Jump to content

நாலு கீத்தில் ஒரு பந்தல், அதுக்கு ஒரே கால்-அது என்ன?"இந்த பழமொழிக்கு அர்த்தம் தெரிய இதப் படிங்க!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாலு கீத்தில் ஒரு பந்தல், அதுக்கு ஒரே கால்-அது என்ன?"இந்த பழமொழிக்கு அர்த்தம் தெரிய இதப் படிங்க!

கிராமங்களில் சில புதிர்களை அடிக்கடி சொல்லி, சிறுவர்களிடம் அதன் பதிலைக் கேட்பார்கள், புதிர்களின் காரணம், புதிர்களில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை, அவர்கள் மனதில் நன்கு இருத்திக்கொள்ளவே. அது போல ஒரு புதிரை, இங்கே நாம் பார்க்கலாமா!? "நாலு கீத்தில் ஒரு பந்தல், அதுக்கு ஒரே கால்" அது என்ன? பந்தலுக்கு எப்படி ஒரே கால் என்று நிறைய யோசித்து, இருக்கும் பல்வேறு சிந்தனைகளில், இதையும் சேர்த்துக்கொண்டு சிரமப்பட வேண்டாம். மேலே இருக்கும் படத்திலேயே, இதற்கான விடை இருக்கிறது. கண்டுபிடித்து விட்டீர்களா? நீராரைக்கீரை, ஆலக்கீரை எனும் ஆரைக்கீரை தான், புதிருக்கான பதில். நான்கு கால்வட்ட இலைகளைத் தாங்கி நிற்கும் தண்டுகள் நிறைந்துள்ள ஆரைக்கீரை, ஆரை இனத்தில் கொடி போன்ற ஒரு கீரை வகைச்செடியாகும்.

மூன்று இலைகள் கொண்ட புளியாரை மற்றும் ஓரிலை கொண்ட வல்லாரை இதன் மற்ற வகைகளாகும். இதில், வல்லாரை தேவ மூலிகை, ஆற்றல்மிக்க காய கற்ப மூலிகையும் கூட. நீர்ப்பாங்கான வயல்வெளிகளில், நெற்பயிர்களைவிட வேகமாக, வளமாக வளரும் ஒரு களைச்செடியாக, ஆரைக்கீரையைக் கருதினாலும், அவை அதி சிறப்புமிக்க, மனித உடல் நலம் காக்கும் ஒரு அரிய மூலிகையாகும். சில ஆண்டுகளுக்கு முன்புவரை, வீடுகளில் தினமும் ஒரு கீரை அவசியம் இருக்கும், அதிலும் கிராமங்களில் உள்ள வீடுகளில், நகரங்களில் கிடைக்காத ஆரைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரை, முடக்கத்தான், பொன்னாங்கன்னி மற்றும் பண்ணைக்கீரை போன்ற கீரைகள் தினமும் உணவில் இடம்பெற்றிருக்கும். அந்தக் கீரைகள் எல்லாம், உடலுக்கு தேவையான ஆற்றலை, சத்துக்களை அளிக்கும், உணவுகளாக, திகழ்ந்து, தனியே உடல் நலம் காக்கும் மருந்துகள் தேவையின்றி, இயற்கை வழியே, எல்லோரும் உடல் நலத்துடன் இருந்தார்கள். தற்காலங்களில், கீரைகளை மாதமொருமுறை, சாப்பாட்டில் காண்பதே, அரிதாகி வருகிறது. விளைவு? உடலில் உள்ள வியாதி எதிர்ப்பு ஆற்றல் குறைந்து, சிறு பாதிப்புகள் கூட, உடலை வெகுவாக சிரமப்படுத்திவிடும் காலகட்டத்தில், இன்றைய வாழ்க்கை இருக்கிறது.

ஆரைக்கீரை:

 

ஆரைக்கீரை: தமிழகத்தின் வாய்க்கால், குளம் போன்ற நீர்நிலைகளின் ஓரம், நீர்நிலைகளில், நீர்ப்பாங்கான இடங்களில், அதிகமாக வளரும் கீரையினம், ஆரைக்கீரையாகும். தண்ணீரிலும், தரையிலும் வளரும் அதிசயத் தன்மை மிக்கது. உலகெங்கும் காணப்படும் ஒரு நீர்த்தாவரம், ஆரைக்கீரை. மேலைநாடுகளில் பண்ணை வீடுகளில், பூங்காக்களில் அழகுக்காக அமைக்கப்படும் நீர்த்தோட்டம் எனும் பசுமையான நீர்த்தாவரங்கள் கொண்ட நீரோடைகளில் அதிகம் வளரும், வளர்க்கப்படும் அழகுத் தாவரமாகவும் திகழ்கிறது, பசுமையான ஆரைக்கீரை.

கீரையிலுள்ள சத்துக்கள் : அழகுக்கு மட்டுமல்லாமல், மனிதருக்கு பல்வேறு நன்மைகளையும் அளிக்கக்கூடியது, ஆரைக்கீரை. உடல் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு அவசியமான இரும்புச்சத்து, கால்சியம், சோடியம், மாங்கனீஷ், வைட்டமின்கள் மற்றும் பச்சையம் எனும் ஊட்டம் நிரம்பிய அரிய வகைக் கீரை இதுவாகும்

நரம்பு நோய்கள் குணமாகும் : ஆரைக்கீரை உடலின் சூட்டைத்தணித்து, செரிமானமின்மை பாதிப்புகளை சரியாக்கும். இரத்தத்தை சுத்தம் செய்து, இரத்த சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களுக்கு, நிவாரணம் தரும். மன நல பாதிப்புகள் மற்றும் காக்கா வலிப்பு போன்ற நரம்பு வியாதிகளுக்கும் பெண்களின் வெள்ளைப்படுதல் பாதிப்புகளுக்கும், சிறந்த தீர்வாக அமைகிறது

வாய்ப்புண் குணமாகும் : ஆரைக்கீரைகள் சற்றே இனிப்புசுவை மிக்கவை, இந்தக் கீரைகளை நன்கு அலசி, பச்சையாகவே, மென்று தின்னலாம். இதனால், வாய்ப்புண் மற்றும் நாவின் சுவையின்மை பாதிப்புகள் விலகும். உடலில் செரிமான ஆற்றல் மேம்படும்.

சர்க்கரை பாதிப்பை சரி செய்யும் : ஆரைக்கீரைகளை நன்கு நிழலில் உலர்த்தி, அவற்றை இடித்து பொடியாக்கி, அந்தப் பொடியை, சிறிதளவு எடுத்து, நீரில் இட்டு, சுண்டக்காய்ச்சி, அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் இரு வேளை தொடர்ந்து பருகி வர, சர்க்கரை பாதிப்புகள் விலகி, சர்க்கரை அளவு, இரத்தத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். இந்த மூலிகை நீரே, சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது மற்றும் சிறுநீர் எரிச்சல் பாதிப்பையும் சரி செய்யும்.

நீர்க்கடுப்பு போக்கும், : நீர்க்கடுப்பு என்பது, சிறுநீர்த் தாரையில் தொற்று ஏற்பட்டு அதனால், கடுமையான வேதனை ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி ஏற்படும். ஆயினும், சிறுநீர் வராமல், வேதனை அதிகரிக்கும், எந்த வேலையிலும் ஈடுபட முடியாமல் மிகவும் சிரமம் தரும் இந்த பாதிப்பை, ஆரைக்கீரை மூலிகை நீர் சரிசெய்து, சிறுநீர்த்தாரை தொற்றை விலக்கி, சிறுநீரை இயல்பாக வெளியேற வைக்கும்

மன நல கோளாறுகளை சரி செய்யும் ஆரைக்கீரை.. சிலருக்கு பணிகளில் உள்ள பாதுகாப்பு இன்மையால், அல்லது குடும்ப நலப் பிரச்னைகளால், தேவையற்ற சிந்தனைகள் ஏற்பட்டு, அதனால் மன அழுத்தம் மிகுந்து, மனக்குழப்பத்தில் யாருடனும் இயல்பாக இருக்க முடியாமல், தனித்துக் காணப்படுவார்கள். ஆரைக்கீரையை கடைந்து சாதத்தில் இட்டு பிசைந்தோ அல்லது, கூட்டு மற்றும் பொரியல் போன்றோ செய்து, உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட்டு வர, மனதில் தேவையற்ற சிந்தனைகளால் ஏற்படும் மன அழுத்தம், மன பிரமை மற்றும் மன வேதனை போன்ற பாதிப்புகள் விலகி, மன நலம் மேம்படும். ஆரைக்கீரையின் பொடியை தினமும் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும், பாதிப்புகள் விலகும்.

ஆண்களின் உயிர் ஆற்றலை அதிகரிக்கும் :

ஆண்களின் உயிர் ஆற்றலை அதிகரிக்கும் : ஆரைக்கீரை பொடியை தினமும் சாப்பிட்டு வந்தாலோ அல்லது கீரையை உணவில் சேர்த்து வந்தாலோ, ஆண்களின் உயிர் ஆற்றலை வலுவாக்கி, அதிகரிக்க வைக்கும். பெண்களின் கருத்தரிப்பை விலக்கும் ஆரைக்கீரை... குடும்ப சூழ்நிலைகள் அல்லது, பணிகளின் நெருக்கடிகள் போன்ற சூழலில், பெண்கள் தாய்மையடைவதைத் தள்ளிப்போட எண்ணுவர். ஆயினும் அதற்கு, மருந்துகள் எடுத்துக்கொள்ளவும் அச்சப்படுவார்கள். அந்த மருந்துகளால், நிரந்தரமாக, கருத்தரிக்க வாய்ப்பில்லாமல், மகப்பேறடைய முடியாமல் போய் விடுமோ என்று. பெண்களின் இந்த அச்சங்களைத் தவிர்க்கும் ஒரு அரு மருந்தாக, இயற்கையாகக் கிடைக்கும், கருத்தடை மருந்தாக, பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை மூலிகையாக ஆரைக்கீரை திகழ்கிறது. ஆரைக்கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர, மகப்பேறை தள்ளிப்போட நினைக்கும் பெண்களின், கருத்தரிப்பை விலக்கும் தன்மை மிக்கது. மேலும், தாய்ப்பால் சுரப்பையும் தடை செய்யும்

எச்சரிக்கை : கவனம் தேவை.: வயிற்றில் மகவை சுமப்பவர்கள், கரு உண்டாகும் நிலையில் இருக்கும் பெண்கள், ஆரைக்கீரையை கட்டாயம் உணவில் இருந்து சேர்க்கக் கூடாது.

புளியாரைக் கீரையும், காய கற்ப மூலிகை வல்லாரையும் :

புளியாரைக் கீரையும், காய கற்ப மூலிகை வல்லாரையும் : ஆரையின் மற்ற வகையான புளியாரை இலைகள் வீக்கம் மற்றும் கட்டிகளைக் கரைக்கும், வயிற்றுப் புண்ணை குணமாக்கும், வயிற்றுப் போக்கு மற்றும் சூட்டு பேதி போன்ற பாதிப்புகளை நிறுத்தும். கீரைகளை சமைத்து சாப்பிட, உடல் சூடு தணியும்.

நோய் எதிர்ப்பு சக்தி : புளியாரைக்கீரைகளை சிறிய வெங்காயத்துடன் சேர்த்து அரைத்து மரு மற்றும் உண்ணிகள் மீது தினமும் தடவி வர, விரைவில் அவை மறைந்து விடும். வல்லாரைக்கீரை, பலன்கள் மிக அதிகம் தரும் காயகற்ப மூலிகையாகும். உடலின் பாதிப்புகளைத் தீர்க்கும் அற்புதமூலிகை வல்லாரை.

தினமும் வல்லாரை சூரணத்தை, தேனில் குழைத்தோ அல்லது தனித்தோ சாப்பிட்டுவர, உடல் வியாதி எதிப்பு ஆற்றல் மிகுந்து, உடல் வலுவாகத் திகழும். வல்லாரை, மன அழுத்த பாதிப்புகளைப் போக்கும், ஞாபக சக்தியை அதிகரித்து, மூளையின் ஆற்றலை வளமாக்கி, செயல்களில் சுறுசுறுப்பை தரும்.

 

https://tamil.boldsky.com/health/herbs/2018/regular-eating-of-marsilea-quadrifolia-improves-your-immunity/articlecontent-pf121833-019130.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.