Jump to content

ஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்


Recommended Posts

ஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்

 
Friday, May 08, 2020  www.jaffnamuslim.com  6
 

 

image_1caff3764f-560x416.jpg
 
 
 
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கில் கட்டணமின்றி ஆஜராகுவதற்கு, பிரபல சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இணக்கம் தெரிவித்ததாக அறிய வருகிறது.
 
 

முஸ்லிம்கள் வெட்கப்பட வேண்டும் - என் சமூகத்தை நினைத்து வேதனையும், கவலையும்தான் மிச்சம்

 
Saturday, May 09, 2020  www.jaffnamuslim.com  0
 

 

55485_LKA190507SriLankanMuslimsGetty_1557755695627.jpg
 
ஓர் கசப்பான உண்மைய, சொல்ல வேண்டும். 
 
ஜனாசா எரிப்பதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல ஒரு முஸ்லிம் ஜனாதிபதி சட்டத்தரனி முன் வரவில்லை. 
 
முஸ்லிம் சமய தலைவர்கள் முன்வரவில்லை. யாராவது முன்வந்தவர்களுக்கு அவர்கள் அனுசரனை வழங்குவதற்கும்  தயாராக இருக்கவில்லை. 
 
பல முஸ்லிம் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் என எவரும் முன்வரவில்லை. 
 
குறிப்பிட்ட சில முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் முன்வந்தாலும், நிதிப்பற்றாகுறை, நிதி சேகரிக்க விடாமை என ஓரிரு சம்பவங்கள் பெயர் தாங்கி முஸ்லிம்களாலே மேற்கொள்ளப்பட்டது. 
 
உண்மையிலேயே ஜனாதிபதி சட்டத்தரனி  சுமந்திரன் இந்த வழக்கில் ஆஜராவதை நினைத்து முஸ்லிம் சமுதாயம் வெட்கப்பட வேண்டும். முஸ்லிம் சமூகம் முதுகெலும்பற்ற,  சமூகமாக மாறியதை இங்கு வெளிக்காட்டி தந்திருக்கிறார் சுமந்திரன் அவர்கள்.  
 
எமக்கான குரல், என் சமூகத்திற்கான பலமான  குரல் இங்கு இல்லை என்பதனை சுமந்திரன்  இந்த வழக்கில் ஆஜராவதில் உறுதிப்படுத்துகிறது. வெட்கப்பட வேண்டிய விடயத்திற்கு இங்கு நாம் மகிழ்ச்சியடைகிறோம். !  
 
சுமந்திரன் வந்ததன் நோக்கம் எனக்கோ,உங்களுக்கோ தெரியாது. ஆனால் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் நல்லதொரு பாடத்தை சொல்லித்தந்து விட்டார் திரு.சுமந்திரன் அவர்கள் ! 
 
வெட்கப்பட்டு பதிவு போட வேண்டிய நாம்தான், சுமந்திரனுக்கு வாழ்த்து பதிவு இடுகின்றோம். ! 
 
இன்னமும் சமூகத்திற்கான தலைவர், இவர்கள் தான் முஸ்லிம் மக்களின் தலைவர், அந்த தலைவர், இந்த தலைவர் என கூப்பாடு போட்டுக்கொண்டு இன்னமும் தான் வால் பிடிக்க போகிறீர்களா? ஒட்டு மொத்த சமூகத்திற்கான பிரச்சினையின் போதாவது ஒன்று சேர்ந்து பிரச்சினைக்கு முடிவு கட்ட தயாரானார்களா? 
 
ஒருவரை, ஒருவர் குற்றம் சாட்டி, அதில் குளிர் காய்ந்து மையத்திலும் அரசியல் செய்த, செய்து கொண்டிருக்கின்ற கேவலமானவர்களுக்கு தான் இங்கு பல பேர் குடை பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். தயவு செய்து அந்த கிணற்றிலிருந்து வெளியே வாருங்கள். ! 
 
என் சமூகத்தை நினைத்து வேதனையும், கவலையும் தான் மிச்சம் 
 
Azeem Jahufer 
09.05.2020
 
 
Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply
12 minutes ago, கற்பகதரு said:

குறிப்பிட்ட சில முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் முன்வந்தாலும், நிதிப்பற்றாகுறை, நிதி சேகரிக்க விடாமை என ஓரிரு சம்பவங்கள் பெயர் தாங்கி முஸ்லிம்களாலே மேற்கொள்ளப்பட்டது. 

ஆமாம், பொருளாதார ரீதியாக கடினப்படும் மக்களுக்காக நீதி கேட்டும் பண்பை பாராட்டித்தான் ஆகவேண்டும்  👏

14 minutes ago, கற்பகதரு said:

முஸ்லிம் சமூகம் முதுகெலும்பற்ற,  சமூகமாக மாறியதை இங்கு வெளிக்காட்டி தந்திருக்கிறார் சுமந்திரன் அவர்கள்.  

ஏற்கனவே தமிழ் சமூகத்தை முதுகுள்ள  சமூகமாக மாற்றிவிட்டார் ...எனக்குத்தான் அது விளங்கவில்லை😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இங்கு உலமா கட்சித் தலைவரின்  வேண்டுகோள்/ சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முசிலிம்கள் மிகவும் தெளிவாக உள்ளனர். முசிலிம்கள் தவிர்த்து யார் அவர்களுக்கு உதவினாலும் அவர்கள் கறிவேப்பிலையாகத் தூக்கி எறியப்படுவார்கள். என்பதைக் கட்டுரை மிகவும் தெளிவாகக் கூறுகிறது. ☹️

பாவம் சுமந்திரன். 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் தலைவர்கள் இப்பொழுது சொல்வார்கள்.....நாங்கள்(முஸ்லீம்கள்)சிறிலங்கா சட்டத்தை மதித்து எமது மத சம்பிரதாயங்களையே விட்டு கொடுக்கிறோம்....ஏன் இந்த" த"காபீர் தேவையில்லாமல் எமது சமுகத்தை கொச்சைப்படுத்துகிறார் ..என்று...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வைத்தே  முசிலிம்கள் அரசியல் செய்வார்கள், இப்போது வாழ்த்தும் அனைவரும் அவர்களுடன் சேர்ந்து காறித்துப்புவார்கள் , அதுசரி மானம் ரோஷம் இருந்தால்தானே இதுவெல்லாம் பெரிதாக தெரிய ...
கட்டணம் இல்லாமல் அதுவும் ...பலே பாண்டியா அதுசரி சுமந்திரன் தொழில்முறைவாதியாக  மாறிவிட்டார் என்று கேள்விப்பட்டதற்கும் இப்போது கட்டணம் இல்லாமல் என்பதற்கும் எங்கேயோ இடிக்கிறதே ,
ஒருவேளை சும்  சமஷ்ட்டி ,ஏக்கிய ராஜ்ய சூத்திரத்தை வைத்து தமிழர்களின் மண்டையை கழுவ முற்பட்டது போல தனது மந்தைகளின் மண்டையையும் கழுவுகிறாரோ  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

முசிலிம்கள் மிகவும் தெளிவாக உள்ளனர். முசிலிம்கள் தவிர்த்து யார் அவர்களுக்கு உதவினாலும் அவர்கள் கறிவேப்பிலையாகத் தூக்கி எறியப்படுவார்கள். என்பதைக் கட்டுரை மிகவும் தெளிவாகக் கூறுகிறது. ☹️

பாவம் சுமந்திரன். 🤥

ஏற்கெனவே முஸ்லீம்களை வடக்கிலிருந்து வெளியேற்றியது பற்றி அறிக்கை விட்டு, அவர்களின் மேடைகளில் கூடிக் குதூகலித்தார். அப்புறம் அவர்களின் சமயத்தைப் பற்றி கருத்துச் சொல்லப்போய் மூக்குடைபட்டவர். ஆனாலும் அவருக்கு அவர்கள் தான் தோது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை நான் விமர்சிப்பதாக போலியான செய்திகளை பரப்புகின்றனர் - விளக்கமளிக்கிறார் ஹக்கீம்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

 

அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒட்டுண்ணிகள் தங்களது இயலாமையை மறைப்பதற்காகவே முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பதற்கு எதிராக நண்பன் சுமந்திரன் எடுத்திருக்கும் முயற்சியை நான் விமர்சித்து வருவதாக போலி செய்திகளை பரப்பி வருகின்றனர்.

அத்துடன் சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றம் ஊடாக நியாயத்தை பெற்றுக்கொள்வதற்கு  சிறிலங்கா முஸ்லிம்  காங்கிரஸ் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


Hakeem.jpg

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை தான் விமர்சித்துவருவதாக முகநூலில் பதிவாகியுள்ள போலியான செய்திக்கு விளக்கமளிக்கும் வகையில் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பது சம்பந்தமாக இந்த அரசாங்கம் பிடிவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றது. இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று அதனை சவாலுக்குட்டுத்துகின்ற முயற்சியில் ஒருசில சகோதரர்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இந்த விவகாரத்தை தன்னுடைய கையில் எடுத்திருக்கின்றது. 

அதேநேரம் இந்த வழக்கொன்றில் என்னுடைய நண்பன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்வந்து, எந்த ஊதியமும் பெறாமல் வழக்கில் ஆஜராகுவதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்ற நிலையில், வேண்டுமென்று எமது கட்சிக்கு எதிரான ஒருசாரார் தங்களுடைய வங்குரோத்து அரசியலை அடிப்படையாகவைத்து, நண்பன் சுமந்திரன் இந்த விடயத்தில் தலையிடுவதை நான் விமர்சித்ததாக தெரிவித்து முகநூல் பதிவொன்றை போலியாக இட்டு அவர்களது வங்குரோத்து நிலைமையை காட்டி நிக்கின்றது.

நண்பன் சுமந்திரன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் சிறந்த உறவைப்பேணிவரும் ஒரு அரசியல்வாதி மத்திரமல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல விவகாரங்களில் குறிப்பாக சிறுபான்மை இனங்கள் சகோரத்துவத்துடன் செயற்படவேண்டும்.

இந்த நாட்டு அரசியலிலே எம்மவருக்கு எதிராக எவ்வாறான சவால்கள் வந்தாலும் இயன்றவரை நாங்கள் ஒன்றாக இருந்து போராட வேண்டும் என்ற கொள்கையில் பயணிப்பவர்கள்.

இந்த நிலையில் சகோதரர் சுமந்திரன் எடுத்திருக்கும் முயற்சியை நாங்கள் எல்லோரும் மனதார பாராட்டவேண்டுமே ஒழிய, இவ்வாறு தங்களது வங்குரோத்து அரசியலுக்காக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை மலினப்படுத்துவதற்காக செய்கின்ற நடவடிக்கையை நான் வண்மையாக கண்டிக்கின்றேன்.

அத்துடன் இந்த விடயத்தை ஆரம்பத்திலே வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவன் என்ற அடிப்படையிலே இது சம்பந்தமாக நாங்களும் நீதிமன்றம் கொண்டு சென்று அதனூடாக நியாயம் கேட்பதற்கு  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மேலும் இந்த விவகாரத்தில் நண்பன் சுமந்திரன்  எந்த ஊதியமும் பெறாமல் ஒரு வழக்கறிஞராக முன்வந்திருப்பது, இரு சமூகங்களுக்கிடையில் இருக்கின்ற சகோதர உணர்வை மாத்திரமல்ல, நியாயம் கேட்டு போராடுகின்ற விவகாரத்திலே நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து போராடுவதற்கு தயாராக இருக்கின்றோம் என்ற செய்தியை உரத்துச்சொல்கின்றது.

இந்த பின்னணியிலே முஸ்லிம்களும் தமிழர்களும் மாத்திரமல்ல, நியாயமாக சிந்திக்கின்ற சிங்கள, பெளத்தர்களும் கூட முஸ்லிம்களின் உணர்வு ரீதியான இந்த விவகாரத்திலே, அவர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநியாயம் குறித்து ஒன்றாக குரல் எழுப்பவேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கின்றது.

எனவே இந்த விடயத்திலே நீதிமன்றம் ஊடாக நியாயத்தை பெறுகின்ற முயற்சியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி இருக்கின்றது.

அந்த வழங்குகளிலே நாங்களும் பங்குகொள்கின்றோம். இந்த நிலையில் சகோதரர் சுமந்திரனை நான் விமர்சிப்பதாக போலியான செய்திகளை பரப்புகின்ற, இந்த அரசாங்கத்துடன் ஒட்டியிருக்கின்ற ஒருசில ஒட்டுண்ணி கட்சிகள் தங்களுடைய வங்குரோத்து அரசியலுக்கு வேறு வழியில்லாமல் தங்களது இயலாமையை மறைப்பதற்காக செய்கின்ற இந்த ஈனச்செயலையிட்டு கவலையடைக்கின்றேன்.
 

https://www.virakesari.lk/article/81731

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதத்துக்கும் சட்டத்துக்கும் அறிவியலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணராதவர்களின் சட்டம் பொய்த்தே போகும். 

அறிவியல் எரிக்கச் சொன்னால் எரியுங்கள்.. அங்கு சட்டமும் மதமும் செல்வாக்குச் செய்யக் கூடாது. காரணம்.. அறிவியல் ஆய்ந்து சொல்லும்.. சட்டம் தர்க்கிச்சு வெல்லும்..மதம் கற்பனையில் செல்லும். 

Link to comment
Share on other sites

ஒரு மாபெரும் உயிர் கொல்லி வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க மத வழிபாட்டு தலங்களை பூட்டிவைக்ப்பட்டதை ஏற்றுக்கொண்ட அறிவு  மதங்கள் பரப்பிய அறிவுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று வாதாடுவதில்  எங்கு போய்விட்டது.  சடலங்களை எரித்தால் அல்லாவின் கோப‍த்திற்கு ஆளாக நேரிடும் என்று முட்டாள்தனமாக நம்பும் இஸ்லாமியர்கள் கொரோணாவில் இருந்து அந்த அல்லாவால் மக்களை காப்பாற்ற முடியவில்லை என்று அறிவு ரீதியாக சிந்திக்கலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

மதத்துக்கும் சட்டத்துக்கும் அறிவியலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணராதவர்களின் சட்டம் பொய்த்தே போகும். 

அறிவியல் எரிக்கச் சொன்னால் எரியுங்கள்.. அங்கு சட்டமும் மதமும் செல்வாக்குச் செய்யக் கூடாது. காரணம்.. அறிவியல் ஆய்ந்து சொல்லும்.. சட்டம் தர்க்கிச்சு வெல்லும்..மதம் கற்பனையில் செல்லும். 

சிறந்த கருத்து.
உழுத்து போன காலாவதியான முஸ்லிம் மத கொள்கைகளுக்கு முண்டு கொடுப்பதே சிலருக்கு வேலையாக போய்விட்டது.

Link to comment
Share on other sites

மட்டக்களப்பில் நோன்புப்பெருநாளுக்காக கள்ளமாடு பிடிக்கப்போன 4முஸ்லிம் காடைகளும் வாகனமும் தமிழ்இளைஞரகளால் பிடிக்கப்பட்டுள்ளது .இவர்களுக்காகவும் சுமந்திரன் ஆஜராகவேண்டுமெனக்கேட்டுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரனுக்கு இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் வாழ்நாள் பூராவும் நன்றிக்கடன் பட்டுள்ளனர்.

PicsArt_05-10-02.12.05.jpg

 

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது  சடலங்களை

எரிப்பதனை ஆட்சேபித்து உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை கட்டணமின்றி பேசுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள பிரபல்யமான சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரனுக்கு இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் வாழ்நாள் பூராவும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக முன்னாள் மேல் மாகாண சபை உறுபபினர் சாபி றஹீம் தெரிவித்தார்.
 
 
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
உண்மையிலேயே சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் கொரொனா தொற்றினால் உயிரிழப்பவர்களது சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகுவதையிட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக எனவும் இந்த நாட்டினுடைய முஸ்லிம் சமூகத்தினுடைய வரலாற்றில் வாழ் நாள் நன்றிமறவாத மனிதராக திகழ்வார் எனவும் அவர் தெரிவித்தார்.
 
 
 
;இந்த வழக்குத் தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் எத்தனையோ சட்டத்தரணிகள் அரசியல் தலைவர்கள் இருந்த போதிலும் தற்போது திராணியற்ற நிலையிலுள்ளார்கள் என்பது யாவரும் அறிந்த வெளிப்படையான உண்மை.
 
 
இருப்பினும் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களுடைய உடலை உலக சுகாதார ஸ்தாபனம் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு விதிகளுடன் புதைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
 
 
ஆனால் இலங்கையில் முஸ்லிம்களின் உடலை அடக்கும் செய்யும் விடயத்தில் விட்டுக் கொடுக்காமல் அரசியல் இலாபம் கருதி வீரியமிக்க செயற்பாடாக மேற் கொண்டு வருகின்றார்கள். இதனால் அனைத்து முஸ்லிம் மக்களது மனங்களும் புண்படுத்தப்பட்டுள்ளன. இம்மக்களது பிரச்சினையை சகோதர சிறுபான்மையின தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் படுத்தும் சட்டத்தரணி சுமந்திரன் மட்டுமல்ல பெரும்பான்மையின மக்களைச் சார்ந்த அரசியல்வாதிகளும் சட்டத்தரணிகளும் மனமுவந்து காருண்ணியத்துடன் நோக்க வேண்டி இருக்கிறது.
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முடக்கப்பட்ட நாடு தளர்த்தப்பட்டு மீளவும் இன்று திறந்து விடுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 
 
இது தேர்தலை மையப்படுத்தி எடுக்கப்படும் வேலைத் திட்டமாக இருப்பின் இதனால் ஏற்படும் விளைவு ஆபத்தானது. முழு நாட்டு மக்களையும் பாரிய பிரச்சினைக்குள் தள்ளிவிடுமளவுக்கு அபாயரகமானது.
 
 
இது எவ்வாறாயினும்; நாடு தளர்த்தப்பட்டபின்னர் மக்கள் நடந்த கொள்ளும் விதம் முடக்கப்பட்டு இருந்த காலத்தை விட இனி வரும் காலங்களில் மிக மிக அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
இந்நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் மிகவும் ஆரோக்கியமானதாகவும், நீண்ட ஆயுளுடனனும் கூடிய மிகச் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு உதவக் கூடிய வகையில் அரசாங்கம் விதித்துள்ள சமூக இடைவேளியைப் பேணி சுகாதார ஒழுங்களையும் பாதுகாப்பு நடைமுறைகளையும் பேணி நடத்தல் அவசியம்.
 
 
இந்த இக்கெட்டான கால கட்டத்தில் முஸ்லிம் சமூகம் மனமுடைந்த நிலையில் உள்ள நேரத்தில் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலை இஸ்லாமிய மார்க்க விழுமியங்களுக்கு மாறாக தகனம் செய்வதை ஆட்சேபித்து உயிர் நீதி மன்றத்தில் எந்தவொரு கட்டணமுமின்றி வாதிடுவதற்கான ஆஜராகவுள்ள சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் அவர்களுக்கு என் சார்பாகவும் எமது முஸ்லிம் சமூகம் சார்ப்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைந்து கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
அம்மார்
10-05-2020
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜ‌னாஸாக்க‌ளை எரிக்கும் ம‌ருத்துவ‌ துறையை எதிர்த்து சிங்க‌ள‌ ச‌ட்ட‌த்த‌ர‌ணி ஒருவ‌ருட‌ன் இணைந்து ஹ‌க்கீம் வ‌ழ‌க்காடுவ‌தே சிற‌ந்து.- ‌ உல‌மா க‌ட்சி

 

collage.jpg

 

கொரோனா முஸ்லிம் ஜ‌னாஸாக்க‌ளை எரிக்கும் ம‌ருத்துவ‌ துறையை எதிர்த்து சும‌ந்திர‌ன் மூல‌ம் வ‌ழ‌க்கு தாக்க‌ல் செய்வ‌து சிங்க‌ள‌ இனவாதிக‌ளுக்கு தீணியாக‌ இருக்கும் என்ப‌தால் அதை விட‌ ஹ‌க்கீமின் த‌லைமையில் அல்ல‌து சிற‌ந்த‌ சிங்க‌ள‌ ச‌ட்ட‌த்த‌ர‌ணி ஒருவ‌ருட‌ன் இணைந்து ஹ‌க்கீம் வ‌ழ‌க்காடுவ‌தே சிற‌ந்து என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். அவ‌ர் இது ப‌ற்றி தெரிவித்த‌தாவ‌து,
ஜ‌னாஸாக்க‌ளை எரிப்ப‌தை நாம் ஏற்றுக்கொள்ள‌வே இல்லை. இது சுகாதார‌ அமைச்சு ம‌ற்றும் சுகாதார‌ துறையின‌ரின் மிக‌ப்பெரிய‌ த‌வ‌று என்ப‌தே எம‌து க‌ட்சியின் நிலைப்பாடாகும். இது த‌வ‌று என்ப‌தை நாம் அர‌சின் அனைத்து உய‌ர் ம‌ட்ட‌த்துக்கும் எழுத்து மூல‌ம் தெரிவித்துள்ளோம்.
இந்த‌ விட‌ய‌த்தில் அர‌சுக்கு சார்பான‌ உங்க‌ளின் க‌ருத்தை ஏன் அர‌சு ஏற்க‌வில்லை என‌ ப‌ல‌ரும் எம்மிட‌ம் கேட்கிறார்க‌ள்.

எந்த‌ அர‌சாங்க‌மாக‌ இருந்தாலும் த‌ம‌து சார்பு ம‌க்க‌ள் பிர‌திநிதிக‌ளான‌ எம் பீக்க‌ள் உள்ள‌ க‌ட்சிக‌ளின் க‌ருத்துக்கே இட‌ம‌ளிக்கும். எம் பி அல்லாத‌ சாதார‌ண‌ க‌ட்சிக‌ளுக்கு அர‌சாங்க‌ங்க‌ள் இட‌ம‌ளித்த‌தாக‌ இல‌ங்கை வ‌ர‌லாற்றில் இல்லை. ஆனாலும் உல‌மா க‌ட்சிக்கு ம‌ட்டுமே ஓர‌ள‌வு ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ ஜ‌னாதிப‌தியாக‌ இருந்த‌ போது இட‌ம‌ளித்தார். ச‌மூக‌த்தின் சில‌ கோரிக்கைக‌ளை நிறைவேற்றித்த‌ந்தார். பின்ன‌ர் முஸ்லிம்க‌ளின் வாக்குக‌ள் பெரிதாக‌ இல்லை என்று தெரிந்த‌தும் எம‌க்கு அர‌சில் போதுமான‌ இட‌மில்லை என்ப‌து உண்மை. சில‌ வேளை ம‌ஹிந்த‌ இப்போதும் ஜ‌னாதிப‌தியாக‌ இருந்திருந்தால் நிச்ச‌ய‌ம் நாம் ப‌ல‌தை சாதித்திருப்போம்.
ந‌ம‌து முஸ்லிம் மக்க‌ளே வோட்டு இல்லாத‌ க‌ட்சிக‌ளுக்கு இடம் த‌ராத‌ போது அர‌சு த‌ரும் என‌ எதிர்பார்ப்ப‌தும் முட்டாள்த‌ன‌மாகும்.

ஜ‌னாஸா எரிப்பு விட‌ய‌த்தில் ஹ‌க்கீம் முத‌லில் ந‌ட‌ந்து கொண்ட‌மை பெரும் த‌வ‌று. அவ‌ர் ஒரு எம் பியாக‌ அமைச்ச‌ராக‌, ஒரு ல‌ட்ச‌த்துக்கு மேற்ப‌ட்ட‌ முஸ்லிம்களின் ஓட்டு பெற்ற‌ க‌ட்சி த‌லைவ‌ராக‌ இருக்கும் நிலையில் இந்த‌ விட‌ய‌த்தை அணுகிய‌ முறை பிழை என்ப‌தை அப்போதே நாம் ஊட‌க‌ வாயிலாக‌ சுட்டிக்காட்டினோம். ஹ‌க்கீமின் இட‌த்தில் ஒரு சாதார‌ண‌ மீன் வியாபாரி த‌லைவ‌ராக‌ இருந்தாலும் ஹ‌க்கீமை விட‌ திற‌மையாக‌ இத‌னை கையாண்டிருப்பான்.

ஹ‌க்கீம் என்ன‌ செய்தார்? சாதார‌ண‌, ம‌க்க‌ள் செல்வாக்கே இல்லாத‌ க‌ட்சி போல் முக‌நூலில் எரிக்க‌ கூடாது என‌ அறிக்கை விட்டார். அதுவும் ஆங்கில‌த்தில். அந்த‌ அறிக்கை சாதார‌ண‌மாக‌த்தான் இருந்த‌து. பின்ன‌ர் அவ‌ர‌து ஆத‌ர‌வாள‌ர்க‌ள் அந்த‌ அறிக்கையில் இல்லாத‌ வ‌ச‌ன‌ங்க‌ளை சேர்த்து க‌ண்ட‌ன‌ அறிக்கையாக‌ த‌மிழில் வெளியிட்ட‌ன‌ர். த‌மிழ் அறிக்கை சிங்க‌ள‌த்துக்கு மாற்ற‌ப்ப‌ட்டு அர‌சை ஆத்திர‌ம் கொள்ள‌வைத்த‌து.
உண்மையில் ஹ‌க்கீம் என்ன‌ செய்திருக்க‌ வேண்டும்?
ஹ‌க்கீம் ம‌க்க‌ள் வாக்குள்ள‌ க‌ட்சியின் த‌லைவ‌ர் என்ப‌தால், முன்ன‌ள் அமைச்ச‌ர் என்ப‌தால் இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ ஜ‌னாதிப‌தியுட‌ன் பேசுவ‌த‌ற்கு முய‌ற்சித்திருக்க‌ வேண்டும். அவ்வாறு செய்வ‌தாக‌ பேஸ்புக் அறிக்கைக்கு முன் எந்த‌ த‌க‌வ‌லும் வெளிவ‌ர‌வில்லை.

நாங்கள் கூட‌ ஜ‌னாதிப‌தியை நேர‌டியாக‌ ச‌ந்திப்ப‌து க‌ஷ்ட‌ம். கார‌ண‌ம் நாங்க‌ள் முஸ்லிம்க‌ளின் ஆணை பெற்ற‌வ‌ர்கள் இல்லை. ஜ‌னாதிப‌திக்கு ஆத‌ர‌வாக‌ செய‌ற்ப‌ட்ட‌ க‌ட்சியாக‌ நாம் இருந்தும் அவ‌ர் ப‌த‌வியேற்ற‌திலிருந்து இன்று வ‌ரை அவ‌ரை ச‌ந்திக்க‌ எம‌க்கு நேர‌ம் த‌ர‌ப்ப‌ட‌வில்லை.
ஆனால் ஹ‌க்கீம் நினைத்தால் உட‌ன‌டியாக‌ ஜ‌னாதிப‌தியை ச‌ந்திக்க‌ முடியும். அப்ப‌டி செய்ய‌வில்லை.
பின்ன‌ர் ம‌ஹிந்த‌வை ச‌ந்திக்க‌ முய‌ற்சி செய்தார். அப்போதும் அவ‌ர் என்ன‌ செய்திருக்க‌ வேண்டும்?
இது ஒட்டுமொத்த‌ முஸ்லிம் ச‌மூக‌ பிர‌ச்சினை என்ப‌தால் முத‌லில் ஆளுந்த‌ர‌ப்புக்கு ஆத‌ர‌வான‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளையும் ஆளுந்த‌ர‌ப்பில் அங்க‌ம் வ‌கிக்கும் அர‌சிய‌ல்வாதிக‌ளையும் கூட்டி ஆலோசித்திருக்க‌ வேண்டும்.
அத‌ன் பின் ஆளுந்த‌ர‌ப்பு முஸ்லிம் க‌ட்சிக‌ள், எதிர் த‌ர‌ப்பு முஸ்லிம் க‌ட்சிக‌ள் இணைந்து கூட்டாக‌ இந்த‌ விட‌ய‌த்தை முத‌லில் ஜ‌னாதிபதியுட‌னும் பின்ன‌ர் ம‌ஹிந்த‌வுட‌னும் பேசியிருக்க‌ வேண்டும்.
ஆனால் ஹ‌க்கீம் எரிப்பு விட‌ய‌த்தில் த‌ன‌து க‌ட்சிக்கு அர‌சிய‌ல் லாப‌ம் தேட முய‌ற்சித்த‌தால்த்தான் அவ‌ரும் அவ‌மான‌ப்ப‌ட்டு ச‌மூக‌மும் அவ‌மான‌ப்ப‌ட்டு நிற்கிற‌து.
இன்ன‌மும் கூட‌ ஹ‌க்கீம், வ‌ட‌ கிழ‌க்கை இணைக்க‌ வேண்டும் என‌ போராடும் சும‌ந்திர‌னைத்தான் ந‌ம்புகிறாரே த‌விர‌ தானும் ஒரு ச‌ட்ட‌த்த‌ர‌ணி என்ப‌தை ந‌ம்ப‌வில்லை.
இவ்வாறு சும‌ந்திர‌ன் மூல‌ம் இது விட‌ய‌ம் வ‌ழ‌க்காட‌ப்ப‌டும் போது சிங்க‌ள‌ இன‌வாதிக‌ள்தான் ச‌க்தி பெறுவார்க‌ள்.
அதோ த‌மிழ‌ரும் முஸ்லிம்க‌ளும் சிங்க‌ள‌ அர‌சுக்கெதிராக‌ ஒன்று சேர்ந்து விட்டார்கள். சிங்க‌ள‌வ‌ர் நாம் ஒன்று ப‌ட‌ வேண்டும் என்ப‌ர்.

என‌வேதான் சொல்கிறோம். முஸ்லிம்க‌ள் ஓட்டுப் பெற்ற‌ க‌ட்சியின் த‌லைவ‌ரான‌ ஹ‌க்கீம் த‌லைமையில் எரிப்புக்கெதிராக‌ நீதிம‌ன்ற‌ம் போக‌ வேண்டும். ஹ‌க்கீமுக்கு வாதிடும் அறிவு இல்லை என்றால் சிற‌ந்த‌ சிங்க‌ள‌ ச‌ட்ட‌த்த‌ர‌ணிக‌ள் த‌லைமையில் வாதாடலாம். அத‌ற்கான‌ ப‌ண‌த்தை முஸ்லிம்க‌ளின் ஓட்டுக்க‌ளை கோடிக்க‌ன‌க்கான‌ ரூபாய்க‌ளுக்கு விற்ற‌ முஸ்லிம் காங்கிர‌சின் நிதியில் இருந்தும் தாருஸ்ஸ‌லாமில் கொள்ளைய‌டித்த‌ ப‌ண‌த்திலிருந்தும் பெற‌லாம். அப்ப‌டியும் முடியாது என்றால் முஸ்லிம் த‌ன‌வ‌ந்த‌ர்க‌ளிட‌மிருந்து பெற‌லாம். ஹ‌க்கீம் அடுத்த‌ பாராளுமன்றிலும் இந்த‌ அர‌சுக்கு ஆத‌ர‌வ‌ளித்து அமைச்சாராகுவார் என்ப‌தால் நிச்ச‌ய‌ம் த‌ன‌வ‌ந்த‌ர்க‌ள் அவ‌ருக்கு ப‌ண‌ம் வ‌ழ‌ங்குவ‌ர் என்ற‌ ந‌ம்பிக்கை எம‌க்குண்டு.

http://www.importmirror.com/2020/05/blog-post_767.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, colomban said:

ஜ‌னாஸாக்க‌ளை எரிக்கும் ம‌ருத்துவ‌ துறையை எதிர்த்து சிங்க‌ள‌ ச‌ட்ட‌த்த‌ர‌ணி ஒருவ‌ருட‌ன் இணைந்து ஹ‌க்கீம் வ‌ழ‌க்காடுவ‌தே சிற‌ந்து.- ‌ உல‌மா க‌ட்சி

முசிலிம்களின் உண்மையான முகம் இது. 👍

அவர்கள் பலவீனமான நிலையில் உள்ள தமிழர்களைத்தான் தங்கள் எதிரியாகக் கொள்கிறார்கள். பலமான நிலையில் உள்ள சிங்களத்துடன் கூட இருப்பதையே விரும்புகிறார்கள். ☹️

நாம்தான் அவர்களை எங்கள் சகோதரர்கள் என்று கூறிக்கொண்டு இருக்கிறோம். ☹️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

முசிலிம்களின் உண்மையான முகம் இது. 👍

அவர்கள் பலவீனமான நிலையில் உள்ள தமிழர்களைத்தான் தங்கள் எதிரியாகக் கொள்கிறார்கள். பலமான நிலையில் உள்ள சிங்களத்துடன் கூட இருப்பதையே விரும்புகிறார்கள். ☹️

நாம்தான் அவர்களை எங்கள் சகோதரர்கள் என்று கூறிக்கொண்டு இருக்கிறோம். ☹️

 

இவர்களை சிங்களவர்கள் மிதி மிதி என்று மிதிச்சாலும்.. அவன் நல்லவன்டா என்று தான் சொல்வார்கள். 

காரணம்.. இவர்கள் சிங்கள பெரு விருட்சத்தைப் பற்றி வளரும் கொடியாகவே இருக்க விரும்புகின்றனர். தமிழர்களைப் போல்.. தனி விருட்சமாக இருக்க விரும்பவில்லை. அதற்கான முகாந்திரம் இவர்களிடம் இல்லை... என்பது தெரிந்ததே. இது சிங்களவனுக்கும் தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலோலியூரான் ரவீ..ன் said:

மட்டக்களப்பில் நோன்புப்பெருநாளுக்காக கள்ளமாடு பிடிக்கப்போன 4முஸ்லிம் காடைகளும் வாகனமும் தமிழ்இளைஞரகளால் பிடிக்கப்பட்டுள்ளது .இவர்களுக்காகவும் சுமந்திரன் ஆஜராகவேண்டுமெனக்கேட்டுக்கொள்கிறேன்.

இடம் தெரிந்தால் ஆஜாராவார்...தமிழ்ப் பொடியளை சிறைக்கு அனுப்பவும் தயங்கமாட்டார்...யுவர் ஆனர்..

Link to comment
Share on other sites

ஜனாதிபதிக்கு ரிஷாட் கடிதம்

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்ற இலங்கை முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தொடர்ச்சியாக தகனம் செய்யப்படுவதால், முஸ்லிம் சமூகம் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடித்தில் தெரிவித்துள்ளார்.

அக்கடித்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

உலகில் 180 க்கு மேற்பட்ட நாடுகளிலும் உலக சுகாதார ஸ்தாபனம்  2020.03.24 ஆம் திகதி வெளியிட்ட, 'கொவிட் – 19 இன் காரணமாக மரணிக்கும் உடல்களை பாதுகாப்பாக கையாள்வது தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு வழிகாட்டல்களின்' பிரகாரமும், கொரோனா தொற்றுநோய் காரணமாக மரணித்த உடல்களை புதைப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கும் பல்லாயிரக்கணக்கான உடல்கள் ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, ஸ்பெயின், சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் ஹொங்கொங் போன்ற மருத்துவத் துறையில் சிறந்து விளங்குகின்ற நாடுகளில் கூட பாரிய புதைகுழிக்குள் அடக்கம் செய்வதனை சர்வதேச செய்திகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.

ஆனால், எமது நாடான இலங்கையில் 2020.04.11 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் முடியும் என்பதனை மாற்றி, தகனம் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதால் அடக்கம் செய்வதற்கான முஸ்லிம்களின் உரிமை தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஏப்ரல் 11 ஆம் திகதி  வெளியிடப்பட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதிக்கு-ரிஷாட்-கடிதம்/175-250004

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கூட‌ ஜ‌னாதிப‌தியை நேர‌டியாக‌ ச‌ந்திப்ப‌து க‌ஷ்ட‌ம். கார‌ண‌ம் நாங்க‌ள் முஸ்லிம்க‌ளின் ஆணை பெற்ற‌வ‌ர்கள் இல்லை. ஜ‌னாதிப‌திக்கு ஆத‌ர‌வாக‌ செய‌ற்ப‌ட்ட‌ க‌ட்சியாக‌ நாம் இருந்தும் அவ‌ர் ப‌த‌வியேற்ற‌திலிருந்து இன்று வ‌ரை அவ‌ரை ச‌ந்திக்க‌ எம‌க்கு நேர‌ம் த‌ர‌ப்ப‌ட‌வில்லை.

அப்ப இவரு ஒரு கிணத்து தவளை என்பதை ஒத்துக்கிட்டாரெல்லே...

Link to comment
Share on other sites

4 hours ago, nedukkalapoovan said:

மதத்துக்கும் சட்டத்துக்கும் அறிவியலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணராதவர்களின் சட்டம் பொய்த்தே போகும். 

அறிவியல் எரிக்கச் சொன்னால் எரியுங்கள்.. அங்கு சட்டமும் மதமும் செல்வாக்குச் செய்யக் கூடாது. காரணம்.. அறிவியல் ஆய்ந்து சொல்லும்.. சட்டம் தர்க்கிச்சு வெல்லும்..மதம் கற்பனையில் செல்லும். 

உலக சுகாதார அமைப்பு, கோவிட்19னால் இறந்தவர்களை புதைப்பதால் அது வைரசு பரவும் என ஆதாரம் இல்லை என கூறியுள்ளது. மேற்குலக நாடுகளில் புதைக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ampanai said:

உலக சுகாதார அமைப்பு, கோவிட்19னால் இறந்தவர்களை புதைப்பதால் அது வைரசு பரவும் என ஆதாரம் இல்லை என கூறியுள்ளது. மேற்குலக நாடுகளில் புதைக்கிறார்கள். 

அந்த மேலை நாடுகளில் அதற்கேற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப் படுகின்றன...இங்கு பச்சைதுணியால் மூடிகட்டிவிட்டு ஊர்வலம் நடாத்தி புதைப்பினம்..பரவல் விரைவாகும்...இதற்கு டெல்லியில் நடந்த முசுலீம் மாநாடு உதாரணம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் எனது பள்ளிக்கால நண்பன் (Royal college/Holy family convent brother sister schools). எமது நற்பு என்னும் தொடர்கிறது. உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அறியத்தரவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை முஸ்லீம்கள் மெச்சி பாராட்டுவார்கள் நாலு நாள் கழித்து சுமந்திரனை தூற்றுவார்கள் பிரபாகரன் எனும் தலைவரை போற்றினார்கள் புலிகளால்தான் நாங்களும் இலங்கையில் வாழ்கிறோம் என சொன்னவர்கள் 

புலிகள் முற்றாக அழிந்தார்கள் பிரபாகரனும் இறந்து போய்விட்டார் என பால் சோற்றும் , யூஸ்சும் கொடுத்து கொண்டாடியவர்கள் இவர்கள் இவர்கள் கிடைக்கும் சந்தர்ப்பம் அத்தனையையும் பயன்படுத்தி பலனை அடைந்துவிட்டு நமக்கே ஆப்படிப்படிப்பவர்கள் 

11 hours ago, அக்னியஷ்த்ரா said:

இதை வைத்தே  முசிலிம்கள் அரசியல் செய்வார்கள், இப்போது வாழ்த்தும் அனைவரும் அவர்களுடன் சேர்ந்து காறித்துப்புவார்கள் , அதுசரி மானம் ரோஷம் இருந்தால்தானே இதுவெல்லாம் பெரிதாக தெரிய ...
கட்டணம் இல்லாமல் அதுவும் ...பலே பாண்டியா அதுசரி சுமந்திரன் தொழில்முறைவாதியாக  மாறிவிட்டார் என்று கேள்விப்பட்டதற்கும் இப்போது கட்டணம் இல்லாமல் என்பதற்கும் எங்கேயோ இடிக்கிறதே ,
ஒருவேளை சும்  சமஷ்ட்டி ,ஏக்கிய ராஜ்ய சூத்திரத்தை வைத்து தமிழர்களின் மண்டையை கழுவ முற்பட்டது போல தனது மந்தைகளின் மண்டையையும் கழுவுகிறாரோ  

நமக்கு இவங்கள் திருகு தாளங்கள் தெரியும் தானே 

10 minutes ago, nilmini said:

சுமந்திரன் எனது பள்ளிக்கால நண்பன் (Royal college/Holy family convent brother sister schools). எமது நற்பு என்னும் தொடர்கிறது. உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அறியத்தரவும். 

முடிந்தால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணச் சொல்லுங்கள் அவர் புடுங்கிற ஆணியெல்லாம் தேவையில்லாத ஆணியாத்தான் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nilmini said:

சுமந்திரன் எனது பள்ளிக்கால நண்பன் (Royal college/Holy family convent brother sister schools). எமது நற்பு என்னும் தொடர்கிறது. உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அறியத்தரவும். 

தமிழ் மக்கள் மேல் கொஞ்சசமாவது அக்கறை இருந்தால் தொடந்து அரசியலில் இருக்க சொல்லுங்கள் ...அப்படி இல்லாதவிடத்து பதவியை இராஜினாமா செய்து விட்டு வக்கீல் தொழிலை மட்டும் பார்க்க சொல்லுங்கள் அல்லது சிங்கள கட்சிகள் ஏதாவது ஒன்றில் போய் சேர சொல்லுங்கள் 
அதை விட அவரும், அவரது மனைவியும் சேர்ந்து ஆட்களை மதம் மாற்றுவதை நிறுத்த சொல்லுங்கள் 😉
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் எனது பள்ளிக்கால நண்பன் (Royal college/Holy family convent brother sister schools). எமது நற்பு என்னும் தொடர்கிறது. உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அறியத்தரவும். 

நீங்கள் திரு சுமந்திரன் அவர்களின் அரசியல் ரீதியாக என்ன அபிப்பிராயம் கொண்டுள்ளீர்கள் என்பது தெரியாமல் உங்களிடம் எப்படி கேள்வியை கேட்பது. கம்பன் வீட்டு கட்டுதறியும் கவிபாடும் என்பார்கள். கேள்விக்கு பதில் வழங்குவது சுமந்திரனா அல்லது நீங்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.