Jump to content

`உலகின் உயரமான நிதியுதவிப் பெட்டி!’ - உணவு தேவைக்காக விற்கப்பட்ட புர்ஜ் கலீஃபா விளக்குகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

`உலகின் உயரமான நிதியுதவிப் பெட்டி!’ - உணவு தேவைக்காக விற்கப்பட்ட புர்ஜ் கலீஃபா விளக்குகள்

புர்ஜ் கலீஃபா

புர்ஜ் கலீஃபா கட்டடத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் வண்ண விளக்குகள் ஒவ்வொன்றும் விற்பனைக்கு என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்குத் தேவையான நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ்... கடந்த சில மாதங்களாக உலக மக்கள் உச்சரிக்கும் ஒரு பெயராகிவிட்டது. கொரோனா வைரஸ் காரணமாகக் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் உலக நாடுகளின் பெருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் அசைத்து பார்த்திருக்கிறது. பொருளாதாரத்தை மீண்டும் உயர்த்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாகத்தான் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு தற்போது உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

புர்ஜ் கலீஃபா
 
புர்ஜ் கலீஃபா

துபாய் என்றாலே அனைவருக்கும் ஒரு படம் நினைவில் வரும் என்றால் அது உலகிலே உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா மட்டும்தான். விண்ணைத் தொடும் உயரம் மட்டுமல்லாது வெளிப்புறத்தில் இருக்கும் அதன் விளக்குகள் பல விஷேச நேரங்களில் விதவிதமாக ஒளிர்ந்து பார்க்கும் மக்களை பரவசம் அடையச் செய்யும். புர்ஜ் கட்டடம் உலகளவில் சுற்றுலாப் பயணிகளை துபாய் பக்கம் இழுப்பதாக இருந்தது. ஆண்டுதோறும் லட்சக்கணகான மக்கள் வந்து செல்கிறார்கள். இதன் மூலம் துபாய் மிகப் பெரிய வருவாயை ஈட்டி வந்தது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகளின் சுற்றுலாத்துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. துபாயும் இதற்கு விதிவிலக்கு அல்ல. சுற்றுலாத் துறையைப் பெரிய அளவில் நம்பி இருக்கும் துபாய்க்கு இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டது. மேலும், அமீரக நாட்டிலே கொரோனாவால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் வேலையில்லாமல் சிரமப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். இதனால் சாதாரண தொழிலாளர்கள் உணவுக்கே சிரமப்படும் சூழல் ஏற்பட்டது.

புர்ஜ்  கலீஃபா
 
புர்ஜ் கலீஃபா

புலம்பெயர் மக்கள் ஆயிரக்கணக்கானோர் கூட்டம் கூட்டமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான உணவுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், `The Mohammed Bin Rashid Al Maktoum Global Initiatives’ என்னும் நிறுவனம் மூலம் உலகின் மிக உயரமாக நிதியுதவிப் பெட்டியாக புர்ஜ் கட்டடம் அறிவிக்கப்பட்டது.

அதாவது புர்ஜ் கலீஃபா கட்டடத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் வண்ண விளக்குகள் ஒவ்வொன்றும் விற்பனைக்கு என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்குத் தேவையான உணவுக்கான நிதியைத் திரட்ட முடிவு செய்து அதைச் செய்து காட்டியிருக்கிறார்கள். ஒரு விளக்கின் விலை 10 திர்ஹாம்ஸ்தான். அதாவது சுமார் 2.70 அமெரிக்க டாலர். இது ஒருவருக்கு ஒருநேர உணவுக்குத் தேவையான பணமாகக் கணக்கிடப்பட்டு இந்த நிதி வசூலிக்கப்பட்டிருக்கிறது.

 

 

 

வெளிப்புறத்தில் இருக்கும் விளக்குகள் விற்பனைக்கு என்றதும் இனி புர்ஜ் கட்டடம் ஒளிவீசாதா என்று கேட்க வேண்டாம். காரணம் அங்கு இருக்கும் விளக்குகள் எதுவும் கழற்றப்பட மாட்டாது. மாறாக, ஒவ்வொரு விளக்குக்கும் பணம் செலுத்தியவர்களின் பெயரில் தொடர்ந்து ஒளிர இருக்கிறது புர்ஜ் கட்டடம்.

இந்த நிதியுதவிப் பெட்டி திட்டத்தைச் செயல்படுத்திய நிறுவனம், தற்போது வரை 1.2 மில்லியனுக்கும் அதிகமான உணவுக்குத் தேவையான பணம் வந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ரமலான் மாதத்தில் குறைந்த வருமானத்தில் தவிக்கும் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 10 மில்லியன் மக்களுக்கு உணவுக்கான நிதி திரட்டும் திட்டம் வகுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாகத்தான் புர்ஜ் கலீஃபா திட்டத்தின் மூலம் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் உணவுக்குத் தேவையான நிதி திரட்டப்பட்டுள்ளது.

https://www.vikatan.com/oddities/international/burj-khalifa-turns-into-donation-box

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரபிக்காரன்ட ஐடியாவை அடிச்சுக்க ஆளே கிடையாது.....வாயாலேயே வடை சுட்டு வருமானம் பார்க்குறான்.....!  👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
    • கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣
    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.