Jump to content

யாழில் பெண்களுடன் எல்லைமீறி நடந்த ரௌடிகளை தேடி இரவிரவாக இராணுவம் வேட்டை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் தலைமறைவாக உள்ள ரௌடிகளை தேடி இராணுவத்தினர் நேற்று (8) இரவு திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், தலைமறைவாக உள்ள ரௌடிகள் சிலரை தேடி, பல வீடுகளிலும் இராணுவத்தினர் சோதனை செய்தனர்.

கடந்த ஜனவரி மாதம் தைப்பொங்கல் தினத்தில் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் சில இளைஞர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்களை மீட்க சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் களமிறங்கினார் என பல செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், அந்த சம்பவத்தின் பின்னணி குறித்து எந்த தகவலும் வெளியாகியிருக்கவில்லை.

நாகர்கோவில் பகுதியில் அன்றைய தினம் மதுபோதையில் இருந்த கும்பல் ஒன்று பெண்களிடம் அத்துமீறி நடக்க முற்பட்டது. வீதியால் சென்ற சில இளம்பெண்களிடம் அத்துமீறி நடக்க முற்பட்டபோது, அவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்ற இராணுவச்சிப்பாய்கள் இதனை அவதானித்துள்ளனர். இதேவேளை, சிப்பாய்களை கண்டதும், பெண்களும் அவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். ஒரு சிபபாய் விரைந்து சென்று, பெண்களுடன் எல்லை மீறி நடந்தவர்களை தட்டிக் கேட்டார். அங்கு வாய்த்தர்க்கம் முற்றி, இராணுவச்சிப்பாயை அந்த கும்பல் தாக்கியது. சிப்பாயின் கைடக்க தொலைபேசியையும் அவர்கள் பறித்து, பின்னர் ஒப்படைத்துள்ளனர்.

இராணுவச்சிப்பாய் தாக்கப்பட்ட விடயமறிந்ததும், இராணுவத்தினரும் பொலிசாரும் அந்த பகுதியை சுற்றிவளைத்து, ரௌடித்தனமாக செயற்பட்டவர்களை கைது செய்திருந்தனர்.

பின்னர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் அவர்கள் முற்படுத்தப்பட்டபோது, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்களிற்காக முன்னிலையாகினார். அந்த இளைஞர்களிற்காக எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானது நாகர்கோவில் பகுதியில் பலத்த அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த கும்பலுடன் தொடர்புபட்டவர்கள் வல்வெட்டித்துறையில் பதுங்கியிருந்தபோது, அங்கு வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

எனினும், மதுபோதையில் மோசமாக நடந்து கொண்ட பிரதான சந்தேகநபர் இதுவரை சிக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறார்.

அவரை இலக்கு வைத்து நேற்று நாகர்கோவில் பகுதியில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

https://www.pagetamil.com/122866/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன்னத்தில் அறைந்தவரை தேடி அடாவடி புரிந்த இராணுவம்

f65d0f97-f1ef-4c10-a033-01ffba2f75bb-960x720.jpg?189db0&189db0

 

வடமராட்சி – கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் கடந்த தைப் பொங்கல் தினத்தன்று இராணுவ வீரர் ஒருவரது கன்னத்தில் அறைத்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரை இராணுவத்தினர் இன்று வரை தேடி வருகின்றனர்.

எனினும் குறித்த நபர் இராணுவத்துக்கு தண்ணி காட்டி மறைந்திருக்கும் நிலையில் நேற்று (8) நள்ளிரவு 11 மணியளவில் அவரது, வீட்டை சுற்றிவளைத்த இராணுவத்தினர் அங்கிருந்தவர்களை தாக்கி, உடமைகளையும் சேதமாக்கியுள்ளனர்.

https://www.facebook.com/mayurapriyan104

இதன்போது வயோதிப பெண் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது நிதானம் இழந்த நிலையில் காணப்பட்ட இராணுவத்தினர் தமது கைபேசி, தொப்பி ஆகியவற்றை சம்பவம் நடைபெற்ற வீட்டு வளவில் தவற விட்டுச் சென்றுள்ளனர்.

  • FB_IMG_1589012664754.jpg?189db0&189db0

இதேவேளை தேடப்படும் நபர் கன்னத்தில் அறைந்த சம்பவம் நடைபெற்ற அன்று வீதியில் சிறுமி ஒருவரை மோதுவது போல் மோட்டார் சைக்கிளை செலுத்தியதாக கூறி, அவரை இராணுவ வீரர் கண்டித்த போது எழுந்த முரண்பாட்டிலேயே இராணுவ வீரரது கன்னத்தில் அறைந்திருந்தார். இராணுவ வீரரும் பதிலுக்கு அறைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில், வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறித்த தேடப்படும் நபரது பெயர் குறிப்பிடப்படவில்லை.

இது தொடர்பான பருத்தித்துறை நீதிமன்ற வழக்கிலும் இவரது பெயர் தாக்கல் செய்யப்படாத நிலையிலேயே இராணுவத்தினர் அவரை தேடி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

  • 7dc5dedc-ac5c-49d6-95c1-4af51a7508d3-e15
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவாலி வேலை செய்யும் குரங்குகளை ஆமி அடித்தால் கதையை மற்றப்பக்கம் திருப்பிவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

காவாலி வேலை செய்யும் குரங்குகளை ஆமி அடித்தால் கதையை மற்றப்பக்கம் திருப்பிவிடுவார்கள்.

அந்த காவலிகளுக்கு  ஆதரவாய்  வக்கீல் ஆகி  வாதிடுபவர் நம்ம உலகப்புகழ் சுமத்திரன் ஐயா .

அவர் இறங்கினால் ஊடகர்களுக்கும் மதி மயங்கிடும் நடந்த விடயத்தை அப்படியே தலைகீழா க்கி விடுவினம் அந்த காவாலி கூட்டம்  கிழவி என்றும் பாராமல் மண்டை உடைத்து இருக்கினம் அதை தட்டி கேட்ட ஆமிக்கு அடி  விழுந்து இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

அந்த காவலிகளுக்கு  ஆதரவாய்  வக்கீல் ஆகி  வாதிடுபவர் நம்ம உலகப்புகழ் சுமத்திரன் ஐயா .

அவர் எப்ப ஒழுங்கான/தேவையான விசயங்களுக்காக வாதாடியிருக்கிறார்?
எங்கை வருமானம் வருமோ அங்கைதான் நிற்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண்பிள்ளைகளுடன் கொழுவி கடைசியில் ஆமியுடன் கொள்ளுப்பட்ட  காவாலி கூட்டத்தை சுமத்திரன் தன்  செல்வாக்கை  பயன்படுத்தி வல்வெட்டிதுறையில் உள்ள வீட்டில் போய்  ஒளித்து இருக்க சொல்லி இருக்கிறார்  அங்கு ஏற்கனவே ஆமியின்  புலனாய்வுகள் கூடின இடம் இலகுவாக ஆட்களை பிடித்து விட்டினம்  வீட்டுக்காரருக்கு போனில் சுமத்திரன் கேட்டு கொண்டபடியால் இடம் கொடுத்து இருக்கிறார் .

Link to comment
Share on other sites

சுமந்திரன் மீது இருக்கும் அதீத வெறுப்பு, ஈற்றில் தமிழ் பெண்களை வகைதொகையின்றி பாலியல் வல்லுறவு செய்த இராணுவத்தினரையே கதாநாயகர்களாக்கி கொண்டாடச் செய்யுது.

Link to comment
Share on other sites

2 hours ago, உடையார் said:

நேற்று (8) நள்ளிரவு 11 மணியளவில் அவரது, வீட்டை சுற்றிவளைத்த இராணுவத்தினர் அங்கிருந்தவர்களை தாக்கி, உடமைகளையும் சேதமாக்கியுள்ளனர்.

2 hours ago, உடையார் said:

இதன்போது வயோதிப பெண் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெண்களுடன் சேட்டை செய்த காவாலிகள் கைது செய்யப்பட்டு கடுமையா தண்டிக்கப்பட வேணும். இந்த காவாலிகளுக்கு துணைநிக்கிற / அடைக்கலம் கொடுக்கிற பேர்வழிகளுக்கும் கண்டிக்கப்பட வேணும்.

ஆனா சட்ட எல்லைமீறி செயற்படுறதை ஆதரிக்கிறது  நல்லதல்ல. அதுவும் சொறிலங்கா ராணுவம் இரவில் ஒரு வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்துவது, பொருட்களை சேதமாக்குவது சொறிலங்கா அரசின் அராஜகமாகவே கருதப்பட வேணும். இதை எந்த காரணத்துக்காகவும் நியாயப்படுத்த ஏலாது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Rajesh said:

ஆனா சட்ட எல்லைமீறி செயற்படுறதை ஆதரிக்கிறது  நல்லதல்ல. அதுவும் சொறிலங்கா ராணுவம் இரவில் ஒரு வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்துவது, பொருட்களை சேதமாக்குவது சொறிலங்கா அரசின் அராஜகமாகவே கருதப்பட வேணும். இதை எந்த காரணத்துக்காகவும் நியாயப்படுத்த ஏலாது.

உண்மையில் இந்த விடயத்தை போலீஸ் கையாண்டு இருக்கணும் ராணுவம் ஒரு எல்லையுடன்  அடங்கி இருக்கணும் ஆனால் குழப்பகரமான சேதிகள்  வேண்டுமென்றே குற்றவாளிகளால்  பரப்பப்படுகின்றது சுமத்திரன் உள்ளே காட்சிக்கு வந்தாலே விளங்கனும் என்ன நடக்கும் என்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

 

  • 7dc5dedc-ac5c-49d6-95c1-4af51a7508d3-e15

முறைப்பாட்டில்... "கரைச்சல்  செய்தமை" என்று... 
எழுதிக் கொடுத்ததுள்ளதை பார்க்க, சிரிப்பு வந்தாலும்,
அந்த வசனம் எனக்குப் பிடித்துக் கொண்டது.

Link to comment
Share on other sites

3 hours ago, நிழலி said:

சுமந்திரன் மீது இருக்கும் அதீத வெறுப்பு, ஈற்றில் தமிழ் பெண்களை வகைதொகையின்றி பாலியல் வல்லுறவு செய்த இராணுவத்தினரையே கதாநாயகர்களாக்கி கொண்டாடச் செய்யுது.

  1. சுமேந்திரன் குற்றவியல் (கிரிமினல்) சட்டத்தரணி. இவ்வாறாக கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டவரின் தரப்பு வாதத்தை முன்வைத்து அவர்கள் தரப்பு நியாயத்தை உறுதிப்படுத்தும் துறையில் இவர் தேர்ச்சி பெற்றவர். ஜீ. ஜீ. பொன்னம்பலமும் பிரபலமான குற்றவியல் (கிரிமினல்) சட்டத்தரணி.
  2. இந்த துறையை சேர்ந்தவர்கள் சமகாலத்தில் அரசியலில் ஈடுபடுவது முரணான ஆர்வத்தை காட்டுகிறது (conflict of interest). 
  3. இலங்கைத்தமிழர் ஏதாவதொரு ஆயுதந்தாங்கிய கட்டுப்பாட்டுக்கு கீழேயே வாழத்தகுதியனவர்கள் என்பது அரசராட்சி காலத்தில் இருந்து, காலனித்துவ காட்சிக்காலம், தமிழீழ ஆட்சி, இன்று சிறிலங்கா ஆட்சிவரை தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவாளிகள் தமிழராயிருந்தால் பெண்களோடு சேட்டை விட்டால் சிங்கள ஆமி வாயை பொத்தி தெரியாத மாதிரி நிற்கோணும் என்பது தான் இங்கு சிலரது விருப்பம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

இந்த துறையை சேர்ந்தவர்கள் சமகாலத்தில் அரசியலில் ஈடுபடுவது முரணான ஆர்வத்தை காட்டுகிறது (conflict of interest). 

✔️

6 hours ago, கற்பகதரு said:

இலங்கைத்தமிழர் ஏதாவதொரு ஆயுதந்தாங்கிய கட்டுப்பாட்டுக்கு கீழேயே வாழத்தகுதியனவர்கள் என்பது அரசராட்சி காலத்தில் இருந்து, காலனித்துவ காட்சிக்காலம், தமிழீழ ஆட்சி, இன்று சிறிலங்கா ஆட்சிவரை தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளது.

மறுக்கவே முடியாது.

 

6 hours ago, ரதி said:

காவாளிகள் தமிழராயிருந்தால் பெண்களோடு சேட்டை விட்டால் சிங்கள ஆமி வாயை பொத்தி தெரியாத மாதிரி நிற்கோணும் என்பது தான் இங்கு சிலரது விருப்பம் 

✔️

அப்படி ஆமி பெண்களோடு சேட்டை விட்ட தமிழ் காவாலிகள் மீது நடவடிக்கை எடுத்தால் அந்த சிலர் தமிழ் காவாலிகளுக்கு ஆதரவாக நிற்பார்கள்.

Link to comment
Share on other sites

யாழில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியமை கண்டிக்கத்தக்கது மணிவண்ணன்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக இன்று (சனிக்கிழமை) கருத்து வெளியிடும் போதே மணிவண்ணன் இவ்வாறு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் பகுதியில் நேற்று நள்ளிரவு வீடொன்றுக்குள் புகுந்து இராணுவத்தினர் அச்சுறுத்தியதாகவும் தாக்குதல் நடத்தியதாகவும் வீட்டில் இருந்தவர்கள் கூறியிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியது இராணுவத்தினர் என்றும், அவர்கள் இராணுவ இலச்சினை பொறிக்கப்பட்ட தொப்பி மற்றும் கையடக்க தொலைபேசியை கைவிட்டு சென்றுள்ளனர் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

http://athavannews.com/யாழில்-வீடு-புகுந்து-தாக-2/

Link to comment
Share on other sites

On 9/5/2020 at 13:26, உடையார் said:

முறைப்பாடு செய்தவரின் பெயர் விபரங்களுடன் முறைப்பாட்டு பத்திரத்தையே பகிரங்கமாக வெளியிடும் பத்திரிகையில் ஊடக  நடைமுறை சரியானதா? பொலிஸில் ஒருவர் கொடுக்கும் முறைப்பாடு. சட்டப்படி பத்திரிகையில் வெளியீடு செய்ய முடியாத அரச ஆவணம் அல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கற்பகதரு said:

இலங்கைத்தமிழர் ஏதாவதொரு ஆயுதந்தாங்கிய கட்டுப்பாட்டுக்கு கீழேயே வாழத்தகுதியனவர்கள் என்பது அரசராட்சி காலத்தில் இருந்து, காலனித்துவ காட்சிக்காலம், தமிழீழ ஆட்சி, இன்று சிறிலங்கா ஆட்சிவரை தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளது.

நூறுவீதம் உண்மை.
சம்சும் கோஷ்டியும் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் நடப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நிழலி said:

சுமந்திரன் மீது இருக்கும் அதீத வெறுப்பு, ஈற்றில் தமிழ் பெண்களை வகைதொகையின்றி பாலியல் வல்லுறவு செய்த இராணுவத்தினரையே கதாநாயகர்களாக்கி கொண்டாடச் செய்யுது.

இராணுவத்தை கதாநாயகர்களாக கொண்டாடவில்லை.
இராணுவம் தலையிட்ட படியால் பெண்களுடன் சேட்டை விட்டவர்களை தமிழர் என்பதற்காக கண்டும் காணாமல் இருந்திருக்கலாம் என நினைக்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பெண்களுடன் எல்லைமீறி நடந்த ரௌடிகளை தேடி இரவிரவாக இராணுவம் வேட்டை!

தங்களை தாங்களே என்னெண்டு வேட்டையாடுறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரதி said:

காவாளிகள் தமிழராயிருந்தால் பெண்களோடு சேட்டை விட்டால் சிங்கள ஆமி வாயை பொத்தி தெரியாத மாதிரி நிற்கோணும் என்பது தான் இங்கு சிலரது விருப்பம் 

ஆமி செஞ்சால் குற்றம் தான்  ஆமிதான் கன வேலை செய்கிறான் நாட்டுக்கு ஆனால் நல்லவர்கள் என்று சொல்லவில்லை சில நல்ல வேலை திட்டங்களையும் செய்கிறான். 

Special Task Force விசேட அதிரடிப்படையை ஏத்திப்போன உழவு இயந்திர சாரதி ( தமிழர்)  கன்னிவெடியில் சிக்கி  கால் இயலாமல் போக  விசேட அதிரடிப்படையில் இணைத்த மாதிரி  அவருக்கு சம்பளமும் அவருக்கான உலர் உணவுகள் வழங்கி வருகிறார்கள் வெடியின் பின்னர் அவர் வீட்டில் இருந்தவர் சைக்கிள் திருத்தும் கடை வைத்திருந்தார். மனைவியும் பிள்ளைகளும் (சுனாமியில்)  இறந்து போன சோகத்தில்  அந்த சாரதி கடலில் வீழ்ந்து இறந்து போனார் இரு வருடங்களுக்கு முன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2020 at 09:29, பெருமாள் said:

அந்த பெண்பிள்ளைகளுடன் கொழுவி கடைசியில் ஆமியுடன் கொள்ளுப்பட்ட  காவாலி கூட்டத்தை சுமத்திரன் தன்  செல்வாக்கை  பயன்படுத்தி வல்வெட்டிதுறையில் உள்ள வீட்டில் போய்  ஒளித்து இருக்க சொல்லி இருக்கிறார்  அங்கு ஏற்கனவே ஆமியின்  புலனாய்வுகள் கூடின இடம் இலகுவாக ஆட்களை பிடித்து விட்டினம்  வீட்டுக்காரருக்கு போனில் சுமத்திரன் கேட்டு கொண்டபடியால் இடம் கொடுத்து இருக்கிறார் .

சுமந்திரன் மீதான உங்கள் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதா? இருந்தால் காண்பியுங்கள் நானும் அறிந்துகொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சுமத்திரனுக்கு தெரியும்தானே கேட்டு பாருங்க .

Link to comment
Share on other sites

On 9/5/2020 at 06:29, பெருமாள் said:

அந்த பெண்பிள்ளைகளுடன் கொழுவி கடைசியில் ஆமியுடன் கொள்ளுப்பட்ட  காவாலி கூட்டத்தை சுமத்திரன் தன்  செல்வாக்கை  பயன்படுத்தி வல்வெட்டிதுறையில் உள்ள வீட்டில் போய்  ஒளித்து இருக்க சொல்லி இருக்கிறார்  அங்கு ஏற்கனவே ஆமியின்  புலனாய்வுகள் கூடின இடம் இலகுவாக ஆட்களை பிடித்து விட்டினம்  வீட்டுக்காரருக்கு போனில் சுமத்திரன் கேட்டு கொண்டபடியால் இடம் கொடுத்து இருக்கிறார் .

 

1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

சுமந்திரன் மீதான உங்கள் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதா? இருந்தால் காண்பியுங்கள் நானும் அறிந்துகொள்கின்றேன்.

 

48 minutes ago, பெருமாள் said:

உங்கள் சுமத்திரனுக்கு தெரியும்தானே கேட்டு பாருங்க .

பெருமாளிடம் ஆதாரம் இல்லாதால் அவர் எழுதியது அவராக கற்பனை செய்தது போல தெரிகிறது. பெருமாள் எழுதியதை தன்மீதான அவதூறாக கருதி சுமேந்திரன் யாழ் களத்திடமும் பெருமாளிடமும் நட்டஈடு கோரி வழக்கு தொடரும் சாத்தியம் உண்டு. மேலும் ஏற்கனவே நீதிமன்றில் ஆய்வு செய்யப்படும் ஒருவிடயத்தை பற்றிய முன் அறியப்படாத தகவலை பொதுவெளியில் பிரசுரிப்பது நீதிமன்ற விவகாரங்களில் தலையிடும் (perjury) சட்டவிரோத செயலாகும். மட்டுறுத்துனர்களே, பெருமாளின் மேற்படி கருத்தை விவகாரம் முற்ற முதல் அகற்றி விடுங்கள்.

Link to comment
Share on other sites

நாகர்கோவில் சம்பவதில், சம்மந்தப்படாத அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டும் கடுமையாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் இருக்கும்போது உடனடியாக செயற்பட்டது முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சேரும் தான்.
அவர்களை பிணை எடுப்பதற்கு கூட யாரும் பயத்தில் வராத நிலையில் அருகில் இருந்தும் கூட எட்டிப்பார்க்காத நிலையில் சுமந்திரன் சேர் தான் நீதிமன்றில் வாதாடி பிணையை பெற்றுக்கொடுத்தார்.
மூலம் : முகநூல் 
96585605_2731342210475270_3947321338707836928_n.jpg?_nc_cat=108&_nc_sid=8bfeb9&_nc_ohc=AXN2CMf8Hc0AX-5Seb-&_nc_ht=scontent-lga3-1.xx&oh=c5193327f8490d6eb889ff182bc5e298&oe=5EDC44A8
 
96234031_2731342247141933_3485711976154267648_n.jpg?_nc_cat=100&_nc_sid=8bfeb9&_nc_ohc=nPCi4772VNEAX9BXjkF&_nc_ht=scontent-lga3-1.xx&oh=c2e061f320fc9f8f5ddec70b97fc7dae&oe=5EDCE2A5
96773148_2731342283808596_3047769189071716352_n.jpg?_nc_cat=106&_nc_sid=8bfeb9&_nc_ohc=hpFVVVy-tp4AX-u5vZ8&_nc_ht=scontent-lga3-1.xx&oh=86339a94e78407081a613554517ee333&oe=5EDD38FD
Link to comment
Share on other sites

யாழில் படையினரால் தேடப்பட்டு வந்ததாக கூறப்படும் முன்னாள் போராளி சரண்

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் தினம்தினம் இராணுவத்தினர் தேடிச் சென்று பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டிருந்த முன்னாள் போராளி ஒருவர் இன்று தனது சட்டத்தரணியூடாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்.வடமராட்சி கிழக்கு - நாகர்கோவில் பகுதியில் கடந்த 08/05/2020 நள்ளிரவு வேளை குறித்த முன்னாள் போராளியின் வீட்டிற்குள் புகுந்த இராணுவத்தினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளதுடன், சிலர் மீது கடுமையாக தாக்குதல் நடாத்தியிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

கடந்த தைப் பொங்கல் தினத்தன்று வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் தர்க்கம் உருவானது. இதனைத் தொடர்ந்து பல சுற்றிவளைப்புக்கள் நடாத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

எனினும் தைப் பொங்கல் தினத்தில் இராணுவத்தினருடன் முறுகலில் ஈடுபட்டதாக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரை படையினர் தொடர்ச்சியாக தேடிவந்த நிலையில்,

குறித்த போராளி நீதிமன்றில் இரு வாரங்களுக்கு முன்னர் தனது சட்டத்தரணியூடாக முன்னிலையாகியிருந்த நிலையில் பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு அவ்வாறு ஒரு சந்தேகமான இளைஞனே இல்லை. அவ்வாறு ஒருவரை தேடவில்லை என கூறியிருந்தனர்.

இந்த நிலையிலேயே கடந்த 08/05/2020 நள்ளிரவும் குறித்த இளைஞனின் வீட்டுக்குள் படையினர் நுழைந்த நிலையில் அன்றையதினம் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் அவரது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சேதமாக்கப்பட்டதுடன் 500 லீட்டர் மண்ணெண்ணெயும் நிலத்தில் ஊற்றப்பட்டிருந்தது.

அவரது சகோதரர்கள், உறவுகள் அண்மைக்காலமாக கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்ததுடன் பலர் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையிலேயே இன்றையதினம்முன்னாள் போராளி பருத்தித்துறை நீதிமன்றில் சரணடைய சென்ற நிலையில் நீதிமன்ற கடமைநேரம் முடிந்ததை அடுத்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/142975?ref=ibctamil-recommendation

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
    • சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.   பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.   பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.   2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.   பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.   படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
    • ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.