Jump to content

தனது இரட்டை குழந்தைகளில் ஒன்றுக்கு வேறு தந்தை அதிர்ச்சியில் நபர்; ஒரு கோடியில் ஒன்றில் நடக்க வாய்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

எனது முதல் பதிவிலேயே நான் என்ன சொல்லவந்தேன் என்பதை புரிந்தும் புரியாதது போல் நடிக்கும் நீங்கள் புரிவதே விதண்டாவாதம்  நாதமுனி.  பரவாயில்லை நாம் இருவரும் எழுதிய கருத்துக்களை வாசிக்கும்  வாசகர்கள் புரிந்து கொள்வார்கள். 

வாசிப்பவர்களுக்கு நன்கு புரியும்....

ஆரம்பத்திலிருந்தே நகைச்சுவையாக போகும் ஒரு திரியை.... சீரியஸாக்கி... எங்கோயோ இழுத்து கொண்டோடுகிறீர்கள்...

முதலில் ரிலாக்ஸ் ப்ளீஸ்..... எந்த திரி போனாலும் சீரியஸ் ஆகி விடுவதன் காரணம் என்ன?

ஒரு தாய் மாதத்தில் இரண்டு முட்டைகளை வெளியிடும் போது வெவ்வேறு ஆண்களிடமிருந்து இரண்டு விந்தணுக்களால் கருவுற்றிருக்கும் போது ஹெட்டோரோபட்டர்னல் சூப்பர்ஃபெகண்டேஷன் ஏற்படுகிறது.

இங்கே இந்த நிலைமை IVF சிகிச்சை செய்தால் கூட வரலாமே...

இதனால் தான் பெண், வந்து என்ன நடந்தது என்று சொன்னால் அன்றி தெரிய வராது என்று ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன்.

பெண்ணின் வளர்ப்பு, சேர்ப்பு சரியில்லை என்றால்... உங்கள் அகராதியில் என்ன அர்த்தம் என்று எனக்கு தெரியாது.

தண்ணி அடிப்பதாக இருக்கலாம்.... படத்தில் இருப்பதை போல பிள்ளைகளை அந்த பிள்ளைகளின் ஒரு தகப்பன் பார்த்து கவலைப்படும் வகையில் விட்டதாக இருக்கலாம்....

அட விடுங்கப்பா....

Link to comment
Share on other sites

37 minutes ago, ராசவன்னியன் said:

இது 'ஊசி இடம் கொடுப்பதுனால்தானே நூல் நுழைகிறது..!' என்கிற விதத்தில் தெளிவு முடியும் பாருங்கள். 🤔

சமூகத்தில், தனிமனித ஒழுக்கத்தில் ஆண்கள் எப்படியும் இருக்கலாம், ஆனால் 'குடும்ப வாழ்க்கை நெறிமுறைக்கு' பெண்கள் ஒழுக்கமாக இருக்க கடமைப்பட்டவர்கள் என கட்டமைக்கபட்ட முறையில் எழும் மனோபாவம். (அது மது அருந்துதல் உட்பட.)

ராசவன்னியன் அவ்வாறு கட்டமைக்கப்பட்ட முறையைத் தான் நான் தவறு என்று கூறுகிறேன். ஒரு விடயம் தவறு என்று முடிவு  செய்யப்பட்டால் யார் செய்தாலும் அது  குற்றமே. சமூக ஒழுக்கம் என்பது இரு பாலாருக்கும் பொருந்தும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/5/2020 at 06:19, Nathamuni said:

அப்படி  இருக்க ஏலாதே...

பஸ்ஸில ஆள் ஏறினா..... உடன வெளிக்கிட்டுடம்....... நிண்டு மினக்கெடாது.

கருமுட்டையும் அதே போல தான்....

பாலியல் பலாத்காரம் இல்லாவிடில்..... பலர் ஒரே கட்டிலை பகிர்ந்து இருப்பர். தண்ணிய போட்டா... கதை அப்படி தானே...

நீஙகள் சொன்னது சரி...... ஆனால் பல மணிநேரத்தின் பின்னர் இல்லை. ஒரு சில நிமிட இடைவெளியில்.....

பஸ்.... Fபெஸ்ட் கியரை போட்டு, கிளம்ப, இரண்டாவது ஆள் ஓடிப்போய் ஏறியாச்சு....

கணக்கு..... கணவர் பெயரில்......

அவவின்ற வளர்ப்பு, சேர்ப்பு ....சரியில்லை...😎 

தூரப் பயணத்திற்கு பஸ் பிடிப்பதற்காக யாழ் நகர பஸ் தரிப்பிடத்திற்கு அதிகாலையில் போய் பூபாலசிங்கம் புத்தகசாலை அருகில் நின்றிருந்தபோது, அதற்கருகில் நடைபாதையோரமாக பிச்சையெடுப்பவர்கள் நித்திரையிலிருந்தனர். இன்னமும் பொழுது வெளிக்கவில்லை. அப்போது நித்திரையிலிருந்து எழுந்த  பிச்சைக்காரி தனது கணவனிடம் இரவு தன்னுடன் பாலுறவு வைத்திருந்தது நீதானே எனக் கேட்டிருக்கிறார். கணவர் இல்லை என்று கூறவும் மனைவி மிக மோசமான தூசண வார்த்தைகளால் சுற்றிப் படுத்திருந்த மற்றைய பிச்சையெடுப்பவர்களை ஏசத்தொடங்கியிருக்கிறார். அவர் கூறியது எவனோ ஒரு ............ தன்னுடன் .................

 

இது ஒரு உண்மைச் சம்பவம். எனது நல்ல நண்பரது அனுபவம். 

எனவே நீங்கள் கூறியபடி நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமுண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

தூரப் பயணத்திற்கு பஸ் பிடிப்பதற்காக யாழ் நகர பஸ் தரிப்பிடத்திற்கு அதிகாலையில் போய் பூபாலசிங்கம் புத்தகசாலை அருகில் நின்றிருந்தபோது, அதற்கருகில் நடைபாதையோரமாக பிச்சையெடுப்பவர்கள் நித்திரையிலிருந்தனர். இன்னமும் பொழுது வெளிக்கவில்லை. அப்போது நித்திரையிலிருந்து எழுந்த  பிச்சைக்காரி தனது கணவனிடம் இரவு தன்னுடன் பாலுறவு வைத்திருந்தது நீதானே எனக் கேட்டிருக்கிறார். கணவர் இல்லை என்று கூறவும் மனைவி மிக மோசமான தூசண வார்த்தைகளால் சுற்றிப் படுத்திருந்த மற்றைய பிச்சையெடுப்பவர்களை ஏசத்தொடங்கியிருக்கிறார். அவர் கூறியது எவனோ ஒரு ............ தன்னுடன் .................

 

இது ஒரு உண்மைச் சம்பவம். எனது நல்ல நண்பரது அனுபவம். 

எனவே நீங்கள் கூறியபடி நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமுண்டு. 

உங்கள் நண்பர் நல்லா அவிச்சிருக்கிறர் அல்லது அந்த பெண் முதல் நாள் இரவு நடந்ததை அனுபவித்திருக்கார்... 

Link to comment
Share on other sites

3 minutes ago, MEERA said:

உங்கள் நண்பர் நல்லா அவிச்சிருக்கிறர் அல்லது அந்த பெண் முதல் நாள் இரவு நடந்ததை அனுபவித்திருக்கார்... 

ம்..... இதனை ஒரு பெண் சொல்லும் போது நம்பும்படியாக இருக்கிறது. இதுவரை உங்கள் மீரா என்ற பெயர் மட்டும் தான் பெண் என்று நினைத்திருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணாகவே மாறிவிட்டீர்கள் போலும். எனது தனிப்பட்ட அபிப்பிராயப்படி மனிதருள் பெண்கள் ஆண்களிலும் பார்க்க அதிகம் கூர்ப்படைந்து உயர்ந்த நாகரிகத்தை கொண்டவர்கள். ஆகவே நீங்கள் பெண்ணாகி இருந்தால் வாழ்த்துகள். ஆண்களிலும் பார்க்க உயர்வான நாகரிக நிலையை அடைந்துவிட்டீர்கள். மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

உங்கள் நண்பர் நல்லா அவிச்சிருக்கிறர் அல்லது அந்த பெண் முதல் நாள் இரவு நடந்ததை அனுபவித்திருக்கார்... 

உண்மையில் முதலில் நான் நம்பவில்லை. ஆனால் கூடவே போன இன்னொரு நண்பரும் அதனை உறுதி செய்திருந்தார். நாங்கள் மூவரும் பல்கலை ஒரே batch and ஒரே room.  🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

தூரப் பயணத்திற்கு பஸ் பிடிப்பதற்காக யாழ் நகர பஸ் தரிப்பிடத்திற்கு அதிகாலையில் போய் பூபாலசிங்கம் புத்தகசாலை அருகில் நின்றிருந்தபோது, அதற்கருகில் நடைபாதையோரமாக பிச்சையெடுப்பவர்கள் நித்திரையிலிருந்தனர். இன்னமும் பொழுது வெளிக்கவில்லை. அப்போது நித்திரையிலிருந்து எழுந்த  பிச்சைக்காரி தனது கணவனிடம் இரவு தன்னுடன் பாலுறவு வைத்திருந்தது நீதானே எனக் கேட்டிருக்கிறார். கணவர் இல்லை என்று கூறவும் மனைவி மிக மோசமான தூசண வார்த்தைகளால் சுற்றிப் படுத்திருந்த மற்றைய பிச்சையெடுப்பவர்களை ஏசத்தொடங்கியிருக்கிறார். அவர் கூறியது எவனோ ஒரு ............ தன்னுடன் .................

 

இது ஒரு உண்மைச் சம்பவம். எனது நல்ல நண்பரது அனுபவம். 

எனவே நீங்கள் கூறியபடி நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமுண்டு. 

அத்துடன்... அந்தப் பெண், நிறை போதையில் இருந்திருந்தால்...
யார்.... என்று கண்டுபிடிப்பது, கஸ்ரம் என நினைக்கின்றேன்.

பிற்குறிப்பு: சத்தியமாக... எனக்கு இதில், முன் அனுபவம் இல்லை.:grin: வெறும் ஊகம்  மட்டுமே..... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அத்துடன்... அந்தப் பெண், நிறை போதையில் இருந்திருந்தால்...
யார்.... என்று கண்டுபிடிப்பது, கஸ்ரம் என நினைக்கின்றேன்.

பிற்குறிப்பு: சத்தியமாக... எனக்கு இதில், முன் அனுபவம் இல்லை.:grin: வெறும் ஊகம்  மட்டுமே..... 🤣

அண்ணா, நிறை போதையில் இருந்திருந்தால் 

1) நடந்தது நினைவில் இருக்காது

2) அடுத்த நாள் காலையில் இது தொடர்பாக கேட்டிருக்க மாட்டார்..

Quote

இன்னமும் பொழுது வெளிக்கவில்லை. அப்போது நித்திரையிலிருந்து எழுந்த  பிச்சைக்காரி தனது கணவனிடம் இரவு தன்னுடன் பாலுறவு வைத்திருந்தது நீதானே எனக் கேட்டிருக்கிறார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அத்துடன்... அந்தப் பெண், நிறை போதையில் இருந்திருந்தால்...
யார்.... என்று கண்டுபிடிப்பது, கஸ்ரம் என நினைக்கின்றேன்.

பிற்குறிப்பு: சத்தியமாக... எனக்கு இதில், முன் அனுபவம் இல்லை.:grin: வெறும் ஊகம்  மட்டுமே..... 🤣

நிறை போதையில் இருந்தால் ...என்று நீங்களே கூறிவிட்டீர்கள் 😂😂

அனுபவம் இருக்கா இல்லையா என்று போதை தெளிந்தபின் தெரியவா போகிறது சிறியரே 😜😜😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் ஒருவர் தனது மகளுக்கு உடுப்பு வாங்கி வரும் வழியில் மதுவை அனுபவிக்க சென்றிருக்கிறார்.அனுபவிப்பு முத்தி அந்த உடுப்பை அந்த வீட்டில குடுத்திட்டார்.அடுத்த நாள் மகளுடன் சன்டை தான் வாஙிகித்தந்த உடுப்பு எங்கே என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/5/2020 at 10:20, தமிழ் சிறி said:

ஓகே... நில்மினி,  உங்கள் முக்கிய அலுவல்களை... முடித்து விட்டு, வாருங்கள். :)
நாதமுனியும், குமாரசாமி அண்ணாவும்... இதற்கு பதில் தெரிய... 
மிகவும், ஆவலுடன் உள்ளார்கள். :grin: 🤣

இயற்கையில் ஒரு  Ovum தான் Ovary இல் இருந்து ஒவ்வொரு முறையும் வெளி வரும் . மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் இரண்டு Ovum வந்து இரண்டு வேறுபட்ட இரட்டை பிள்ளைகள் அல்லது ஒரு ஆண்  ஒரு பெண் என்று பிறக்கும்.  Fertility இற்கு பாவிக்கும் மருந்துகள் இயற்கையை மீறி ஒன்றிலும் பார்க்க கூடிய Ovum களை வெளியேற்றும். அதனால் இந்த பெண்மணிக்கு இரு முட்டைகள் வந்து இரு வேறு ஆண்களின்  உடன் fertilize  ஆகி  உள்ளது. இப்படி நடக்கக்கூடிய சந்தர்ப்பம் ஒரு மில்லியனில் ஒன்று எண்டாலும் அதுதான் ஒரே ஒரு சாத்தியம். Identical twins என்றால் ஒரு  ovum fertilize ஆகின உடன்  இரண்டாக பிரிந்து ஒரே மாதிரி இரட்டை பிள்ளைகளாக வரும். அல்லது இரண்டு Ovum வெளிப்பட்டு இரண்டும் Fertilize ஆகி இரட்டையராக இருந்தாலும்  இருவரும் வித்தியாசமாகவும் அல்லது ஆண் , பெண் என்றும் இருப்பர். ஆக இந்தப்பெண் இரு ஆண்களுடன் ஒரு நாளில்/24 மணித்தியாலத்திற்குள் தொடர்புகொண்டுள்ளார். ஏனெனில்  Ovum 24 மணித்தியாலத்துக்கு மேல் உயிர் வாழாது . Sperm ஒரு கிழமைக்கு உயிர் வாழும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

இயற்கையில் ஒரு  Ovum தான் Ovary இல் இருந்து ஒவ்வொரு முறையும் வெளி வரும் . மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் இரண்டு Ovum வந்து இரண்டு வேறுபட்ட இரட்டை பிள்ளைகள் அல்லது ஒரு ஆண்  ஒரு பெண் என்று பிறக்கும்.  Fertility இற்கு பாவிக்கும் மருந்துகள் இயற்கையை மீறி ஒன்றிலும் பார்க்க கூடிய Ovum களை வெளியேற்றும். அதனால் இந்த பெண்மணிக்கு இரு முட்டைகள் வந்து இரு வேறு ஆண்களின்  உடன் fertilize  ஆகி  உள்ளது. இப்படி நடக்கக்கூடிய சந்தர்ப்பம் ஒரு மில்லியனில் ஒன்று எண்டாலும் அதுதான் ஒரே ஒரு சாத்தியம். Identical twins என்றால் ஒரு  ஆகின உடன்  இரண்டாக பிரிந்து ஒரே மாதிரி இரட்டை பிள்ளைகளாக வரும். அல்லது இரண்டு Ovum வெளிப்பட்டு இரண்டும் Fertilize ஆகி இரட்டையராக இருந்தாலும்  இருவரும் வித்தியாசமாகவும் அல்லது ஆண் , பெண் என்றும் இருப்பர். ஆக இந்தப்பெண் இரு ஆண்களுடன் ஒரு நாளில்/24 மணித்தியாலத்திற்குள் தொடர்புகொண்டுள்ளார். ஏனெனில்  Ovum 24 மணித்தியாலத்துக்கு மேல் உயிர் வாழாது . Sperm ஒரு கிழமைக்கு உயிர் வாழும் 

நன்றி அக்கா..,

இப்படி ஒரு பெண் கணவன் என நினைத்து வேறோர் ஆணுடன் உடலுறவு கொள்ளலாமா? சந்தேகமின்றி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/5/2020 at 01:54, Kapithan said:

தூரப் பயணத்திற்கு பஸ் பிடிப்பதற்காக யாழ் நகர பஸ் தரிப்பிடத்திற்கு அதிகாலையில் போய் பூபாலசிங்கம் புத்தகசாலை அருகில் நின்றிருந்தபோது, அதற்கருகில் நடைபாதையோரமாக பிச்சையெடுப்பவர்கள் நித்திரையிலிருந்தனர். இன்னமும் பொழுது வெளிக்கவில்லை. அப்போது நித்திரையிலிருந்து எழுந்த  பிச்சைக்காரி தனது கணவனிடம் இரவு தன்னுடன் பாலுறவு வைத்திருந்தது நீதானே எனக் கேட்டிருக்கிறார். கணவர் இல்லை என்று கூறவும் மனைவி மிக மோசமான தூசண வார்த்தைகளால் சுற்றிப் படுத்திருந்த மற்றைய பிச்சையெடுப்பவர்களை ஏசத்தொடங்கியிருக்கிறார். அவர் கூறியது எவனோ ஒரு ............ தன்னுடன் .................

இது ஒரு உண்மைச் சம்பவம். எனது நல்ல நண்பரது அனுபவம். 

எனவே நீங்கள் கூறியபடி நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமுண்டு. 

இப்படியான சம்பவங்களால் இலங்கையில் வடகிழக்கில் அதிக சிசிக்கொலைகள் நடக்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது யாழ்ப்பாணத்தில் நேற்று ஒரு சிசிக்கொலை நடந்தது அதற்கு முன்னர் மட்டக்களப்பு மேற்குப்பகுதியில் ஒரு சிசுக்கொலை 

சம்பவம் இதுதான் ஒரு கணவன் வெளிநாடு நாலு குழந்தைகள் என சொன்னானுகள் வயதுக்கு வந்த பிள்ளைகள் பக்கத்தில் மண் ஏற்றுவதற்கு அதுவும்கள்ள மண் பல பேர் தண்ணி குடிக்க வந்து போயிருக்கானுகள் அதில  மகனின்ட கூட்டாளியும் தண்ணிய குடிச்சிட்டார் .

அந்த பெண்ணோ உன்னோட குழந்தைதான் வா ஆஸ்பத்திரிக்கு போவோம் மானம் மரியாதையெல்லாம் போயிடும்  என சொல்ல  அந்த பொடியனோ அது என்ற குழந்தை அல்ல என சொல்ல குழந்தை வலி வர இழுத்து  வெளியே விட்டு விட்டு சென்றுவிட்டார் குழந்தை இரத்த வாடையுடன் கிடக்க நாய் கவ்விக்கொண்டு சென்றுள்ளது குழந்தை இறந்து கிடந்ததை கண்ட கல் அரியும் தொழிலாளி பொலிசுக்கு தகவல்கொடுக்க பெண் கைதாகியுள்ளார் பெண் கடைசியாக கோல் எடுத்த நம்பரை வைத்து அந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார் 

மரபணு சோதனை செய்தால் மட்டுமே கண்டுகொள்ள முடியும் இந்த பிரச்சினைக்கு 

சம்பவம் உன்மை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

இயற்கையில் ஒரு  Ovum தான் Ovary இல் இருந்து ஒவ்வொரு முறையும் வெளி வரும் . மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் இரண்டு Ovum வந்து இரண்டு வேறுபட்ட இரட்டை பிள்ளைகள் அல்லது ஒரு ஆண்  ஒரு பெண் என்று பிறக்கும்.  Fertility இற்கு பாவிக்கும் மருந்துகள் இயற்கையை மீறி ஒன்றிலும் பார்க்க கூடிய Ovum களை வெளியேற்றும். அதனால் இந்த பெண்மணிக்கு இரு முட்டைகள் வந்து இரு வேறு ஆண்களின்  உடன் fertilize  ஆகி  உள்ளது. இப்படி நடக்கக்கூடிய சந்தர்ப்பம் ஒரு மில்லியனில் ஒன்று எண்டாலும் அதுதான் ஒரே ஒரு சாத்தியம். Identical twins என்றால் ஒரு  ovum fertilize ஆகின உடன்  இரண்டாக பிரிந்து ஒரே மாதிரி இரட்டை பிள்ளைகளாக வரும். அல்லது இரண்டு Ovum வெளிப்பட்டு இரண்டும் Fertilize ஆகி இரட்டையராக இருந்தாலும்  இருவரும் வித்தியாசமாகவும் அல்லது ஆண் , பெண் என்றும் இருப்பர். ஆக இந்தப்பெண் இரு ஆண்களுடன் ஒரு நாளில்/24 மணித்தியாலத்திற்குள் தொடர்புகொண்டுள்ளார். ஏனெனில்  Ovum 24 மணித்தியாலத்துக்கு மேல் உயிர் வாழாது . Sperm ஒரு கிழமைக்கு உயிர் வாழும் 

நன்றி நில்மினி. 
ஒரு மில்லியனில் சந்தர்ப்பங்களில்... இது நடக்கும் என்பதும், அதுகும்  சீனாவில் நடந்துள்ளது.  
இந்த வருசம் முழுவதும்... சீனாவை  சுற்றியே... முக்கிய செய்திகள் வந்து கொண்டுள்ளது. :)

Sperm ஒரு கிழமைக்கு உயிர் வாழும் என்ற செய்தி... ஆச்சரியமாக உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

நன்றி நில்மினி. 
ஒரு மில்லியனில் சந்தர்ப்பங்களில்... இது நடக்கும் என்பதும், அதுகும்  சீனாவில் நடந்துள்ளது.  
இந்த வருசம் முழுவதும்... சீனாவை  சுற்றியே... முக்கிய செய்திகள் வந்து கொண்டுள்ளது. :)

Sperm ஒரு கிழமைக்கு உயிர் வாழும் என்ற செய்தி... ஆச்சரியமாக உள்ளது. 

அத்துடன் சீனாவில் இரண்டாவது  பிள்ளை பிறந்தால் வருமானத்தில் இருந்து 20% வருடாவருடம் அபராதமாக கொஞ்ச காலங்கள் கொடுக்கவேணும் என்பதால் சீனர்கள்  fertility clinic இக்கு போய்   ஒரு முறையில் பல  Ovum கள் வர  மருத்துவ சிகிச்சை எடுக்கிறார்கள். இதனால் தற்போது சீனாவில் இரட்டை குழந்தைகள் அதிகம். ஏனெனில் இரட்டை அல்லது அதற்கு கூடிய குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்தால்  அபராதம் குடுக்க தேவை இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படியான சம்பவங்களால் இலங்கையில் வடகிழக்கில் அதிக சிசிக்கொலைகள் நடக்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது யாழ்ப்பாணத்தில் நேற்று ஒரு சிசிக்கொலை நடந்தது அதற்கு முன்னர் மட்டக்களப்பு மேற்குப்பகுதியில் ஒரு சிசுக்கொலை 

சம்பவம் இதுதான் ஒரு கணவன் வெளிநாடு நாலு குழந்தைகள் என சொன்னானுகள் வயதுக்கு வந்த பிள்ளைகள் பக்கத்தில் மண் ஏற்றுவதற்கு அதுவும்கள்ள மண் பல பேர் தண்ணி குடிக்க வந்து போயிருக்கானுகள் அதில  மகனின்ட கூட்டாளியும் தண்ணிய குடிச்சிட்டார் .

அந்த பெண்ணோ உன்னோட குழந்தைதான் வா ஆஸ்பத்திரிக்கு போவோம் மானம் மரியாதையெல்லாம் போயிடும்  என சொல்ல  அந்த பொடியனோ அது என்ற குழந்தை அல்ல என சொல்ல குழந்தை வலி வர இழுத்து  வெளியே விட்டு விட்டு சென்றுவிட்டார் குழந்தை இரத்த வாடையுடன் கிடக்க நாய் கவ்விக்கொண்டு சென்றுள்ளது குழந்தை இறந்து கிடந்ததை கண்ட கல் அரியும் தொழிலாளி பொலிசுக்கு தகவல்கொடுக்க பெண் கைதாகியுள்ளார் பெண் கடைசியாக கோல் எடுத்த நம்பரை வைத்து அந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார் 

மரபணு சோதனை செய்தால் மட்டுமே கண்டுகொள்ள முடியும் இந்த பிரச்சினைக்கு 

சம்பவம் உன்மை 

மிகவும் வேதனையான நிகழ்வு. ☹️

எங்கள் சமூகம் பல்வேறு வேண்டத்தகாத சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்து வர வேண்டியுள்ளது. பாலியல் அறிவும் இன்றியமையாதது. 🙂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.