Jump to content

சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து இல்லை என்கிறார் மாவை


Recommended Posts

(எம்.நியூட்டன் )

தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியும் அவர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து இல்லை என இலங்கை தமிழர கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.


சுமந்திரனின் கருத்து தொடர்பில் மாவை வெளியிட்ட அறிககையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விடுதலைப்புலிகள் பற்றி சுமந்திரன் அளித்த பேட்டியில் சிங்கள மொழியில் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராக எம்மிடம் கண்டனங்களும் விமர்சனங்களும் தெரிவிக்கப்படுவதாலும் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய தேவையும் நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கமும் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்த கருத்தின் மீது கண்டனம் தெரிவித்துள்ளது. அது போல (புளொட்) தமிழீழ விடுதலைக் கழகமும் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

08.05.2020 அன்று ஆக இருக்க வேண்டும் சிங்கள ஊடகத்தில் விடுதலைப் புலிகள் தொடர்பில், விடுதலைப் புலிகளையும், ஆயுதப் போராட்டங்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சுமந்திரன் வெளியிட்ட கருத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்து கொண்டு தெரிவித்த கருத்துக்கள் தனிப்பட்ட கருத்தாகவும் ஏற்றுக் கொள்ளமுடியாது. 1976 மே 14 ஆம் திகதி வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி மாநாடு நடைபெற்றது.

தமிழர் இழந்த சுதந்திரத்தை மீட்க (சுதந்திரத் தமிழீழம்) வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அப்பொழுது நாம் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தவர்கள். 1971 இல் ஆட்சியைக் கைப்பற்ற ஆயுதப் புரட்சி செய்த ஜே.வி.பியினர் ஆயிரக்கணக்கில் அச்சிறைகளில் இருந்தனர்.

1977 பொதுத்தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஆணை கேட்டு பெரு வெற்றி பெற்றது தமிழர் விடுதலைக் கூட்டணி. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழின விடுதலைக்காக 1971,1972களில் உருவாகியது. 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஏற்று ஆயுதப் போராட்டத்தின் மூலம் அந்தச் சுதந்திரத்தை அடைய வேண்டுமென்று இயங்கியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் நடவடிக்கைளில் ஒருபொழுதும் பங்காளிகளாக இருந்ததில்லை. 1983 யூலைக் கலவரத்தின் பின் இந்திய நாட்டின் தலையீடும், அனுசரணையும் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகள் இந்தியாவில் புதுடெல்லியில் இடம்பெற்ற வேளைகளில் பேச்சு வார்த்தைகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைப் புலிகள், ஈரோஸ் தலைவர்கள் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2001-2002 காலப்பகுதியில் நோர்வே அனுசரனையுடன் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையில் பேச்சு ஆரம்பித்தது. 2002 டிசம்பரில் விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் ஒன்றை அறிவித்தனர்.

2002 பெப்ரவரியில் நோர்வே ஒஸ்லோ நகரில் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைக்கு ஒரு உடன்பாடு எட்டப்பட்டது .அந்த வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் சர்வதேசத்திற்கு முன் ஓர் அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் "தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்" என்று அறிவிக்கப்பட்டது.

அவ்வேளையிலிருந்து தான் சர்வதேசத்தின் முன்னிலையில் தமிழர்களின் உச்ச அரசியல் பலம் ஏற்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விடுதலைப் புலிகளும் தொடர்ச்சியான பேச்சுக்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற ஆயுதப் போரும், போர் நிறுத்தமும், சர்வதேச அரங்கில் இலங்கை அரசுடன் ஒஸ்லோவில் பேச்சுவார்த்தை நடத்த உடன்பட்ட காலத்தில் ஜனநாயகக் கோட்பாட்டில்; இயங்கி வந்த தமிழர் விடுதலைக் கூட்டணி அப்பேச்சு வார்த்தையில் பங்கு கொண்ட விடுதலைப்புலிகளை அங்கீகரித்து நின்ற காலத்திலிருந்துதான் இலங்கை இனப்பிரச்சனை சர்வதேசத்திலும் அரசியல் விடுதலைப் பரிணாமத்தைப் பெற்றது.

அந்த ஒஸ்லோ உடன்படிக்கையின் அம்சங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கைகளையே 2004முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுத் தேர்தல்களில் பெரு வெற்றி பெற்று வருகிறது.

2004 பொதுத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச்சின்னம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

2009 போர் முடிந்த பின் 2010 பொதுத் தேர்தலிலும் தேசியக் கூட்டமைப்பு பெருவெற்றி பெற்றது. 2011 ஒக்டோபர் 24முதல் 27 வரை அமெரிக்க இராஜாங்க அமைச்சின் அழைப்பின் பேரில் வொசிங்டனில் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அமெரிக்க இராஜாங்க அமைச்சுடன் பேச்சில் ஈடுபட்டனர்.

இறுதியில் 2012 மார்ச்சில் நடைபெறவிருந்த ஐ.நா.மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டிய இலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற விசாரணைக்கான பிரேரனை தயாரிக்கப்பட்டது. தமிழின விடுதலைக்கான போர் இலங்கை அரசு இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலேயே நடைபெற்றது.

2011 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் 2013 மாகாணசபைத் தேர்தல்களில் 2015 பொதுத் தேர்தல்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் போராளிகள், ஆதரவாளர்களின் ஆதரவுடனேயே வெற்றிகள் ஏற்பட்டன.

ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஆயுத மேந்திப் போராடிய இயக்கத்தினர், போராளிகளின் வழக்குகளில் திருவாளர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், நீலன் திருச்செல்வம் முதலான பல வழக்கறிஞர்கள் வாதாடியிருந்தனர்.

இந்திய நாட்டு விடுதலைப் போராட்ட காலத்தில் இந்தியக் காங்கிரஸ் அமைப்புக்களில் ஜவர்கலால் நேரு, சுபாஸ் சந்திர போஸ் முதலான தலைவர்களிருந்தனர். மகாத்மா காந்தி காங்கிரசில் இடம்பெறவில்லையாயினும் அவர் ஆதரவும் தலையீடுகளும் இருந்தன.

ஜாலியன் வாலாபாக்கில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து மக்களைக் கொன்ற கொன்ற பகவத்சிங்  உத்தம சிங் முதலானோர் கைதுசெய்யப்பட்டு கராச்சி நீதிமன்றத்திலே தூக்குத்தண்டனை வழங்க வேண்டுமென்ற வழக்கில் ஜவர்கலால் நேரு தோன்றி பகவத்சிங் முதலானோரை விடுதலை செய்ய வேண்டுமென வாதாடினார்.

தூக்குத் தண்டனைக்கு எதிராக மகாத்மா காந்தி இங்கிலாந்து வைசிராய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் மகாத்மா குறிப்பிட்டார். "பகவத்சிங் முதலானோரின் போராட்ட வழிமுறையை நான் ஏற்றுக் கொள்ளவில்லையென்றாலும், அவர்கள் தியாகத்தை மதிக்கிறேன். அவர்களைத் தூக்கிலிட வேண்டாம்"என்று கேட்டிருந்தார்.

இலங்கையிலும் எங்கள் வழக்கறிஞர்களும் ஜவர்கலால்; நேரு, மகாத்மா காந்தி போலவே நடந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழீழ விடுதலை அமைப்புப் போராளிகளை போரினால் பாதிப்புற்ற பெண் தலைமைத்துவக் குடும்பங்களை தமிழ்த் தேசிய ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைத்துத்; தமிழ்ச் சமூகத்தின் விடுதலை இயக்கத்தில் மேம்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கொள்கைத் திட்டத்தையே கொண்டு செயல்படுகிறது. ஆரம்பத்தில் சென்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும் போராளிகள் பங்கு கொண்டிருந்தனர்.

எனவே தென்னிலங்கையில் பௌத்த சிங்கள ஒற்றையாட்சி, பெரும்பான்மைத்துவ ஆட்சிச் சித்தாந்தத்துடன் எழுச்சி பெற்று வரும் அரசியல் இராணுவச் சூழ்நிலையில் தமிழ்ப் பேசும் மக்கள், அரசியல், சமூக அமைப்புக்கள் ஒன்றுபட்டு எழுச்சி பெற வேண்டியதே இன்று வேண்டியதாகும்.
ஜனநாயக அரசியலில் அதுவும் விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்து நிற்கும் மக்களிடம் கருத்து வேற்றுமைகளில் இணக்கத்தை உருவாக்கி பிளவுகளுக்கு இடமளிக்காமல் நம்பிக்கையை ஏற்படுத்துவதே சிறப்பானதாகும்.

விரைவில் தமிழரசு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைகள் ஒன்று கூடி மேற்கொண்டு செயல்பட வேண்டிய தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனக் கருதியுள்ளோம் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/81816

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ampanai said:

தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியும் அவர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து இல்லை என இலங்கை தமிழர கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இப்ப இரண்டு பேருக்குமிடையிலை பெரிய கீறல் விழப்போகுதே?:cool:

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

இப்ப இரண்டு பேருக்குமிடையிலை பெரிய கீறல் விழப்போகுதே?:cool:

இருக்காது.
இது ஒரு கபட நாடகமாக இருக்கும்.
இது தமிழரசுக்கட்சியின் கருத்து இல்லை என்று மந்த அரசியவாதி மாவை சொல்லவில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/100010415381263/videos/1086119988411837/

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தை தவிர வேறொன்றையும் நான் கூறமாட்டேன் !
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தை தான் நான் கூறவேண்டும்.:- கெளரவ சுத்துமாத்துமந்திரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் சொன்னவை கூட்டமைப்பின் கருத்தல்ல; அவரின் தனிப்பட்ட கருத்து; சம்பந்தன்

Sampanthan-300x169.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.ஏ.சுமந்திரன், தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவரின் சொந்தக்கருத்து தனிப்பட்ட கருத்து. அதைக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகவோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கருத்தாகவோ எவரும் எடுத்துக்கொள்ளக் கூடாது எனக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் வழங்கிய சர்ச்சைக்குரிய செவ்வி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில்;

“சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்களை நான் இன்னமும் முழுமையாகப் பார்க்கவில்லை. எனினும், அவரின் தனிப்பட்ட செவ்வியை – அவரின் சொந்தக் கருத்துக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகவோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கருத்தாகவோ எவரும் எடுத்துக்கொள்ளக்கூடாது.”

http://thinakkural.lk/article/41364

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் தள்ளுற அரை வேக்காடையெல்லாம் அணைச்சு, எல்லா வழிகளையும் அடைச்சுப்போட்டு, பூசி மெழுகுகினம்.  வந்த காரியத்தை கச்சிதமாக முடிச்சு, அவர்தன்னை  அனுப்பிய எஜமானிடம் போய்ச் சேர்ந்து விட்டார். இவர்கள் நாடிபிடித்து பார்த்து  தொடர்வினம். இனி முரளிதரனுக்கோ, டக்கிளசுக்கோ வேலை இருக்காது சிங்களத்திடம்.  

Link to comment
Share on other sites

11 hours ago, குமாரசாமி said:

இப்ப இரண்டு பேருக்குமிடையிலை பெரிய கீறல் விழப்போகுதே?:cool:

அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை। இது அவரது தனிப்படட கருத்து என்று கூறி விடடார் மாவை ஐயா। இனி விவாதித்து பிரயோசனம் இல்லை। இவர் கட்சியின் பேச்சாளராக இருந்தாலும் , தனிப்படட கருத்துக்களை கூறவும் உரிமை உண்டு। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Vankalayan said:

அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை। இது அவரது தனிப்படட கருத்து என்று கூறி விடடார் மாவை ஐயா। இனி விவாதித்து பிரயோசனம் இல்லை। இவர் கட்சியின் பேச்சாளராக இருந்தாலும் , தனிப்படட கருத்துக்களை கூறவும் உரிமை உண்டு। 

கூத்தமைப்பு கூத்தாடிகள் எப்பதான் கட்சியோட கருத்தை சொல்லியிருக்கினம் ,
யார் எப்போ  என்ன சொன்னாலும் அது அவிங்களோட தனிப்பட்ட கருத்துத்தான் ,2015 இல் தீர்வு என்றாலும் தனிப்பட்ட கருத்து , புலிகள் பயங்கரவாதிகள் என்றாலும் தனிப்பட்ட கருத்து , புலிகளுக்கும் எமக்கும் தொடர்பில்லை என்றாலும் தனிப்பட்ட கருத்து, இந்த மொள்ளமாரித்தனத்திற்கு பதிலாக தெருவோரம் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு பிச்சை எடுக்கலாம்  

Link to comment
Share on other sites

2 hours ago, உடையார் said:

சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்களை நான் இன்னமும் முழுமையாகப் பார்க்கவில்லை.

எதையுமே முழுமையாக தெரிந்து கொள்ளாம அறிக்கைகள் விடும், அரசியல் செய்யும் அரைவேக்காட்டு அரசியல்வாதி என்பதை சொதப்பல் சம்பந்தன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

Link to comment
Share on other sites

16 minutes ago, அக்னியஷ்த்ரா said:

கூத்தமைப்பு கூத்தாடிகள் எப்பதான் கட்சியோட கருத்தை சொல்லியிருக்கினம் ,
யார் எப்போ  என்ன சொன்னாலும் அது அவிங்களோட தனிப்பட்ட கருத்துத்தான் ,2015 இல் தீர்வு என்றாலும் தனிப்பட்ட கருத்து , புலிகள் பயங்கரவாதிகள் என்றாலும் தனிப்பட்ட கருத்து , புலிகளுக்கும் எமக்கும் தொடர்பில்லை என்றாலும் தனிப்பட்ட கருத்து, இந்த மொள்ளமாரித்தனத்திற்கு பதிலாக தெருவோரம் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு பிச்சை எடுக்கலாம்  

தப்பித்துக்கொள்ள இலகுவான வழி

Link to comment
Share on other sites

"கூட்டமைப்பின் நோக்கத்தை சுமந்திரன் சீர்குலைத்துள்ளார்": செல்வம் அடைக்கலநாதன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

கூத்தமைப்பு கூத்தாடிகள் எப்பதான் கட்சியோட கருத்தை சொல்லியிருக்கினம் ,
யார் எப்போ  என்ன சொன்னாலும் அது அவிங்களோட தனிப்பட்ட கருத்துத்தான் ,2015 இல் தீர்வு என்றாலும் தனிப்பட்ட கருத்து , புலிகள் பயங்கரவாதிகள் என்றாலும் தனிப்பட்ட கருத்து , புலிகளுக்கும் எமக்கும் தொடர்பில்லை என்றாலும் தனிப்பட்ட கருத்து, இந்த மொள்ளமாரித்தனத்திற்கு பதிலாக தெருவோரம் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு பிச்சை எடுக்கலாம்  

பழைய 10 சத காசும் இல்லை துணியில் போட

Link to comment
Share on other sites

சுமந்திரன் - கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே முரண்பாடு ! சமரசத்திற்கு மாவை முயற்சி

(ஆர்.யசி)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் குறித்து முன்வைத்த கருத்துகள் தொடர்பில் கூட்டமைப்பு உறுப்பினர்கள்  இடையில் கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் கூட்டமைப்பை சமரசப்படுத்தும் முயற்சியில் இறங்கவுள்ளார் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.

தழிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர்களின் செயற்பாடுகள் குறித்தும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் விமர்சனக் கருத்துகளை முன்வைத்துள்ள நிலையில் அக்கருத்து குறித்து கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இடையிலேயே மாற்றுக் கருத்துக்கள் எழுந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்துகொண்டு தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி கருத்துக்களை முன்வைப்பதாக சுமந்திரன் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அக் கட்சியில் இருந்து அவரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எழுத்துமூல அறிக்கையொன்றையும் முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் தான் முன்வைத்த கருத்து தனது சொந்தக் கருத்து, எனது நிலைப்பாட்டை கூறுவதற்கு நான் தயங்க வேண்டிய அவசியம் இல்லை, ஆயுத போராட்டம் என்ற கொள்கை எனக்கு பிடிக்காது என்றே கூறினேன், மாறாக விடுதலைப்புலிகளின் போராட்டம் தவறு என்றோ, பிரபாகரன் தவறான கொள்கையை கொண்டவர் என்றோ நான் ஒருபோதும் கூறவில்லை.

எனது கருத்து குறித்து நான் எந்தவித மாற்று நிலைப்பாட்டையும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. விடுதலைப்புலிகள் செய்த தியாகத்தை நான் மதிக்கிறேன். அதற்கான அதனை அரசியல் ஆயுதமாக கையில் எடுக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை என சுமத்திரன் தான் முன்வைத்த கருத்து குறித்து விளக்கமொன்றை வழங்கியிருந்தார்.

எனினும் சுமந்திரனின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவரின் சொந்தக் கருத்தாகும்.
 

அதைக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகவோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கருத்தாகவோ எவரும் எடுத்துக்கொள்ளக்கூடாது என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் காரணமாக இதுவரை அரசியல் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்க முடியாதுள்ளது, எனவே நிலைமைகள் வழமைக்கு வந்தவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சகல உறுப்பினர்களையும் வரவழைத்து கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் குறித்தும்,தேர்தல் காலம் என்ற காரணத்தினால் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்கும் அடுத்த கட்ட வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

சுமத்திரன் நிதானமாக கருத்துக்களை முன்வைக்க வேண்டும், அதேபோல் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதனை மக்களிடம் திரிபுபடுத்தாது கொண்டு செல்ல வேண்டும். எவ்வாறு இருப்பினும் கட்சி என்ற வகையில் சகல தரப்புடனும் இது குறித்து பேசி ஒரு நிலைப்பாட்டை எட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

https://www.virakesari.lk/article/81898

Link to comment
Share on other sites

"ஆயுதப்போராட்டம் ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளம்"

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிபட்ட கருத்து ..குறித்து தமிழில் கூகுள் ஆண்டவரிடம் வேண்டிய போது .. முதலிடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் , இரண்டாமிடத்தில் அதிமுகவின் ஜெயகுமாரும் , மூன்றாம் இடத்தில் குஷ்பூவும் நான்காம் இடத்தில் திமுக - கொங்குரஸ் கூட்டணி அலப்பறைகளும் உள்ளது..👍

டிஸ்கி: 

செய்தி தொடர்பாளரா வாற கருத்துக்கும் தனிப்பட்ட கருத்துக்கும் என்னண்ணே வித்தியாசம்..?

roflphotos-dot-com-photo-comments-201708 ☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே கேள்வியோட இனிமேல் படலைய வந்து ஆட்டாதைங்கோ.

மொத்தக் கேள்விக்கும் ஒத்த விடை.
பஞ்சாயத்து முடிஞ்சு.🤘கிளம்பு

Link to comment
Share on other sites

22 hours ago, ampanai said:

"கூட்டமைப்பின் நோக்கத்தை சுமந்திரன் சீர்குலைத்துள்ளார்": செல்வம் அடைக்கலநாதன்

 

உங்களுடைய நோக்கம் என்ன। அடிக்கிறதை அடித்துக்கொண்டு , கதிரையை சூடாக்குவதுதானே? வேறு எதாவது உருப்படியாக செய்திருக்கிறீர்களா? இங்குள்ள பிரச்சினையே இதுதான் । பாராளுமன்றம் என்று சொல்லும்போது அது ஒரு சடடத்தை உருவாக்கும் சடடவாக்க சபை। இப்போது அங்கு கள்ளனும், கொலைக்காரனும், கொள்ளை காரனும் உள்ள கூடாரமாக மாற்றிவிடடார்கள்। இவர்களில் எதனை பேருக்கு நாட்டின் சட்ட்ங்கள் தெரியுமோ தெரியவில்லை। 

Link to comment
Share on other sites

’சுமந்திரன் கூறுவது இது முதல் தடவை அல்லவே’

Editorial   / 2020 மே 13 , மு.ப. 05:10 - 0     - 11

 

தமிமீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துகளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படுத்துவது, இது முதல் தடவை அல்லவென்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையில், “2010ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்ற எம்.ஏ.சுமந்திரன், அந்த காலகட்டத்திலேயே ஓர் ஆங்கில ஊடகமொன்றுக்கு, 'வேலைவெட்டியில்லாத இளைஞர்கள் தான் ஆயுதபோராட்டத்தை ஆரம்பித்தார்கள்' என்றும் 'இராணுவத்தினரைவிட அதிகளவு பொதுமக்களை, புலிகள் தான் கொன்றார்கள்' என்றும் கூறி அன்றைய அரசாங்கத்துக்கு எதிராக எத்தனை விசாரணைகள் வந்தாலும் அதற்கு முகங்கொடுத்து சாட்சியாகத் தான் நிற்பதாகச் சொல்லாமல் சொல்லியிருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் சுமந்திரனின் கூற்று அரசாங்கத்துக்குச் சார்பாகவும் அரசியல் கைதிகளுக்கு எதிராகவும் இருந்தது என்பதைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அன்று தெரியாதா? இதனை நான் ஒருவன் தான் அன்று கண்டித்தேன் ஏனையவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காலத்துக்கு காலம் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக கூட்டமைப்பு அரங்கேற்றிய நாடகங்களே இவை. தேர்தல் காலமானதால், இவ்வாறான நாடகங்கள் இனி அடிக்கடி அரங்கேறும். இனியும் தமிழ் மக்கள் ஏமாறாமல் இருந்தால் சரி” என்று, ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சமநதரன-கறவத-இத-மதல-தடவ-அலலவ/175-250188

Link to comment
Share on other sites

இந்த அடிபாடுகளுக்குள் சங்கரியாரோட தொல்லை வேற। மனுஷன் இன்னும் உயிரோட இருக்குதா , இல்ல அவரை வைச்சி யாரவது விளையாடுறார்களோ?சுமந்திரன் மாதிரி யாராவது பேசினால்தான் ஐயா வெளியே வருவார்। இல்லாட்டில் பெட்டி பாம்புதான்।

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.