Jump to content

சுமந்திரனின் பதவியை உடன் பறிமுதல் செய்யுங்கள்! சம்பந்தனுக்கு அவசர கடிதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரனின் கூற்று குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் இன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த கடிதத்தில்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழரின் இன விடுதலைக்காக அதியுட்ச தியாகங்களை செய்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக கூறி வருகின்றார்.

இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பல தடவை என்னால் சுட்டிக்காட்டப்பட்டதை தாங்கள் அறிவீர்கள்.

இந்த விடயம் தொடர்பாக இனிமேல் கதைக்க வேண்டாம் என்றும் என்னால் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் 08.05.2020 அன்று ஒரு சிங்கள ஊடகத்திற்கு இதே போன்று கருத்து கூறியிருக்கின்றார்.

இது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருப்பினும் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கின்ற காரணத்தினால் தமிழ் மக்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளனர்.

நானும் அவருடைய கருத்தை எதிர்க்கின்றேன். சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும்.

அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக பேச்சாளர் பதவி அவரிடத்திலிருந்து வேறு நபர்களுக்கு வழங்க வேண்டும்.

இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தினை கூட்டும்படி கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/politics/01/245767?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சார்ள்ஸ் இன்டைக்கு வங்காலயானிட்ட  முன்றயா வாங்கப்போரார். ஒரு தியாக தீபத்தைப்பற்றி  தரம் குறைவா கதைச்சிருக்க கூடாது. அப்படித்தான் என்ன குற்றம் செய்தவர், வாங்கின காசுக்கு மேலால கொஞ்சம் கதைச்சவர். சின்ன வாசல் இருந்து கேக்கிறநுக்கு மேலால செய்வாராம். 

Link to comment
Share on other sites

11 hours ago, பெருமாள் said:

விடுதலைப் புலிகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரனின் கூற்று குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு களவாணி அரசியல்வாதியைப் பற்றி இன்னொரு களவாணி அரசியல்வாதிக்கு எழுதி ஒரு பிரயோசனமும் இல்லை.

நேர்மையாக நடக்கும் சார்ஸ்க்கு தமிழரசுக் கட்சிக்குள்ள ஆப்பு இறுக்கப்படும்.

Link to comment
Share on other sites

சுமந்திரனின் கூற்றால் கொதித்தெழுந்த இளஞ்செழியன்

விடுதலைப்புலிகளின் போராட்ட அரசியல் வழிமுறைகளை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுக்கு எதிராக இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான பீட்டர் இளஞ்செழியன் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

பீட்டர் இளஞ்செழியனின் சகோதரர் ஒருவர் 2009 இறுதி யுத்தத்தின்போது ஆனந்தபுரம் பகுதியில் வீரச்சாவடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரால் வெளியிடப்பட்ட கண்டன அறிக்கை வருமாறு.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தை மறுதலிக்க சுமந்திரனுக்கு உரித்தில்லை.

வடக்கு கிழக்கு உட்பட தமிழ் மக்களின் உரிமைக்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வா அவர்களின் அகிம்சை வழி போராட்டத்தை தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளினால் ஆயுதம் ஏந்தி போரடியது.

தமிழ் மக்களுக்குள் திணிக்கப்பட்ட ஆயுத போராட்டம் அல்ல அந்த போராட்டம். தமிழ் மக்களுடன் இணைந்து பெளத்த, சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக மேற் கொண்ட ஆயுத போராட்டம். இதை மறுதலிக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு உரித்து இல்லை.

பெளத்த, சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்கள் மேல் அடக்கு முறையை கட்டவிழ்த்த போது அவருடைய ஐந்து வயதில் இருந்து, அதாவது ஐம்பது வருடங்கள் கொழும்பு சென்று வாழ்ந்து வந்த சுமந்திரனுக்கு , வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அனுபவித்த கொடூரங்களை அறியாத சுமந்திரனுக்கு, தெற்கில் விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி கிடைத்த அதிஸ்டத்தால் வாழ்ந்தவருக்கு ஆயுத போராட்டம் பற்றி என்ன தெரியும்?

சுமந்திரனின் கருத்தானது தமிழ் மக்களின் விடுதலைக்காய் போராடிய போராளிகள் , போராடி தமது உயிர்களை காவியமாக்கிய மாவீரர்களையும், தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவே நானும் எம் மக்களும் கருதுகின்றோம்.

உலக நாடுகள் பல தமிழ் மக்களின் இன விடுதலை போராட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ள நேரத்திலே, யாழ்ப்பாணத்தில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, மாவீரர்களுக்கும், போராளிகளுக்கும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் துதி பாடி விட்டு, கொழும்பில் மாவீரர்களுக்கும் போராளிகளுக்கும் தமிழ் மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தி சிங்கள மக்களை திருப்திப்படுத்தி மகிந்த அரசிடம் மீண்டும் அதிஷ்டங்களை பெற முயற்சிப்பதாகவே நான் கருதுகின்றேன்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று கூறிய கருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ அல்லது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கருத்தாகவோ கருதக்கூடாது என்றும், அவருடைய கருத்து தொடர்பாக கட்சி மிகவிரைவில் உரிய முடிவு எடுக்கும் என நம்புகின்றேன்.

அதேபோல முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்கள் சுமந்திரன் மீது அதிருப்தி அடைந்துள்ளதுடன் தொடர்ந்தும் சுமந்திரனுக்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

https://www.ibctamil.com/srilanka/80/142978?ref=ibctamil-recommendation

Link to comment
Share on other sites

சுமந்திரன் வெளியேற்றப்படவேண்டும்: புலம்பெயர் தமிழ் உணர்வாளர்கள் போர்க்கொடி!!

த.தே.கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் குறித்து தெரிவித்த கருத்தானது புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் பலத்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுமந்திரன் வெளியிட்ட கருத்தானது, தமது உறவுகளின் விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்த பல ஆயிரம் மாவீரர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தும்படியாக இருப்பதாகத் தெரிவிக்கும், புலம்பெயர் தமிழ் மக்கள், சுமந்திரனை த.தே.கூட்டமைப்பை விட்டு வெளியேற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.

https://www.ibctamil.com/diaspora/80/142974?ref=rightsidebar

Link to comment
Share on other sites

12 hours ago, ragaa said:

சார்ள்ஸ் இன்டைக்கு வங்காலயானிட்ட  முன்றயா வாங்கப்போரார். ஒரு தியாக தீபத்தைப்பற்றி  தரம் குறைவா கதைச்சிருக்க கூடாது. அப்படித்தான் என்ன குற்றம் செய்தவர், வாங்கின காசுக்கு மேலால கொஞ்சம் கதைச்சவர். சின்ன வாசல் இருந்து கேக்கிறநுக்கு மேலால செய்வாராம். 

இந்த சார்ள்ஸ் நிர்மலநாதன் என்பவர் ஒரு மீன் வியாபாரி। மற்றவர் அடைக்கலம் துவக்கு தூக்கி இருக்கவிடடாள் மீன் பிடிக்கத்தான் சென்றிருப்பார்।

இருந்தாலும் நிர்மலனின் கருத்து பிழையானது இல்லை। சுமந்திரன் கட்சியின் பேச்சாளர் என்ற ரீதியில் கருத்துக்களை வெளியிடும்போது கட்சியின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்। அதுதான் கட்சியின் கொள்கை என்றால் சுமந்திரன் கூறியதில் பிரச்சினை இல்லை। எனவே கட்சி கூடி ஒரு முடிவை எடுத்தால் நல்லது। 

Link to comment
Share on other sites

7 hours ago, Rajesh said:

நேர்மையாக நடக்கும் சார்ஸ்க்கு தமிழரசுக் கட்சிக்குள்ள ஆப்பு இறுக்கப்படும்.

உள்ளவர்களினுள் சிறந்தவராக வளர்ந்துவரும் சார்ள்ஸ் நிர்மலநாதன் இருக்க வேண்டிய இடம் தமிழரசுக் கட்சியில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன், ஒவ்வொரு மாதமும்...  கண்டபடி  உளறி...
ஆட்களிட்டை.... வசமாக வாங்கிக் கட்டுறதையே... ஒரு வேலையாக வைத்திருக்கிறார்.   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ragaa said:

சார்ள்ஸ் இன்டைக்கு வங்காலயானிட்ட  முன்றயா வாங்கப்போரார். ஒரு தியாக தீபத்தைப்பற்றி  தரம் குறைவா கதைச்சிருக்க கூடாது. அப்படித்தான் என்ன குற்றம் செய்தவர், வாங்கின காசுக்கு மேலால கொஞ்சம் கதைச்சவர். சின்ன வாசல் இருந்து கேக்கிறநுக்கு மேலால செய்வாராம். 

ஹாஹா அவர் நினைச்சிருப்பார் இங்கு சுமந்திரனுக்கு மட்டும் தான் வசை பாடுகிறார்கள் என்று இங்க கூத்தமைப்புகே வசைபாடுகிறார்கள் என்று போக போக புரியும் .

Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன், ஒவ்வொரு மாதமும்...  கண்டபடி  உளறி...
ஆட்களிட்டை.... வசமாக வாங்கிக் கட்டுறதையே... ஒரு வேலையாக வைத்திருக்கிறார்.   :grin:

அது நம்முடைய புத்தி சாலித்தனம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Vankalayan said:

இந்த சார்ள்ஸ் நிர்மலநாதன் என்பவர் ஒரு மீன் வியாபாரி। மற்றவர் அடைக்கலம் துவக்கு தூக்கி இருக்கவிடடாள் மீன் பிடிக்கத்தான் சென்றிருப்பார்।

இருந்தாலும் நிர்மலனின் கருத்து பிழையானது இல்லை। சுமந்திரன் கட்சியின் பேச்சாளர் என்ற ரீதியில் கருத்துக்களை வெளியிடும்போது கட்சியின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்। அதுதான் கட்சியின் கொள்கை என்றால் சுமந்திரன் கூறியதில் பிரச்சினை இல்லை। எனவே கட்சி கூடி ஒரு முடிவை எடுத்தால் நல்லது। 

மீன் வியாபாரி என்டால் என்ன பிரச்சனை? நாக்கை தொங்க போட்டுக் கொண்டு மீன் வாங்க அங்க தானே போறியள்...

ஏன் அடைக்கலநாதன் மீன் பிடிக்க போக வேண்டும் ???

Link to comment
Share on other sites

3 hours ago, MEERA said:

மீன் வியாபாரி என்டால் என்ன பிரச்சனை? நாக்கை தொங்க போட்டுக் கொண்டு மீன் வாங்க அங்க தானே போறியள்...

ஏன் அடைக்கலநாதன் மீன் பிடிக்க போக வேண்டும் ???

நான் பிழையாக சொல்லவில்லையே। அவர் மீன் வியாபாரி என்றுதானே எழுதினேன்? நீங்கள் எதோ பிழையாக விளங்கிவிடடீர்கள் போல தெரிகிறது। மீன் வியாபாரியிடம்தான் மீன் வாங்குவோம் என்று எல்லோருக்கும் தெரியும்।

அடைக்கலம் அவர்களின் பரம்பரை தொழில் மீன் பிடிப்பது। அதுதான் அப்படி எழுதினேன்। நீங்கள் நினைப்பதுபோல மீன் பிடிப்பதோ , மீன் வியாபாரம் செய்வதோ ஒன்றும் இழிவான தொழில் இல்லை। 

18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா அவர் நினைச்சிருப்பார் இங்கு சுமந்திரனுக்கு மட்டும் தான் வசை பாடுகிறார்கள் என்று இங்க கூத்தமைப்புகே வசைபாடுகிறார்கள் என்று போக போக புரியும் .

நான் அப்படி நினைக்கவில்லை। நீங்கள் நினைத்திருக்கலாம்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Vankalayan said:

நான் பிழையாக சொல்லவில்லையே। அவர் மீன் வியாபாரி என்றுதானே எழுதினேன்? நீங்கள் எதோ பிழையாக விளங்கிவிடடீர்கள் போல தெரிகிறது। மீன் வியாபாரியிடம்தான் மீன் வாங்குவோம் என்று எல்லோருக்கும் தெரியும்।

அடைக்கலம் அவர்களின் பரம்பரை தொழில் மீன் பிடிப்பது। அதுதான் அப்படி எழுதினேன்। நீங்கள் நினைப்பதுபோல மீன் பிடிப்பதோ , மீன் வியாபாரம் செய்வதோ ஒன்றும் இழிவான தொழில் இல்லை। 

இங்கு நான் ஒருவரையும் இழிவுபடுத்தவில்லை... நீங்கள் தான் பரம்பரை தொழில் என்று சாதீய அடிப்படையில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை இழிவு படுத்தி உங்கள் சாதீய வெறியை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

அது எப்படி அடைக்கலநாதன் அந்த சமூகத்தில் பிறந்ததால் மீன்பிடிக்கத் தான் செல்ல வேண்டுமா,,,,,?

சுமந்திரனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் உங்கள் சாதீய வெறி வெளிப்பட்டுவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் உங்கள் சாதீய வெறி வெளிப்பட்டுவிட்டது.

Link to comment
Share on other sites

15 hours ago, MEERA said:

சுமந்திரனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் உங்கள் சாதீய வெறி வெளிப்பட்டுவிட்டது.

சாதீய வெறி எங்கு இருக்குதென்பது முழு உலகுக்கும் தெரியும்। தமிழர் பிரச்சினையை தீர்க்கும் முதல் அதை தீர்க்க வேண்டும்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2020 at 05:27, சுமத்திரன் said:

அது நம்முடைய புத்தி சாலித்தனம் .

உங்கள் புத்திசலித்தனத்தை கொஞ்சம் முதிர்ச்சியுடன் வெளிப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறோம். 🙏

மிகப் பெரும்பான்மையான உங்கள் கருத்துக்கள் நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களைக் காயப்படுத்துகின்றன. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2020 at 22:00, Vankalayan said:

இந்த சார்ள்ஸ் நிர்மலநாதன் என்பவர் ஒரு மீன் வியாபாரி। மற்றவர் அடைக்கலம் துவக்கு தூக்கி இருக்கவிடடாள் மீன் பிடிக்கத்தான் சென்றிருப்பார்।

இருந்தாலும் நிர்மலனின் கருத்து பிழையானது இல்லை। சுமந்திரன் கட்சியின் பேச்சாளர் என்ற ரீதியில் கருத்துக்களை வெளியிடும்போது கட்சியின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்। அதுதான் கட்சியின் கொள்கை என்றால் சுமந்திரன் கூறியதில் பிரச்சினை இல்லை। எனவே கட்சி கூடி ஒரு முடிவை எடுத்தால் நல்லது। 

ஒருவரது தொழிலை இங்கே நினைவுபடுத்துவதற்கான காரணம் என்ன ? ☹️

சாதீயம் என்பது தொழிற்பகுப்பின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும்தானே ☹️

(சிலவேளைகளில் மிக இலகுவாக நிதானத்தைத் தவற விடுவதாகத் தோன்றுகிறது ☹️ (என்னைப் போலவே 😀))

Link to comment
Share on other sites

22 hours ago, Kapithan said:

ஒருவரது தொழிலை இங்கே நினைவுபடுத்துவதற்கான காரணம் என்ன ? ☹️

சாதீயம் என்பது தொழிற்பகுப்பின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும்தானே ☹️

(சிலவேளைகளில் மிக இலகுவாக நிதானத்தைத் தவற விடுவதாகத் தோன்றுகிறது ☹️ (என்னைப் போலவே 😀))

அது சில வேளைகளில் சாதீயமாக தெரிகின்றது। அவர் ஒரு விவசாய குடும்பத்தேவை சேர்ந்தவர் என்று சொல்லும்போது அது தெரிவதில்லை। அது ஏன்? இருந்தாலும் இனி குறிப்பிட விரும்பவில்லை।

எனது ஆதங்கம் எல்லாம் பாரளுமன்றம் என்னும்போது அது சடடத்தை உருவாக்கும் சடடவாக்க சபை। அப்படி இருக்கும்போது சடடம் என்றால் என்னவென்றே தெரியாத ஆட்கள்தான் இன்று அங்கு செல்கிறார்கள்। கட்சியோ , மக்களோ ஏன் சரியான அதிகாலை தெரிவு செய்வதில்லை। சிங்களவர்களையோ, முஸ்லிம்களையோ பற்றி நான் பேசவில்லை। எனவே இதில் ஒரு மற்றம் எல்லா கட்சிகளாலும் உருவாக்கப்பட வேண்டும்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Vankalayan said:

அது சில வேளைகளில் சாதீயமாக தெரிகின்றது। அவர் ஒரு விவசாய குடும்பத்தேவை சேர்ந்தவர் என்று சொல்லும்போது அது தெரிவதில்லை। அது ஏன்? இருந்தாலும் இனி குறிப்பிட விரும்பவில்லை।

எனது ஆதங்கம் எல்லாம் பாரளுமன்றம் என்னும்போது அது சடடத்தை உருவாக்கும் சடடவாக்க சபை। அப்படி இருக்கும்போது சடடம் என்றால் என்னவென்றே தெரியாத ஆட்கள்தான் இன்று அங்கு செல்கிறார்கள்। கட்சியோ , மக்களோ ஏன் சரியான அதிகாலை தெரிவு செய்வதில்லை। சிங்களவர்களையோ, முஸ்லிம்களையோ பற்றி நான் பேசவில்லை। எனவே இதில் ஒரு மற்றம் எல்லா கட்சிகளாலும் உருவாக்கப்பட வேண்டும்। 

உங்களுக்கு ஏற்றமாதிரி எழுதுகிறீர்கள்...

தமிழர்கள் மட்டும் சட்டம் தெரிந்தவர்களை அனுப்ப வேண்டும்.. சிங்களவர்களும் சோனகர்களும் முட்டாள்களை அனுப்ப வேண்டும்... 

சீறீலங்கா சனாதிபதிக்கே சட்டம் தெரியாது 😜

Link to comment
Share on other sites

15 hours ago, MEERA said:

உங்களுக்கு ஏற்றமாதிரி எழுதுகிறீர்கள்...

தமிழர்கள் மட்டும் சட்டம் தெரிந்தவர்களை அனுப்ப வேண்டும்.. சிங்களவர்களும் சோனகர்களும் முட்டாள்களை அனுப்ப வேண்டும்... 

சீறீலங்கா சனாதிபதிக்கே சட்டம் தெரியாது 😜

ஜனாதிபதி என்பது நிறைவேற்று அதிகாரத்தை சட்ட்திட்கு உட்பட்டு நிறைவேற்றுபவர்। அவருக்கு சடடம் இயற்றவேண்டிய அவசியம் இல்லை।

பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் சட்டத்தை உருவாக்குபவர்கள்। எனவே அந்த சட்டவாக்க சபையில் ஓரளவுக்காவது சடடதை, குறைந்தது சில கல்வி தகமைகளாவது இருக்க வேண்டும்। விளங்கி இருக்குமென்று நினைக்கிறேன்। 😂

ஏன் மற்றைய சமூகத்தை இதுக்குள் இழுக்கிறீர்கள்। முதலில் எங்களை திருத்தி கொள்ளுவோம்। 😷

Link to comment
Share on other sites

On 11/5/2020 at 22:00, Vankalayan said:

சுமந்திரன் கட்சியின் பேச்சாளர் என்ற ரீதியில் கருத்துக்களை வெளியிடும்போது கட்சியின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்। அதுதான் கட்சியின் கொள்கை என்றால் சுமந்திரன் கூறியதில் பிரச்சினை இல்லை। எனவே கட்சி கூடி ஒரு முடிவை எடுத்தால் நல்லது। 

சுமந்திரன் ஒரு நேர்மையான பண்பான மனிதர் என்றால் பதவியை இராஜினாமா செய்யவேண்டும்.

காரணம், தலைவர் உட்பட பலரும் பல அவரின் பதில்கள் அவரின் "தனிப்பட்ட" கருத்துக்கள் என கூறியுள்ளனர். 

Link to comment
Share on other sites

23 hours ago, ampanai said:

சுமந்திரன் ஒரு நேர்மையான பண்பான மனிதர் என்றால் பதவியை இராஜினாமா செய்யவேண்டும்.

காரணம், தலைவர் உட்பட பலரும் பல அவரின் பதில்கள் அவரின் "தனிப்பட்ட" கருத்துக்கள் என கூறியுள்ளனர். 

இப்போது அவரது கருத்தை நியாயப்படுத்தி  உள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/5/2020 at 21:55, Vankalayan said:

அது சில வேளைகளில் சாதீயமாக தெரிகின்றது।

1) அவர் ஒரு விவசாய குடும்பத்தேவை சேர்ந்தவர் என்று சொல்லும்போது அது தெரிவதில்லை। அது ஏன்?

2) இருந்தாலும் இனி குறிப்பிட விரும்பவில்லை।

3) எனது ஆதங்கம் எல்லாம் பாரளுமன்றம் என்னும்போது அது சடடத்தை உருவாக்கும் சடடவாக்க சபை। அப்படி இருக்கும்போது சடடம் என்றால் என்னவென்றே தெரியாத ஆட்கள்தான் இன்று அங்கு செல்கிறார்கள்। கட்சியோ , மக்களோ ஏன் சரியான அதிகாலை தெரிவு செய்வதில்லை। சிங்களவர்களையோ, முஸ்லிம்களையோ பற்றி நான் பேசவில்லை। எனவே இதில் ஒரு மற்றம் எல்லா கட்சிகளாலும் உருவாக்கப்பட வேண்டும்। 

1) விவசாயம் என்கின்ற போது அதற்குள் காடு,  கடல், பயிர்ச் செய்கை (?) மூன்றும் அடங்கும்.

பயிர்ச் செய்கையில் அனேகமாக எல்லா சாதிப் பிரிவினரும் ஈடுபடுகின்றனர். ஆனால் மீன்பிடியில் (கடல்) நீரை அண்மித்து வாழும் சில குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே மிகப் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். 🙂

2) மிகவும் நல்ல விடயம். வரவேற்கிறேன். 👍

3) உங்கள் ஆதங்கம் சரியானது. ஆனால் இவர்களை அனுப்புவதில் தீர்மானம் எடுப்பது கட்சித் தலைமைகளே. அவர்களை மக்கள் வழி மொளிகின்றனர். மாற்றம் தொடங்கவேண்டியது இரு பகுதியினரிடமிருந்தும்தான். ☹️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2020 at 14:06, MEERA said:

இங்கு நான் ஒருவரையும் இழிவுபடுத்தவில்லை... நீங்கள் தான் பரம்பரை தொழில் என்று சாதீய அடிப்படையில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை இழிவு படுத்தி உங்கள் சாதீய வெறியை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

அது எப்படி அடைக்கலநாதன் அந்த சமூகத்தில் பிறந்ததால் மீன்பிடிக்கத் தான் செல்ல வேண்டுமா,,,,,?

சுமந்திரனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் உங்கள் சாதீய வெறி வெளிப்பட்டுவிட்டது.

நான் எழுதி அழித்துவிட்டேன் அந்த பதிவை நீங்கள் எழுதி இருக்குறீர்கள்  உன்மையான முகங்கள் சிலநேரம் வெளிப்படுகிறது மண்டைய மறைக்கலாம் கொண்டையை மறைக்க இயலாது 😉

Link to comment
Share on other sites

On 13/5/2020 at 14:06, MEERA said:

இங்கு நான் ஒருவரையும் இழிவுபடுத்தவில்லை... நீங்கள் தான் பரம்பரை தொழில் என்று சாதீய அடிப்படையில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை இழிவு படுத்தி உங்கள் சாதீய வெறியை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

அது எப்படி அடைக்கலநாதன் அந்த சமூகத்தில் பிறந்ததால் மீன்பிடிக்கத் தான் செல்ல வேண்டுமா,,,,,?

சுமந்திரனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் உங்கள் சாதீய வெறி வெளிப்பட்டுவிட்டது.

முழு உலகுக்கும் தெரியும் எங்கு சாதிய வெறி இருக்கிறதென்று. ஈழம் கிடைக்குமுதல் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். மீனவன் மீனவன்தான். விவசாயி விவசாயிதான். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.