கருத்துக்கள உறவுகள் பெருமாள் பதியப்பட்டது May 9, 2020 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது May 9, 2020 யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் தலைமறைவாக உள்ள ரௌடிகளை தேடி இராணுவத்தினர் நேற்று (8) இரவு திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், தலைமறைவாக உள்ள ரௌடிகள் சிலரை தேடி, பல வீடுகளிலும் இராணுவத்தினர் சோதனை செய்தனர். கடந்த ஜனவரி மாதம் தைப்பொங்கல் தினத்தில் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் சில இளைஞர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்களை மீட்க சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் களமிறங்கினார் என பல செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், அந்த சம்பவத்தின் பின்னணி குறித்து எந்த தகவலும் வெளியாகியிருக்கவில்லை. நாகர்கோவில் பகுதியில் அன்றைய தினம் மதுபோதையில் இருந்த கும்பல் ஒன்று பெண்களிடம் அத்துமீறி நடக்க முற்பட்டது. வீதியால் சென்ற சில இளம்பெண்களிடம் அத்துமீறி நடக்க முற்பட்டபோது, அவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்ற இராணுவச்சிப்பாய்கள் இதனை அவதானித்துள்ளனர். இதேவேளை, சிப்பாய்களை கண்டதும், பெண்களும் அவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். ஒரு சிபபாய் விரைந்து சென்று, பெண்களுடன் எல்லை மீறி நடந்தவர்களை தட்டிக் கேட்டார். அங்கு வாய்த்தர்க்கம் முற்றி, இராணுவச்சிப்பாயை அந்த கும்பல் தாக்கியது. சிப்பாயின் கைடக்க தொலைபேசியையும் அவர்கள் பறித்து, பின்னர் ஒப்படைத்துள்ளனர். இராணுவச்சிப்பாய் தாக்கப்பட்ட விடயமறிந்ததும், இராணுவத்தினரும் பொலிசாரும் அந்த பகுதியை சுற்றிவளைத்து, ரௌடித்தனமாக செயற்பட்டவர்களை கைது செய்திருந்தனர். பின்னர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் அவர்கள் முற்படுத்தப்பட்டபோது, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்களிற்காக முன்னிலையாகினார். அந்த இளைஞர்களிற்காக எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானது நாகர்கோவில் பகுதியில் பலத்த அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த கும்பலுடன் தொடர்புபட்டவர்கள் வல்வெட்டித்துறையில் பதுங்கியிருந்தபோது, அங்கு வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டனர். எனினும், மதுபோதையில் மோசமாக நடந்து கொண்ட பிரதான சந்தேகநபர் இதுவரை சிக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறார். அவரை இலக்கு வைத்து நேற்று நாகர்கோவில் பகுதியில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. https://www.pagetamil.com/122866/ Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் உடையார் Posted May 9, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 9, 2020 கன்னத்தில் அறைந்தவரை தேடி அடாவடி புரிந்த இராணுவம் வடமராட்சி – கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் கடந்த தைப் பொங்கல் தினத்தன்று இராணுவ வீரர் ஒருவரது கன்னத்தில் அறைத்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரை இராணுவத்தினர் இன்று வரை தேடி வருகின்றனர். எனினும் குறித்த நபர் இராணுவத்துக்கு தண்ணி காட்டி மறைந்திருக்கும் நிலையில் நேற்று (8) நள்ளிரவு 11 மணியளவில் அவரது, வீட்டை சுற்றிவளைத்த இராணுவத்தினர் அங்கிருந்தவர்களை தாக்கி, உடமைகளையும் சேதமாக்கியுள்ளனர். https://www.facebook.com/mayurapriyan104 இதன்போது வயோதிப பெண் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது நிதானம் இழந்த நிலையில் காணப்பட்ட இராணுவத்தினர் தமது கைபேசி, தொப்பி ஆகியவற்றை சம்பவம் நடைபெற்ற வீட்டு வளவில் தவற விட்டுச் சென்றுள்ளனர். இதேவேளை தேடப்படும் நபர் கன்னத்தில் அறைந்த சம்பவம் நடைபெற்ற அன்று வீதியில் சிறுமி ஒருவரை மோதுவது போல் மோட்டார் சைக்கிளை செலுத்தியதாக கூறி, அவரை இராணுவ வீரர் கண்டித்த போது எழுந்த முரண்பாட்டிலேயே இராணுவ வீரரது கன்னத்தில் அறைந்திருந்தார். இராணுவ வீரரும் பதிலுக்கு அறைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில், வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறித்த தேடப்படும் நபரது பெயர் குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பான பருத்தித்துறை நீதிமன்ற வழக்கிலும் இவரது பெயர் தாக்கல் செய்யப்படாத நிலையிலேயே இராணுவத்தினர் அவரை தேடி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது. https://newuthayan.com/கன்னத்தில்-அறைந்தவரை/ Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted May 9, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 9, 2020 காவாலி வேலை செய்யும் குரங்குகளை ஆமி அடித்தால் கதையை மற்றப்பக்கம் திருப்பிவிடுவார்கள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பெருமாள் Posted May 9, 2020 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted May 9, 2020 1 hour ago, குமாரசாமி said: காவாலி வேலை செய்யும் குரங்குகளை ஆமி அடித்தால் கதையை மற்றப்பக்கம் திருப்பிவிடுவார்கள். அந்த காவலிகளுக்கு ஆதரவாய் வக்கீல் ஆகி வாதிடுபவர் நம்ம உலகப்புகழ் சுமத்திரன் ஐயா . அவர் இறங்கினால் ஊடகர்களுக்கும் மதி மயங்கிடும் நடந்த விடயத்தை அப்படியே தலைகீழா க்கி விடுவினம் அந்த காவாலி கூட்டம் கிழவி என்றும் பாராமல் மண்டை உடைத்து இருக்கினம் அதை தட்டி கேட்ட ஆமிக்கு அடி விழுந்து இருக்கு . Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted May 9, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 9, 2020 24 minutes ago, பெருமாள் said: அந்த காவலிகளுக்கு ஆதரவாய் வக்கீல் ஆகி வாதிடுபவர் நம்ம உலகப்புகழ் சுமத்திரன் ஐயா . அவர் எப்ப ஒழுங்கான/தேவையான விசயங்களுக்காக வாதாடியிருக்கிறார்? எங்கை வருமானம் வருமோ அங்கைதான் நிற்பார். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பெருமாள் Posted May 9, 2020 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted May 9, 2020 அந்த பெண்பிள்ளைகளுடன் கொழுவி கடைசியில் ஆமியுடன் கொள்ளுப்பட்ட காவாலி கூட்டத்தை சுமத்திரன் தன் செல்வாக்கை பயன்படுத்தி வல்வெட்டிதுறையில் உள்ள வீட்டில் போய் ஒளித்து இருக்க சொல்லி இருக்கிறார் அங்கு ஏற்கனவே ஆமியின் புலனாய்வுகள் கூடின இடம் இலகுவாக ஆட்களை பிடித்து விட்டினம் வீட்டுக்காரருக்கு போனில் சுமத்திரன் கேட்டு கொண்டபடியால் இடம் கொடுத்து இருக்கிறார் . Link to comment Share on other sites More sharing options...
நிழலி Posted May 9, 2020 Share Posted May 9, 2020 சுமந்திரன் மீது இருக்கும் அதீத வெறுப்பு, ஈற்றில் தமிழ் பெண்களை வகைதொகையின்றி பாலியல் வல்லுறவு செய்த இராணுவத்தினரையே கதாநாயகர்களாக்கி கொண்டாடச் செய்யுது. Link to comment Share on other sites More sharing options...
Rajesh Posted May 9, 2020 Share Posted May 9, 2020 2 hours ago, உடையார் said: நேற்று (8) நள்ளிரவு 11 மணியளவில் அவரது, வீட்டை சுற்றிவளைத்த இராணுவத்தினர் அங்கிருந்தவர்களை தாக்கி, உடமைகளையும் சேதமாக்கியுள்ளனர். 2 hours ago, உடையார் said: இதன்போது வயோதிப பெண் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண்களுடன் சேட்டை செய்த காவாலிகள் கைது செய்யப்பட்டு கடுமையா தண்டிக்கப்பட வேணும். இந்த காவாலிகளுக்கு துணைநிக்கிற / அடைக்கலம் கொடுக்கிற பேர்வழிகளுக்கும் கண்டிக்கப்பட வேணும். ஆனா சட்ட எல்லைமீறி செயற்படுறதை ஆதரிக்கிறது நல்லதல்ல. அதுவும் சொறிலங்கா ராணுவம் இரவில் ஒரு வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்துவது, பொருட்களை சேதமாக்குவது சொறிலங்கா அரசின் அராஜகமாகவே கருதப்பட வேணும். இதை எந்த காரணத்துக்காகவும் நியாயப்படுத்த ஏலாது. Link to comment Share on other sites More sharing options...
Rajesh Posted May 9, 2020 Share Posted May 9, 2020 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பெருமாள் Posted May 9, 2020 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted May 9, 2020 55 minutes ago, Rajesh said: ஆனா சட்ட எல்லைமீறி செயற்படுறதை ஆதரிக்கிறது நல்லதல்ல. அதுவும் சொறிலங்கா ராணுவம் இரவில் ஒரு வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்துவது, பொருட்களை சேதமாக்குவது சொறிலங்கா அரசின் அராஜகமாகவே கருதப்பட வேணும். இதை எந்த காரணத்துக்காகவும் நியாயப்படுத்த ஏலாது. உண்மையில் இந்த விடயத்தை போலீஸ் கையாண்டு இருக்கணும் ராணுவம் ஒரு எல்லையுடன் அடங்கி இருக்கணும் ஆனால் குழப்பகரமான சேதிகள் வேண்டுமென்றே குற்றவாளிகளால் பரப்பப்படுகின்றது சுமத்திரன் உள்ளே காட்சிக்கு வந்தாலே விளங்கனும் என்ன நடக்கும் என்று . Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted May 9, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 9, 2020 4 hours ago, உடையார் said: முறைப்பாட்டில்... "கரைச்சல் செய்தமை" என்று... எழுதிக் கொடுத்ததுள்ளதை பார்க்க, சிரிப்பு வந்தாலும், அந்த வசனம் எனக்குப் பிடித்துக் கொண்டது. Link to comment Share on other sites More sharing options...
கற்பகதரு Posted May 9, 2020 Share Posted May 9, 2020 3 hours ago, நிழலி said: சுமந்திரன் மீது இருக்கும் அதீத வெறுப்பு, ஈற்றில் தமிழ் பெண்களை வகைதொகையின்றி பாலியல் வல்லுறவு செய்த இராணுவத்தினரையே கதாநாயகர்களாக்கி கொண்டாடச் செய்யுது. சுமேந்திரன் குற்றவியல் (கிரிமினல்) சட்டத்தரணி. இவ்வாறாக கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டவரின் தரப்பு வாதத்தை முன்வைத்து அவர்கள் தரப்பு நியாயத்தை உறுதிப்படுத்தும் துறையில் இவர் தேர்ச்சி பெற்றவர். ஜீ. ஜீ. பொன்னம்பலமும் பிரபலமான குற்றவியல் (கிரிமினல்) சட்டத்தரணி. இந்த துறையை சேர்ந்தவர்கள் சமகாலத்தில் அரசியலில் ஈடுபடுவது முரணான ஆர்வத்தை காட்டுகிறது (conflict of interest). இலங்கைத்தமிழர் ஏதாவதொரு ஆயுதந்தாங்கிய கட்டுப்பாட்டுக்கு கீழேயே வாழத்தகுதியனவர்கள் என்பது அரசராட்சி காலத்தில் இருந்து, காலனித்துவ காட்சிக்காலம், தமிழீழ ஆட்சி, இன்று சிறிலங்கா ஆட்சிவரை தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளது. Link to comment Share on other sites More sharing options...
ரதி Posted May 9, 2020 Share Posted May 9, 2020 காவாளிகள் தமிழராயிருந்தால் பெண்களோடு சேட்டை விட்டால் சிங்கள ஆமி வாயை பொத்தி தெரியாத மாதிரி நிற்கோணும் என்பது தான் இங்கு சிலரது விருப்பம் Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் விளங்க நினைப்பவன் Posted May 10, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 10, 2020 6 hours ago, கற்பகதரு said: இந்த துறையை சேர்ந்தவர்கள் சமகாலத்தில் அரசியலில் ஈடுபடுவது முரணான ஆர்வத்தை காட்டுகிறது (conflict of interest). 6 hours ago, கற்பகதரு said: இலங்கைத்தமிழர் ஏதாவதொரு ஆயுதந்தாங்கிய கட்டுப்பாட்டுக்கு கீழேயே வாழத்தகுதியனவர்கள் என்பது அரசராட்சி காலத்தில் இருந்து, காலனித்துவ காட்சிக்காலம், தமிழீழ ஆட்சி, இன்று சிறிலங்கா ஆட்சிவரை தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளது. மறுக்கவே முடியாது. 6 hours ago, ரதி said: காவாளிகள் தமிழராயிருந்தால் பெண்களோடு சேட்டை விட்டால் சிங்கள ஆமி வாயை பொத்தி தெரியாத மாதிரி நிற்கோணும் என்பது தான் இங்கு சிலரது விருப்பம் அப்படி ஆமி பெண்களோடு சேட்டை விட்ட தமிழ் காவாலிகள் மீது நடவடிக்கை எடுத்தால் அந்த சிலர் தமிழ் காவாலிகளுக்கு ஆதரவாக நிற்பார்கள். Link to comment Share on other sites More sharing options...
போல் Posted May 10, 2020 Share Posted May 10, 2020 யாழில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியமை கண்டிக்கத்தக்கது – மணிவண்ணன் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக இன்று (சனிக்கிழமை) கருத்து வெளியிடும் போதே மணிவண்ணன் இவ்வாறு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் பகுதியில் நேற்று நள்ளிரவு வீடொன்றுக்குள் புகுந்து இராணுவத்தினர் அச்சுறுத்தியதாகவும் தாக்குதல் நடத்தியதாகவும் வீட்டில் இருந்தவர்கள் கூறியிருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியது இராணுவத்தினர் என்றும், அவர்கள் இராணுவ இலச்சினை பொறிக்கப்பட்ட தொப்பி மற்றும் கையடக்க தொலைபேசியை கைவிட்டு சென்றுள்ளனர் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். http://athavannews.com/யாழில்-வீடு-புகுந்து-தாக-2/ Link to comment Share on other sites More sharing options...
tulpen Posted May 10, 2020 Share Posted May 10, 2020 On 9/5/2020 at 13:26, உடையார் said: . https://newuthayan.com/கன்னத்தில்-அறைந்தவரை/ முறைப்பாடு செய்தவரின் பெயர் விபரங்களுடன் முறைப்பாட்டு பத்திரத்தையே பகிரங்கமாக வெளியிடும் பத்திரிகையில் ஊடக நடைமுறை சரியானதா? பொலிஸில் ஒருவர் கொடுக்கும் முறைப்பாடு. சட்டப்படி பத்திரிகையில் வெளியீடு செய்ய முடியாத அரச ஆவணம் அல்லவா? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted May 10, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 10, 2020 20 hours ago, கற்பகதரு said: இலங்கைத்தமிழர் ஏதாவதொரு ஆயுதந்தாங்கிய கட்டுப்பாட்டுக்கு கீழேயே வாழத்தகுதியனவர்கள் என்பது அரசராட்சி காலத்தில் இருந்து, காலனித்துவ காட்சிக்காலம், தமிழீழ ஆட்சி, இன்று சிறிலங்கா ஆட்சிவரை தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளது. நூறுவீதம் உண்மை. சம்சும் கோஷ்டியும் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் நடப்பார்கள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted May 10, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 10, 2020 23 hours ago, நிழலி said: சுமந்திரன் மீது இருக்கும் அதீத வெறுப்பு, ஈற்றில் தமிழ் பெண்களை வகைதொகையின்றி பாலியல் வல்லுறவு செய்த இராணுவத்தினரையே கதாநாயகர்களாக்கி கொண்டாடச் செய்யுது. இராணுவத்தை கதாநாயகர்களாக கொண்டாடவில்லை. இராணுவம் தலையிட்ட படியால் பெண்களுடன் சேட்டை விட்டவர்களை தமிழர் என்பதற்காக கண்டும் காணாமல் இருந்திருக்கலாம் என நினைக்கின்றீர்களா? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் alvayan Posted May 10, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 10, 2020 யாழில் பெண்களுடன் எல்லைமீறி நடந்த ரௌடிகளை தேடி இரவிரவாக இராணுவம் வேட்டை! தங்களை தாங்களே என்னெண்டு வேட்டையாடுறது... Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தனிக்காட்டு ராஜா Posted May 10, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 10, 2020 22 hours ago, ரதி said: காவாளிகள் தமிழராயிருந்தால் பெண்களோடு சேட்டை விட்டால் சிங்கள ஆமி வாயை பொத்தி தெரியாத மாதிரி நிற்கோணும் என்பது தான் இங்கு சிலரது விருப்பம் ஆமி செஞ்சால் குற்றம் தான் ஆமிதான் கன வேலை செய்கிறான் நாட்டுக்கு ஆனால் நல்லவர்கள் என்று சொல்லவில்லை சில நல்ல வேலை திட்டங்களையும் செய்கிறான். Special Task Force விசேட அதிரடிப்படையை ஏத்திப்போன உழவு இயந்திர சாரதி ( தமிழர்) கன்னிவெடியில் சிக்கி கால் இயலாமல் போக விசேட அதிரடிப்படையில் இணைத்த மாதிரி அவருக்கு சம்பளமும் அவருக்கான உலர் உணவுகள் வழங்கி வருகிறார்கள் வெடியின் பின்னர் அவர் வீட்டில் இருந்தவர் சைக்கிள் திருத்தும் கடை வைத்திருந்தார். மனைவியும் பிள்ளைகளும் (சுனாமியில்) இறந்து போன சோகத்தில் அந்த சாரதி கடலில் வீழ்ந்து இறந்து போனார் இரு வருடங்களுக்கு முன் Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் நியாயத்தை கதைப்போம் Posted May 10, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 10, 2020 On 9/5/2020 at 09:29, பெருமாள் said: அந்த பெண்பிள்ளைகளுடன் கொழுவி கடைசியில் ஆமியுடன் கொள்ளுப்பட்ட காவாலி கூட்டத்தை சுமத்திரன் தன் செல்வாக்கை பயன்படுத்தி வல்வெட்டிதுறையில் உள்ள வீட்டில் போய் ஒளித்து இருக்க சொல்லி இருக்கிறார் அங்கு ஏற்கனவே ஆமியின் புலனாய்வுகள் கூடின இடம் இலகுவாக ஆட்களை பிடித்து விட்டினம் வீட்டுக்காரருக்கு போனில் சுமத்திரன் கேட்டு கொண்டபடியால் இடம் கொடுத்து இருக்கிறார் . சுமந்திரன் மீதான உங்கள் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதா? இருந்தால் காண்பியுங்கள் நானும் அறிந்துகொள்கின்றேன். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பெருமாள் Posted May 10, 2020 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted May 10, 2020 உங்கள் சுமத்திரனுக்கு தெரியும்தானே கேட்டு பாருங்க . Link to comment Share on other sites More sharing options...
கற்பகதரு Posted May 10, 2020 Share Posted May 10, 2020 On 9/5/2020 at 06:29, பெருமாள் said: அந்த பெண்பிள்ளைகளுடன் கொழுவி கடைசியில் ஆமியுடன் கொள்ளுப்பட்ட காவாலி கூட்டத்தை சுமத்திரன் தன் செல்வாக்கை பயன்படுத்தி வல்வெட்டிதுறையில் உள்ள வீட்டில் போய் ஒளித்து இருக்க சொல்லி இருக்கிறார் அங்கு ஏற்கனவே ஆமியின் புலனாய்வுகள் கூடின இடம் இலகுவாக ஆட்களை பிடித்து விட்டினம் வீட்டுக்காரருக்கு போனில் சுமத்திரன் கேட்டு கொண்டபடியால் இடம் கொடுத்து இருக்கிறார் . 1 hour ago, நியாயத்தை கதைப்போம் said: சுமந்திரன் மீதான உங்கள் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதா? இருந்தால் காண்பியுங்கள் நானும் அறிந்துகொள்கின்றேன். 48 minutes ago, பெருமாள் said: உங்கள் சுமத்திரனுக்கு தெரியும்தானே கேட்டு பாருங்க . பெருமாளிடம் ஆதாரம் இல்லாதால் அவர் எழுதியது அவராக கற்பனை செய்தது போல தெரிகிறது. பெருமாள் எழுதியதை தன்மீதான அவதூறாக கருதி சுமேந்திரன் யாழ் களத்திடமும் பெருமாளிடமும் நட்டஈடு கோரி வழக்கு தொடரும் சாத்தியம் உண்டு. மேலும் ஏற்கனவே நீதிமன்றில் ஆய்வு செய்யப்படும் ஒருவிடயத்தை பற்றிய முன் அறியப்படாத தகவலை பொதுவெளியில் பிரசுரிப்பது நீதிமன்ற விவகாரங்களில் தலையிடும் (perjury) சட்டவிரோத செயலாகும். மட்டுறுத்துனர்களே, பெருமாளின் மேற்படி கருத்தை விவகாரம் முற்ற முதல் அகற்றி விடுங்கள். Link to comment Share on other sites More sharing options...
zuma Posted May 10, 2020 Share Posted May 10, 2020 நாகர்கோவில் சம்பவதில், சம்மந்தப்படாத அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டும் கடுமையாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் இருக்கும்போது உடனடியாக செயற்பட்டது முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சேரும் தான். அவர்களை பிணை எடுப்பதற்கு கூட யாரும் பயத்தில் வராத நிலையில் அருகில் இருந்தும் கூட எட்டிப்பார்க்காத நிலையில் சுமந்திரன் சேர் தான் நீதிமன்றில் வாதாடி பிணையை பெற்றுக்கொடுத்தார். மூலம் : முகநூல் Link to comment Share on other sites More sharing options...
Rajesh Posted May 11, 2020 Share Posted May 11, 2020 யாழில் படையினரால் தேடப்பட்டு வந்ததாக கூறப்படும் முன்னாள் போராளி சரண் யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் தினம்தினம் இராணுவத்தினர் தேடிச் சென்று பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டிருந்த முன்னாள் போராளி ஒருவர் இன்று தனது சட்டத்தரணியூடாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.வடமராட்சி கிழக்கு - நாகர்கோவில் பகுதியில் கடந்த 08/05/2020 நள்ளிரவு வேளை குறித்த முன்னாள் போராளியின் வீட்டிற்குள் புகுந்த இராணுவத்தினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளதுடன், சிலர் மீது கடுமையாக தாக்குதல் நடாத்தியிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். கடந்த தைப் பொங்கல் தினத்தன்று வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் தர்க்கம் உருவானது. இதனைத் தொடர்ந்து பல சுற்றிவளைப்புக்கள் நடாத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். எனினும் தைப் பொங்கல் தினத்தில் இராணுவத்தினருடன் முறுகலில் ஈடுபட்டதாக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரை படையினர் தொடர்ச்சியாக தேடிவந்த நிலையில், குறித்த போராளி நீதிமன்றில் இரு வாரங்களுக்கு முன்னர் தனது சட்டத்தரணியூடாக முன்னிலையாகியிருந்த நிலையில் பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு அவ்வாறு ஒரு சந்தேகமான இளைஞனே இல்லை. அவ்வாறு ஒருவரை தேடவில்லை என கூறியிருந்தனர். இந்த நிலையிலேயே கடந்த 08/05/2020 நள்ளிரவும் குறித்த இளைஞனின் வீட்டுக்குள் படையினர் நுழைந்த நிலையில் அன்றையதினம் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் அவரது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சேதமாக்கப்பட்டதுடன் 500 லீட்டர் மண்ணெண்ணெயும் நிலத்தில் ஊற்றப்பட்டிருந்தது. அவரது சகோதரர்கள், உறவுகள் அண்மைக்காலமாக கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்ததுடன் பலர் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையிலேயே இன்றையதினம்முன்னாள் போராளி பருத்தித்துறை நீதிமன்றில் சரணடைய சென்ற நிலையில் நீதிமன்ற கடமைநேரம் முடிந்ததை அடுத்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/142975?ref=ibctamil-recommendation Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.