Jump to content

`வாட்ஸ்அப்பை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த 25 குறிப்புகள்!' -நெட்டிசன் பகிர்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

`வாட்ஸ்அப்பை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த 25 குறிப்புகள்!' -நெட்டிசன் பகிர்வு 

 

தகவல்தொடர்பின் இலக்கணம் வாட்ஸ்அப் மூலமாக மாற்றி எழுதப்பட்டுள்ளது...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நம்முடைய அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக இன்று வாட்ஸ்அப் மாறியுள்ளது. பெரும்பாலான அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள், இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத்தான் பகிரப்படுகின்றன. தகவல்தொடர்பின் இலக்கணம் வாட்ஸ்அப் மூலமாக மாற்றி எழுதப்பட்டுள்ளது.

நம்முடைய ஆறாம் விரலாய் கைகளில் ஒட்டிக்கொண்டுள்ள செல்போனை எடுத்ததும், ஒவ்வொருவரும் முதலில் பார்ப்பது வாட்ஸ்அப் நோட்டிஃபிகேஷன்களாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு மனிதர்களின் வாழ்வுடன் வாட்ஸ்அப் இரண்டறக் கலந்துள்ளது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வாட்ஸ்அப்பை நாம் எவ்வாறு ஸ்மார்ட்டாகப் பயன்படுத்தலாம் என்பதற்கான சில டிப்ஸ்:

1) வாட்ஸ்அப் வீடியோக்களைப் பார்ப்பதற்கு PIP எனும் ஒரு ஆப்ஷன் வாட்ஸ்அப்பில் உள்ளது. இந்த PIP (Picture-in picture) வசதி மூலம் வாட்ஸ்அப் வீடியோக்கள் பார்க்கும்போதே, போனில் வேறு பணிகளையும் செய்ய முடியும். அதாவது, நாம் வீடியோக்களை சிறியதாக்கி மொபைல் ஸ்கிரீனில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்துக்கொண்டு தொடர்ந்து வீடியோக்களைப் பார்க்கலாம்.

அதேநேரத்தில், மற்ற ஆப்ஸ்களையும் நாம் உபயோகிக்க முடியும். வாட்ஸ்அப்பில் நமக்கு வரும் வீடியோக்களில்... லிங்க்குகளுக்குப் பதில், அதில் காணப்படும் பிளே ஆப்ஷன் மூலம் PIP வசதியை நாம் பயன்படுத்த முடியும்.

2) வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜில், வாக்கி-டாக்கி பட்டனைப் (Voice Msg Button) பயன்படுத்தும்போது ஹோல்டு செய்து பேசுவோம். பேசியபிறகு விரலை எடுத்தால், மெசேஜ் தானாகவே சென்றுவிடும். ஆனால், நாம் பேசியது சரியா? தவறா? என சோதித்துப்பார்க்க இதில் வழியில்லை. ஆனால், பேசியதை சோதித்துப் பார்க்க ஒரு சிறு நுட்பத்தைப் பயன்படுத்தலாம். வாக்கி-டாக்கி பட்டனை (Voice Msg Button) கீழிருந்து மேல் நோக்கி ஸ்வைப் செய்து, விரும்பியவாறு பேசலாம். பிறகு, பேக் (Back) பட்டனையோ அல்லது ஹோம் பட்டனையோ அழுத்தி பின்சென்றுவிட்டால், நாம் பேசிய வாய்ஸ் மெசேஜ் போகாமல் அப்படியே இருக்கும். பிறகு, அதை சரியா என பிளே செய்து கேட்டுவிட்டு அனுப்பலாம். தவறென்றால் அழித்துவிடலாம்.

3) அலுவலக உபயோகத்திற்கும், தனிப்பட்ட பயன்பாட்டிற்கும் என இரு வாட்ஸ்அப் நம்பர்கள் ஒரே போனில் நமக்குத் தேவை என்றால் அதற்கும் வசதி உள்ளது. நம்மிடம் உள்ள ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் எண்களைப் பயன்படுத்த முடியும். பேரலல் ஸ்பேஸ் (Parallel Space) ஆப்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துவதன் மூலம் இதை சாத்தியமாக்க முடியும். வாட்ஸ்அப்பிற்கு மட்டுமல்லாது அனைத்து ஆப்ஸ்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.

4) நம்முடைய முக்கியமான லிங்க்குகள், வீடியோக்கள், தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட நாம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டியவற்றை நமக்கே நமக்கு என்று, நாம் ஒருவர் மட்டுமே உள்ளவாறு ஒரு வாட்ஸ்அப் குழு உருவாக்கி, அதில் சேமித்து வைக்கலாம்.

நமக்கே நமக்கென வாட்ஸ்அப் குழு உருவாக்குவது எப்படி என்றால், வழக்கமாக வாட்ஸ்அப் குழு உருவாக்குவது போன்றே,

நமக்கு நெருக்கமான யாரேனும் ஒருவரை மட்டுமே குழுவில் இணைத்து, பின் அவரை குழுவிலிருந்து உடனடியாக நீக்கி விடவேண்டும். இப்போது, நமக்கே நமக்கான குழுவில் நாம் மட்டுமே இருப்போம்.

5) நமது ரகசியக் காப்பாளனாக வாட்ஸ்அப்பின் ஃபிங்கர் பிரின்ட் லாக் வசதி உள்ளது. முக்கியமான பல தகவல்களை நாம் வாட்ஸ்அப்பில் வைத்திருக்கிறோம் அல்லது தகவல்களை ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறோம் என்றால், ஃபிங்கர்பிரின்ட் ஆப்ஷனை நாம் பயன்படுத்தலாம். இது, ரகசியம் காக்க சிறந்ததொரு ஏற்பாடாக இருக்கும். நம்முடைய ஃபிங்கர் பிரின்ட்டை வைத்தால் மட்டுமே வாட்ஸ்அப் ஓப்பன் ஆகும் என்பதால், நமது பாதுகாப்பு உறுதிப்படும்.

6) நமது வாட்ஸ்அப் கணக்கிற்கு இருகட்ட பாதுகாப்பு வசதியை நாம் உருவாக்கிக்கொள்ள முடியும். இதற்கு, வாட்ஸ்அப்பின் Two - step verification-யை பயன்படுத்தி 6 இலக்க பின் நம்பரை உருவாக்க வேண்டும். அடுத்து, நமது மெயில் ஐடியை Safeguard Mail Id ஆகக் கொடுக்க வேண்டும். இதன்மூலம், நமது வாட்ஸ்அப் கணக்கு பாதுகாக்கப்படும். வேறு போன்களில் அல்லது புதிய போன்களில் நமது வாட்ஸ்அப்பை Install செய்ய 6 இலக்க பின் கட்டாயம் தேவைப்படும். ஒருவேளை நமக்கு Pin மறந்துவிட்டால் Backup Mail Id ஆக நமது Mail செயல்படும்.

7) நமது போனில் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பை அப்படியே நமது கணினியில் பயன்படுத்த முடியும். இதற்கு Whatsapp Web வசதி பயன்படும். கணினியில் தோன்றும் QR code-ஐ நமது போனின் Whatsapp Web மூலமாக ஸ்கேன் செய்வதன் மூலம் கணினியில் நமது வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியும்.

😎 நம் வாட்ஸ்அப்பில் போட்டோக்கள், வீடியோக்கள் உள்ளிட்ட மீடியாக்களை அனுப்பும்போது, அவற்றின் தரம் (Resolution) குறைந்துவிடுகிறது என்பது நிதர்சனமான உண்மை. எனவே, நமக்கு மிகவும் முக்கியமான மற்றும் பிடித்தமான மீடியாக்களை அனுப்பும்போது அவற்றின் தரம் குறைந்துவிடாமல் இருக்க, வாட்ஸ்அப் மூலம் அனுப்பாமல், அவற்றை மெயில் மூலமாக அனுப்பிக்கொள்வதே சிறந்தது அல்லது வீடியோவாக அல்லாமல் ஃபைலாக அதை அனுப்பலாம்.

 

9) நமக்கு சில தனிநபர்களின் அல்லது குழுக்களின் செய்திகள் முக்கியமானவையாக இருக்கும். அந்த நபர்களையும் குழுக்களையும் வாட்ஸ்அப்பில் பின் (Pin) செய்து வைத்துக்கொள்ளலாம். அதிகபட்சமாக இப்படி மூன்று உரையாடல்களைப் பின்செய்ய முடியும். இந்த மூன்று உரையாடல்கள், நமக்கு எப்போதும் வாட்ஸ்அப்பில் மேலேயே இருக்கும்.

10) இரவில் வாட்ஸ்அப் பயன்படுத்தும்போது, டார்க் மோடு (Dark Mode) வசதியைப் பயன்படுத்துவது சிறந்தது. இரவில் வீடு முழுக்க இருட்டாக இருக்கும்போது, மொபைல் போனிலிருந்து வரும் அதிகப்படியான வெளிச்சத்தால் தலைவலி, தூக்கமின்மை உள்ளிட்ட உபாதைகள் ஏற்படும். எனவே, இரவில் வாட்ஸ்அப்பின் டார்க் மோடு வசதியைப் பயன்படுத்துவதே உகந்தது. லுக் பிடித்திருந்தால் இதை பகலிலும்கூட பயன்படுத்தலாம்.

11) நேரமின்மை காரணமாக டைப் செய்ய முடியவில்லை என்றாலோ, சுருக்கமான தகவல் அனுப்ப வேண்டும் என்றாலோ அல்லது நாம் வெளியில் இருக்கும்போது மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றாலோ, வாய்ஸ் மெசேஜ் அனுப்ப வாட்ஸ்அப்பின் வாக்கி டாக்கி பட்டனை உபயோகப்படுத்துவது சிறந்த வழியாக இருக்கும்.

12) வாட்ஸ்அப் குழுக்கள் நம்முடைய நேரத்தை நிறைய சாப்பிடுகின்றன. எனவே, தேவையற்ற குழுக்களிலிருந்து தயவு தாட்சண்யமின்றி வெளியேறிவிட வேண்டும். மறுபடியும் நம்மை அந்தக் குழுக்களில் இணைக்க முடியாதவாறு குரூப் செட்டிங்ஸில் மாற்றம் செய்துகொள்ளலாம். இவ்வாறு செய்துகொண்டால், நம் அனுமதியின்றி யாரும் நம்மை குழுக்களில் இணைக்க முடியாது.

 

13) நாம் வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜைப் படிக்கிறோம். அது மிக முக்கியமான மெசேஜாக இருக்கிறது என்றால், அதை நாம் உடனே ஸ்டார் (Star) செய்து வைத்துக்கொள்ளலாம். இதனால் தகவல்கள் தவறுதலாக அழிந்துபோக வாய்ப்பு இல்லை. ஸ்டார் செய்யப்பட்ட மெசேஜ்களை நமக்கு தேவைப்படும்போது சுலபமாக எடுத்து பார்த்துக்கொள்ள முடியும்.

14) நாம் உருவாக்கும் வாட்ஸ்அப் தகவல்களை கீபோர்டில் டைப் செய்துகொண்டிருந்தால், நமக்கு நேரம் அதிகம் பிடிக்கும். அதற்கு கூகுள் ஜீபோர்ட் (GBoard) உள்ளிட்ட வாய்ஸ் டைப்பிங் முறைகளை நாம் பயன்படுத்தும் போது, பத்துப் பக்கங்களைக்கூட நாம் சுலபமாக ஐந்து முதல் பத்து நிமிடங்களில் டைப் செய்துவிட முடியும்.

15) வாட்ஸ்அப்பில், சமீபத்தில் குரூப் வீடியோ கால்கள் நான்கு நபர்களிலிருந்து எட்டு நபர்களுடன் பேசலாம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்வது சிறந்ததாக இருக்கும்.

16) ஒவ்வொருவரின் கண் பார்வைத் திறனும் வெவ்வேறாக இருக்கும். அதற்கேற்ப வாட்ஸ்அப்பில் எழுத்துகளின் (Fonts) அளவை நாம் மாற்றிக்கொள்ள முடியும் . எழுத்துகளை நமக்குப் பொருத்தமாக வைத்துக்கொள்வதன் மூலமாக, நம் கண் பார்வைத் திறனுக்கு ஏற்றவாறு நாம் விரைவாக வாசிக்க முடியும்.

17) வாட்ஸ்அப்பில் வால்பேப்பரை தினமும் ஒரே மாதிரி வைத்துக் கொண்டிருக்க போரடிக்கிறது என்றால், வால்பேப்பரை தினமும் மாற்றி புத்துணர்வூட்டிக்கொள்ளலாம். நமக்கு விருப்பமான வண்ணங்கள், புகைப்படங்கள் என எதை வேண்டுமானாலும் பேக்ரவுண்ட் வால்பேப்பராக வைத்துக்கொள்ள முடியும்.

 

Representational Image

 

18) வாட்ஸ்அப்பில் ஒருமுறைக்கு ஐந்து நபர்கள் அல்லது குழுக்களுக்கு மட்டுமே தகவல்களை ஃபார்வேர்டு செய்ய முடியும். அதுவும் தற்போது கொரோனாவினால் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தகவல்களை காப்பி செய்து, விரும்பும் நபர்கள் அல்லது குழுக்களில் பேஸ்ட் செய்வதன் மூலம் எத்தனை நபர்களுக்கு வேண்டுமானாலும் ஒரேமுறையில் தகவல்களை அனுப்பிவிட முடியும்.

 

19) நம்முடைய போனின் மெமரியை வாட்ஸ்அப்பில் வரக்கூடிய வீடியோ/ஆடியோ/புகைப்படங்கள் பெருமளவு பிடித்துக் கொள்ளும்.

அவ்வப்போது வாட்ஸ்அப் மெசேஜ்களை கிளீயர் சாட் கொடுத்து விடுவது நல்லது. கிளீயர் சாட் கொடுக்கும்போது, அதிலுள்ள மீடியாக்களையும் சேர்த்தே நாம் கிளீயர் செய்துவிடுவது சிறந்தது. அவசியம் தேவையான மீடியாக்கள் மற்றும் தகவல்களை முன்பே கூறியதுபோல நாம் ஸ்டார் (star) செய்து வைத்துக்கொள்ளலாம்.

20) குழுக்களில் யாரேனும் ஒருவர் பகிர்ந்த தகவலில், நமக்கு எதேனும் முரண்பாடுகள் இருப்பின், அவரை டேக் செய்து குழுக்களில் கடுமையான விமர்சனங்களைப் பகிரும்போது, அவருக்கு மனச் சங்கடம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதுபோன்ற சூழலிலும், குழுவில் ஒருவர் அனுப்பிய செய்திக்கு தனிப்பட்ட முறையில் நாம் பதில் அளிக்க விரும்பும்போதும், ரிப்ளை பிரைவேட்லி (Reply Privately) எனும் ஆப்ஷனைப் பயன்படுத்தி அவருக்கு மட்டுமே நாம் மெசேஜ் அனுப்பி, நமது கருத்தைப் பதிவு செய்துவிட முடியும்.

21) இந்த மெசேஜை பத்துப் பேருக்கு ஃபார்வேர்டு செய்தால், உங்களுடைய கணக்கில் 10 GB சேரும். குறிப்பிட்ட தகவலைப் பகிர்ந்தால், இந்த அரசியல் தலைவர் அல்லது இந்த கம்பெனி இத்தனை GB இலவசமாகத் தருவார்கள். இதைப் பகிர்ந்தால் கார், போன் உள்ளிட்டவை பரிசாகக் கிடைக்கும் என்ற ரீதியில் வரக்கூடிய நெட்வொர்க் டேட்டா மற்றும் பரிசுகள் தொடர்பான மெசேஜ்கள், நம்மை முட்டாளாக்கக் கூடியவை. இவற்றை நாம் கவனமாகத் தவிர்த்துவிட வேண்டும். விளம்பர நோக்கிலோ அல்லது ஒருவரது தகவல்களைத் திருடும் நோக்கிலோ தான் இத்தகைய போலியான செய்திகள் உருவாக்கப்படுகின்றன.

 

ஒருவேளை, நெட்வொர்க்கிலிருந்து இலவச டேட்டா அளிக்கப்படுவது உண்மை என்றால், நம்முடைய மொபைல் எண்ணுக்கு நெட்வொர்க் நிறுவனத்திடமிருந்து நேரடியாகத் தகவல் வரும். இவ்வாறு வாட்ஸ்அப் மூலமாக அவர்கள் தகவல் பரப்ப மாட்டார்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

22) இந்த மெசேஜை ஒருமுறை பகிர்ந்தால், ஏழைக் குழந்தையின் மருத்துவ செலவிற்கு வாட்ஸ்அப் நிறுவனம் இவ்வளவு தொகை கொடுக்கும் என்ற ரீதியிலான தகவல்கள் முழுக்க முழுக்க பொய்யானவை என்பதை நாம் அறியவேண்டும். இப்படியான ஒரு நடைமுறை வாட்ஸ்அப்பின் இயங்கு விதிமுறைகளில் இல்லை.

 

23) ரத்தம் தேவை, குழந்தைகளைக் காணவில்லை என்ற ரீதியில் வரக்கூடிய மெசேஜ்களை மிகுந்த பொறுப்புணர்வுடன் நாம் அணுக வேண்டும். தகவலின் உண்மைத் தன்மையை அதில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டோ அல்லது வேறு ஏதேனும் முறையிலோ உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். தகவல் உண்மையா பொய்யா என நாம் சோதித்து அறிந்து உறுதிப்படுத்திய பின்னரே அவற்றைப் பகிர்வது சிறந்தது. சில நேரங்களில், இரண்டு வருட பழைய மெசேஜ் எல்லாம் தற்போது ஃபார்வேர்டு ஆகிகொண்டிருக்கும்.

24) குறிப்பிட்ட கடவுளின் படத்தை பத்துப் பேருக்கு பகிர்ந்தால் நல்லது நடக்கும் என்ற ரீதியில் வரக்கூடிய போட்டோக்களை ஒருவித ஜென் மனநிலையுடன் கடந்து செல்வதே நம்முடைய மரியாதையை காப்பாற்றிக்கொள்ள சிறந்த வழியாக இருக்கும்.

 

25) நமக்கு வரக்கூடிய மெசேஜ்கள் அனைத்தையுமே ஃபார்வேர்டு செய்யக்கூடிய போஸ்ட்மேன் வேலையைச் செய்யாமல் இருப்பதே நாம் வாட்ஸ்அப்பை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்தத் தொடங்குவதன் ஆரம்பப்புள்ளி.

வாட்ஸ்அப்பில் அப்டேட் கிடைக்கும்போது, உடனே அப்டேட் செய்துகொள்வது ஒரு ஸ்மார்ட்டான உத்திதான். மேலும், வாட்ஸ்அப்பில் வரும் எந்த ஒரு புதுமையையும் முதலில் Beta பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டு சோதனை செய்யப்படும். அதில் உள்ள நிறைகுறைகள் நீக்கப்பட்டு, பின்னர் பொதுப் பயன்பாட்டிற்கு வரும். வாட்ஸ்அப்பின் புதுமைகளை உடனே பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என விரும்புவோர், தங்களை Beta பயனாளிகளாக மாற்றிக்கொள்ளலாம். புதுமைகளைப் பயன்படுத்தி, அவற்றிற்கான Feedback கொடுக்கலாம். இதற்கான வசதியும் வாட்ஸ்அப்பில் உள்ளது.

 

நாம் எப்போதுமே, தகவல்களைப் பகிர்ந்துகொண்டு இருக்கக்கூடிய கம்யூனிகேட்டர் வேலையையும், போஸ்ட்மேன் வேலையையும் செய்துகொண்டிருக்காமல், நமக்கு தோன்றக்கூடிய தகவல்களை நாமே சுயமாக உருவாக்கிப் பகிர்ந்தோம் என்றால், நமது சுற்று வட்டாரத்தில் நமக்கு நல்ல பெயர் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். நம்முடைய அறிவுத்திறனும், சுயசிந்தனையும் மேம்படும். எனவே, தகவல்களை ஃபார்வர்டு செய்வதை விட்டுவிட்டு, சுயமாக உருவாக்க முயற்சி செய்வதே சிறந்தது. தேவையான மற்றும் முக்கியமான தகவல்களை மட்டுமே ஃபார்வர்டு செய்யலாம்.

வாட்ஸ்அப்பை பொறுத்தவரை தகவல் பகிர்வதில் நமக்கு நாமே சுயகட்டுப்பாடுகளை விதித்துக்கொள்வோம்... குறைவான நேரத்தில் நிறைவான பணி என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டு செயல்படுவோம்!

https://www.vikatan.com/technology/gadgets/how-to-use-whats-app-in-a-smarter-way

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.