Jump to content

வாணியம்பாடியில் பழங்களைத் தூக்கி வீசி தள்ளுவண்டியைச் சாய்த்து கடுமையாக நடந்துகொண்ட நகராட்சி ஆணையர்; வியாபாரிகளிடம் நேரில் மன்னிப்பு கோரினார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாணியம்பாடியில் பழங்களைத் தூக்கி வீசி தள்ளுவண்டியைச் சாய்த்து கடுமையாக நடந்துகொண்ட நகராட்சி ஆணையர்; வியாபாரிகளிடம் நேரில் மன்னிப்பு கோரினார்

வாணியம்பாடியில் வியாபாரிகளிடம் நடந்து கொண்ட செயல் வருத்தமளிப்பதாக நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரிடம் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சிசில்தாமஸ் விளக்கம் அளித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து வாணியம்பாடியில் நேரக் கட்டுப்பாட்டுடன் சில தொழில்கள் நடைபெற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

குறிப்பாக, கரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் பொதுமக்கள் வெளியே நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்குத் தேவையான பொருட்கள் நகராட்சி நிர்வாகம் சார்பில் வீடு தேடிச்சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மே 11-ம் தேதி முதல் 34 வகையான கடைகளைத் திறக்க அரசு கூறியதைத் தொடர்ந்து, தடை செய்யப்பட்ட வாணியம்பாடி பகுதியிலும் வியாபாரிகள் தங்களது கடைகளைத் திறந்து வியாபாரம் செய்யத் தொடங்கினர்.

குறிப்பாக, ராமநாயக்கன்பேட்டை, நவாஸ்மேடு போன்ற பகுதிகளில் தேநீர் கடைகள், உணவகங்கள், ஜவுளிகடைகள், சாலையோர பழக்கடைகள், தள்ளுவண்டி கடைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாலும் வியாபாரிகள் பொதுமக்களை அதிக அளவில் திரட்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக நகராட்சி ஆணையாளர் சிசில்தாமஸூக்குத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நேற்று (மே 12) அங்கு சென்ற நகராட்சி ஆணையாளர் சிசில்தாமஸ் தடையை மீறி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வியாபாரிகளை எச்சரித்து அங்கிருந்த தள்ளுவண்டியில் இருந்த பழங்களை கீழே தூக்கி வீசி தள்ளுவண்டியைச் சாய்த்தார்.

மேலும், பழக்கடைகளில் இருந்த பழங்களை நடுரோட்டில் தூக்கி வீசி அந்தக் கடைகளுக்கு சீல் வைத்தார். நகராட்சி ஆணையாளரின் இந்தச் செயலை சிலர் தங்களது செல்போனில் பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

இதைக் கண்ட பலர் நகராட்சி ஆணையாளரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தனர். கரோனா தடுப்பு காலத்தில் ஏற்கெனவே வாழ்வாதாரத்தை இழந்துள்ள சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நகராட்சி ஆணையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலர் தங்களது கருத்துகளைப் பதிவிட்டனர்.

இதனிடையே, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழியும் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது? இவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனப் பதிவிட்டிருந்தார்.

 

வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார்.. 1/2

 
Embedded video
 
 
 
 

 

இந்த விவகாரம் நேற்று விஸ்வரூபம் எடுத்தது. இதைத் தொடர்ந்து, வேலூரில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என வாணியம்பாடி நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சிசில்தாமஸ் இன்று (மே 13) காலை நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் விஜயகுமார் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதில், பலமுறை எடுத்துக் கூறியும் தடை செய்யப்பட்ட இடங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததால் ஒரு சில வியாபாரிகளிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

15893577681863.PNG செயலுக்காக வருத்தம் தெரிவித்த சிசில்தாமஸ்

இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் கலந்து பேசி, நகராட்சி ஆணையாளர் சிசில்தாமஸ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என மண்டல நிர்வாக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மேலும், தான் நடந்துகொண்டதற்காக வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள சிசில்தாமஸ், கோயம்பேடு போன்று வாணியம்பாடி பகுதியிலும் கரோனா பரவாமல் தடுப்பதற்காகத்தான் தான் அவ்வாறு நடந்துகொண்டதாகவும், அதற்காகத் தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட வியாபாரிகளை நேரில் சந்தித்து காய்கறி தொகுப்பு, மளிகைப் பொருட்களையும் வழங்கி மன்னிப்பு கோரினார்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/554253-vaniyambadi-commissioner-says-sorry-for-his-action-towards-small-traders-3.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று உவர் செய்த அட்டகாசத்தை ட்விட்டரிலை பார்த்தன்.கோபம் தான் வந்தது. பாவம் அந்த ஏழை வியாபாரிகள்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.