Jump to content

கொரோனாவிலிருந்து தப்பிக்க நோய்‌ எதிர்ப்பு‌ சத்தியை அதிகப்படுத்துவது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவைப்‌ பற்றி நிறைய செய்திகள்‌ வந்த வண்ணமாக இருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக வரும்‌ செய்தி நோய்‌ எதிர்ப்பு‌ சக்தியைப் பற்றிதான்‌. நோய்‌ எதிர்ப்பு‌ சக்தி குறைவாக உள்ளவர்களைத்‌ தான்‌ கொரோனா அதிகம்‌ பாதிக்கிறது என்றும்‌, ஆனால்‌ நோய்‌ எதிர்ப்பு‌ சத்தியை எப்படி அதிகப்படுத்துவது என்பது பற்றி கட்டுரைகள்‌ அதிகம்‌ வெளிவரவில்லை.

ஆகையால்‌ பலர்‌ இதைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்‌. எளிய உணவு முறைகளினாலும்‌, உடற்பயிற்சியினாலும்‌ மற்றும்‌ சில வழிமுறைகளினாலும்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்‌.

கொரோனா குழந்தைகளைக்‌ தாக்குவது மிகவும்‌ குறைவே. அதற்கு முக்கிய காரணம்‌ அப்பருவத்தில்‌ உள்ள அதிகமான நோய்‌ எதிர்ப்பு‌ சக்திதான்‌. பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்கும்‌ தாய்ப்பால்‌ நோய்‌ எதிர்ப்பு சத்தியை அதிகரிக்க முக்கியக் காரணமாகும்‌. மற்ற பருவங்களில்‌ வரும்‌ நீரிழிவு நோய்‌, உயர்‌ இரத்த அழுத்தம்‌, ஆஸ்துமா, சிறுநீரகப்‌ பாதிப்பு,‌ புற்று நோய்கள்‌ போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைக்‌ குறைக்கும்‌. ஆனால்‌ குழந்தைப்‌ பருவத்தில்‌ இத்தொல்லைகள்‌ மிகவும்‌ குறைவே. இந்நோய்க்கு எடுத்துக்‌ கொள்ளும்‌ சிகிச்சையினாலும்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புண்டு. இவை‌ எல்‌லாம் குழந்தைப்‌ பருவத்தில்‌ மிகவும்‌ குறைவே. தினமும்‌ குழந்தைகள்‌ விளையாடுவதினால்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நோய்‌ எதிர்ப்பு சக்தி சுமார்‌ 50 வயதிலிருந்து குறைய ஆரம்பிக்கிறது.

நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில வழிமுறைகள்‌

♦ உடலில்‌ உள்ள நீரிழிவு நோய்‌, இதய நோய்‌ மற்றும்‌ பல நோய்களுக்குத் தக்க சிகிச்சை எடுத்துக்‌ கொள்வது அவசியம்‌. ♦ நோய்களுக்கு எடுத்துக்‌ கொள்ளும்‌ மாத்திரைகளின்‌ அளவை முடிந்த அளவிற்கு குறைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. ♦ நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழவகைகளில்‌ மிகவும்‌ உயர்ந்தது பெரிய நெல்லிக்காய்‌தான்‌. இதை அப்படியே உண்ணலாம்‌. ஆனால்‌ கசப்பு அதிகமாக இருப்பதால்‌ தேன்‌ அல்லது சர்க்கரையைச்‌ சேர்த்து உண்ணலாம்‌. ஆனால்,‌ நீரிழிவு நோய்‌ உள்ளவர்கள்‌ இனிப்பைச் சேர்க்காமல்‌ அப்படியே உண்ண வேண்டும்‌ அல்லது பழச்சாறாக எடுத்துக்‌ கொள்ளலாம்‌.

இதில்‌ நூறு சதவிகிதம்‌ லிவிற்றமின்‌ சி உள்ளது. நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும்‌ சிறந்தது. இதற்கு அடுத்ததாக எலுமிச்சம்‌ பழச்சாறை தினமும்‌ அருந்துவது நல்லது. இதை தவிர ஒரேஞ்ச், சாத்துக்குடி மற்றும்‌ கொய்யா சிறந்தது. கொட்டை வகைகளில்‌ பாதாம்‌ மிகச் சிறந்தது.

பாகற்காய்‌, தேன்‌, காளான்‌, பூண்டு, இஞ்சி, தயிர்‌, மிளகு மற்றும்‌ மஞ்சள்‌ போன்ற வகைகளை உணவில்‌ சேர்த்துக்‌ கொள்ளவும்‌. குர்குமின்‌ (போம்‌) இதன்‌ வேதிப்‌ பொருள்‌ மஞ்சளில்‌ அடங்கியுள்ளது. இதனால்‌ மஞ்சள்‌, நோய்‌ எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டும்‌ இல்லாமல்‌ ஒரு கிருமிநாசினியாகவும்‌ செயல்படுகிறது.

♦ தினமும்‌ காலை மற்றும்‌ மாலை நேரங்களில்‌ அரை மணிநேரம்‌ உடலில்‌ வெயில்‌ படுமாறு நடக்க வேண்டும்‌. தோல்‌ சற்று கருமை நிறம்‌ இருப்பவர்கள்‌, மேலும்‌ 10 நிமிடம்‌ வெயிலில்‌ இருப்பது அவசியம்‌. இதன்‌ மூலம்‌ விற்றமின்‌ டி சத்து உடலில்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்‌ செய்யும்‌. விற்றமின்‌ டி அதிகம்‌ உள்ள உணவுகளை சேர்த்துக்‌ கொள்ள வேண்டும்‌.

உதாரணமாக சைவ உணவுகளில்‌ பால்‌, தயிர்‌, வெண்ணெய்‌, சோயா பால்‌, பாலாடைக்‌ கட்டி மற்றும்‌ பால்‌ பொருட்கள்‌ அதிகமாக எடுத்துக்‌கொள்ள வேண்டும்‌. அரிசியை குறைத்துக்‌கொண்டு சிறு தானிய வகைகளை (ராக, கம்பு, சோளம்‌, வரகு, தினை) உணவில்‌ சற்று சேர்த்துக்‌ கொள்ளலாம்‌. மீன்‌ (சிறியது), மீன்‌ எண்ணெய்‌, முட்டையின்‌ மஞ்சள்‌ ௧ரு, ஈரல்‌, காளான்‌ முதலியவற்றைச் சேரத்துக்‌ கொள்ள வேண்டும்‌.

மாற்று சிகிச்சை முறைகள்‌

♦ அமுக்கரா கிழங்கு ♦ திரிபலா மாத்திரை ♦ கபசுரக் குடிநீர்‌ மற்றும்‌ நிலவேம்புக் கசாயம்‌ ஆகியவை மாற்று சிகிச்சை முறையில பரிந்துரைக்கப்படுகிறது.

♦ தினமும்‌ மேற்கொள்ளும்‌, தியானம்‌ மற்றும்‌ பிராணாயாமம்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்‌ செய்யும்‌.

♦ சில யோகா பயிற்சிகள்‌ மூலம்‌ நோய்‌ எதிர்ப்பு‌ சக்தியை அதிகரிக்கச்‌ செய்யலாம்‌.

♦ எளிய உடற்பயிற்சி மூலமும்‌ உடலில்‌ நோய்‌ எதிர்ப்பு‌ சக்தி அதிகரிக்கும்‌. பெர்மிங்காம்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள முதியோர்‌ நலத்துறையின்‌ தலைவர்‌ பேராசிரியர்‌ ஜென்னட்லார்ட் சுமார்‌ 20 ஆண்டுகள்‌ ஆராய்ச்சிக்குப் பின்னர்‌ சில எளிய உடற்பயிற்சி மூலம்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்‌ என்பதைக் கண்டறிந்துள்ளார்‌. இப்பயிற்சி செய்ய ஜிம்மிற்குச் செல்ல வேண்டாம்‌. பணமும்‌ செலவு செய்ய வேண்டாம்‌. வீட்டிலேயே கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து பயிற்சிகளை தினமும்‌ செய்தால்‌ போதும்‌ இவை‌ நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்‌ செய்யும்‌.

1. முதல்‌ பயிற்சி : கால்‌ விரல்களை நிலத்தில்‌ ஊன்றி, குதிகால்களை மேலே தூக்கியும்‌, கீழே இறக்கியும்‌ 10 முறை‌ செய்யவும்‌. இந்தப்‌ பயிற்சியை செய்யும்‌போது கீழே விழாமல்‌ இருக்க சுவர்‌ அல்லது ஜன்னலைப்‌ பிடித்துக்‌ கொண்டு செய்யவும்.

2. இரண்‌டாவது பயிற்சி : நேராக நின்று கொண்டு வலது காலை முடிந்தவரை பக்கவாட்டில்‌ உயர்த்தி சிறிது நேரம்‌ கழித்து கீழே இறக்கவும்‌. இதைப்‌ போலவே இடது காலை பக்கவாட்டில்‌ உயர்த்தி சிறிது நேரம்‌ கழித்து கீழே இறக்கவும்‌. இதுபோல்‌ 10 முறை‌ செய்யவும்‌.

3. மூன்றாவது பயிற்சி : நேராக நின்றுகொண்டு இரண்டு கைகளிலும்‌ சிறிய எடை உள்ள பளுவை எடுத்துக்‌கொண்டு தோள் பட்டை வரை உயர்த்தி சிறிது நேரம்‌ கழித்து கீழே இறக்க வேண்டும்‌. இதுபோல்‌ 10 முறை‌ செய்ய வேண்டும்‌.

4. நான்காவது பயிற்சி : ஒரு நாற்காலியில்‌ அமர்ந்துகொண்டு கைகளை முகத்திற்கு நேராக நீட்டிக்கொண்டு 10 முறை உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும்‌.

5. ஐந்தாவது பயிற்சி : வீட்டிலுள்ள படிக்கட்டில்‌ 10 முறை ஏறி இறங்க வேண்டும்‌.

மேற்கொண்ட வழிமுறைகளைத்‌ தொடர்ந்து கடைப்பிடித்தால்‌ நோய்‌ எதிர்ப்பு‌ சக்தி அதிகரித்து கொரோனா போன்ற கொடிய நோய்களிலிருந்து எளிதில்‌ நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்‌!

https://www.pagetamil.com/123520/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.