Jump to content

சிறுகுறு தொழில்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன்: நிர்மலா


Recommended Posts

ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறுகுறு தொழில்களுக்கு உதவும் வகையில் பிணையில்லாமல் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 

தன்னிறைவு இந்தியா

டில்லியில் அவர் கூறியதாவது: விரிவான தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் நேற்று அறிவித்திருக்கிறார். பல்வேறு அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பல கட்ட ஆலோசனை அடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. சுயசார்பு பாரதம்(தன்னிறைவு இந்தியா) என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தியா சுயசார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
 

உலகத்திற்கு உதவி

பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், மனிதவளம் மற்றும் தேவை ஆகியவை வளர்ச்சியின் தூண்கள். இந்த 5 அம்ச நோக்கங்களுடன் பொருளாதார வளர்ச்சி சிறப்பு திட்டங்கள் கவனம் செலுத்தப்படுகின்றன.5 அம்ச திட்டங்களுடன் 20 லட்சம் கோடியிலான தன்னிறைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு திட்டங்கள் மூலம், இந்தியா தன்னிறைவு பெறுவதுடன் உலகத்திற்கு உதவுவதாக இருக்கும். அதிகளவில் உள்ளூர் பொருட்கள் உற்பத்தி செய்வதே தன்னிறைவு இந்தியா திட்டத்தின் நோக்கமாக இருக்கும். உள்ளூர் பொரு்ட்களை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க தன்னிறைவு இந்தியா திட்டம் உதவும்.பிபிஇ கிட்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. தன்னிறைவை எட்டியுள்ளது.


latest tamil news

நோக்கம்

உள்ளூர் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதை பிரதமர் அடிப்படையாக தெரிவித்துள்ளார். தொழில்கள் நடத்துவது எளிதாக்கப்படும். உள்ளூர் நிறுவனங்களை உலகளாவிய நிறுவனங்களாக மாற்றுவதே மோடி அரசின் நோக்கம். அதிகளவில் உள்ளூர் பொருட்களை உற்பத்தி செய்வதே தற்சார்பு இந்தியா திட்டத்தின் நோக்கம்.இந்தியா சுயபலத்துடன் செயல்படும் நோக்கத்திலேயே சுயசார்பு உற்பத்தியை பிரதமர் தெரிவித்துள்ளார். தற்சா்ரபு இந்தியா என்றால், உலகத்திடம் இருந்து துண்டித்து கொள்வதல்ல. தன்னம்பிக்கையை அதிகரிப்பது. மின் உற்பத்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது.
 

ஏழைகளுக்கு உதவி

ஊரடங்கால், ஏழைகள், வெளிமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை மத்திய அரசு உணர்ந்துள்ளது. ஜன்தன், ஆதார் மூலம் பயனாளிகளுக்கு நிவாரணம் நேரடியாக செல்வதன் மூலம் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது.அரசின் திட்டங்கள் ஏழைகளுக்கு உதவியுள்ளன. பிரதமர் கிசான் திட்டம் நேரடியாக ஏழைகளுக்கு பண உதவி செலுத்தப்பட்டது. நேரடி மானிய திட்டம் மக்களுக்கு உதவியாக உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியில் தான் தேவைகளை பூர்த்தி செய்ய கற்று கொள்கிறோம். நேரடியாக பண உதவி அளிக்கப்பட்டது வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவியாக இருந்தது. 41 கோடி பயனாளர்களுக்கு ரூ.52 ஆயிரம் கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் நேரடியாக வழங்கப்பட்டன. 6.5 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு 71 ஆயிரம் டன் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
 

45 லட்சம் தொழிற்சாலைகள் பலன்

20 லட்சம் கோடிக்கான திட்டங்களை அடுத்த சில நாட்களில் தொடர்ச்சியாக அறிவிப்போம்.இன்று 15 அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. சிறுகுறு நிறுவனங்களுக்கு இன்று 6 சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. சிறுகுறு தொழில்களுக்கு பிணையின்றி ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். இதனால் 45 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும். இந்த திட்டம் அக்., 31 வரை செயல்படுத்தப்படும். 45 லட்சம் சிறுகுறு தொழிற்சாலைகள் பயனடையும்4 ஆண்டுகளில் கடனை திருப்பி செலுத்தலாம். முதல் ஒராண்டு காலம் கடன் தவணை வசூலிக்கப்படாது. புதிய கடன் பெற சொத்து பத்திரம் எதுவும் செலுத்த தேவையில்லை. நலிவடைந்த தொழிற்சாலைகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி. வாராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்கள் கடன் பெற அரசு உதவி செய்யும். உத்தரவாதம் அளிப்பதற்காக தனியாக ஒரு நிதி ஒதுக்கப்படும்.

 

முதலீட்டு வரம்பு அதிகரிப்பு

குறுந்தொழில் முதலீட்டு வரம்பு ரூ.25 லட்ச ரூபாயில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்படுகிறது. நடுத்தர நிறுவனங்களுக்கான வரம்பு ரூ. 10 கோடியில் இருந்து ரூ. 20 கோடி ஆகவும்,சிறு தொழில் முதலீட்டு வரம்பு ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாகவும் அதிகரிக்கப்படுகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2538609

Link to comment
Share on other sites

ஜூன், ஜூலை, ஆக., பிஎப் தொகையை மத்திய அரசே செலுத்தும்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: 200 கோடிக்கு கீழ் சர்வதேச டெண்டர் இல்லை. அதை இந்திய நிறுவனங்களே பெறும். வாராக்கடனில் உள்ள நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் கோடி கடன் வழங்க நடவடிக்கை. சிறு தொழில் நிறுவனங்களுக்கு சேர வேண்டிய அனைத்து தொகைகளும் 45 நாட்களில் வழங்கப்படும். ரூ.100 கோடி வரை வியாபாரம் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.25 கோடி வரை கடன் இருந்தால், கூடுதல் கடன் வழங்க நடவடிக்கை. 20 ஆயிரம் கோடி கடனுதவி திட்டத்தால் 2 லட்சம் நிறுவுனங்கள் பயன்பெறும். முதலீடு 1 கோடியாக இருந்தாலும் சேவை அளிக்கும் நிறுவனம் சிறு குறுதொழில் நிறுவனமாக கருதப்படும். முதலீடு அடிப்படையில் இனி மேல் சிறு குறு தொழில்கள் வகைபடுத்தப்படும். சிறு நிறுவனங்கள் இமார்க்கெட்டிங் மூலம் பொருட்களை விற்க வசதி செய்து தரப்படும்.

 

 

பிஎப் தொகை

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களுக்கும் பிஎப் தொகையை மத்திய அரசு செலுத்தும். இதற்காக 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3.67 லட்சம் நிறுவனங்கள், 72.25 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். பி.எப்., தொகையை அரசே செலுத்துவதால், நிறுவனங்களுக்கு ரூ.6,500 கோடி மிச்சமாகும். அடுத்த காலாண்டில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் 10 சதவீதம் பிஎப் தொகை செலுத்தினால் போதும். தொழிலாளர், ஊழியர்கள் நலன் கருதி 2 சதவீதம் குறைக்கப்படுகிறது.
 

மின்சார நிறுவனங்களுக்கு உதவி

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுகடன் வசதி நிறுவனங்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு . நாடு முழுவதும் உள்ள மின்சார நிறுவனங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்கப்படும். மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ள மின்சார நிறுவனங்களுக்கு அரசு கை கொடுக்கிறது. மின்சார நிறுவனங்கள் கடனில் இருந்து மீள பிஎப்சி, ஆர்இசி ஆகியவை கடன் அளிக்கும்.
 

பதிவுக்காலம் நீட்டிப்பு

ரயில்வே, சாலை உள்ளிட்ட ஒப்பந்ததாரர்களின் வங்கி உத்தரவாதம் 6 மாதம் நீட்டிப்பு செய்யப்படுகிறது. ஏற்கனவே செய்யப்பட்ட கட்டுமான திட்டங்களின் பதிவு்காலம் 6 மாதம் நீட்டிக்கப்படும். ஊரடங்கு காலத்தில் முடிக்கப்படாத கட்டுமான பணிகளை முடிக்க அவகாசம் அளிக்கப்படும். புதிதாக பதிவு செய்யப்படும் கட்டுமான திட்டங்களுக்கும் பதிவுக்காலம் நீட்டிப்பு பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2538611

Link to comment
Share on other sites

மத்திய அரசின் அறிவிப்பு 'பெரிய பூஜ்ஜியம்..': மம்தா

பொருளாதார மேம்பாட்டிற்காக அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்பு பொருளாதார திட்டம், பெரிய பூஜ்ஜியம் எனவும், மாநிலங்களுக்கு அதில் எதுவும் இல்லை எனவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்களுக்கான விரிவான அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு 'ஒரு பெரிய பூஜ்ஜியம்' என மம்தா விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் மம்தா கூறியதாவது: கொரோனா பாதிப்பில், மத்திய அரசு மக்களை தவறாக வழிநடத்துகிறது. அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதார சிறப்பு திட்டத்தால், மக்கள் நிவாரணம் பெறுவார்கள் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இது ஒரு பூஜ்ஜியம்.

நிதி பற்றாக்குறையால் வாடும் மாநிலங்களுக்கு மத்திய அரசு எதையும் வழங்கவில்லை. திட்டத்தில், மாநில அரசுகளுக்கு எதுவும் அறிவிப்பில்லை. கூட்டாட்சி முறையை மத்திய அரசு தகர்க்க முயற்சிக்கிறது. திட்டத்தில் அமைப்புசாரா துறை, பொதுச் செலவு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2538637

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.