Jump to content

டார்வின் கூர்ப்புக் கொள்கைக்கு ஆப்படிக்கும் பூச்சிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டார்வினின் கூர்ப்புக் கொள்கையானது.. தற்செயலாக நிகழும் மாறல்கள் மூலம் பெறப்படும் மாறி வரும் சூழலுக்கு இசைவான மாற்றங்களைப் பெறும் உயிரினங்கள் தப்பிப் பிழைத்து தொடர்ந்து இனப்பெருக்கி வாழ்ந்து வருகின்றன. அந்த மாறல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் என்று சொல்கிறது.

ஆனால்.. இந்தப் பூச்சிகள்.. எப்படி இவ்வளவு விரைவாக.. சூழலுக்கு குறுகிற காலத்தில் இசைவாகின்றன.. இது தற்செயலாக நிகழக் கூடிய மாறல் ஒன்றின் மூலம் நிகழ வேண்டின்.. சரியான மாறலுக்கான நிகழ்தகவு என்பது ஒரு சிறிய சதவீதமே இருக்க முடியும். அந்தச் சிறிய சதவீதம் எப்படி.. உறுதியாக பெருவெடுப்பில் நிகழ அனுமதிக்கப்படுகிறது..???! சூழலில் நிகழும் குறுகிய கால மாற்றத்தை எப்படி இந்தப் பூச்சிகள் உள்வாங்கிக் கொள்கின்றன.. ஏன் இந்த நிலை வைரசுக்குகளில் நிகழ முடியாது..???!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nedukkalapoovan said:

 

இந்த விவாதம் எனக்கு முழுமையாக விளங்கவில்லை. இது பற்றிய எனது கருத்து: இந்த பூச்சிகள் மிகச்சிறியவை. எனவே மாற்றங்கள் ஏற்படுவதற்கு நேரம் எடுக்காது. தற்காலிக உருமாற்றம்/நிறமாற்றம் Camouflage  ஆக இருந்தாலும், Darwin கூற்றின் படி மெதுவான ஆனால் பரம்பரையாக கடத்தப்படக்கூடிய மாற்றமாக இருந்தாலும் சரி Genes தான் இவற்றை செய்கின்றன. Genes இந்த செயற்பாடு மூலம் இரசாயனங்கள் உற்பத்தி ஆகி அவை எமது உடல் கலங்களுக்கு பணிப்பு வழங்கி கலங்கள் பெருகி (cellular டிவிசன்), நிறங்கள் மாறி (மெலனின்) இவை நடைபெறும். நான் Developmental Biology இல் இதைத்தான் சொல்லிக்கொடுக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, nilmini said:

இந்த விவாதம் எனக்கு முழுமையாக விளங்கவில்லை. இது பற்றிய எனது கருத்து: இந்த பூச்சிகள் மிகச்சிறியவை. எனவே மாற்றங்கள் ஏற்படுவதற்கு நேரம் எடுக்காது. தற்காலிக உருமாற்றம்/நிறமாற்றம் Camouflage  ஆக இருந்தாலும், Darwin கூற்றின் படி மெதுவான ஆனால் பரம்பரையாக கடத்தப்படக்கூடிய மாற்றமாக இருந்தாலும் சரி Genes தான் இவற்றை செய்கின்றன. Genes இந்த செயற்பாடு மூலம் இரசாயனங்கள் உற்பத்தி ஆகி அவை எமது உடல் கலங்களுக்கு பணிப்பு வழங்கி கலங்கள் பெருகி (cellular டிவிசன்), நிறங்கள் மாறி (மெலனின்) இவை நடைபெறும். நான் Developmental Biology இல் இதைத்தான் சொல்லிக்கொடுக்கிறேன் 

நான் மாறல்கள் எப்படி ஏற்படுகின்றன என்பதை பற்றிச் சொல்லவில்லை. அவை குறித்து நாங்கள் நிறையவே கற்றுள்ளோம். 

டார்வினின் கூர்ப்புக் கொள்கையின் பிரகாரம்.. random mutation எப்படி இவ்வளவு precise ஆன மாற்றத்துக்கு அதுவும் மிகக் குறுகிய காலத்தில் வழிவிடுகிறது என்பது தான் கேள்வி.. அந்த மாறலுக்கான ஜீன் மாற்றங்களை மிகத்துல்லியமாக தூண்டும் காரணி என்ன..???! 

சிறியவை என்றாலும்.. இந்தப் பூச்சிகள் பல்கல யூகரியோட்டிக் வகைக்குரியவை. இவற்றில்.. துள்ளியமான மாறல்கள் ஒரு சிக்கலான விடயம். ஆனால் இயற்கையில்.. எழுந்தமானமான மாறல் எப்படி இவ்வளவு துள்ளியமான விளைவுகளைக் கொடுக்கின்றன.. குறுகிய காலத்தில்..??

ஏனெனில்.. இதே வகையில்.. மிக எளிய கலமற்ற மூலக்கூற்று நிலை அங்கிகளான வைரஸ்கள்.. இலகுவாக துள்ளியமான மாறல்களைச் செய்து கொள்ள முடியும். அந்தக் காரணிகளை கண்டறிவதன் மூலம்.. வைரஸ்களின் மாறல்கள் பற்றிய அறிவையும் வளர்க்கலாம்.. அவற்றின் மாறல்களை கட்டுப்படுத்தும் பொறிகளையும் கண்டறியலாம்..??!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.