Jump to content

Sourdough புளிப்பான பாண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                எனது மருமகன் இன்று சவர்டோவ் (Sourdough)என்று ஒரு பாண் செய்தார்.ஒரு கிழமை முதலே மகளும் அவரும் சேர்ந்து திட்டம் போட்டார்கள்.என்னடா வாறகிழமை பாண் செய்வதற்கு இப்பவே திட்டம் போடுறாங்கள் என்று அவதானித்தேன்.
                5-6 நாட்கள் முதலே போத்தலுக்குள் மாவும் தண்ணீரும் விட்டு புளிக்க வைத்து அதற்கு ஒவ்வொரு நாளும் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று மீண்டும் மாவும் தண்ணீரும் விட்டு ஓஓ வளருது வளருது என்று சந்தோசப்பட்டார்கள்.இடைஇடை போத்திலும் மாற்றி மாற்றி பெரிய போத்தலாக மாறிவிட்டது.
                முதல் நாளே (ஏதோ தோசைக்கு உழுந்து அரைத்து வைத்த மாதிரி ) தேவையான மாவை எடுத்து போத்தலில் வளர்ந்திருந்த பற்றீரியாவுடன் சேர்த்து குழைத்து வைத்தார்கள்.என்னடா இது இரவிரவாக செய்து யார் சாப்பிடப் போகிறார்கள் என்று கேட்டால் இது நாளை இரவுக்கு தான் பாணாக வரும் என்றார்கள்.
               இன்று ஞாயிறு காலை உணவை முடித்து தொடங்கியவர் குழைத்து வைத்ததை எடுத்து நேரம் விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் குழைத்து கடைசியில் நீண்டநேரம் வைத்து அவனில்போட தயாரானார்.நாங்கள் பாண் செய்வது போலவே போடப் போகிறார் என்று பார்த்தால் போடமுதல் கூரிய கத்தியால் ஆங்காங்கே கீறி விட்டு ஒரு சட்டியில் வைத்து இன்னொரு சட்டியால் மூடி 450 F இல் 20 நிமிடம் மூடி வைத்து 20 நிமிடம் திறந்துவிட்டு இறக்கினார்.
                 முன்னர் இப்படியான பாண் சாப்பிடாதபடியால் நானும் மிகவும் ஆவலாக இருந்தேன்.ஏற்கனவே செய்து வைத்த பருப்பு ,சம்பல் ,வாழைப்பழத்துடன் சாப்பிட்டோம்.
                 கொஞ்சம் புளிப்பாக இருந்தது.சாதாரண பாண்போலவும் இருந்தது.அதன் சுவையே தனி சுகமாக இருந்தது.எல்லாம் நல்லபடியாக வந்ததால் அவருக்கும் மிகவும் சந்தோசம்.இந்த வகையான பாண் இதுவே முதல் தடவையாக செய்ததாக சொன்னார்.இரவு எல்லோரும் சந்தோசமாக சாப்பிட்டோம்.
                  அவர் செய்ததென்று யாரும் செய்ய முற்படாதீர்கள்.ரொம்பவும் சிரமம் பிடித்த வேலை.இதுவரை இந்த புளிப்பான பாண் (Sourdough)சாப்பிடாதவர்கள் தயவு செய்து கடையில் வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள்.

DE290593-D0-A1-48-C3-9932-8-F622-E3-D6-B

இது கருகிப்போய் விட்டது என்று எண்ணாதீர்கள்.இது முதலில் செய்தது.

B6546-A81-38-C4-411-E-B9-C3-63-FC9-B4-CA

இது இரண்டாவதாக செய்தது.

 

செய்முறை தேவையானவர்களுக்காக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி.... சிறிசுகளையும் குசினிக்குள், இறக்கி விட்டாச்சு  போலை கிடக்கு. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழபிரியன் நல்லா மினக்கிட்டிருக்கின்றார் உங்கள் மருமகன். இங்கு கடைகிளில் வாங்கி சாப்பிட்டிருக்கிறேன், நல்ல சுவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

                எனது மருமகன் இன்று சவர்டோவ் (Sourdough)என்று ஒரு பாண் செய்தார்.ஒரு கிழமை முதலே மகளும் அவரும் சேர்ந்து திட்டம் போட்டார்கள்.என்னடா வாறகிழமை பாண் செய்வதற்கு இப்பவே திட்டம் போடுறாங்கள் என்று அவதானித்தேன்.
                5-6 நாட்கள் முதலே போத்தலுக்குள் மாவும் தண்ணீரும் விட்டு புளிக்க வைத்து அதற்கு ஒவ்வொரு நாளும் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று மீண்டும் மாவும் தண்ணீரும் விட்டு ஓஓ வளருது வளருது என்று சந்தோசப்பட்டார்கள்.இடைஇடை போத்திலும் மாற்றி மாற்றி பெரிய போத்தலாக மாறிவிட்டது.
                முதல் நாளே (ஏதோ தோசைக்கு உழுந்து அரைத்து வைத்த மாதிரி ) தேவையான மாவை எடுத்து போத்தலில் வளர்ந்திருந்த பற்றீரியாவுடன் சேர்த்து குழைத்து வைத்தார்கள்.என்னடா இது இரவிரவாக செய்து யார் சாப்பிடப் போகிறார்கள் என்று கேட்டால் இது நாளை இரவுக்கு தான் பாணாக வரும் என்றார்கள்.
               இன்று ஞாயிறு காலை உணவை முடித்து தொடங்கியவர் குழைத்து வைத்ததை எடுத்து நேரம் விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் குழைத்து கடைசியில் நீண்டநேரம் வைத்து அவனில்போட தயாரானார்.நாங்கள் பாண் செய்வது போலவே போடப் போகிறார் என்று பார்த்தால் போடமுதல் கூரிய கத்தியால் ஆங்காங்கே கீறி விட்டு ஒரு சட்டியில் வைத்து இன்னொரு சட்டியால் மூடி 450 F இல் 20 நிமிடம் மூடி வைத்து 20 நிமிடம் திறந்துவிட்டு இறக்கினார்.
                 முன்னர் இப்படியான பாண் சாப்பிடாதபடியால் நானும் மிகவும் ஆவலாக இருந்தேன்.ஏற்கனவே செய்து வைத்த பருப்பு ,சம்பல் ,வாழைப்பழத்துடன் சாப்பிட்டோம்.
                 கொஞ்சம் புளிப்பாக இருந்தது.சாதாரண பாண்போலவும் இருந்தது.அதன் சுவையே தனி சுகமாக இருந்தது.எல்லாம் நல்லபடியாக வந்ததால் அவருக்கும் மிகவும் சந்தோசம்.இந்த வகையான பாண் இதுவே முதல் தடவையாக செய்ததாக சொன்னார்.இரவு எல்லோரும் சந்தோசமாக சாப்பிட்டோம்.
                  அவர் செய்ததென்று யாரும் செய்ய முற்படாதீர்கள்.ரொம்பவும் சிரமம் பிடித்த வேலை.இதுவரை இந்த புளிப்பான பாண் (Sourdough)சாப்பிடாதவர்கள் தயவு செய்து கடையில் வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள்.

DE290593-D0-A1-48-C3-9932-8-F622-E3-D6-B

இது கருகிப்போய் விட்டது என்று எண்ணாதீர்கள்.இது முதலில் செய்தது.

B6546-A81-38-C4-411-E-B9-C3-63-FC9-B4-CA

இது இரண்டாவதாக செய்தது.

 

செய்முறை தேவையானவர்களுக்காக.

sourdough செய்முறைகளை பற்றி முன்பு பார்த்துள்ளேன், மிகவும் மினக்கட்ட வேலை.  இருந்தாலும் உங்கள் மருமகனுக்கு நிறைய பொறுமை உள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sauer Teig Brot

உந்த பாண் இஞ்சை ஜேர்மன் கடைகளிலையும் கிடக்கு......நான் சில நேரம் வாங்கி சாப்பிடறனான். எனக்கு பெரிசாய் பிடிக்காது.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமையலை ரசித்து நல்லதொரு உணவு செய்ய வேண்டுமென்றால் ஒரு வாரம் என்ன ஒரு மாதம்கூட காத்திருக்கலாம்.....இது சில நாட்களுக்கு வைத்திருந்தும் சாப்பிடலாம் என்று நினைக்கிறேன்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாண் நாம் உண்பதுதான்

இந்தப் பாண் கறியுடன் உண்பதிலும் சலாமி சீஸ் இவற்றுடனுண்ண சுவையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

.ஏற்கனவே செய்து வைத்த பருப்பு ,சம்பல் ,வாழைப்பழத்துடன் சாப்பிட்டோம்.
                 கொஞ்சம் புளிப்பாக இருந்தது.சாதாரண பாண்போலவும் இருந்தது.அதன் சுவையே தனி சுகமாக இருந்தது.எல்லாம் நல்லபடியாக வந்ததால் அவருக்கும் மிகவும் சந்தோசம்.

அங்கிள், இந்த sourdough breadஉடன் spinach dip செய்து சாப்பிட்டு பாருங்கள், மிகவும் நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

ஒரு மாதிரி.... சிறிசுகளையும் குசினிக்குள், இறக்கி விட்டாச்சு  போலை கிடக்கு. :grin:

சிறி நான் வருவதற்கு முதல் மகளும் மருமகனும் தான் சமையல்.இப்போ நான் நிற்கிறபடியால் ஒவ்வொரு நாளும் வாய்க்கு ருசியாக கிடைக்குது என்கிறார்கள்.

21 hours ago, உடையார் said:

ஈழபிரியன் நல்லா மினக்கிட்டிருக்கின்றார் உங்கள் மருமகன். இங்கு கடைகிளில் வாங்கி சாப்பிட்டிருக்கிறேன், நல்ல சுவை

நிறைய நேரமும் மிகுந்த வேலைப்பாடும்.இருந்தாலும் நாமே செய்து சாப்பிடும் போது அதிலே தனிச் சுகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நீர்வேலியான் said:

sourdough செய்முறைகளை பற்றி முன்பு பார்த்துள்ளேன், மிகவும் மினக்கட்ட வேலை.  இருந்தாலும் உங்கள் மருமகனுக்கு நிறைய பொறுமை உள்ளது 

அவர் செய்ததை பார்த்து நான் தான் பொறுமை இழந்துவிட்டேன்.

17 hours ago, suvy said:

சமையலை ரசித்து நல்லதொரு உணவு செய்ய வேண்டுமென்றால் ஒரு வாரம் என்ன ஒரு மாதம்கூட காத்திருக்கலாம்.....இது சில நாட்களுக்கு வைத்திருந்தும் சாப்பிடலாம் என்று நினைக்கிறேன்......!   👍

சுவி எனக்கு வடகம் செய்த ஞாபகம் தான் வந்தது.
எனக்கு இப்போதும் வடகமென்றால் பைத்தியம்.

16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்தப் பாண் நாம் உண்பதுதான்

இந்தப் பாண் கறியுடன் உண்பதிலும் சலாமி சீஸ் இவற்றுடனுண்ண சுவையாக இருக்கும்.

ஆமா ஆமா யுரியூப்காரி சொன்னா சரியா தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அங்கிள், இந்த sourdough breadஉடன் spinach dip செய்து சாப்பிட்டு பாருங்கள், மிகவும் நன்றாக இருக்கும்.

நீங்கள் சொன்னதற்காகவே செய்து சாப்பிட்டுப் பார்த்தேன்.நன்றாகத் தான் இருந்தது.நன்றி.

A293-FD71-27-A7-4013-AA07-F03-F8-CC12-E6

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிடி என்னவென்றால்

              இவர்கள் சாப்பாடு போட்டு வளர்த்த பற்றீரியா மீதமாக இருந்தது.இன்று விடிய இதுக்கு என்ன அலுவலைக் கொடுக்கலாம் என்று மண்டையைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தேன்.

               முதல்நாள் இது செய்யும் போதே நீங்கள் தோசைக்கு மா குழைத்து வைப்பது போலவே இதுகும் என்று சொல்லி சொல்லி செய்தார்கள்.
அந்த ஞாபகம் வரவே வெள்ளை அரிசிமா ஏற்கனவே இருந்தது.சரி அப்பம் செய்து பார்ப்போம் என்று இரண்டு கப் மாவுடன் இருந்த பற்றீரியா மாவையும் போட்டு குழைத்து வைத்தேன்.
               இப்போது பிற்பகல் எடுத்து தேங்காய் பாலும் விட்டு அடித்து பாலப்பம் செய்து பார்த்தேன்.
               எல்லோரும் புழுகி புழுகி சாப்பிட்டார்கள்.
22248834-B1-A7-488-D-B077-600-C265-CD701

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த spinach dip ஒரு முறை செய்து பாருங்கள், சில சமயம் உங்களுக்குப்பிடிக்கலாம்..

 
Sourdough bread/ cob loaf
250g spinach 
250g creamed cheese - softened 
300 ml tub sour cream 
40g packet French onion soup mix..
மிளகு, உப்பு சுவைக்கு ஏற்ப

பாணின் மேல் பகுதியை வட்டமாக( மூடியாக பாவிக்க ஏற்றவாறு) வெட்டி உள்ளே இருக்கும் பாணையும் எடுத்தால் ஒரு வட்டபாத்திரமாக வரும்.

வேறு ஒரு பாத்திரத்தில்  கீரை, cheese, sour cream, soup mix, உப்பு, மிளகு எல்லாவற்றையும் நன்றாக கலந்து வைத்தபின்பு..

வெட்டிய பாணிற்குள் இந்த spinach mixபோட்டு  180 சூட்டில் ஒரு 20 நிமிடம்  ovenற்குள் வைத்தால், மொறுமொறுப்பான பாணும் சுவையான spinach dipம் ரெடி..

சிலபேர், சிறிதாக வெட்டிய beacon துண்டுகள் கொஞ்சம் போடுவார்கள், அதுவும் ஒரு தனிசுவைதான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎-‎05‎-‎2020 at 05:07, ஈழப்பிரியன் said:

                எனது மருமகன் இன்று சவர்டோவ் (Sourdough)என்று ஒரு பாண் செய்தார்.ஒரு கிழமை முதலே மகளும் அவரும் சேர்ந்து திட்டம் போட்டார்கள்.என்னடா வாறகிழமை பாண் செய்வதற்கு இப்பவே திட்டம் போடுறாங்கள் என்று அவதானித்தேன்.
                5-6 நாட்கள் முதலே போத்தலுக்குள் மாவும் தண்ணீரும் விட்டு புளிக்க வைத்து அதற்கு ஒவ்வொரு நாளும் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று மீண்டும் மாவும் தண்ணீரும் விட்டு ஓஓ வளருது வளருது என்று சந்தோசப்பட்டார்கள்.இடைஇடை போத்திலும் மாற்றி மாற்றி பெரிய போத்தலாக மாறிவிட்டது.
                முதல் நாளே (ஏதோ தோசைக்கு உழுந்து அரைத்து வைத்த மாதிரி ) தேவையான மாவை எடுத்து போத்தலில் வளர்ந்திருந்த பற்றீரியாவுடன் சேர்த்து குழைத்து வைத்தார்கள்.என்னடா இது இரவிரவாக செய்து யார் சாப்பிடப் போகிறார்கள் என்று கேட்டால் இது நாளை இரவுக்கு தான் பாணாக வரும் என்றார்கள்.
               இன்று ஞாயிறு காலை உணவை முடித்து தொடங்கியவர் குழைத்து வைத்ததை எடுத்து நேரம் விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் குழைத்து கடைசியில் நீண்டநேரம் வைத்து அவனில்போட தயாரானார்.நாங்கள் பாண் செய்வது போலவே போடப் போகிறார் என்று பார்த்தால் போடமுதல் கூரிய கத்தியால் ஆங்காங்கே கீறி விட்டு ஒரு சட்டியில் வைத்து இன்னொரு சட்டியால் மூடி 450 F இல் 20 நிமிடம் மூடி வைத்து 20 நிமிடம் திறந்துவிட்டு இறக்கினார்.
                 முன்னர் இப்படியான பாண் சாப்பிடாதபடியால் நானும் மிகவும் ஆவலாக இருந்தேன்.ஏற்கனவே செய்து வைத்த பருப்பு ,சம்பல் ,வாழைப்பழத்துடன் சாப்பிட்டோம்.
                 கொஞ்சம் புளிப்பாக இருந்தது.சாதாரண பாண்போலவும் இருந்தது.அதன் சுவையே தனி சுகமாக இருந்தது.எல்லாம் நல்லபடியாக வந்ததால் அவருக்கும் மிகவும் சந்தோசம்.இந்த வகையான பாண் இதுவே முதல் தடவையாக செய்ததாக சொன்னார்.இரவு எல்லோரும் சந்தோசமாக சாப்பிட்டோம்.
                  அவர் செய்ததென்று யாரும் செய்ய முற்படாதீர்கள்.ரொம்பவும் சிரமம் பிடித்த வேலை.இதுவரை இந்த புளிப்பான பாண் (Sourdough)சாப்பிடாதவர்கள் தயவு செய்து கடையில் வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள்.

DE290593-D0-A1-48-C3-9932-8-F622-E3-D6-B

இது கருகிப்போய் விட்டது என்று எண்ணாதீர்கள்.இது முதலில் செய்தது.

B6546-A81-38-C4-411-E-B9-C3-63-FC9-B4-CA

இது இரண்டாவதாக செய்தது.

 

செய்முறை தேவையானவர்களுக்காக.

நான் இந்த பானை சாப்பிட்டதேயில்லை ...ஒருக்கால் வேண்டி சாப்பிட்டு பார்க்கோணும் 

 

7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த spinach dip ஒரு முறை செய்து பாருங்கள், சில சமயம் உங்களுக்குப்பிடிக்கலாம்..

 
Sourdough bread/ cob loaf
250g spinach 
250g creamed cheese - softened 
300 ml tub sour cream 
40g packet French onion soup mix..
மிளகு, உப்பு சுவைக்கு ஏற்ப

பாணின் மேல் பகுதியை வட்டமாக( மூடியாக பாவிக்க ஏற்றவாறு) வெட்டி உள்ளே இருக்கும் பாணையும் எடுத்தால் ஒரு வட்டபாத்திரமாக வரும்.

வேறு ஒரு பாத்திரத்தில்  கீரை, cheese, sour cream, soup mix, உப்பு, மிளகு எல்லாவற்றையும் நன்றாக கலந்து வைத்தபின்பு..

வெட்டிய பாணிற்குள் இந்த spinach mixபோட்டு  180 சூட்டில் ஒரு 20 நிமிடம்  ovenற்குள் வைத்தால், மொறுமொறுப்பான பாணும் சுவையான spinach dipம் ரெடி..

சிலபேர், சிறிதாக வெட்டிய beacon துண்டுகள் கொஞ்சம் போடுவார்கள், அதுவும் ஒரு தனிசுவைதான்.

 

தூயா என்று ஒரு பெண் அவுசில் இருந்து முந்தி வந்தவ . அவவே நீங்கள் ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நான் இந்த பானை சாப்பிட்டதேயில்லை ...ஒருக்கால் வேண்டி சாப்பிட்டு பார்க்கோணும் 

 

தூயா என்று ஒரு பெண் அவுசில் இருந்து முந்தி வந்தவ . அவவே நீங்கள் ?
 

வாங்கி சாப்பிட்டுப் பாருங்க.மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

தூயாவாக இருந்தால் சமையல்கட்டில தான் கூடுதலாக மினக்கெட்டிருப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2020 at 04:43, ஈழப்பிரியன் said:

பகிடி என்னவென்றால்

              இவர்கள் சாப்பாடு போட்டு வளர்த்த பற்றீரியா மீதமாக இருந்தது.இன்று விடிய இதுக்கு என்ன அலுவலைக் கொடுக்கலாம் என்று மண்டையைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தேன்.

               முதல்நாள் இது செய்யும் போதே நீங்கள் தோசைக்கு மா குழைத்து வைப்பது போலவே இதுகும் என்று சொல்லி சொல்லி செய்தார்கள்.
அந்த ஞாபகம் வரவே வெள்ளை அரிசிமா ஏற்கனவே இருந்தது.சரி அப்பம் செய்து பார்ப்போம் என்று இரண்டு கப் மாவுடன் இருந்த பற்றீரியா மாவையும் போட்டு குழைத்து வைத்தேன்.
               இப்போது பிற்பகல் எடுத்து தேங்காய் பாலும் விட்டு அடித்து பாலப்பம் செய்து பார்த்தேன்.
               எல்லோரும் புழுகி புழுகி சாப்பிட்டார்கள்.
22248834-B1-A7-488-D-B077-600-C265-CD701

ஈழப்பிரியன்... அப்பம் நன்றாக வந்துள்ளது.
அத்துடன்... அதற்கு, நீங்கள் அதிகம் மினக்கெடவும் இல்லை.

உதாரணத்துக்கு.... நாங்கள்  திடீர் அப்பம் செய்வதென்றால், வெள்ளை அரிசி மாவுக்குள்.
பேக்கிங் பவுடர், அல்லது  ஈஸ்ட் போட்டு செய்தால்...அப்பம் வருமா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்... அப்பம் நன்றாக வந்துள்ளது.
அத்துடன்... அதற்கு, நீங்கள் அதிகம் மினக்கெடவும் இல்லை.

உதாரணத்துக்கு.... நாங்கள்  திடீர் அப்பம் செய்வதென்றால், வெள்ளை அரிசி மாவுக்குள்.
பேக்கிங் பவுடர், அல்லது  ஈஸ்ட் போட்டு செய்தால்...அப்பம் வருமா?  

தமிழ்சிறி உங்கள் சமையல் விசாரிப்புகளைப் பார்த்தா எப்போதும் சிரிப்பு தான் வரும்.ஏனென்றால் விசாரிக்கிற மாதிரியைப் பார்த்தா யாரும் புது ஆக்கள் ஓ இந்த மனுசன் இப்ப செய்து சாப்பிட்டுட்த் தான் படுக்கும் போல என்று நினைப்பார்கள்.

இருந்தாலும் உங்கள் ஆசைக்காக தோசை மாவு மாதிரி தான் அப்பமும் கொஞ்சம் புளிக்க வேண்டும்.

மா புளித்தால் அப்பத்துக்கு நல்லது என்று பழமொழியே இருக்கு.
அதுசரி பாஞச் வேண்டில் வாங்கிய அப்ப ரெசிப்பி என்னாச்சு தம்பி?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2020 at 05:24, ரதி said:

தூயா என்று ஒரு பெண் அவுசில் இருந்து முந்தி வந்தவ . அவவே நீங்கள் ?

இல்லை ரதி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூலிக்கு மார் அடிக்கும்சிங்களவன் என்று சொல்லப்படாது...இது எங்களது சகோதரயாக்களின் தூர நோக்கு அரசியல் பார்வை(ராஜதந்திரம்.சாணக்கியம்) என்ற கோணத்தில் நீங்கள் பார்க்க வேணும் இன்று சிறிலங்கா அமேரிக்கா .இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினுள் வர போகின்றது இதை தடுத்து நிறுத்த ரஸ்யா,சீனா போன்ற  நாடுகளில் சகோதரயாக்கள் இராணுவ பயிற்சி எடுக்க வேணும்....இதில் மாற்று கருத்து ஒன்றுபட்ட சிறிலங்கா அம்பிகளுக்கு இருக்காது...அமெரிக்கா வந்து இறங்க ரஸ்யாவில் பயிற்சி பெற்ற தளபதிகள் எங்கன்ட லங்கா மாதாவை காப்பாற்றுவார்கள்
    • சில வேளைகளில் அமெரிக்கா ஈரானுடனான தன் வெற்றிக்காக ரஷ்யாவுடன்  உக்ரேனை பேரம் பேசப்படலாம். ரஷ்யாவும் அதற்கு சில வேளைகளில் சம்மதிக்கலாம். அமெரிக்காவிற்கு உக்ரேனை விட இஸ்ரேலும் மத்திய கிழக்கு அமைதியும் மிக முக்கியம் . பலஸ்தீன விடுதலை இரண்டாம் பட்சம்.😎 இப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய கதைகள் உண்டுதானே. 😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
    • நேற்று நம்ம ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்... நல்ல சகுணமாம் வெடிச்சத்தம் கேட்கின்றமையால் என கண் சிமிட்டுதிறார்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.