Jump to content

எல்லையில் ஏற்பட்ட பரபரப்பு: சீன-இந்தியப் படையினருக்கு இடையில் மோதல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Indian-Chinese-troops-clash-near-Naku-La-in-Sikkim.jpg

எல்லையில் ஏற்பட்ட பரபரப்பு: சீன-இந்தியப் படையினருக்கு இடையில் மோதல்!

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது.

சிக்கிம் மாநிலத்தின் நாகு-லா பகுதியில் அமைந்துள்ள எல்லையில் நேற்று (சனிக்கிழமை) வழக்கம்போல இந்திய வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு ரோந்துப் பணிக்காக வந்த சீனப் படையினர், இது தங்கள் நாட்டிற்குச் சொந்தமான பகுதி எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்திய-சீன பாதுகாப்புப் படையினர் மாறிமாறி கற்களை வீசித் தாக்குதல் மேற்கொண்டனர். மேலும், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டு சண்டையில் ஈடுபட்டனர்.

Indian-Chinese-troops-clash-near-Naku-La-in-Sikkim-2.jpg

இந்தச் சண்டையில் 150 பேர் ஈடுபட்டதாகவும் அதில் 4 இந்திய வீரர்களும் 7 சீன வீரர்களும் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் உடனடியாக இந்தியப் படைகளும், சீனப் படைகளும் அங்கு விரைந்து சென்றதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து, இரு நாடுகளின் இராணுவத்தைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு இரு தரப்பினரும் அமைதியான முறையில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள சமரசம் செய்யப்பட்டது. இதனால் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன படையினர் வெளியேறினர்.

இதையடுத்து குறித்த பகுதியில் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/எல்லையில்-ஏற்பட்ட-பரபரப்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப் பிள்ளைத்தனமாய் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

இந்திய-சீன பாதுகாப்புப் படையினர் மாறிமாறி கற்களை வீசித் தாக்குதல் மேற்கொண்டனர். மேலும், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டு சண்டையில் ஈடுபட்டனர்.

துப்பாக்கி குண்டுகள் இல்லைபோல் அப்ப அக்கினி அது இது என்று மேலாலை விடுறதையும் கொஞ்சம் செக் பண்ணவேணும் 😉

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வுகானிலிருந்து ஒரு சிலரை முன்னணியில் நிறுத்துமாறு சீன அரசிடம் தாழ்மையுடன் இரந்து நிற்கிறேன். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்திய-சீன பாதுகாப்புப் படையினர் மாறிமாறி கற்களை வீசித் தாக்குதல் மேற்கொண்டனர். மேலும், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டு சண்டையில் ஈடுபட்டனர்.

 

ச்...சா  அருமந்த இது ஒண்டு மிஸ்சாகிட்டுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் எப்படா மாட்டுபடும்..? என வேண்டுகிறீர்கள் போலிருக்கு..!  rire-2009.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1996ம் ஆண்டு மீசாலையில் நான் த‌ங்கி இருந்த‌ போது விளையாடின‌ விளையாட்டை  இப்ப‌ இவ‌ங்க‌ள் விளையாடுறாங்க‌ /

நாங்க‌ விளையாடும் போது ஆமியும் பொலிஸ்சும் என்று ம‌ண்ணாங் க‌ட்டியால் எறிந்து விளையாடுவோம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

துப்பாக்கி குண்டுகள் இல்லைபோல் அப்ப அக்கினி அது இது என்று மேலாலை விடுறதையும் கொஞ்சம் செக் பண்ணவேணும் 😉

 

3 hours ago, உடையார் said:

Quotes About Military Jokes. QuotesGram

 

1 hour ago, பையன்26 said:

1996ம் ஆண்டு மீசாலையில் நான் த‌ங்கி இருந்த‌ போது விளையாடின‌ விளையாட்டை  இப்ப‌ இவ‌ங்க‌ள் விளையாடுறாங்க‌ /

நாங்க‌ விளையாடும் போது ஆமியும் பொலிஸ்சும் என்று ம‌ண்ணாங் க‌ட்டியால் எறிந்து விளையாடுவோம் 😁

Indian-Chinese-troops-clash-near-Naku-La-in-Sikkim.jpg

சண்டை தொடங்கினால்...  நிறைய கற்கள், தேவைப்படும் என்பதால்,
இருவரும்,  லொறி நிறைய.. கற்களை கொண்டு வந்து, குவித்து  வைத்திருக்கிறார்கள்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

எல்லோரும் எப்படா மாட்டுபடும்..? என வேண்டுகிறீர்கள் போலிருக்கு..!  rire-2009.gif

இல்லை முன்னனியில்  நிற்பது தென்மாநிலத்தவர்கள் கூடவே பஞ்சாபியர்களும் ஹிந்தி வாலாக்கள் பின்னுக்கு நின்று சதிராடுவினம் 1989களில்  நேரடியாக பார்த்தோம் . சண்டை ஒன்று வந்தால் டெல்லிக்கு நேரே அணுகுண்டு போடணும் என்றுதான் வேண்டுதல் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

எல்லோரும் எப்படா மாட்டுபடும்..? என வேண்டுகிறீர்கள் போலிருக்கு..!  rire-2009.gif

அந்த நாள்ள்ள்ள்ள்.... எங்களில் அனேகருக்கு பொன்னாள்ள்ள்ள்ள்....

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

4 hours ago, உடையார் said:

Quotes About Military Jokes. QuotesGram

சட்டி பானையில டொங் டொங் என்று தட்ட வேண்டியது மட்டும்தான் மிச்சம். 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.