Jump to content

மங்கள சமரவீர CIDயில் முன்னிலை


Recommended Posts

மங்கள சமரவீர CIDயில் முன்னிலை

 

 

 

    by : Dhackshala

Mangala-Samaraweera-1.jpg

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, புத்தளத்திற்கு இடம்பெயர்ந்தவர்களை வாக்களிப்பில் ஈடுபடுத்த மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மங்கள-சமரவீர-cidயில்-முன்னி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ராஜபக்ச பாணி- தன் மீதான விசாரணைகள் குறித்து மங்கள கருத்து – அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை

என் மீதான இந்த விசாரணைகள் எதிர்வரும் தேர்தலை நோக்கமாக கொண்டவை என முன்னாள் நிதியமைச்சர் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.
இது ராஜபக்சவின் வழமையான பாணி என  விசாரணையை முடித்துக்கொண்டு வெளியேறியவேளை செய்தியாளர்களிற்கு தெரிவித்துள்ள அவர் முன்னைய ராஜபக்ச ஆட்சியின் போது தன்னை சிஐடியினர் மூன்று முறை விசாரணை செய்ததை நினைவுகூர்ந்துள்ளார்.
அவர்கள் என்னை உளரீதியாக அழிப்பதற்கு முயன்றனர் என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

நீங்கள் தவறான ஆளுடன் மோதிகின்றீர்கள்,நீங்கள் எவ்வளவிற்கு தாக்குதலை மேற்கொள்கின்றீர்களோ அவ்வளவிற்கு நான் வலிமையானவனாக மாறுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளிற்காக நிதியை ஏற்பாடு செய்தமை தொடர்பிலேயே சிஐடியினர் முன்னாள் நிதியமைச்சரை விசாரணை செய்துவருகின்றனர்.Mangala-Samaraweera-300x213.jpeg
ஜனாதிபதி தேர்தலின் போது மன்னாரில் 12.000 பேர் வாக்களிப்பதற்காக 220 வாகனங்களை ஏற்பாடு செய்தார் என முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சிஐடியினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் வடமாகாணத்திலிருந்து பலமைல்தொலைவில் உள்ள வாக்குசாவடிகளிற்கு வாக்களிக்க செல்லவேண்டியவர்களிற்காக கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வடபகுதி புனர்வாழ்வு திணைக்களம் குறிப்பிட்ட நிதியை ஒதுக்கியது என தெரிவித்துள்ளார்.mangala-4-300x150.jpg
அவர்கள் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்,1990இல் யாழ்ப்பாணத்திலிருந்தும் ஏனைய பகுதிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கங்கள் போல நாங்களும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு அவர்களிற்கு வாக்களிப்பதற்காக உள்ள உரிமையை உறுதி செய்தோம் எனவும் முன்னாள் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.Mangala-300x210.jpg
நாங்கள் விசேடமான குழுவை சேர்ந்தவர்கள் குறித்து குறிப்பிடுகின்றோம்,அவர்கள் 30 வருடங்களிற்கு மேலாக துயரத்தை அனுபவிப்பவர்கள்,அவர்கள் கடந்த 30 வருடங்களாக எந்த அரசாங்கம் அவர்களிற்காக எதனையும் செய்யாத மக்கள்,இதற்கு நாங்கள் அனைவரும் பொறுப்பேற்கவேண்டும்,அவர்களது வாக்குரிமை பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது என முன்னாள் நிதியமைச்சர் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குரிமை உறுதிப்படுத்தப்படுவதற்கு உதவியது குறித்து நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன்.
இது குறித்து நான் பெருமைப்படுகின்றேன் என சிஐடியினருக்கு நான் தெரிவித்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://thinakkural.lk/article/41800

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.