Jump to content

விடுதலைப்புலிகள் சார்பில் ஒருபோதும் வாதாடவில்லை! தமிழர்களின் போராட்டம் மீது சுமந்திரன் கடுமையான அதிருப்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் ஆயுத அமைப்பை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் மு்னனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

கேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பா?.

பதில் - இல்லை. விடுதலைப் புலிகள் அமைப்பு 70 ஆம் ஆண்டுகளில் உருவானது. ஆனால் எமது கட்சி 1949 ஆம் ஆண்டு உருவானது.

கேள்வி -ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதல் கூட்டத்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் நடத்தினார்.

பதில்- இல்லை.

கேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்ப கூட்டத்தை பிரபாகரனே நடத்தினால், அதில் சம்பந்தன் அவர்கள் கலந்துக்கொண்டார்

பதில் - இல்லை.

கேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் தேவைக்கு அமைய உருவாக்கப்படவில்லை என நீங்கள் கூறுகிறீர்களா?.

பதில் - இல்லை. 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில், போர் நிறுத்தம் ஒன்று அமுலில் இருந்தது. இதனால், அந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு ஒன்று இருந்தது. அது அரசாங்கமும் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய காலம்.

கேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படும் போது 7 கட்சிகள் இருந்தன. தற்போது மூன்று கட்சிகளே இருக்கின்றன. புளொட், டெலோ மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகியன மாத்திரமே இருக்கின்றன?

பதில் - தற்போது மூன்று கட்சிகள் இருக்கின்றன. ஆரம்பிக்கும் போது நான்கு கட்சிகள் இருந்தன. அந்த நான்கில் ஒரு கட்சிதான் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளது. காலத்திற்கு காலம் சில கட்சிகள் உள்ளோ வருகின்றன. சில கட்சிகள் வெளியில் செல்கின்றன.

கேள்வி - ஆனந்தசங்கரியும் இதில் இருந்தார். பாசிசவாதிகளுடன் தன்னால் வேலை செய்ய முடியாது என்று அவர் வெளியேறினார்.

பதில் - ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் அப்போது அந்த கட்சிதான் இருந்தது. தமிழரசு கட்சி இருக்கவில்லை. ஆனந்தசங்கரி வழக்கு தாக்கல் செய்து, செயற்பட்டதன் காரணமாக அவரை வெளியேற்றி விட்டு, தமிழரசு கட்சிக்கு உள்ளே வந்தது.

கேள்வி - விக்னேஸ்வரன் , அனந்தி சசிதரன் ஆகியோர் வெளியேறியுள்ளனர். பல்வேறு தரப்பினர் வெளியேறியுள்ளனர். அவ்வாறு வெளியேறியவர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

பதில் - ஆமாம். இரண்டு தரப்பிலும் என் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. தம்மை அடிப்படைவாதிகளாக காட்ட முயற்சிக்கும் விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன் போன்றவர்களும் என் மீது குற்றம் சுமத்துகின்றனர். தேசிய மட்டத்தில் இருந்து அரசியலில் ஈடுபட வேண்டும் என கூறும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களும் என் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

கேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நீங்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் வாலில் தொங்கவிட முயற்சிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

பதில் - அப்படி எதுவுமில்லை. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை போட்டியிட வேண்டாம் எனக் கூறி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் போட்டியிட நாங்கள் ஆதரவளித்து, கூட்டணி அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த உதவினோம். இதனால், அதனை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கிய ஆதரவு என எவரும் கூற முடியாது.

கேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான தலைவர் இரா.சம்பந்தனா அல்லது எம்.ஏ. சுமந்திரனா என்ற உண்மையை தெளிவாக கூறுங்கள்.

பதில் - சம்பந்தனே தலைவர்.

கேள்வி - அதில் வெளியில் தெரியும் விடயம், நான் கேட்பது உண்மையான தலைவர் யார்?.

பதில் - உண்மையான தலைவரும் சம்பந்தன் ஐயா அவர்கள்தான்.

கேள்வி- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இயக்குவது சுமந்திரன் தான் என நான் நேரடியாக கூறினால்.

பதில் - இல்லை நான் அதனை ஏற்க மாட்டேன். அதனை நான் நிராகரிக்கின்றேன்.

கேள்வி - சுமந்திரன் கட்சிக்குள் அழுத்தங்களை கொடுக்கின்றாரா?

பதில் - சம்பந்தன் அவர்கள் என்னுடன் ஆலோசித்து செய்றபட்டு வருகிறார்.

கேள்வி - அப்படியானால் நீங்கள் அதிகாரபூர்வமற்ற தலைவர் என்று என்னால் கூற முடியுமா?.

பதில் - அப்படி கூற முடியாது. சில நேரங்களில் நான் வழங்கும் ஆலோசனைகளை சம்பந்தன் ஏற்றுக்கொள்ள மாட்டார். சம்பந்தன்தான் இறுதியான முடிவுகளை எடுப்பார்.

கேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த அனைத்து தலைவர்களும் விடுதலைப் புலிகளுக்கு அஞ்சினர். அதன் காரணமாகதானே புலிகளின் நோக்கங்களுக்காக குரல் கொடுத்தனர் .

பதில் - புலிகளின் நோக்கங்களுக்காக குரல் கொடுத்தனர் என்று என்னால் கூற முடியாது. ஆனால் புலிகளுடன் இணைந்து செயற்பட்டனர். 2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை புலிகளுடன் இணக்கத்துடன் பணியாற்றினர். அந்த காலத்தில்தான் ஆட்சியில் இருந்த அரசாங்கமும் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

கேள்வி - சுமந்திரன் ஒரு இனவாதியா?

பதில் - இல்லை இனவாதியல்ல.

கேள்வி - சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து இனங்களும் ஒன்றாக வாழ்வதை நீங்கள் விரும்புகிறீர்களா?.

பதில் - அனைத்து இனங்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்பது எனது தீவிரமான நிலைப்பாடு.

கேள்வி - உங்களது சில அறிக்கைகளை பார்க்கும் போது நீங்கள் இனவாதி போல் தோன்றுகிறது.

பதில் - அப்படியான அறிக்கைகளும் இல்லை.

கேள்வி - உங்களது அரசியல் தலைவர் யார் ?

பதில் - தற்போது என் அரசியல் தலைவர் சம்பந்தன்

கேள்வி - நீங்கள் 2010 ஆம் ஆண்டு தேசிய பட்டியல் மூலமாக அரசியலுக்கு வந்தீர்கள். சட்டத்தரணியாக விடுதலைப் புலிகளின் கைதிகள், புலிகளின் சார்பில் அல்லது காணாமல் போனவர்கள் சார்பில் வாதாடிய நிலையில் வந்தீர்கள்.

பதில் - விடுதலைப்புலிகள் சார்பில் வாதாடினேன் என்று எவராலும் கூற முடியாது. நான் சிவில் வழக்குகளில் ஆஜராகும் சட்டத்தரணி. இதனால், நான் குற்றவியல் வழக்குகளில் ஆஜராகவில்லை. 90களில் நான் சட்டத்தரணியாக கடமையை ஆரம்பித்த போது சில வழக்குகளில் ஆஜராகினேன். ஜே.வி,பி சார்பில் ஆஜராகியிருந்தேன். புலிகள் சார்பில் ஆஜராகினேன் என்று எவராலும் கூற முடியாது.

கேள்வி - 2015 ஆம் ஆண்டு தேர்தலில் 58 ஆயிரம் வாக்குகளை பெற்றீர்கள். ஜே.வி.பி சார்பில் ஆஜராகி, யாழ்ப்பாணத்தில் இந்தளவு வாக்குகளை பெற முடியாதே.

பதில் - முடியும். அன்று தேர்தல் காலத்தில் ஜே.வி.பியினர் யாழ்ப்பணத்திற்கு வந்து மே தின பேரணியை நடத்தும் போது நானும் சிகப்பு சட்டை அணிந்து அவர்களுடன் யாழ்ப்பாண வீதிகளில் சென்றேன். எமது மக்கள் அப்படி பார்க்க மாட்டார்கள்.

கேள்வி - அப்படியானால், உங்களது அரசியல் கொள்கை ஜே.வி.பியுடன் சம்பந்தப்பட்டதா?.

பதில் - இல்லை.

கேள்வி - அப்படியானால் தவறான இடத்தில் இருக்கின்றீர்கள்.

பதில் - இல்லை. ஜே.வி.பியின் கொள்கையுடன் அல்ல. அப்போது இருந்த அரசாங்கத்துடன் நாங்கள் ஜனநாயக ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது ஜே.வி.பியும் எங்களுடன் கைகோர்த்து செயற்பட்ட மற்றுமொரு அரசியல் அமைப்பு.

கேள்வி - அப்படியானால், அனுரகுமார திஸாநாயக்க உங்களது அரசியல் தலைவரா?.

பதில் - இல்லை. நான் அனைத்து கட்சிகளுடனும் வேலை செய்ய தயாராக இருக்கும் நபர்.

கேள்வி - சுமந்திரன் வாக்குகளை பெற்றரே தவிர யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை என்று அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

பதில் - இல்லை. அப்படி யாரும் கூற மாட்டார்கள்.

கேள்வி. - சுமந்திரன் தற்போது அரசியல் கைதிகள், காணாமல் போனவர்கள் மற்றும் காணி விவகாரங்கள் பற்றி பேசுவதை காண முடியவில்லை. கொழும்புக்கு வந்து, தேர்தல் பற்றியும், ஊரடங்குச் சட்டம் பற்றியும் பேசுகிறார்.

பதில் - இவை பற்றி நான்தான் பேசினேன் என்பது அந்த மக்களுக்கு நன்றாக தெரியும். அது மாத்திரமல்ல. அது மாத்திரமல்ல சில அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நான் நடவடிக்கை எடுத்திருந்தேன். காணிகளை விடுவிடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தேன். இதனால், என்னை பற்றி அவர்களுக்கு நன்றாக தெரியும்.

கேள்வி - விடுதலை செய்துக்கொள்ளவதற்கான அரசியல் கைதிகள் இன்னும் இருக்கின்றனரா?.

பதில் - ஆம் இருக்கின்றனர். 70 மேற்பட்டோர் உள்ளனர்.

கேள்வி - காணிகள் விடுவிக்கப்பட்டதில் திருப்தியடைக்கின்றீர்களா?.

பதில் -திருப்தியடையவில்லை. எனினும் 80 வீதத்திற்கும் மேலான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

கேள்வி - காணாமல் போனவர்கள் சம்பந்தமா?

பதில் - அதில் எதுவும் நடக்கவில்லை. காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகம் அமைக்கப்பட்டது எனினும் எதுவும் நடக்கவில்லை.

கேள்வி - ஏன் எப்போதும் எதனையாவது எடுத்துச் சென்று இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்கின்றீர்கள்?.

பதில் - இலங்கைக்கு எதிராக அல்ல. இலங்கை சிறந்த நாடாக தன்னை வெளிக்காட்ட வேண்டுமாயின் எதனையும் மூடிமறைத்து செயற்பட முடியாது. அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டும். இல்லையென்றால், இலங்கையால் முன்னோக்கி செல்ல முடியாது.

கேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சுமந்திரனுக்கு தானே புலம் பெயர் புலிகளுடன் அதிகமான தொடர்புகள் உள்ளன?.

பதில் - புலம்பெயர் புலிகளுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.

கேள்வி - ருத்ரகுமாரனுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு எப்படியானது.

பதி்ல் - அவருடன் தொடர்புகள் இல்லை.

கேள்வி - தொலைபேசி தொடர்புகள்

பதில் - ஓரிரு தடைகள் தொலைபேசியில் பேசி இருக்கின்றோம் தொடர்புகள் இல்லை. ஆனால் புலம் பெயர் அமைப்புகள் சிலவற்றுடன் எனக்கு தொடர்புகள் இருக்கின்றன. GTF,BTF,CTC, ATC ஆகியவற்றுடன் தொடர்புகள் உள்ளன. அந்த அமைப்புகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பணியாற்றும் அமைப்புகள்.

கேள்வி - ருத்ரகுமாரனுடன் எப்போது பேசினீர்கள் நினைவில் உள்ளதா?.

பதில் - நினைவில் இல்லை. 2016 அல்லது 2017 ஆம் ஆண்டு என்னுடன் ருத்ரகுமாரன் தொலைபேசி தொடர்புக்கொண்டு கலிப்போர்னியாவில் உள்ள அவர்களின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுமாறு கூறினார். நான் அதனை மறுத்து விட்டேன்.

கேள்வி - ருத்ரகுமாரன் என்பவர் இலங்கைக்கு வெளியில் தனிநாடு தொடர்பான அமைப்புடன் தொடர்புடையவர் அவர் போன்ற நபருடன் ஏன் தொடர்புகளை வைத்துக்கொள்கிறீர்கள்?.

பதில் - தொடர்புகள் இல்லை. அவர் தமது நாடாளுமன்றத்தில் கலந்துக்கொள்ளுமாறு கோருகிறார். முடியாது என்ற பதில் அனுப்பினேன் அது மாத்திரம்தான்.

கேள்வி - புலம்பெயர் புலிகளின் நிதி, உங்கள் ஊடாகதானே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வருகின்றது. நீங்கள்தானே நடுவில் இருக்கும் முகவர்?.

பதில் - இல்லை. வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமது குடும்பங்களுக்கு பணம் அனுப்புகின்றனர். வருமான வசதிகள் இல்லாதவர்கள், வெளிநாடுகளில் இருந்து உறவினர்கள் அனுப்பும் பணத்திலேயே வாழ்கின்றனர். இதனை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிதி தொடர்பான தொடர்புகள் இல்லை.

கேள்வி - நீங்கள் தனிநாடு , பிரிவினைவாத கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும் நபரா?.

பதில் - எப்போதும் இல்லை.

கேள்வி - ஐக்கியமாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறீர்களா?.

பதில் - ஐக்கியமாக இருக்க வேண்டும். எனினும் அனைத்து இனங்களுக்கும் அரச அதிகாரங்களை கையாளும் அதிகாரம் இருக்க வேண்டும்.

கேள்வி - அப்படியானால், ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டியை கோருகிறது.

பதில் - சமஷ்டியைதான் நாங்கள் கோருகிறோம். சமஷ்டி மூலமே அனைத்து இன மக்களுக்கு அரச அதிகாரங்களை பயன்படுத்த முடியும்.

கேள்வி - அப்படியானால் அது தனி நாடு.

பதில் - இல்லை. சமஷ்டி என்பது தனி நாடு அல்ல.

கேள்வி - சமஷ்டி என்றால் நாடு பிளவுப்பட்டு விடும்

பதில் - அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, பல ஐரோப்பிய நாடுளில் சமஷ்டி முறையே இருக்கின்றது. அவற்றை நாங்கள் தனி நாடுகள் என்று எப்போதும் கூறுவதில்லை. அவை வலுவான நாடுகள். சமஷ்டி இருப்பதன் காரணமாகவே அந்நாடுகள் வலுவான நாடுகளாக இருக்கின்றன.

கேள்வி - நீங்கள் இந்த நாட்டின் தேசிய கொடியை ஏற்றுக்கொள்கிறீர்களா?.

பதில் - ஆம் அது தற்போது எங்களது தேசிய கொடி அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

கேள்வி - தேசிய கீதம் -

பதில் - ஆம் தேசிய கீதத்தை ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் தேசிய கொடியை ஏற்றுகிறோம். நானும் சம்பந்தனும் மாத்திரமே அதனை செய்கிறோம்.

கேள்வி - யாழ்ப்பாணத்தில் சிலர் தேசிய கொடியை உயர்த்துவதில்லை.

பதில் -வரலாற்றை நோக்கி பார்க்க வேண்டும். 1972 ஆம் ஆண்டு முதலாவது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது எம்மை வெளியில் வைத்து விட்டு அதனை உருவாக்கினர். தமிழ் மக்களை இணைத்துக்கொள்ளாது அவர்களின் யோசனைகளை பெறாது, தமிழ் மக்களை தேசிய ரீதியில் ஒதுக்கி விட்டு, அதனை உருவாக்கினர். இதன் பின்னரே 74, 76 ஆம் ஆண்டுகளில் தனி நாடு வேண்டும் என்ற குரல் எழுப்பபட்டது. அப்போது நிராகரித்த தேசிய கொடியை நாம் எப்படி தற்போது ஏந்துவது என்ற பிரச்சினை சிலருக்கு உள்ளது. எனக்கு அந்த பிரச்சினையில்லை.

கேள்வி - நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அரசியல் மற்றும் ஆயுத அமைப்பை ஏற்றுக்கொள்பவரா?.

பதி்ல்- இல்லை. ஏற்றுக்கொள்பவன் அல்ல.

கேள்வி - எந்த வகையிலும் ஏற்றுக்கொள்வதில்லை.

பதில் - ஆம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்வதில்லை. இதனை நான் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல அனைத்து இடங்களிலும் கூறுகிறேன். இதன் காரணமாக எனக்கு கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. எங்களுக்காக போராடியவர்களை ஏன் ஏற்றுக்கொள்வதில்லை என கேட்கின்றனர். ஆயுத அமைப்பை எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதால், புலிகளின் ஆயுத அமைப்பை ஏற்கவில்லை எனவும் சுமந்திரன் கூறியுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/245717?ref=imp-news

 

சுமந்திரன் கூறியதை மன்னிக்க முடியாது ! மாவையிடம் அவசர கோரிக்கை

Report us Gokulan 2 hours ago

தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஒட்டு மொத்த ஆயுதப்போராட்டத்தையும் தவறு என்று குறிப்பிட்டு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளமை மன்னிக்க முடியாத தவறு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவரும் டெலோ கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் .

அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்....

ஆயுதப் போராட்டத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்தை பணிய வைத்து அரசியல் ரீதியாக பேசுவதற்கான ஓர் அங்கீகாரமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டு எம் .ஏ. சுமந்திரன் இப்படியான கருத்துக்களை சொல்வதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அவருடைய கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

 

அந்த வகையில் ஆயுதப் போராட்டத்தில் பொது மக்கள், போராளிகள் ஒட்டு மொத்தமாக உயிரை அர்ப்பணித்து உள்ளார்கள்.

ஆயுதப் போராட்டத்தின் ஊடாகத்தான் உலகளாவிய ரீதியில் எங்களுடைய இனப்பிரச்சினை வரலாறாக பதியப்பட்டுள்ளது.

ஆயுதப் போராட்டத்தின் ஊடாகத்தான் இனப்பிரச்சினை சார்ந்த விடயங்களை இன்றைக்கு இலங்கை அரசாங்கத்துடன் பேசும் ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஆகவே இந்த ஆயுதப் போராட்டத்தின் ஊடகத்தான் எங்களுடைய இனப்பிரச்சினை தொடர்பான முக்கிய விடயங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் சுமந்திரனின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது.

தமிழரசுக் கட்சி இதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .

தமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் தமிழிழ விடுதலை இயக்கம் இவ்விடயத்தில் நிச்சயமாக ஒரு சரியான முடிவை எடுக்கும்.

தமது கட்சி சுமந்திரன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .

ஆயுதப் போராட்டம் அகிம்சை போராட்டம் செய்ய இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அதன் அடிப்படையில் தான் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அப்போராட்டம் வீறு கொண்டு எழுந்து இந்த அரசாங்கத்தை பணிய வைத்த வரலாறுகள் பல உண்டு.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாவதற்கு காரணமான நோக்கத்தை தனது கருத்து ஊடாக எம். ஏ. சுமந்திரன் சீர் குலைத்துள்ளார்.

அந்த வகையிலேயே தமிழரசுக் கட்சி சுமந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் கோரிக்கை முன்வைத்து இருக்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/srilanka/01/245722?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

14 minutes ago, பெருமாள் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் மு்னனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும் மு்னனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார், அதாவது இன்னொரு முன்னாள் என்ற அடைமொழியையும் சேர்த்துவிட்டால், இவரை சிங்கள ஊடகம் கணக்கில் எடுக்காது. 

ஆரோக்கியமான பல பதில்களை கூறியுள்ளார்.

ஆனால், சிங்கள இனவாதம் தமிழர் கோரிக்கைகளை அதன் நியாயத்தை ஏற்காது என்பது சுமந்திரன் அவர்களுக்கும் தெரியும், தெரிந்தும் ஏன் பேட்டி என்றால் - தன்னை நிலைக்க வைக்க மட்டுமே. தமிழர் இனப்பிரச்சனைக்கு இதனால் பயன் இல்லை. 

Link to comment
Share on other sites

 இப் பேட்டியின் முழுமையான  காணொளி வடிவம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஆயுதம் ஏந்தியதை ஏற்கேன்! அனுமதியேன் – இப்படி சொன்னார் சுமந்திரன்

ஆயுதப் போராட்டத்தை ஒருநாளும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஆயுதம் தூக்கியதால் பிரபாகரனையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. 5 வயதில் இருந்து சிங்களவர்களுடன் வாழ்ந்து பழகிய நான், அவர்களுடன் வாழ்வதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இந்த கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தியதை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அதை அனுமதிக்கவும் போவதில்லை. அதை நான் யாழ்ப்பாணத்திலும் கூறுவேன். வேறு எங்கும் கூறுவேன். இதை கூறுவதால் எனக்கு அங்கு எதிர்ப்பும் உள்ளது.

அவர் எங்களிற்காக போராடியவர். அவரை ஏன் ஏற்கவில்லை என பலரும் கேட்கிறார்கள். அவர் ஆயுதம் ஏந்தியதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதாலேயே அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

என்னுடைய 5 வயதில் இருந்து கொழும்பிலேயே வாழ்கிறேன். எனக்கு கொழும்பில் பல சிங்கள நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால் சிங்கள மக்களுடன் வாழ்வது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றே கருதுகிறேன்.

இலங்கை தேசியக் கொடியை ஏற்றுக்கொள்கிறோம். எமது கட்சியில் நானும் சம்பந்தனும் மாத்திரமே தேசிய கீதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் என நினைக்கிறேன்.

தெற்கில் இதை கூறிவிட்டு, வடக்கில் நான் வேறுவிதமாக பேசுவதில்லை. இதையேதான் அங்கும் பேசுகிறேன். இதனால்தான் ஒரு பகுதியினர் எனக்கு எதிராக செயற்படுகிறார்கள்’. – என்றார்.

 

https://newuthayan.com/புலிகள்-ஆயும்-ஏந்தியதை/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சுமா அந்த சுமாவோ...

Link to comment
Share on other sites

6 hours ago, பெருமாள் said:

கேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான தலைவர் இரா.சம்பந்தனா அல்லது எம்.ஏ. சுமந்திரனா என்ற உண்மையை தெளிவாக கூறுங்கள்.

பதில் - சம்பந்தனே தலைவர்.

கேள்வி - அதில் வெளியில் தெரியும் விடயம், நான் கேட்பது உண்மையான தலைவர் யார்?.

பதில் - உண்மையான தலைவரும் சம்பந்தன் ஐயா அவர்கள்தான்.

செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா, வஞ்சகன் கண்ணனடா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டிக்கும் தலையங்கத்திற்கும் தொடர்பேயில்லை. உதயனும் தமிழ்வின்னும் திட்டமிட்டே செய்திகளை திரிவுபடுத்துவதுபோல் தெரிகிறது.☹️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.