Jump to content

அரசாங்கம் வங்குரோத்து அடைந்துள்ளது


Recommended Posts

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை பெற்றுக்கொள்ள முற்படுவது அரசாங்கத்தின் வங்குரோத்து நிலைமையை எடுத்துகாட்டுவதாக, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, அதனை ஜனாதிபதி செயலாளரின் தனிப்பட்ட கோரிக்கையாக கருத முடியாதென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார்அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது  தேர்தலை நடத்த அரசாங்கம் முற்படும் நிலையில் இவ்வாறு அரச ஊழியர்களின் ஒருமாத சம்பளத்தை கேட்பது தேர்தலுக்கான செலவீனத்தை ஈடு செய்யவா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அரசாங்கம்-வங்குரோத்து-அடைந்துள்ளது/175-249997

Link to comment
Share on other sites

“அரச ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகளுக்கு மாதம் 100 பில். ரூபா செலவு என்பது பொய் : 54 பில். ரூபா என்பதே உண்மை“

(செ.தேன்மொழி)

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் விசேட கொடுப்பனவுகளுக்காக மாதாந்தம் 100 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக பேராசிரியர் பி.பீ.ஜயசுந்தர வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

ஆனால் மத்தியவங்கி மற்றும் நிதி அமைச்சின் அறிக்கைக்கு அமைய பார்க்கையில் 54 பில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டு வருவதாக கணக்கறிக்கை தெரிவிப்பதாக கூறிய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தற்போது மேலதிக கொடுப்பனவும், விசேட கொடுப்பனவுகளும் நிறுத்தப்பட்டுள்ளதனால் 34 பில்லியன் ருபாய் அளவிலே செலவிடப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
 

இதேவேளை உலகச்சந்தையில் எண்ணை விலை குறைந்துள்ளமையினால் அதனூடாக ஈட்டிய வருமாணம் 200 பில்லியன் ரூபாய் மத்திய வங்கியில் சேமிக்கப்பட்டுள்ளதாக மத்தியவங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான நிதி கிடைக்கப் பெற்றுள்ளன.
 

இந்நிலையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை தடுத்துவைக்காமல் பொருளாதார செயற்பாடுகளை சிறந்த முறையில் மேற்கொள்ளலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.
 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
பேராசிரியர் பி.பீ.ஜயசுந்தர தனது தனிப்பட்ட கருத்தை ஜனாதிபதி செயலகத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கடித உறையில் வெளியிட்டிருந்தமை தவறாகும். இருந்த போதிலும் அவரது வேண்டுகோளுக்கிணங்க யார் வேண்டும் என்றாலும் அவர்களின் சம்பளத்தை தியாகம் செய்யலாம். ஆனால் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சில விடயங்கள் தொடர்பில் அவருக்கு விளக்கமளிக்க வேண்டியுள்ளது.

 

இந்நிலையில் கொவிட் -19 வைரஸ் பரவலின் மூலம் பாடமொன்றைக் கற்றுக் கொண்டோம் என்றால் அரச துறையினர் முதல் நிலையிலும் தனியார் துறையினர் அவர்களுக்கு பின்னாலுமே இருப்பதாகவே. இந்த நாட்டை பொறுத்தமட்டில் அரச துறையில் தொழில் புரிபவர்கள் 1.2 மில்லியன் பேரே, 8.2 மில்லியன் பேர் தனியார் துறையிலேயே தொழில் புரிந்து வருகின்றனர்.

அதற்கமைய தனியார் துறையைச் சேர்ந்த 7 மில்லியன் பேர் எமது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக முயற்சித்து வருகின்றனர்.
 

இதேவேளை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் விசேட கொடுப்பனவுகளுக்காக 100 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

ஆனால் மத்தியவங்கி மற்றும் நிதி அமைச்சின் அறிக்கமைக்கமைய 54 பில்லியன் ரூபாவே செலவிடப்படுகின்றது. அதுவும் இந்த நெருக்கடியான நிலைமையில் மேலதிக கொடுப்பனவு மற்றும் விசேட கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளதனால் 34 பில்லியன் வரையிலான நிதியே அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு செலவிடப்படுகின்றது.
 

இந்நிலையில் வருடத்திற்கு மத்திய பிரிவு அரச ஊழியர்களுக்கு 232 பில்லியன் ரூபாவும், இராணுவத்தினருக்கு 199 பில்லியன் ரூபாவும் , பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு 53 பில்லியனும் செலவிடப்படுவதுடன் ஏனையதொகை மாகாண சபை ஊழியர்களுக்காக வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த தொகையை 12 மாதங்களுக்கு வகுத்துப்பார்த்தால் 54 பில்லியயே செலவிடப்படுகின்றது. அதனால் அரச ஊழியர்களின் கொடுப்பனவுக்காக 100பில்லியன் செலவிடப்படுவதாக கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும்.
 

இதேவேளை சேவை ஒழுங்கு சங்கத்தினரிடம் கலந்துரையாடி தொழிலுக்கு சமூகமளிக்க முடியாமல் இருக்கும் ஊழியர்களின் நாளாந்த சம்பளத்தில் 50 வீதத்தை மாத்திரம் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழியர்களின் நாளாந்த சம்பளமே அவர்களது அத்தியவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு கூட போதுமானதாக இல்லை.
 

இந்நிலையில் 50 வீதத்தை கழித்தால் அவர்கள் எவ்வாறு தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். ஒருவார செலவிற்காகவே 5000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தோம். ஆனால் ஏழு வாரங்களுக்கு 5000 ரூபாவே வழங்கியுள்ளனர்.முதற்கட்டமாகவே அது வழங்கப்பட்டுள்ளது,

இரண்டாவது சுற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்தாலும் , சில பகுதிகளில் இன்னும் முதற் சுற்றே ஆரம்பிக்கப்படவில்லை.
 

சில தொழிற்சாலைகள் ஊழியர்களுக்கு ஊதியம் பெற்றுக் கொடுப்பதற்காக வங்கி கடனுக்கு விண்ணம்பம் அனுப்பியுள்ள போதிலும் அவை இது வரையிலும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. வங்கி கடன்களை வழங்குவதற்காக 50 பில்லியன் ரூபாவே வழங்கப்பட்டிருப்பதாகவும், அந்த தொகை இந்த கடன்களைபெற்றுக் கொடுப்பதற்கு போதுமனதாக இல்லை என்றும் வங்கி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 

இந்நிலையில் அரசாங்கம் தம்மிடம் நிதி இல்லை என்று தெரிவித்து வருகின்றது. மத்தியவங்கியின் அறிக்கையின் படி உலக சந்தையில் எண்ணை விலை குறைந்துள்ளமையினால் மாத்திரம் 200 பில்லியன் ரூபாய் சேமிப்பில் இருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சீனா, ஜப்பான் , ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெருந்தொகையான நிதி கிடைக்கப் பெற்றுள்ளது.

அதேவேளை உலக வங்கியிலிருந்து 126 பில்லியன் டொலர் மற்றும் அமெரிக்காவிலிருந்தும் நிதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றைக் கொண்டு அரசாங்கம் சிறந்தமுறையில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யமுடியும்.
 

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதை கருத்திற் கொள்ளாமல் ஜனாதிபதி நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வது அரசியலமைப்புற்கு புறம்பான செயற்பாடு என்று அறிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும் ஜனாதிபதி அதனை கருத்திற் கொள்ளாது, கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான செலவுகள் தொடர்பில் இடைக்கால கணக்கறிக்கைக்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் இயங்காத பட்சத்தில் இவர் யாரிடம் இந்த அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளார். அவர் தன்னிச்சையாக முடிவெடுத்து செயற்பட முடியாது. இதன் மூலம் அவர் முழு நாட்டையும் தனது தனிப்பட்ட தீர்மானத்திற்கிணங்க செயற்படுத்துவதாகவே காண்பித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/81668

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலைமை இப்போ.. வெனிசுலா.. கியூபா.. சீனா.. போன்ற நாடுகளில் ஏற்பட்டிருந்தால்... மேற்குலக ஊடகங்கள் ஆட்சியாளர்களை போட்டு பென்டெடுத்திருப்பார்கள்.. அவர்களுக்கு வேண்டிய ஆட்சியாளர்களை புகுத்த. ஆனால்.. சொறீலங்காவில் எல்லாமே மேற்குலகின் பாராமுகத்தோடு நடந்தேறும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

இந்த நிலைமை இப்போ.. வெனிசுலா.. கியூபா.. சீனா.. போன்ற நாடுகளில் ஏற்பட்டிருந்தால்... மேற்குலக ஊடகங்கள் ஆட்சியாளர்களை போட்டு பென்டெடுத்திருப்பார்கள்.. அவர்களுக்கு வேண்டிய ஆட்சியாளர்களை புகுத்த. ஆனால்.. சொறீலங்காவில் எல்லாமே மேற்குலகின் பாராமுகத்தோடு நடந்தேறும். 

கோத்தா பதவியேறின சகுனம் சூப்பர் இன்னும் சில வருடங்களில் ஊர் போறவை  ரூபா நோட்டுக்களை வைத்து உருட்ட ஒரு ரோலி  ஒண்டு வாங்கிக்கொண்டு போவது நல்லது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

கோத்தா பதவியேறின சகுனம் சூப்பர் இன்னும் சில வருடங்களில் ஊர் போறவை  ரூபா நோட்டுக்களை வைத்து உருட்ட ஒரு ரோலி  ஒண்டு வாங்கிக்கொண்டு போவது நல்லது .

சிம்பாபே போல சொறீலங்கா விரைவில் ஆகும். டொலர் பாவனைக்கு வந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

சிம்பாபே போல சொறீலங்கா விரைவில் ஆகும். டொலர் பாவனைக்கு வந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

கொஞ்சநாளைக்கு  முதல் இந்த பொருளாதாரம் முடிவுக்கு போகும் என்று எதிர்வு கூற கம்பு சுற்றிய  வீரர்களை தேடுறன் எல்லா நாடும்தான் கடன் வாங்குது அமெரிக்காவே வாங்குது சிலோன் வாங்குவது பிழையில்லை என்று வாதிட்ட பெருமக்களை காணோம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால் எல்லா நாடுகளும் தான் கடன்படுது...இலங்கை கடன் வேண்டும் செய்திகளை மட்டும் தான் நாங்கள் வாசிக்கிறோம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உழைச்சு வாழுறவன் தான் வங்குரோத்தைப்பற்றி கவலைப்படவேணும்.
தண்டல்/தண்டி வாழுறவனுக்கு எல்லாம் ஒண்டுதானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

கோத்தா பதவியேறின சகுனம் சூப்பர் இன்னும் சில வருடங்களில் ஊர் போறவை  ரூபா நோட்டுக்களை வைத்து உருட்ட ஒரு ரோலி  ஒண்டு வாங்கிக்கொண்டு போவது நல்லது .

 

Link to comment
Share on other sites

5 hours ago, ரதி said:

கொரோனாவால் எல்லா நாடுகளும் தான் கடன்படுது...இலங்கை கடன் வேண்டும் செய்திகளை மட்டும் தான் நாங்கள் வாசிக்கிறோம் 
 

இலங்கையின் பொருளாதாரம் வளரும் சாத்தியங்கள் இல்லை. தலைக்கு மேல் கடன். ஆக கடன் சுமையில் மக்களே !

Link to comment
Share on other sites

உலகின் ஒரு பெரிய நிதி முதலீட்டு நிறுவனத்தை வழி நடத்தும் றே பல பொருளாதார விடயங்கள் கூறியுள்ளார். எவ்வாறு நாடுகள் அச்சடிக்கும் பணம் அவர்களின் பொருளாதரத்தை  வளர்க்கும் / சரிக்கும்

வாசிக்க  :: what-i-have-offer-you-ray-dalio-1f

RayDalio

ol06-cLx?format=png&name=small

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதை கருத்திற் கொள்ளாமல் ஜனாதிபதி நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வது அரசியலமைப்புற்கு புறம்பான செயற்பாடு என்று அறிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும் ஜனாதிபதி அதனை கருத்திற் கொள்ளாது, கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான செலவுகள் தொடர்பில் இடைக்கால கணக்கறிக்கைக்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் இயங்காத பட்சத்தில் இவர் யாரிடம் இந்த அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளார். அவர் தன்னிச்சையாக முடிவெடுத்து செயற்பட முடியாது. இதன் மூலம் அவர் முழு நாட்டையும் தனது தனிப்பட்ட தீர்மானத்திற்கிணங்க செயற்படுத்துவதாகவே காண்பித்துள்ளார்

இப்படிச் சொன்னால் சுமந்து கோத்தாவுக்காக வாதிடத் தயார்...

Link to comment
Share on other sites

இலங்கை பொருளாதாரா ரீதியாக ஒரு நடுத்தர நிலையில் உள்ளது என்றால், கோவிட் 19ன் முடிவில் எங்கு இருக்கும்? நிச்சயம் ஒரு பணக்கார நாடு என நிலைக்கு வந்து விடாது. ஒன்றில் தொடர்ந்தும் நடுத்த நாடாக இருக்கும் இல்லை வறுமை நாடாக இருக்கும். 

ஆனால், வழமை போல அதை அநேகமாக முடிவு செய்யும் வலு உலக நாடுகளிடம், அவர்கள் முதலீடுகளில் மற்றும் இறக்குமதி, வெளி நாட்டு வேலை வாய்ப்பு வசதிகளில் உள்ளது. 

சீனாவின் பக்கம் அதிகம் சாய்ந்த நிலையில் மேற்குலககம் சீன அணியை தவிர்க்க எண்ணக்கூடும். அதனால், இலங்கை வறுமை நாடாகும் சாத்தியங்கள் உள்ளன. 

அதுவே, ஒரு மக்கள் புரட்சியாக மாறவும் கூடும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.