Jump to content

பனாமா கால்வாய் - ஓர் அதிசயம்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Smartphone.jpg

அமெரிக்காவின் கீழே, அட்லாண்டிக் கடல்-பசிபிக் கடல் இரண்டுக்குமிடையே அமைந்துள்ள பனாமா நாட்டில் கட்டப்பட்டுள்ள இந்த பனாமா கால்வாய் பொறியாளர்களின் சாதனைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

சுற்றுவழி கடல்பாதையை தவிர்க்க, நாட்டின் குறுக்கே கடல்மட்டத்திலிருந்து 85 அடி உயரத்தில் அமைந்துள்ள மலையின் ஏரியின் இருபுறமும் மிகுந்த உயிர்பலி, சிரமங்களுக்கிடையே கால்வாய்கள் வெட்டி மூன்று தொட்டி போன்ற நிலைகளில் தண்ணீர் நிரப்பி, கப்பல்களை உயர்த்தி ஓடவிட்டு மறுபுறம் கடத்தும் தொழிற்நுட்பம் வியக்கத்தக்கது..

காணொளியை பார்த்தால் எளிதாக புரியும்..!

 

 

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த காணொளியில் முன்று உயர நிலைகளிலுள்ள தொட்டி போன்ற அமைப்பில் தண்ணீரை நிரப்பி கப்பலை உயர்த்தி கடத்தி ஏரியில் விட்டு, பின்னர் ஏரியின் பரப்பு முடிந்ததும் மறுபுறம் கடலில் கப்பலை விட தண்ணீர் தொட்டி அமைப்புகளில் உயரத்தை கீழிறக்கி கடத்துவதை காணலாம்.

 

 

Edited by ராசவன்னியன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்ளோ தெளிவா சொன்னதுக்கு நன்றி......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியில் விளக்கம் புரிந்திருக்குமென எண்ணுகிறேன்.

இக்கால்வாய் மட்டும் சாத்தியப்படாவிட்டால், நியுயார்க்கிலிருந்து, ஈழப்பிரியன் இருக்கும் சான்ஃப்ரான்சிஸ்க்கோவிற்கு கப்பலில் முழு தென் அமெரிக்க கண்டத்தையும் சுற்றிச் செல்ல இருபது நாட்களுக்கு மேல் பயண நேரம் பிடிக்கும்.

Shortest-trade-route-provided-by-the-Panama-Canal-Adapted-from-Council-for-Economic.png

இதற்கான பொருட்செலவு, நேர விரயம், கடலில் அபாயங்கள் மிக அதிகமாக இருக்கும். பிரான்ஸ் நாட்டு பொறியாளர்களால் 1881ல் ஆரம்பித்த இத்திட்டம் 1894ல் பாதியில் கைவிடப்பட, இந்த திட்டத்தை, பின்னர் அமெரிக்க பொறியாளர்களால்1904ல் மறுபடியும் முன்னெடுத்து தொடங்கப்பட்டு 1914ல் முடிவுற்று கப்பல் போக்குவரத்து பாவனைக்கு திறக்கப்பட்டது.

பனாமா கால்வாய் மூலம் கப்பல் போக்குவரத்தால் ஈட்டும் வருமானம் பனாமா நாட்டின் பொருளாதாரதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

அமெரிக்காவின் கீழே, அட்லாண்டிக் கடல்-பசிபிக் கடல் இரண்டுக்குமிடையே அமைந்துள்ள பனாமா நாட்டில் கட்டப்பட்டுள்ள இந்த பனாமா கால்வாய் பொறியாளர்களின் சாதனைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

வன்னியரே கப்பலில் வேலை செய்த காலங்களில் இந்தக் கால்வாய்களில் பல தடவை பயணித்திருக்கிறேன்.
       அந்த அனுபவத்தை நேரே பார்ப்பதற்கு மிகவும் கொடுத்து வைத்தவன்.கப்பல் வாழ்வுக்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

வன்னியரே கப்பலில் வேலை செய்த காலங்களில் இந்தக் கால்வாய்களில் பல தடவை பயணித்திருக்கிறேன்.

நான் இந்தக் கால்வாயின் பல காணொளிகளை பார்த்துள்ளேன். மிக 'த்ரில்லிங்'கான பயண அனுபவமாகவே இருக்கும்.

9 minutes ago, ஈழப்பிரியன் said:

..கப்பல் வாழ்வுக்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

கரையிலிருந்து 5 கி.மீ தொலைவில் நங்கூரமிட்ட கப்பலில் ஒருநாள் முழுவதும் தங்கியிருக்கிறேன். காலடியில் பூமி சுத்துவது போன்ற உணர்வுகளால் எனக்கு தலை சுத்தலும், வாந்தியும் வருவதுபோல இருந்ததால் மறுநாள் "போதும்டா சாமி ..!"என கரைக்கு திரும்பிவிட்டேன்.

சிலருக்கு கப்பல் பயணம் ஒத்துக்கொள்ளாது என நினைக்கிறேன்.

நன்றி, ஈழப்பிரியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ராசவன்னியன் said:

இக்கால்வாய் மட்டும் சாத்தியப்படாவிட்டால், நியுயார்க்கிலிருந்து, ஈழப்பிரியன் இருக்கும் சான்ஃப்ரான்சிஸ்க்கோவிற்கு கப்பலில் முழு தென் அமெரிக்க கண்டத்தையும் சுற்றிச் செல்ல இருபது நாட்களுக்கு மேல் பயண நேரம் பிடிக்கும்.

சுவெஸ் கால்வாய் இதே மாதிரி இல்லாவிட்டாலும் ஆபிரிக்க கண்டத்தை சுற்றி போகிற நாட்களையும் செலவையும் குறைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

அமெரிக்க பொறியாளர்களால்1904ல் மறுபடியும் முன்னெடுத்து தொடங்கப்பட்டு 1914ல் முடிவுற்று கப்பல் போக்குவரத்து பாவனைக்கு திறக்கப்பட்டது.

அமெரிக்கா 100 வருடம் டாலரை உறிஞ்சி எடுத்துவிட்டு 2014 இல்த் தான் பனாமாவிடம் கொடுத்துள்ளனர்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.