Jump to content

முள்முடியான முள்ளிவாய்க்கால்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 10 people, child and outdoor

 

அணையா நெருப்பாய்

ஆண்டுகள் முப்பத்தாறு

உரிமைக்காய் சுழன்றடித்த

ஊழித்தீ

 

தன் உயிர் நெய்யூற்றி

தான் வாழவன்றி

செந்தமிழ் வாழ

சொந்தங்கள் செழிக்க

செருக்காய் ஒரு தேசம் அமைக்க

சோர்வின்றி எரிந்தது.!

 

தேசங்கள் பல

பொறாமை கொள்ள

முள்முடி தரித்து

முள்ளிவாய்க்காலில்

ஊதியணைக்கப்பட்டது

அந்த உரிமைத் தீ.

 

காலக் கடிகாரத்தின்

கரம் ஒன்று ஒடிந்து

தசாப்தம் ஒன்று ஆனது தமிழுக்கு.

 

கரிகாலன் படையது

கரிந்தே போனது

பொஸ்பரஸோடு மல்ரிபரல்கள் தூவிய

கந்தகப் புயலுக்குள்.

 

கருவிற் சுமந்த சிசுக்களாய்

புலிகள் சுமந்த - மக்கள்

சிதைந்தே போயினர்

சிங்களத்தான் செருக்கிற்கு.

 

மீளும் ஓர் வேளை

முள்ளிவாய்க்கால் தனில் முளைக்கும்

உயிர்ப் புற்கள் கூட 

கட்டியம் கூறும்

நந்திக்கடலும்

களிங்கம் பாடும்

உரிமை என்ற ஒன்றுக்காய்

உலகம் ஒன்றுகூடி

எமக்காய்

அழுங்காலம் வரும். 

 

அதுவரை

சோராது உழைப்போம்

சோரம் போவர் பின்

சேராமல் உழைப்போம்..

 

தோல்வியில் அல்ல

வெற்றியில் அல்ல

தேவையில் இருக்கிறது

ஒரு தேசத்தின் பிறப்பு

அதுவே வரலாறு.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான வரிகள், தேசத்தின் பிறப்புக்கு எம்மால் இயன்றதை செய்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகாசி-18

 

கோலமயில் தோகையிழந்தது

கூவும் குயில் குரல்வளை அறுந்தது

பாடும் மீன் ஓசையிழந்தது

தவளும் நண்டு கால்கள் முறிந்தது

முள்ளிவாய்க்காலில் இது நடந்தது.

 

காயமே ஆகாயம் என்றானது

காணாமல் போவது கணக்கில்லாமலானது

நம்பியவர்கள் கைவிட

நம்பியார்கள் கையோங்கியது.

 

பார்த்திருந்த ஆகாய மூன் கலங்கியது

பாங்கி மூன் ஜெனிவாவில் தூங்கியது

டெல்லியில் சொக்கத்தங்கம் மின்னியது

சென்னையில் கட்டுமரம் அதைத் துலக்கியது.

 

ஆறாறு ஆண்டுகள் சீறிப் பாய்ந்தது

அடிபட்டு மூச்சிழந்தது 

முறம்கொண்டு புலி விரட்டிய ஆச்சியது

பேரக்குஞ்சுகள் போரினில் சிதைந்தது.

 

ஓரிருவரா

ஆறுநான்கு உலகத்தார் ஒருங்கிணைந்து

தாக்கி அழிக்க

தாங்கி நிற்க

அதென்ன வெறும் வன்னிக்காடா

தசையும் இழையமும் பின்னிய மானுடம் தானே.

 

உள்ளத்தில் உரிமை வேட்கை

உடலினில் வேகம்

உடனிருந்தும்

கருவிகள் அங்கே கைவிட

சிங்கமேவிய போலிப்புனைவின் பிறப்புகள்

எதிரிகளாகி ஆங்கோர் கொடூரம் புரிந்தது

அடங்கியது தமிழ் ஈழ உயிர் மூச்சு.

 

அன்றில் இருந்து இன்றுவரை

ஆயிரம் சோகங்கள்

அடிமை வாழ்வில்

அடங்கி வாழ்வதே அழகாகிப் போனது.

 

எழும்பி நிற்க

கால்கள் இல்லை

பிடித்து நிற்க 

கரங்கள் இல்லை

இருந்தும்...

உள்ளே ஒரு ஏக்கம்

உறங்கித்தான் கிடக்கிறது..!!

 

ஆக்கம்: நான் (17.05.2020)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சை நெகிழவைக்கும் கவிதைகள்.........!   🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/5/2020 at 11:26, nedukkalapoovan said:

காலக் கடிகாரத்தின்

கரம் ஒன்று ஒடிந்து

தசாப்தம் ஒன்று ஆனது தமிழுக்கு.

 

உண்மையும் வலியும் சுமந்த வரிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: shoes, tree and outdoor

 

கந்தகத்தால் கருக்கிப் போட்டாலும்

கண்களை பிதுக்கிப் போட்டாலும்

கரங்களை கட்டிப் போட்டாலும்

கால்களை உடைத்துப் போட்டாலும்

காயத்தை அழித்துப் போட்டாலும்

கல்லறைகளை கிளறிப் போட்டாலும்

காத்து நின்ற காட்டு மரங்கள் நன்றி சொல்லும்

கரிகாலன் படைகளுக்கு அகவணக்கம் செய்யும்..!!

 

ஆக்கம்: நான் (17.05.2020)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலிகளுடன் மாட்டுதான் வாழ்கை கடந்து போகின்றது. இயன்ற அளவில் மக்களை முன்னேற்றி விடுவோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பிரபாகரன் ஒரு ஜீவநதி.. தமிழீழத் திருநாட்டின் வற்றாநதி. தமிழர் தேசிய உணர்வின் திருநதி. அதற்கு இல்லை என்றும் மறைவு..!!
 
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.