஹா... ரதி.
இதற்குத்தான்.... யாழ். களத்தில்,  நல்ல  சட்டத்தரணிகளும் வேண்டும். 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரதி said:

இவர்களும் யாழில் எழுதினார்கள் என்று இன்றைக்கு தான் தெரியும் ...கறுப்பி சுமதி என்பவர் அர்ஜுன் அண்ணாவின் தங்கச்சியா?
 

அவர் உங்களை புகழுவார் ...நீங்கள் தான் அவர் கதைகளை யாழில் கொண்டு வந்து இணைக்கிறீர்கள் tw_lol:

நானும் கேட்க வேணுமெண்டு நினைச்சனான். சுமதி கறுப்பி எண்டவர் அர்ஜுன் அண்ணையின்ரை அக்காவோ தங்கச்சியோ?
"மனுசி" எண்ட குறும் படமும் நடிச்சவ எண்டு நினைக்கிறன்.:)

Link to comment
Share on other sites

வெளியே எழுதாவிட்டாலும் புத்தன், சுவி அண்ணா போன்ற சிறந்த எழுத்தாளர்களும் யாழில் உள்ளனர். சிறந்த எழுத்தாளுமை உள்ள இன்னுமொருவன் யாழுக்கு வெளியே எழுதுவதில்லை என்று எங்கோ சொன்னதாக ஞாபகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

நானும் கேட்க வேணுமெண்டு நினைச்சனான். சுமதி கறுப்பி எண்டவர் அர்ஜுன் அண்ணையின்ரை அக்காவோ தங்கச்சியோ?
"மனுசி" எண்ட குறும் படமும் நடிச்சவ எண்டு நினைக்கிறன்.:)

தங்கச்சியாய்த் தான் இருக்க கூடும் ...எல்லோரும் சொல்றத்திற்கு பயப்பிடினம் 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர்கள் வரிசையில் எனது பெயரைக் கானவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் புத்தகம் பிரசுரித்தவர்களைத்தான் பட்டியல் போட்டிருக்கின்றார். ஆனால் யாழ் இணையத்தில் புனைவு எழுத்தையும், கருத்தாடல்களில் தர்க்க ரீதியாக எழுதியவர்கள்/எழுதிக்கொண்டிருப்பவர்கள் எல்லோருமே சிறந்த படைப்பாளிகள், கருத்தாளர்கள்தான். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, சுவைப்பிரியன் said:

எழுத்தாளர்கள் வரிசையில் எனது பெயரைக் கானவில்லை.

நாமெல்லாம் சுருக்கர்ட லிஸ்ட்டில் இல்லை சுவைப்பிரியன் அண்ணா  நாமெல்லாம் சின்ன பொடியன்கள் 

சுருக்கர் இப்ப ஏன் யாழிணையத்தை பற்றியும் இணைந்து கருத்து கதை கவிதை எழுதியவர்களையும் நினைவு கூருகிறார் கிருபன் 

19 hours ago, கிருபன் said:

இன்றும் கூட முகநூலில் யாழ் நண்பர்கள் நிதானம் தப்பாது நாகரிகமாக கருத்தாடுவதற்குரிய பயிற்சியை யாழ் கருத்துக்களுமே தந்தது.    

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சுருக்கர் இப்ப ஏன் யாழிணையத்தை பற்றியும் இணைந்து கருத்து கதை கவிதை எழுதியவர்களையும் நினைவு கூருகிறார் கிருபன் 

கொரோனா எல்லோருக்கும் பழையவற்றை மீள் நினைவுக்குக் கொண்டுவரவும் கனகாலம் தொடர்புகள் அற்று இருப்பவர்களுடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தவும் நேரத்தைக் கொடுத்துள்ளது.

சின்னச் சின்ன விடயங்களுக்கு கோபப்படுவதையும், இறப்பில்லாத வாழ்வு நித்தியம் என்ற இறுமாப்பையும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரி இல்லாமல் ஆக்கியுள்ளது!

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா நாமளும் நட்சத்திர எழுத்தாளர் லிஸ்டில் இருக்கிறமா???????????🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை ந‌ண்ப‌ன் ஜ‌முனா   எவ‌ள‌வ‌த்தை எழுதி இருக்கிறார் ,
ச‌கோத‌ர‌ர் நொடுங்ஸ் , விக‌ட‌க‌வி அண்ணா ,  க‌லைஞ‌ன் அண்ணா ,

ஜ‌முனா தொட‌ர்ந்து யாழில் எழுதி இருக்க‌னும் இன்னும் ப‌ல‌ நூறு ஆக்க‌ங்க‌ளை எழுதி இருப்பார் ,

 மேல‌ கோம‌க‌ன் எழுதின‌ ஆட்க‌ளின் பெய‌ரை விட இன்னும் ந‌ல்லா எழுத‌க் கூடிய‌ ப‌ல‌ உற‌வுள் யாழ் குடும்ப‌த்தில் இணைந்து இருந்த‌வை க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2020 at 16:10, கிருபன் said:

நானும் யாழ் இணையமும் - கோமகன்

நான் யாழ் இணையத்தின் கருத்துக்களத்தில் 2011 இல் இணைந்தேன். எனது முதல் எழுத்தான 'நெருடிய நெருஞ்சி ' குறுநாவலும் அங்கேதான் உருவாக்கியது. நான் அங்கு இருந்த காலம் மிகக்குறுகியது. ஏறத்தாழ 2013 வரை அங்கு இருந்தேன். அப்பொழுதெல்லாம் இந்த முகநூல் பெரிய பிரபல்யம் அடையாத நேரம். கருத்துக்களம் எமக்கு பெரும் புதினமாக இருந்தது. அங்கேயே பாய் போட்டு படுத்திருந்தோம். ஒருவருக்குப்  பல முகங்கள் இருந்தன. சிலமுகங்கள்  சர்வதேசரீதியாக ஒரே தடவையில் கருத்துக்களத்தில் கருத்தாடுவார்கள். மட்டுநிறுத்தினர்கள் முழி பிதுங்குவார்கள், காரணம் அப்பொழுது பெரிதாக தொழில் நுட்பம் வளரவில்லை. கருத்துக்கள் பொறி பறக்கும். சண்டை சமாதானம் என்று எல்லாமே இருந்தது. அது ஒரு பொற்காலம் என்றே சொல்வேன். பலருக்குப் பலரை இன்னார் என்றே தெரியாது. ஆனால் அண்ணன் தம்பி போல் கட்டிப்பிரண்டு இருக்கின்றோம். ஐ டி க்களைப்பற்றி அறியும் ஆர்வம் எமக்கு இருந்தது. ஆனால் இன்றுவரை அவர்கள் யார் என்றே தெரியாது. ஆனால் இன்று முகநூல் ஒரு சிலரை அடையாளப்படுத்தி இருக்கின்றது அதில் முக்கியமானவர் எனது எழுத்து ஆசான்களில் ஒருவரான கிருபன் ஜி. அதே வெளியில் நான் சுருக்கு சுறுக்கராக வலம்வந்து பனங்கொட்டைத்தமிழில் எழுதுவதற்கு எனக்கு ஆதர்சமாக இருந்தவர் குமாரசாமி மற்றும் சுப்பையா. இன்று இங்கு உலாத்தும் உழவாரத்தை சில வேளைகளில் நான் குமாரசாமியோ என்று கூட எண்ணுவதுண்டு. இன்றும் கூட முகநூலில் யாழ் நண்பர்கள் நிதானம் தப்பாது நாகரிகமாக கருத்தாடுவதற்குரிய பயிற்சியை யாழ் கருத்துக்களுமே தந்தது.    

இன்று இலக்கியப்பரப்பில் நட்சத்திர எழுத்தாளர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் எழுத்தாளப்பெருமக்களின் ஆதி மூலம் யாழ் இணையம் தான். அதுதான் புலம்பெயர் ஈழத்து தமிழ் எழுத்துப்பரப்பிற்குப் பெரும்கொடையாளியாக இருந்தது. அதில் முக்கியமானவர்களை இங்கு வரிசைப்படுத்துகின்றேன். 

தமிழ்நதி 
வல்வைசஹாரா 
சந்திரவதனா 
கறுப்பி சுமதி 
சாந்தி 
நிவேதா உதயராஜன் ( மொசப்பத்தேமியா சுமேரியர் )
மயோ மனோ 
சாத்திரி 
சயந்தன் 
கானா பிரபா 
கோமகன் 
சஞ்சயன் 
ஜே கே படலை 
நெற்கொழுதாசன் 
இணுவையூர் மயூரன் 

இவர்கள் அனைவரும் தாங்கள் புனைந்த நூல்களின் அடிப்படையில் பொதுவெளியில் அறியப்பட்டவர்கள். சில பேர்கள் தவறவிடப்பட்டிருக்கலாம். அறியத்தந்தால் மிக்க நன்றியுடையவனாக இருப்பேன். நன்றி .

 

 

 

கிருப‌ன் அண்ணா , கோம‌க‌ன் என் கூட‌ முந்தி ஜாலியா எழுத‌ நான் நினைத்தேன் இவ‌ருக்கு 25 , 26 வ‌ய‌து இருக்கும் என்று , நீங்க‌ள் இணைத்த‌ இணைப்பில் அவ‌ரின் முக‌ நூல் பெய‌ர் இருக்கு உள்ள‌ போய் பார்த்தா , கோம‌க‌ன் ஜ‌யாவை விட‌ ( என்ர‌ குசா தாத்தா கொஞ்ச‌ம் இள‌மையா இருக்கிறார் )


யாழில் இருந்த‌ சின்ன‌ பெடிய‌ங்க‌ள் என்றால்
நான்
ஜ‌முனா
ஈழ‌வ‌ன்85
சுவேஸ்
ஜீவா
சுண்ட‌ல் மாமா 😁

கூடுத‌லா யாழில் 45வ‌ய‌தில் இருந்து 65வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌வை தான் கூட‌ /
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.