Jump to content

இஞ்சை பாருங்கோ கூத்து.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 இஞ்சை பாருங்கோ கூத்தை..... வெள்ளை வடை சுடுது.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்கா... அந்த ஆயுதத்தை வைச்சு.... இறைச்சியை அந்த அடி அடிச்சு.... ஜேர்மன் சாப்பாட்டு செய்த கூத்தைப் பார்த்து.... நானும் வடை செய்யிறன் எண்டு கிளம்பீட்டார் போலை கிடக்குது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டனும்,  முயற்ச்சி செய்ததிற்கு அடுத்த முறை நன்றாக செய்வார்,  இவரைபோல் நாங்களும் சமைக்கும் போது எத்தனைதடவை சொதப்பியிருப்போம். Pizza....

Link to comment
Share on other sites

மிக அழகாக தமிழ் உணவை சமைத்துள்ளார்கள். பாராட்டுகள்.  இணைத்தமைக்கு நன்றி குமாரசாமி.

ஆனால் ''வெள்ளை வடை சுடுகிறது'' 

மனிதர்கள் உயர் திணையா அஃறிணையா?

மனிதர்களை அஃறிணையில் கூறுவது அவர்களை அவமதிப்பதாகாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

சுமே அக்கா... அந்த ஆயுதத்தை வைச்சு.... இறைச்சியை அந்த அடி அடிச்சு.... ஜேர்மன் சாப்பாட்டு செய்த கூத்தைப் பார்த்து.... நானும் வடை செய்யிறன் எண்டு கிளம்பீட்டார் போலை கிடக்குது.
 

  வெள்ளை ஐயாவும் அக்காவை போலை எதோ கிண்டிக்கிளறி கடைசியிலை ஒரு மாதிரி ஒப்பேத்திப்போட்டார்😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, உடையார் said:

பாராட்டனும்,  முயற்ச்சி செய்ததிற்கு அடுத்த முறை நன்றாக செய்வார்,  இவரைபோல் நாங்களும் சமைக்கும் போது எத்தனைதடவை சொதப்பியிருப்போம். Pizza....

உண்மைதான். நாங்களே எங்கடை சாப்பாடுகளை செய்யத்தெரியாமல் சொதப்பேக்கை அந்தாளின்ரை ஆர்வத்தையும் முயற்சியையும் பாரட்ட வேணும்.
எண்டாலும் பச்சைமிளகாயை வெட்டி மணந்து போட்டு கலங்கினார் ஒரு கலக்கம் பாருங்கோ சிரிக்காமல் இருக்க முடியேல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

மிக அழகாக தமிழ் உணவை சமைத்துள்ளார்கள். பாராட்டுகள்.  இணைத்தமைக்கு நன்றி குமாரசாமி.

ஆனால் ''வெள்ளை வடை சுடுகிறது'' 

மனிதர்கள் உயர் திணையா அஃறிணையா?

மனிதர்களை அஃறிணையில் கூறுவது அவர்களை அவமதிப்பதாகாதா?

வணக்கம்!
பார்வையிட்டது மட்டுமல்லாமல் கருத்தை பகிர்ந்தளித்தமைக்கும் நன்றி.

இங்கு அந்த நபரை அஃறிணையாகவும் பார்க்கப்படவில்லை. உயர்திணையாகவும் பார்க்கப்படவில்லை. மாறாக இலங்கை எனும் நாட்டில் தமிழர் பிரதேசங்களில் உள்ள ஊர் மனைகளில் உள்ள பேச்சு வழக்கு தமிழாகவே பார்க்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

வணக்கம்!
பார்வையிட்டது மட்டுமல்லாமல் கருத்தை பகிர்ந்தளித்தமைக்கும் நன்றி.

இங்கு அந்த நபரை அஃறிணையாகவும் பார்க்கப்படவில்லை. உயர்திணையாகவும் பார்க்கப்படவில்லை. மாறாக இலங்கை எனும் நாட்டில் தமிழர் பிரதேசங்களில் உள்ள ஊர் மனைகளில் உள்ள பேச்சு வழக்கு தமிழாகவே பார்க்கப்படுகின்றது.

டுல்ப்பன்....

விவாதிக்கப்படும் விசயத்தில் இருந்து.... வேறு எங்கோ, விவாதத்தினை இழுத்துச் சென்று விடுவார்.

ஆங்கிலத்தில் சொல்வதாயின், please stick with the point.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

ஆனால் ''வெள்ளை வடை சுடுகிறது'' 

மனிதர்கள் உயர் திணையா அஃறிணையா?

மனிதர்களை அஃறிணையில் கூறுவது அவர்களை அவமதிப்பதாகாதா?

தமிழ் இலக்கணப் பிரகாரம்.. இதில் எந்த அவமதிப்பும் இல்லை. வழுவமைதி கொள்கிறது.

காரணம்.. வெள்ளை ஆகுபெயராகி வந்திருக்கிறது.

உ+ம்: கொழும்பு புலிகளுடன் பேசியது.

கொழும்பு எப்படி புலிகளுடன் பேச முடியும்...??! கொழும்பில் உள்ள அரசு தூதுவர்கள்.. புலிகள் ஆகிய போராளிகளுடன் பேசினார்கள்.. என்பதே அதன் பொருள்.  இப்படித்தான் அதுவும்.

==============

நன்றி கு.சாண்ணா.

உண்மையில் எனக்கு வடை சுடத்தெரியாது. (சுட்டத்தை சாப்பிடத் தெரியும்). ஆனால் இந்தக் காணொளியைக் கண்டபின்.. அட இவ்வளவு தானா என்றாகி விட்டது. முயற்சிக்கப் போகிறேன். 😃

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையால் வடை போட வரவில்லையென்றவுடன் கரண்டி எடுத்தார் பாருங்கள் அப்பவே அவர் பாஸாகி விட்டார்...... 👍

21 minutes ago, nedukkalapoovan said:

 

நன்றி கு.சாண்ணா.

உண்மையில் எனக்கு வடை சுடத்தெரியாது. (சுட்டத்தை சாப்பிடத் தெரியும்). ஆனால் இந்தக் காணொளியைக் கண்டபின்.. அட இவ்வளவு தானா என்றாகி விட்டது. முயற்சிக்கப் போகிறேன். 😃

 

 ஏதாவது சந்தேகம் வரும் பட்சத்தில் இராசவன்னியரைத் தொடர்பு கொள்ளவும்...அவர்தான்  இப்பொழுது சமையலில் விற்பன்னர்........!  😁

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

தமிழ் இலக்கணப் பிரகாரம்.. இதில் எந்த அவமதிப்பும் இல்லை. வழுவமைதி கொள்கிறது.

காரணம்.. வெள்ளை ஆகுபெயராகி வந்திருக்கிறது.

உ+ம்: கொழும்பு புலிகளுடன் பேசியது.

கொழும்பு எப்படி புலிகளுடன் பேச முடியும்...??! கொழும்பில் உள்ள அரசு தூதுவர்கள்.. புலிகள் ஆகிய போராளிகளுடன் பேசினார்கள்.. என்பதே அதன் பொருள்.  இப்படித்தான் அதுவும்.

==============

நன்றி கு.சாண்ணா.

உண்மையில் எனக்கு வடை சுடத்தெரியாது. (சுட்டத்தை சாப்பிடத் தெரியும்). ஆனால் இந்தக் காணொளியைக் கண்டபின்.. அட இவ்வளவு தானா என்றாகி விட்டது. முயற்சிக்கப் போகிறேன். 😃

 

நெடுக்கு,  குமாரசாமியில் பதில் சரியானது. ஈழத்து பேச்சு தமிழில் இவ்வாறான வாரத்தைப பிரயோகங்கங்கள் என்ற வகையில். இதுவே ஒரு சீன பிரஜை என்றால் “சப்பட்டை வடை சுடுகிறது” என்றோ ஆபிரிக்க நாட்டவராக இருந்தால்  “காப்பிலி வடை சுடுகிறது” என்றோ யாழ்பாண தமிழ் பேச்சு வழக்கு உண்டு. 

ஆனால் நீங்கள் சொன்ன ஆகுபெயர் இந்த வசனத்திற்கு சற்றும் பொருந்தாது. ஆகு பெயரின்  16 வகையில் எந்த வகுதியிலும் இது அடங்காது. ஆகுபெயரில் மனிதர்களை குறிப்பிடும் போது செய்யுது என்று அஃறிணையில் வசனம் முடிவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

ஆனால் நீங்கள் சொன்ன ஆகுபெயர் இந்த வசனத்திற்கு சற்றும் பொருந்தாது. ஆகு பெயரின்  16 வகையில் எந்த வகுதியிலும் இது அடங்காது. ஆகுபெயரில் மனிதர்களை குறிப்பிடும் போது செய்யுது என்று அஃறிணையில் வசனம் முடிவதில்லை. 

வெள்ளைமாளிகை தெரிவித்தது.. இங்கு வெள்ளைமாளிகை தெரிவித்தார் என்று தமிழில் அமையாது. டொனால்ட் ரம் வெள்ளைமாரிகையாகி வந்திருக்கிறது...!

நான் நினைக்கிறேன்.. உங்களுக்கு ஆகுபெயர் பற்றிய விளக்கம் மிக அதிகம் என்று. எனக்கு இப்போ உங்களுக்கு தமிழ்படிக்கும் நோக்கமில்லை. கு.சா அண்ணா சொன்னதை ஏற்றுக் கொள்கிறீர்கள் தானே.. அதோடு இதை முடித்துக் கொள்வோம். 

மேலும் விபரங்கள் தேவை எனின் இங்கு நோக்குங்கள்..

https://ta.wikipedia.org/wiki/ஆகு_பெயர்

Link to comment
Share on other sites

24 minutes ago, nedukkalapoovan said:

வெள்ளைமாளிகை தெரிவித்தது.. இங்கு வெள்ளைமாளிகை தெரிவித்தார் என்று தமிழில் அமையாது. டொனால்ட் ரம் வெள்ளைமாரிகையாகி வந்திருக்கிறது...!

 

வெள்ளை மாளிகை தெரிவித்தது என்பது அமெரிக்க ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது அல்லது அமெரிக்க அரசு தெரிவித்தது என்பதைக் குறிப்பதே ஒழிய அமெரிக்க அதிபரை தனியாக குறிப்பதில்லை. அமெரிக்க அதிபரை தனிப்பட குறிப்பிட்டால்  அந்த வசனம் உயர்திணையில் தான் அமையும். இந்த பதில் குமாரசாமிக்கானதல்ல. ஆகுபோருளின் விளக்கத்தை தவறாக கூறிய உங்களுக்கானது. எனக்கும் உங்களிடம் தமிழ் படிக்க வேண்டிய நிலை  இல்லை. நன்றி வணக்கம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

வெள்ளை மாளிகை தெரிவித்தது என்பது அமெரிக்க ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது அல்லது அமெரிக்க அரசு தெரிவித்தது என்பதைக் குறிப்பதே ஒழிய அமெரிக்க அதிபரை தனியாக குறிப்பதில்லை. அமெரிக்க அதிபரை தனிப்பட குறிப்பிட்டால்  அந்த வசனம் உயர்திணையில் தான் அமையும். இந்த பதில் குமாரசாமிக்கானதல்ல. ஆகுபோருளின் விளக்கத்தை தவறாக கூறிய உங்களுக்கானது. எனக்கும் உங்களிடம் தமிழ் படிக்க வேண்டிய நிலை  இல்லை. நன்றி வணக்கம். 

ஊர் சிரித்தது.  இங்கு.. ஊர் என்பது இடம் உயர்திணை அல்ல. ஆனால்.. அது ஊரில் உள்ள மக்களுக்கு ஆகி வந்தது. அதில் மக்கள் உயர்திணை. 

இதுக்கு மேல.. உதாரணம் சொல்லி விளக்க வேண்டும் என்றில்லை.

நன்றி. 

Link to comment
Share on other sites

6 minutes ago, nedukkalapoovan said:

ஊர் சிரித்தது.  இங்கு.. ஊர் என்பது இடம் உயர்திணை அல்ல. ஆனால்.. அது ஊரில் உள்ள மக்களுக்கு ஆகி வந்தது. அதில் மக்கள் உயர்திணை. 

இதுக்கு மேல.. உதாரணம் சொல்லி விளக்க வேண்டும் என்றில்லை.

நன்றி. 

ஊர் சிரித்தது என்பது இடவாகு பெயர். இங்கு இடவாகு பெயர் இல்லை. ஒரு மனிதரை தனிப்பட சுட்டி தெரிவிக்கப்பட்ட கூற்று. இது ஆகு பெயர் வகுதிக்குள் வரவே வராது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

ஊர் சிரித்தது என்பது இடவாகு பெயர். இங்கு இடவாகு பெயர் இல்லை. ஒரு மனிதரை தனிப்பட சுட்டி தெரிவிக்கப்பட்ட கூற்று. இது ஆகு பெயர் வகுதிக்குள் வரவே வராது. 

வெள்ளை என்பது பண்பு. அது மனிதரைக் குறித்து வருவதால்.. பண்பாகுபெயர் ஆகும்.

வெள்ளை சிரித்தது... வெள்ளை என்பது நிறம்.. பண்பு. அது வெள்ளையர்களை குறித்து வருவதால்.. பண்பாகுபெயர் ஆகும்.

நம்மால.. முடியல்ல. 

Link to comment
Share on other sites

15 minutes ago, nedukkalapoovan said:

வெள்ளை என்பது பண்பு. அது மனிதரைக் குறித்து வருவதால்.. பண்பாகுபெயர் ஆகும்.

வெள்ளை சிரித்தது... வெள்ளை என்பது நிறம்.. பண்பு. அது வெள்ளையர்களை குறித்து வருவதால்.. பண்பாகுபெயர் ஆகும்.

நம்மால.. முடியல்ல. 

 ஒரு  தனி மனிதரை நேரடியாக சுட்டும் பொது ஆகுபெயர் வரவே வராது.

சரி விடுங்க.  குமாரசாமியின் விளக்கத்தை இருவரும் ஏற்போம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, tulpen said:

மிக அழகாக தமிழ் உணவை சமைத்துள்ளார்கள். பாராட்டுகள்.  இணைத்தமைக்கு நன்றி குமாரசாமி.

ஆனால் ''வெள்ளை வடை சுடுகிறது'' 

மனிதர்கள் உயர் திணையா அஃறிணையா?

மனிதர்களை அஃறிணையில் கூறுவது அவர்களை அவமதிப்பதாகாதா?

இங்கே வெள்ளை என்பது உயர்வு நவிற்சி என நினைக்கிறேன். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் பாராட்டத்தான் வேணும் அவரின் முயற்சியை.

குமாரசாமி கூறியது ஆகுபெயருமல்ல உயர்வு நவிற்சி அணியுமல்ல. பிறிது மொழிதல் அணியில் வேண்டுமானால் சேர்க்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.