Jump to content

மட்டு.களவாஞ்சிக்குடி மாணிக்கப் பிள்ளையார் ஆலய கிணறு திடீரென்று நிரம்பி வழிகிறது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: plant and outdoor

 

No photo description available.

 

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: 1 person, standing and outdoor

 

 

Image may contain: one or more people, people standing, outdoor and nature

 

Image may contain: 1 person, standing and outdoor

Image may contain: one or more people, people standing and outdoor

 

Image may contain: one or more people and outdoor

Image may contain: one or more people, people standing, outdoor and nature

Image may contain: 1 person, standing and outdoor

Image may contain: 1 person, standing and outdoor

 

 

Image may contain: one or more people, outdoor, water and nature

 

புதினம் பார்க்க...மக்கள் கூடினர். கூடவே சொறீலங்கா பொலிஸ் மற்றும் இராணுவம் போர்க்கால அடிப்படையில் ஆயுதங்களுடன் குவிப்பு.

நன்றி: முகநூல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணிக்கப்பிள்ளையாருக்கு  அரோகரா 🙏🏿

Link to comment
Share on other sites

5 hours ago, nedukkalapoovan said:

Image may contain: one or more people, outdoor, water and nature

 

ஒரு வேளை மசகு எண்ணெய் கிணறோ என பார்க்கின்றாரா ? 🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே கிந்தியா என்றா இந்நேரம் சுற்றி தேங்காய் , பூ , கற்பூரம் , ஊது பத்தி இன்னும் பிற அர்ச்சனை ஐயிட்ட கடை போட்டு தாக்கி இருப்பாங்க.☺️ அர்யூன் சம்பத் நேர்த்தி கடன் செலுத்தி இருப்பார்..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழாழை பாறை வெடிக்க போகுது என்று சொல்லினம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கீழாழை பாறை வெடிக்க போகுது என்று சொல்லினம் 
 

பாறை வெடிச்சாப்பிறகு என்ன செய்வதாக உத்தேசம் ? 😀 

நிலக் கீழ் நீரோட்டப் பாதைகள் ஏதும் அடைபட்டிருக்கலாம் என எண்ணுகிறேன்🤥

இதற்கு சரியான அறிவியற் காரணங்கள் யாராலும் கூற முடியுமா ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

பாறை வெடிச்சாப்பிறகு என்ன செய்வதாக உத்தேசம் ? 😀 

நிலக் கீழ் நீரோட்டப் பாதைகள் ஏதும் அடைபட்டிருக்கலாம் என எண்ணுகிறேன்🤥

இதற்கு சரியான அறிவியற் காரணங்கள் யாராலும் கூற முடியுமா ? 🤔

இரண்டு மட்டத்தில் நிலக்கீழ் தண்ணி இருக்கும். இரண்டையும் பிரிக்கும் பாறைகளில் ஏதாவது வெடிப்பு வந்து அதனூடாக இரண்டாவது  மட்டத்தில் உள்ளநீர் கிணற்றுக்கு வந்திருக்கும்.  

http://www.env.gov.bc.ca/wsd/plan_protect_sustain/groundwater/flowing_artesian_wells.pdfspacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nilmini said:

இரண்டு மட்டத்தில் நிலக்கீழ் தண்ணி இருக்கும். இரண்டையும் பிரிக்கும் பாறைகளில் ஏதாவது வெடிப்பு வந்து அதனூடாக இரண்டாவது  மட்டத்தில் உள்ளநீர் கிணற்றுக்கு வந்திருக்கும்.  

http://www.env.gov.bc.ca/wsd/plan_protect_sustain/groundwater/flowing_artesian_wells.pdfspacer.png

ஆகா....

இதெல்லாம் சேர்ப்பில்லை.

எங்கண்ட பிள்ளையாரின் விளையாட்டு....

இதை சொல்லாவிடில்... புத்தரிண்ட விளையாட்டு என்று முடித்து விடுவார்கள்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

ஆகா....

இதெல்லாம் சேர்ப்பில்லை.

எங்கண்ட பிள்ளையாரின் விளையாட்டு....

இதை சொல்லாவிடில்... புத்தரிண்ட விளையாட்டு என்று முடித்து விடுவார்கள்.😎

புத்தர் பாவம். பிரிக்கமுடியாது என்று நினைத்த அணுவையே பிரித்து Sub atomic particles ஐ பற்றியெல்லாம் விளக்கம் சொல்லிவிட்டு போனவர். இந்த மோ .... சிங்களவர்களோட ஒண்டும் செய்யேலாது 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nilmini said:

இரண்டு மட்டத்தில் நிலக்கீழ் தண்ணி இருக்கும். இரண்டையும் பிரிக்கும் பாறைகளில் ஏதாவது வெடிப்பு வந்து அதனூடாக இரண்டாவது  மட்டத்தில் உள்ளநீர் கிணற்றுக்கு வந்திருக்கும்.  

http://www.env.gov.bc.ca/wsd/plan_protect_sustain/groundwater/flowing_artesian_wells.pdfspacer.png

நன்றி அக்கா. 👍

பலரது ஐயங்களை நிவர்த்திசெய்துள்ளீர்கள் என நம்புகிறேன். 👏

Link to comment
Share on other sites

1 hour ago, nilmini said:

இரண்டு மட்டத்தில் நிலக்கீழ் தண்ணி இருக்கும். இரண்டையும் பிரிக்கும் பாறைகளில் ஏதாவது வெடிப்பு வந்து அதனூடாக இரண்டாவது  மட்டத்தில் உள்ளநீர் கிணற்றுக்கு வந்திருக்கும்.  

http://www.env.gov.bc.ca/wsd/plan_protect_sustain/groundwater/flowing_artesian_wells.pdfspacer.png

அக்கா சரியான விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்। எங்கள் ஊரில் 24 மணித்தியாலமும் தண்ணீர் ஊற்றெடுக்கும் ஒரு கிணறு இருக்குகிறது। இது நில மடடத்திட்கு மேல் 6 அல்லது 7 அடிக்கு பாயும்। மழை காலங்களில் இன்னும் அதிகமாக உயரத்துக்கு  பாயும்। Hydrology படித்தவர்களுக்கு இதன் உண்மைத்தன்மை தெரியும்। இது அதிக அமுக்கத்தில் நீர் வெளியேற்றப்படும்போது (Confined Aquifer ) நிகழும் ஒரு நிகழ்வு। இருந்தாலும் இங்கு நடக்கும் நிகழவை வைத்து பார்க்கும்போது கோவில் கட்டினாலும் கட்டுவார்கள்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Vankalayan said:

கோவில் கட்டினாலும் கட்டுவார்கள்।

???

மட்டு.களவாஞ்சிக்குடி மாணிக்கப் பிள்ளையார் ஆலய கிணறு!!!!

Link to comment
Share on other sites

5 minutes ago, Nathamuni said:

???

மட்டு.களவாஞ்சிக்குடி மாணிக்கப் பிள்ளையார் ஆலய கிணறு!!!!

இருந்தாலும் அதுக்கு மேலும் இன்னொரு கோவில் கட்டிடலாம்தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Nathamuni said:

???

மட்டு.களவாஞ்சிக்குடி மாணிக்கப் பிள்ளையார் ஆலய கிணறு!!!!

நான் பகிர்ந்தது விஞ்ஞான  விளக்கம் தான். ஆனால் எமது கோவில்களில் அதிசயங்கள்  நடப்பது உண்மையே. இன்னொரு கோணத்தில் பார்த்தால்  எமது பண்டைய கோயில்களெல்லாம்  இப்ப கண்டுபிடிக்கும் விஞ்ஞான விளக்கங்களையெல்லாம் அப்பவே கண்டுபிடித்து விட்டார்கள். எமக்கு மேலால் ஒரு சக்தி இருக்கு அதை நம்பித்தான் ஆகவேணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nilmini said:

நான் பகிர்ந்தது விஞ்ஞான  விளக்கம் தான். ஆனால் எமது கோவில்களில் அதிசயங்கள்  நடப்பது உண்மையே. இன்னொரு கோணத்தில் பார்த்தால்  எமது பண்டைய கோயில்களெல்லாம்  இப்ப கண்டுபிடிக்கும் விஞ்ஞான விளக்கங்களையெல்லாம் அப்பவே கண்டுபிடித்து விட்டார்கள். எமக்கு மேலால் ஒரு சக்தி இருக்கு அதை நம்பித்தான் ஆகவேணும். 

நான் சொல்ல வந்தது...

கோவில் கிணறு என்று இருக்கும் போதே. அங்கே கோவில் கட்டி விடுவார்கள் என்று சொன்னதை பத்தி தான்....😄

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

மட்டு.களவாஞ்சிக்குடி மாணிக்கப் பிள்ளையார் ஆலய கிணறு!!!!

 

43 minutes ago, nilmini said:

நான் பகிர்ந்தது விஞ்ஞான  விளக்கம் தான். ஆனால் எமது கோவில்களில் அதிசயங்கள்  நடப்பது உண்மையே. இன்னொரு கோணத்தில் பார்த்தால்  எமது பண்டைய கோயில்களெல்லாம்  இப்ப கண்டுபிடிக்கும் விஞ்ஞான விளக்கங்களையெல்லாம் அப்பவே கண்டுபிடித்து விட்டார்கள். எமக்கு மேலால் ஒரு சக்தி இருக்கு அதை நம்பித்தான் ஆகவேணும். 

கோவில் கிணறுகள் வற்றாத நீரூற்று உள்ள இடத்தில் அமைக்கப்பட்டிருப்பதும், அப்படியான கிணறு உள்ள இடத்தில் கோவில் கட்டிவிட்டிருப்பதும் சாத்தியமானது. ஊர்மக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்கும் கிணறும், ஆறுதல் அளிக்கும் கோவிலுமாக இவை நீண்டகாலமாக இருந்திருக்கும். வற்றாத நீரூற்று அப்படி இருப்பதற்கு காரணமே, அதன் கீழ் வேறு நீர்வளம் இருப்பதாக இருக்க வேண்டும். ஏதொ ஒரு உடைப்பு காரணமாக, நீர் கிடைத்த துளையான கிணறு வழியாக மேலெழுந்து விட்டது. இந்த உடைப்பின் பின் விளைவுகள் பற்றி இலங்கை அரசு மற்றும் பல்கலைக்கழக புவியியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த பின்விளைவுகள் பாதிப்பை வேறு பகுதியில் உருவாக்க கூடும்.

6 hours ago, ரதி said:

கீழாழை பாறை வெடிக்க போகுது என்று சொல்லினம் 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

இருந்தாலும் அதுக்கு மேலும் இன்னொரு கோவில் கட்டிடலாம்தானே?

வாஸ்து சாத்திரப் படி.... ஒரு கோயிலுக்கு மேல்,  இன்னொரு கோயில் கட்ட முடியாது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

அக்கா சரியான விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்। எங்கள் ஊரில் 24 மணித்தியாலமும் தண்ணீர் ஊற்றெடுக்கும் ஒரு கிணறு இருக்குகிறது। இது நில மடடத்திட்கு மேல் 6 அல்லது 7 அடிக்கு பாயும்। மழை காலங்களில் இன்னும் அதிகமாக உயரத்துக்கு  பாயும்। Hydrology படித்தவர்களுக்கு இதன் உண்மைத்தன்மை தெரியும்। இது அதிக அமுக்கத்தில் நீர் வெளியேற்றப்படும்போது (Confined Aquifer ) நிகழும் ஒரு நிகழ்வு। இருந்தாலும் இங்கு நடக்கும் நிகழவை வைத்து பார்க்கும்போது கோவில் கட்டினாலும் கட்டுவார்கள்।

அது அகலமான குழாக்கிணறு என்று நினைவில் உள்ளது.

மெல்லிய உவர்ப்பு நீர் கடற்கரைக்கு அருகில்,  குழாய்க் கிணற்றையும் மேவிப் பாய்ந்து கடலுடன் கலக்கிறது. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

புத்தர் பாவம். பிரிக்கமுடியாது என்று நினைத்த அணுவையே பிரித்து Sub atomic particles ஐ பற்றியெல்லாம் விளக்கம் சொல்லிவிட்டு போனவர். இந்த மோ .... சிங்களவர்களோட ஒண்டும் செய்யேலாது 🙂

அப்படியெல்லாம் திட்டப்படாது..! :)

என்ன இருந்தாலும், ஒரே குடையின் கீழ் பல்லாண்டு காலம் வாழப்போகிறவர்கள், தமிழரும், சிங்களரும்..! 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ராசவன்னியன் said:

அப்படியெல்லாம் திட்டப்படாது..! :)

என்ன இருந்தாலும், ஒரே குடையின் கீழ் பல்லாண்டு காலம் வாழப்போகிறவர்கள், தமிழரும், சிங்களரும்..! 😉

அது புரிகிறது. ஆனால் நடப்பவைகளை பார்க்கும்போதும் கேட்கும்போதும்  கோபம் வரும்தானே? ஒன்றும் செய்யமுடியாது. சும்மா இப்படி பதிவுகள் போடுவதுதான் மிச்சம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை ஒரு மனுசனை சற்று ஒய்வாக இருக்க விடமாட்டீங்களா பாவிகளா😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

இஞ்சை ஒரு மனுசனை சற்று ஒய்வாக இருக்க விடமாட்டீங்களா பாவிகளா😄

😃😀

 

Link to comment
Share on other sites

கடலிலும் அலை வழமையை விட அதிகம் உள்ளே வந்ததாக கூறுகிறார்கள்.

புவிப் பெருந்தட்டுகளின் நகர்வால் ஏற்பட்ட அமுக்கத்தினால் இருக்கும் சாத்தியமுண்டு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.