Jump to content

ஆப்கானில் மகப்பேற்று மருத்துவமனையில் கொடூரத் தாக்குதல்: பிறந்த குழந்தைகள் உட்பட 16பேர் உயிரிழப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

EXzeFF1WkAIfzVc-720x450.jpg

ஆப்கானில் மகப்பேற்று மருத்துவமனையில் கொடூரத் தாக்குதல்: பிறந்த குழந்தைகள் உட்பட 16பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள மகப்பேற்று மருத்துவமனையில், துப்பாக்கி ஏந்தியவர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில், இரண்டு பிறந்த குழந்தைகள், அவர்களின் தாய்மார், தாதியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

எல்லைகளற்ற மருத்துவ அறக்கட்டளையின் மருத்துவர்கள் நடத்தும் ‘மெடெசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ்’ மகப்பேற்று மருத்துவமனையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் சீருடை அணிந்த குறைந்தது மூன்று தாக்குதல்தாரிகள் மருத்துவமனைக்குள் நுழைந்து கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஒரு மணிநேர நீண்ட போராட்டத்தின் பின்னர், பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, 80இற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை மருத்துவமனையில் இருந்து பாதுகாப்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

இதுகுறித்து உட்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரெக் அரியன் கூறுகையில், “மூன்று வெளிநாட்டினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.

100 படுக்கைகள் கொண்ட தஸ்தி பார்ச்சியில் உள்ள மகப்பேற்று மருத்துவமனை ஏன் குறிவைக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த தாக்குதல் மனித குலத்திற்கு எதிரான செயல் மற்றும் போர்க்குற்றம்” எனக் கூறியுள்ளார்.

எனினும், இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஆப்கானில்-மகப்பேறு-மருத்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.