Jump to content

ஒருத்தி திரைப்படம் l Ps Suthakaran


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Pinned by OLIPARAPPU ஒளிபரப்பு
நான் இலங்கை தமிழர்களின் பல திரைப்பட படைப்புகளைப் பார்த்து இருக்கின்றேன். ஆனால் இதுபோன்று ஒரு இயற்கையான தத்ரூபமான நடிப்பில் சிறந்த திரைக்கதை அமைப்பிலும் ஒரு படம் பார்த்தது இல்லை. தயாரிப்பாளர்களுக்கும் அதில் நடித்த நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். இதில் பாராட்டத்தக்க விடயம் என்னவென்றால் நமது இலங்கை தமிழர்களின் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த . பிள்ளைகளின் தமிழ் உச்சரிப்பு மிகவும் பாராட்டத்தக்கது.👍👑 இவ்வாறு தமிழைக் கதைத்து நடிக்கக் கூடிய திறமை படைத்தவர்களாக இலங்கையில் கூட சிறுவர்கள்(. இளம் தலைமுறையினர்) இருக்கமாட்டார்கள். இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகவும் திறமையாக நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இவ்வாறு நடிக்கும் போது இவர்கள் இந்தியாவில் இருக்கும் நடிகர்களை விட மிகவும் சிறந்தவர்களாக வர வாய்ப்பு உள்ளது.. நாங்கள் எதற்காக இந்தியாவில் இருக்கும் விஜய் அஜித் போன்றவர்களை தூக்கி தலைமேல் வைத்துக் கொண்டாட வேண்டும் .ரஜினி கமல் போன்றவர்களை நாம் தலையில் வைத்து எதற்காக கொண்டாட வேண்டும். வெளிநாட்டில் உள்ள தமிழர்களில் விஜய் அஜித் ,ரஜனி போன்றவர்கள் இருக்கின்றார்கள். இந்தப் படத்தில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்தவர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள் .நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்த திறமை வெளியில் கொண்டுவர வேண்டும் .அதற்கு மிகவும் பணம் படைத்த வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் பணம் போடுவதற்கு முன் வரவேண்டும். முன்வருவார்கள். இதைப் போன்ற படங்கள் எடுக்க முடியுமாக இருந்தால். இதை போன்று சிறந்த படங்களை எமது வெளிநாட்டு தயாரிப்பாளர்கள் கொண்டு வர வேண்டும். படத்தின் காட்சிகள் இலங்கையிலும் படமாக்கப்பட வேண்டும். வெளிநாடுகளிலும் படமாக்கப்பட வேண்டும். சிறந்த கதைகளாக இருக்க வேண்டும். வன்முறைகள் இருக்கக்கூடாது. அதனால் இந்தியாவில் இருந்து வருகின்ற வன்முறை சார்ந்த வாழ்வு போதை பழக்கங்கள் சார்ந்த திரைப்படங்கள் இனிமேலும் வெளி நாடுகளிலும் இலங்கையிலும் திரையிட முடியாத வகையில் வெளிநாட்டவர்களின் படங்கள் இதுபோன்று சிறந்த படங்களாக அமைய வேண்டும். இலங்கை நாட்டிலும் வெளிநாடுகளிலும் இவ்வாறு திரைப்படங்களை பதிவுகள் செய்யும்போது வெளிநாடுகளில் இருக்கும் பணம் படைத்தவர்கள் முதலீட்டாளர்கள் வருவார்கள். வரும்போது பிரமாண்டமான படங்களை இலங்கை தமிழர்களின் தயாரிப்பாளர்கள் தர முடியும் என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் இருந்து வருகின்ற நாடகங்களை எமது தமிழ் மக்கள் பார்த்து சீரழிந்து போகின்றார்கள். கலாச்சாரத்திலும் பண்பாடுகளிலும் குடும்பங்களில் வாழ்வியல் களிலும் சீரழிந்து போகிறார்கள் .எனவே இதைப் போன்ற திரைப்படங்கள் வருமாக இருந்தால் நமது மக்கள் இந்தியாவின் திரைப்படங்களையும் நாடகங்களையும் புறக்கணிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் கூட இன்றைய காலத்தில் இதைப் போன்றதொரு தத்ரூபமான இயற்கையான திரைப்படங்களை நான் பார்த்தது இல்லை. இலங்கையில் படமாக்கப்பட்ட திரைப்பட காட்சிகள் நாங்கள் இலங்கைக்கு சென்று வந்ததைப் போன்ற ஒரு இனிமையான நினைவுகளை தந்தது. இந்த திரைப்படத்தின் கதை அமைப்புகள் இலங்கைவாழ் மக்கள் அதாவது வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையில் உண்மையில் நடந்திருக்கக் கூடிய விடயங்களாகும். நிச்சயமாக இலங்கை தமிழர்களுக்கு தேவையான ஒரு கதையாக இருந்தது. ஆனால் நகைச்சுவை மிகவும் குறைவானதாக இருந்தது. ஆனால் இது ஒரு குறையாக தெரியவில்லை இந்த படத்தில். இந்தியாவில் இருந்து வெளிவருகின்ற திரைப்படங்கள் இந்தியாவில் உண்மையாக வன்முறைகள் . . வாள் வெட்டுக்கள் ,போதை பழக்கங்கள் நடப்பது இல்லை .. ஆனால் அங்கிருந்து வரும் திரைப்படங்களில் இதைப் பார்த்து நம்முடைய இலங்கையிலுள்ள சகோதரர்கள் சகோதரிகள் சீரழிந்து போகிறார்கள். எனவே இலங்கைக்கும் இதைப் போன்ற எமது நாட்டவர்களின் திரைப்படங்கள் வெளியிட வேண்டும் இந்தியாவின் திரைப்படங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்பது எனது சிறிய வேண்டுகோள் ஆகும். ஜெர்மனியிலிருந்து சீலன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் சில காட்சிகள் நீண்டுவிட்டன.பாடலில்கூட மீண்டும் மீண்டும் சில காட்சிகள் காட்டப்பட்டிருந்தது. சில குறைகள் இருந்தாலும் பார்க்கக் கூடிய படம் தான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.