Jump to content

யாழில் பெண்களுடன் எல்லைமீறி நடந்த ரௌடிகளை தேடி இரவிரவாக இராணுவம் வேட்டை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் தலைமறைவாக உள்ள ரௌடிகளை தேடி இராணுவத்தினர் நேற்று (8) இரவு திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், தலைமறைவாக உள்ள ரௌடிகள் சிலரை தேடி, பல வீடுகளிலும் இராணுவத்தினர் சோதனை செய்தனர்.

கடந்த ஜனவரி மாதம் தைப்பொங்கல் தினத்தில் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் சில இளைஞர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்களை மீட்க சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் களமிறங்கினார் என பல செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், அந்த சம்பவத்தின் பின்னணி குறித்து எந்த தகவலும் வெளியாகியிருக்கவில்லை.

நாகர்கோவில் பகுதியில் அன்றைய தினம் மதுபோதையில் இருந்த கும்பல் ஒன்று பெண்களிடம் அத்துமீறி நடக்க முற்பட்டது. வீதியால் சென்ற சில இளம்பெண்களிடம் அத்துமீறி நடக்க முற்பட்டபோது, அவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்ற இராணுவச்சிப்பாய்கள் இதனை அவதானித்துள்ளனர். இதேவேளை, சிப்பாய்களை கண்டதும், பெண்களும் அவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். ஒரு சிபபாய் விரைந்து சென்று, பெண்களுடன் எல்லை மீறி நடந்தவர்களை தட்டிக் கேட்டார். அங்கு வாய்த்தர்க்கம் முற்றி, இராணுவச்சிப்பாயை அந்த கும்பல் தாக்கியது. சிப்பாயின் கைடக்க தொலைபேசியையும் அவர்கள் பறித்து, பின்னர் ஒப்படைத்துள்ளனர்.

இராணுவச்சிப்பாய் தாக்கப்பட்ட விடயமறிந்ததும், இராணுவத்தினரும் பொலிசாரும் அந்த பகுதியை சுற்றிவளைத்து, ரௌடித்தனமாக செயற்பட்டவர்களை கைது செய்திருந்தனர்.

பின்னர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் அவர்கள் முற்படுத்தப்பட்டபோது, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்களிற்காக முன்னிலையாகினார். அந்த இளைஞர்களிற்காக எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானது நாகர்கோவில் பகுதியில் பலத்த அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த கும்பலுடன் தொடர்புபட்டவர்கள் வல்வெட்டித்துறையில் பதுங்கியிருந்தபோது, அங்கு வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

எனினும், மதுபோதையில் மோசமாக நடந்து கொண்ட பிரதான சந்தேகநபர் இதுவரை சிக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறார்.

அவரை இலக்கு வைத்து நேற்று நாகர்கோவில் பகுதியில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

https://www.pagetamil.com/122866/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன்னத்தில் அறைந்தவரை தேடி அடாவடி புரிந்த இராணுவம்

f65d0f97-f1ef-4c10-a033-01ffba2f75bb-960x720.jpg?189db0&189db0

 

வடமராட்சி – கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் கடந்த தைப் பொங்கல் தினத்தன்று இராணுவ வீரர் ஒருவரது கன்னத்தில் அறைத்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரை இராணுவத்தினர் இன்று வரை தேடி வருகின்றனர்.

எனினும் குறித்த நபர் இராணுவத்துக்கு தண்ணி காட்டி மறைந்திருக்கும் நிலையில் நேற்று (8) நள்ளிரவு 11 மணியளவில் அவரது, வீட்டை சுற்றிவளைத்த இராணுவத்தினர் அங்கிருந்தவர்களை தாக்கி, உடமைகளையும் சேதமாக்கியுள்ளனர்.

https://www.facebook.com/mayurapriyan104

இதன்போது வயோதிப பெண் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது நிதானம் இழந்த நிலையில் காணப்பட்ட இராணுவத்தினர் தமது கைபேசி, தொப்பி ஆகியவற்றை சம்பவம் நடைபெற்ற வீட்டு வளவில் தவற விட்டுச் சென்றுள்ளனர்.

  • FB_IMG_1589012664754.jpg?189db0&189db0

இதேவேளை தேடப்படும் நபர் கன்னத்தில் அறைந்த சம்பவம் நடைபெற்ற அன்று வீதியில் சிறுமி ஒருவரை மோதுவது போல் மோட்டார் சைக்கிளை செலுத்தியதாக கூறி, அவரை இராணுவ வீரர் கண்டித்த போது எழுந்த முரண்பாட்டிலேயே இராணுவ வீரரது கன்னத்தில் அறைந்திருந்தார். இராணுவ வீரரும் பதிலுக்கு அறைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில், வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறித்த தேடப்படும் நபரது பெயர் குறிப்பிடப்படவில்லை.

இது தொடர்பான பருத்தித்துறை நீதிமன்ற வழக்கிலும் இவரது பெயர் தாக்கல் செய்யப்படாத நிலையிலேயே இராணுவத்தினர் அவரை தேடி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

  • 7dc5dedc-ac5c-49d6-95c1-4af51a7508d3-e15
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவாலி வேலை செய்யும் குரங்குகளை ஆமி அடித்தால் கதையை மற்றப்பக்கம் திருப்பிவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

காவாலி வேலை செய்யும் குரங்குகளை ஆமி அடித்தால் கதையை மற்றப்பக்கம் திருப்பிவிடுவார்கள்.

அந்த காவலிகளுக்கு  ஆதரவாய்  வக்கீல் ஆகி  வாதிடுபவர் நம்ம உலகப்புகழ் சுமத்திரன் ஐயா .

அவர் இறங்கினால் ஊடகர்களுக்கும் மதி மயங்கிடும் நடந்த விடயத்தை அப்படியே தலைகீழா க்கி விடுவினம் அந்த காவாலி கூட்டம்  கிழவி என்றும் பாராமல் மண்டை உடைத்து இருக்கினம் அதை தட்டி கேட்ட ஆமிக்கு அடி  விழுந்து இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

அந்த காவலிகளுக்கு  ஆதரவாய்  வக்கீல் ஆகி  வாதிடுபவர் நம்ம உலகப்புகழ் சுமத்திரன் ஐயா .

அவர் எப்ப ஒழுங்கான/தேவையான விசயங்களுக்காக வாதாடியிருக்கிறார்?
எங்கை வருமானம் வருமோ அங்கைதான் நிற்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண்பிள்ளைகளுடன் கொழுவி கடைசியில் ஆமியுடன் கொள்ளுப்பட்ட  காவாலி கூட்டத்தை சுமத்திரன் தன்  செல்வாக்கை  பயன்படுத்தி வல்வெட்டிதுறையில் உள்ள வீட்டில் போய்  ஒளித்து இருக்க சொல்லி இருக்கிறார்  அங்கு ஏற்கனவே ஆமியின்  புலனாய்வுகள் கூடின இடம் இலகுவாக ஆட்களை பிடித்து விட்டினம்  வீட்டுக்காரருக்கு போனில் சுமத்திரன் கேட்டு கொண்டபடியால் இடம் கொடுத்து இருக்கிறார் .

Link to comment
Share on other sites

சுமந்திரன் மீது இருக்கும் அதீத வெறுப்பு, ஈற்றில் தமிழ் பெண்களை வகைதொகையின்றி பாலியல் வல்லுறவு செய்த இராணுவத்தினரையே கதாநாயகர்களாக்கி கொண்டாடச் செய்யுது.

Link to comment
Share on other sites

2 hours ago, உடையார் said:

நேற்று (8) நள்ளிரவு 11 மணியளவில் அவரது, வீட்டை சுற்றிவளைத்த இராணுவத்தினர் அங்கிருந்தவர்களை தாக்கி, உடமைகளையும் சேதமாக்கியுள்ளனர்.

2 hours ago, உடையார் said:

இதன்போது வயோதிப பெண் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெண்களுடன் சேட்டை செய்த காவாலிகள் கைது செய்யப்பட்டு கடுமையா தண்டிக்கப்பட வேணும். இந்த காவாலிகளுக்கு துணைநிக்கிற / அடைக்கலம் கொடுக்கிற பேர்வழிகளுக்கும் கண்டிக்கப்பட வேணும்.

ஆனா சட்ட எல்லைமீறி செயற்படுறதை ஆதரிக்கிறது  நல்லதல்ல. அதுவும் சொறிலங்கா ராணுவம் இரவில் ஒரு வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்துவது, பொருட்களை சேதமாக்குவது சொறிலங்கா அரசின் அராஜகமாகவே கருதப்பட வேணும். இதை எந்த காரணத்துக்காகவும் நியாயப்படுத்த ஏலாது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Rajesh said:

ஆனா சட்ட எல்லைமீறி செயற்படுறதை ஆதரிக்கிறது  நல்லதல்ல. அதுவும் சொறிலங்கா ராணுவம் இரவில் ஒரு வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்துவது, பொருட்களை சேதமாக்குவது சொறிலங்கா அரசின் அராஜகமாகவே கருதப்பட வேணும். இதை எந்த காரணத்துக்காகவும் நியாயப்படுத்த ஏலாது.

உண்மையில் இந்த விடயத்தை போலீஸ் கையாண்டு இருக்கணும் ராணுவம் ஒரு எல்லையுடன்  அடங்கி இருக்கணும் ஆனால் குழப்பகரமான சேதிகள்  வேண்டுமென்றே குற்றவாளிகளால்  பரப்பப்படுகின்றது சுமத்திரன் உள்ளே காட்சிக்கு வந்தாலே விளங்கனும் என்ன நடக்கும் என்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

 

  • 7dc5dedc-ac5c-49d6-95c1-4af51a7508d3-e15

முறைப்பாட்டில்... "கரைச்சல்  செய்தமை" என்று... 
எழுதிக் கொடுத்ததுள்ளதை பார்க்க, சிரிப்பு வந்தாலும்,
அந்த வசனம் எனக்குப் பிடித்துக் கொண்டது.

Link to comment
Share on other sites

3 hours ago, நிழலி said:

சுமந்திரன் மீது இருக்கும் அதீத வெறுப்பு, ஈற்றில் தமிழ் பெண்களை வகைதொகையின்றி பாலியல் வல்லுறவு செய்த இராணுவத்தினரையே கதாநாயகர்களாக்கி கொண்டாடச் செய்யுது.

  1. சுமேந்திரன் குற்றவியல் (கிரிமினல்) சட்டத்தரணி. இவ்வாறாக கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டவரின் தரப்பு வாதத்தை முன்வைத்து அவர்கள் தரப்பு நியாயத்தை உறுதிப்படுத்தும் துறையில் இவர் தேர்ச்சி பெற்றவர். ஜீ. ஜீ. பொன்னம்பலமும் பிரபலமான குற்றவியல் (கிரிமினல்) சட்டத்தரணி.
  2. இந்த துறையை சேர்ந்தவர்கள் சமகாலத்தில் அரசியலில் ஈடுபடுவது முரணான ஆர்வத்தை காட்டுகிறது (conflict of interest). 
  3. இலங்கைத்தமிழர் ஏதாவதொரு ஆயுதந்தாங்கிய கட்டுப்பாட்டுக்கு கீழேயே வாழத்தகுதியனவர்கள் என்பது அரசராட்சி காலத்தில் இருந்து, காலனித்துவ காட்சிக்காலம், தமிழீழ ஆட்சி, இன்று சிறிலங்கா ஆட்சிவரை தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவாளிகள் தமிழராயிருந்தால் பெண்களோடு சேட்டை விட்டால் சிங்கள ஆமி வாயை பொத்தி தெரியாத மாதிரி நிற்கோணும் என்பது தான் இங்கு சிலரது விருப்பம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

இந்த துறையை சேர்ந்தவர்கள் சமகாலத்தில் அரசியலில் ஈடுபடுவது முரணான ஆர்வத்தை காட்டுகிறது (conflict of interest). 

✔️

6 hours ago, கற்பகதரு said:

இலங்கைத்தமிழர் ஏதாவதொரு ஆயுதந்தாங்கிய கட்டுப்பாட்டுக்கு கீழேயே வாழத்தகுதியனவர்கள் என்பது அரசராட்சி காலத்தில் இருந்து, காலனித்துவ காட்சிக்காலம், தமிழீழ ஆட்சி, இன்று சிறிலங்கா ஆட்சிவரை தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளது.

மறுக்கவே முடியாது.

 

6 hours ago, ரதி said:

காவாளிகள் தமிழராயிருந்தால் பெண்களோடு சேட்டை விட்டால் சிங்கள ஆமி வாயை பொத்தி தெரியாத மாதிரி நிற்கோணும் என்பது தான் இங்கு சிலரது விருப்பம் 

✔️

அப்படி ஆமி பெண்களோடு சேட்டை விட்ட தமிழ் காவாலிகள் மீது நடவடிக்கை எடுத்தால் அந்த சிலர் தமிழ் காவாலிகளுக்கு ஆதரவாக நிற்பார்கள்.

Link to comment
Share on other sites

யாழில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியமை கண்டிக்கத்தக்கது மணிவண்ணன்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக இன்று (சனிக்கிழமை) கருத்து வெளியிடும் போதே மணிவண்ணன் இவ்வாறு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் பகுதியில் நேற்று நள்ளிரவு வீடொன்றுக்குள் புகுந்து இராணுவத்தினர் அச்சுறுத்தியதாகவும் தாக்குதல் நடத்தியதாகவும் வீட்டில் இருந்தவர்கள் கூறியிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியது இராணுவத்தினர் என்றும், அவர்கள் இராணுவ இலச்சினை பொறிக்கப்பட்ட தொப்பி மற்றும் கையடக்க தொலைபேசியை கைவிட்டு சென்றுள்ளனர் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

http://athavannews.com/யாழில்-வீடு-புகுந்து-தாக-2/

Link to comment
Share on other sites

On 9/5/2020 at 13:26, உடையார் said:

முறைப்பாடு செய்தவரின் பெயர் விபரங்களுடன் முறைப்பாட்டு பத்திரத்தையே பகிரங்கமாக வெளியிடும் பத்திரிகையில் ஊடக  நடைமுறை சரியானதா? பொலிஸில் ஒருவர் கொடுக்கும் முறைப்பாடு. சட்டப்படி பத்திரிகையில் வெளியீடு செய்ய முடியாத அரச ஆவணம் அல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கற்பகதரு said:

இலங்கைத்தமிழர் ஏதாவதொரு ஆயுதந்தாங்கிய கட்டுப்பாட்டுக்கு கீழேயே வாழத்தகுதியனவர்கள் என்பது அரசராட்சி காலத்தில் இருந்து, காலனித்துவ காட்சிக்காலம், தமிழீழ ஆட்சி, இன்று சிறிலங்கா ஆட்சிவரை தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளது.

நூறுவீதம் உண்மை.
சம்சும் கோஷ்டியும் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் நடப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நிழலி said:

சுமந்திரன் மீது இருக்கும் அதீத வெறுப்பு, ஈற்றில் தமிழ் பெண்களை வகைதொகையின்றி பாலியல் வல்லுறவு செய்த இராணுவத்தினரையே கதாநாயகர்களாக்கி கொண்டாடச் செய்யுது.

இராணுவத்தை கதாநாயகர்களாக கொண்டாடவில்லை.
இராணுவம் தலையிட்ட படியால் பெண்களுடன் சேட்டை விட்டவர்களை தமிழர் என்பதற்காக கண்டும் காணாமல் இருந்திருக்கலாம் என நினைக்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பெண்களுடன் எல்லைமீறி நடந்த ரௌடிகளை தேடி இரவிரவாக இராணுவம் வேட்டை!

தங்களை தாங்களே என்னெண்டு வேட்டையாடுறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரதி said:

காவாளிகள் தமிழராயிருந்தால் பெண்களோடு சேட்டை விட்டால் சிங்கள ஆமி வாயை பொத்தி தெரியாத மாதிரி நிற்கோணும் என்பது தான் இங்கு சிலரது விருப்பம் 

ஆமி செஞ்சால் குற்றம் தான்  ஆமிதான் கன வேலை செய்கிறான் நாட்டுக்கு ஆனால் நல்லவர்கள் என்று சொல்லவில்லை சில நல்ல வேலை திட்டங்களையும் செய்கிறான். 

Special Task Force விசேட அதிரடிப்படையை ஏத்திப்போன உழவு இயந்திர சாரதி ( தமிழர்)  கன்னிவெடியில் சிக்கி  கால் இயலாமல் போக  விசேட அதிரடிப்படையில் இணைத்த மாதிரி  அவருக்கு சம்பளமும் அவருக்கான உலர் உணவுகள் வழங்கி வருகிறார்கள் வெடியின் பின்னர் அவர் வீட்டில் இருந்தவர் சைக்கிள் திருத்தும் கடை வைத்திருந்தார். மனைவியும் பிள்ளைகளும் (சுனாமியில்)  இறந்து போன சோகத்தில்  அந்த சாரதி கடலில் வீழ்ந்து இறந்து போனார் இரு வருடங்களுக்கு முன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2020 at 09:29, பெருமாள் said:

அந்த பெண்பிள்ளைகளுடன் கொழுவி கடைசியில் ஆமியுடன் கொள்ளுப்பட்ட  காவாலி கூட்டத்தை சுமத்திரன் தன்  செல்வாக்கை  பயன்படுத்தி வல்வெட்டிதுறையில் உள்ள வீட்டில் போய்  ஒளித்து இருக்க சொல்லி இருக்கிறார்  அங்கு ஏற்கனவே ஆமியின்  புலனாய்வுகள் கூடின இடம் இலகுவாக ஆட்களை பிடித்து விட்டினம்  வீட்டுக்காரருக்கு போனில் சுமத்திரன் கேட்டு கொண்டபடியால் இடம் கொடுத்து இருக்கிறார் .

சுமந்திரன் மீதான உங்கள் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதா? இருந்தால் காண்பியுங்கள் நானும் அறிந்துகொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சுமத்திரனுக்கு தெரியும்தானே கேட்டு பாருங்க .

Link to comment
Share on other sites

On 9/5/2020 at 06:29, பெருமாள் said:

அந்த பெண்பிள்ளைகளுடன் கொழுவி கடைசியில் ஆமியுடன் கொள்ளுப்பட்ட  காவாலி கூட்டத்தை சுமத்திரன் தன்  செல்வாக்கை  பயன்படுத்தி வல்வெட்டிதுறையில் உள்ள வீட்டில் போய்  ஒளித்து இருக்க சொல்லி இருக்கிறார்  அங்கு ஏற்கனவே ஆமியின்  புலனாய்வுகள் கூடின இடம் இலகுவாக ஆட்களை பிடித்து விட்டினம்  வீட்டுக்காரருக்கு போனில் சுமத்திரன் கேட்டு கொண்டபடியால் இடம் கொடுத்து இருக்கிறார் .

 

1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

சுமந்திரன் மீதான உங்கள் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதா? இருந்தால் காண்பியுங்கள் நானும் அறிந்துகொள்கின்றேன்.

 

48 minutes ago, பெருமாள் said:

உங்கள் சுமத்திரனுக்கு தெரியும்தானே கேட்டு பாருங்க .

பெருமாளிடம் ஆதாரம் இல்லாதால் அவர் எழுதியது அவராக கற்பனை செய்தது போல தெரிகிறது. பெருமாள் எழுதியதை தன்மீதான அவதூறாக கருதி சுமேந்திரன் யாழ் களத்திடமும் பெருமாளிடமும் நட்டஈடு கோரி வழக்கு தொடரும் சாத்தியம் உண்டு. மேலும் ஏற்கனவே நீதிமன்றில் ஆய்வு செய்யப்படும் ஒருவிடயத்தை பற்றிய முன் அறியப்படாத தகவலை பொதுவெளியில் பிரசுரிப்பது நீதிமன்ற விவகாரங்களில் தலையிடும் (perjury) சட்டவிரோத செயலாகும். மட்டுறுத்துனர்களே, பெருமாளின் மேற்படி கருத்தை விவகாரம் முற்ற முதல் அகற்றி விடுங்கள்.

Link to comment
Share on other sites

நாகர்கோவில் சம்பவதில், சம்மந்தப்படாத அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டும் கடுமையாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் இருக்கும்போது உடனடியாக செயற்பட்டது முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சேரும் தான்.
அவர்களை பிணை எடுப்பதற்கு கூட யாரும் பயத்தில் வராத நிலையில் அருகில் இருந்தும் கூட எட்டிப்பார்க்காத நிலையில் சுமந்திரன் சேர் தான் நீதிமன்றில் வாதாடி பிணையை பெற்றுக்கொடுத்தார்.
மூலம் : முகநூல் 
96585605_2731342210475270_3947321338707836928_n.jpg?_nc_cat=108&_nc_sid=8bfeb9&_nc_ohc=AXN2CMf8Hc0AX-5Seb-&_nc_ht=scontent-lga3-1.xx&oh=c5193327f8490d6eb889ff182bc5e298&oe=5EDC44A8
 
96234031_2731342247141933_3485711976154267648_n.jpg?_nc_cat=100&_nc_sid=8bfeb9&_nc_ohc=nPCi4772VNEAX9BXjkF&_nc_ht=scontent-lga3-1.xx&oh=c2e061f320fc9f8f5ddec70b97fc7dae&oe=5EDCE2A5
96773148_2731342283808596_3047769189071716352_n.jpg?_nc_cat=106&_nc_sid=8bfeb9&_nc_ohc=hpFVVVy-tp4AX-u5vZ8&_nc_ht=scontent-lga3-1.xx&oh=86339a94e78407081a613554517ee333&oe=5EDD38FD
Link to comment
Share on other sites

யாழில் படையினரால் தேடப்பட்டு வந்ததாக கூறப்படும் முன்னாள் போராளி சரண்

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் தினம்தினம் இராணுவத்தினர் தேடிச் சென்று பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டிருந்த முன்னாள் போராளி ஒருவர் இன்று தனது சட்டத்தரணியூடாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்.வடமராட்சி கிழக்கு - நாகர்கோவில் பகுதியில் கடந்த 08/05/2020 நள்ளிரவு வேளை குறித்த முன்னாள் போராளியின் வீட்டிற்குள் புகுந்த இராணுவத்தினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளதுடன், சிலர் மீது கடுமையாக தாக்குதல் நடாத்தியிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

கடந்த தைப் பொங்கல் தினத்தன்று வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் தர்க்கம் உருவானது. இதனைத் தொடர்ந்து பல சுற்றிவளைப்புக்கள் நடாத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

எனினும் தைப் பொங்கல் தினத்தில் இராணுவத்தினருடன் முறுகலில் ஈடுபட்டதாக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரை படையினர் தொடர்ச்சியாக தேடிவந்த நிலையில்,

குறித்த போராளி நீதிமன்றில் இரு வாரங்களுக்கு முன்னர் தனது சட்டத்தரணியூடாக முன்னிலையாகியிருந்த நிலையில் பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு அவ்வாறு ஒரு சந்தேகமான இளைஞனே இல்லை. அவ்வாறு ஒருவரை தேடவில்லை என கூறியிருந்தனர்.

இந்த நிலையிலேயே கடந்த 08/05/2020 நள்ளிரவும் குறித்த இளைஞனின் வீட்டுக்குள் படையினர் நுழைந்த நிலையில் அன்றையதினம் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் அவரது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சேதமாக்கப்பட்டதுடன் 500 லீட்டர் மண்ணெண்ணெயும் நிலத்தில் ஊற்றப்பட்டிருந்தது.

அவரது சகோதரர்கள், உறவுகள் அண்மைக்காலமாக கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்ததுடன் பலர் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையிலேயே இன்றையதினம்முன்னாள் போராளி பருத்தித்துறை நீதிமன்றில் சரணடைய சென்ற நிலையில் நீதிமன்ற கடமைநேரம் முடிந்ததை அடுத்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/142975?ref=ibctamil-recommendation

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.