Jump to content

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் நினைவுகளும்


Recommended Posts

பிடிபட்டவர் பெண்ணாக இருக்கின்றார்...கையில் ஆயுதம் எதுவும் இல்லை... சுற்றிவர படையினர்... தங்கள் கைகளில் துப்பாக்கிகள் இருக்கின்றன...

இத்தனை இருந்தும் கூட பிடிபட்டவரின் கைகள் இறுக கட்டப்பட்டுத்தான் விசாரணைகள் நடந்தன... ஏனெனில் பிடிபட்டவர் தமிழீழ விடுதலை புலி !!!

98445879_1647623365389474_4513433186922921984_n.jpg?_nc_cat=107&_nc_sid=8024bb&_nc_ohc=KZjJ3uU0MPEAX_pGN-S&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=636370b926ad8a12e06e8c15ec1ccf2f&oe=5EE76560

# சிங்கள ராணுவத்திற்கு தனது பலமும் புலிகளின் பலமும் தெரிந்தபடியால்தான்... தமிழீழ விடுதலை படையணியை நேர்மையாக போரிட முடியாமல் துரோகத்தால் வீழ்த்தியது !!!

# முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழீழ கனவு புதைக்கப்படவில்லை... விதைக்கப்பட்டுள்ளது !!!

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உறங்குகிறார்

2009 இறுதிப்போர் காலகட்டம்...

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதவழங்கு வளங்கள் இந்திய அரசால் தடுத்து நிறுத்தப்பட்டு..,

இந்திய ராடார்கள் , எறிகணைகள் , தாக்குதல் திட்ட உதவிகள் , ஆளணி வழங்கல்கள் என இந்தியாவின் போரை இலங்கை இராணுவம் நடத்திக்கொண்டிருந்த நேரம்...

தம்பி பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்ட உடனே மத்தியில் ஆண்டு கொண்டிருந்த காங்கிரசின் இளம் தலைவர் ராகுல்காந்திக்கு தகவல் பறக்கிறது...!!

"பிடிபட்டிருப்பது சாதாரணமானவனல்ல...ஆயிரம் பிரபாகரன்களுக்கு சமம்...ஆனால் பாலச்சந்திரனை கொல்வது சர்வதேச போரியல் விதிகளுக்கு முரணான ஒன்று...ஏற்கனவே இனப்படுகொலை குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கிற நிலையில் இவனையும் கொல்வதா"..?

என்கிற கேள்விகள் அந்த இளம்தலைவர் முன் இலங்கை அரசால் வைக்கப்படுகிறது...!!

"பிரபாகரன் குடும்பத்தில் எவருமே மிஞ்சக்கூடாது...கொன்றுவிடுங்கள்" -என்ற உத்தரவு இங்கிருந்து தான் அனுப்பப்பட்டது...

இப்படித்தான் தம்பி பாலச்சந்திரன் பாய்ன்ட் ரேஞ்சில் நிறுத்தப்பட்டு 5 குண்டுகள் உள்ளிறங்க கொல்லப்பட்டது...!!

#இனப்படுகாெலை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், 'NIRUPAMA RAO Murderer & Criminal N.Ram He HINDU M.K NARAYANAN VIJAY NAMBIAR' எனக் கூறும் சாத்தியமுள்ள உரை

Link to comment
Share on other sites

வலிசுமந்த நினைவுகள் (2)

2009.05.15 மதியம் மணல் வீதியொன்றில் செல்கிறேன்.

மோட்டச்சைக்கிள் என்றால் நல்லா இருக்கும். என்று சுற்றும் முற்றும் தேடுகிறேன். ஒரு இடத்தில் மோட்டச்சைக்கிள் திறப்புடன் நின்றது. இராணுவத்திடம் சரணடைந்த யாரோ விட்டுச்சென்றிருக்க வேண்டும்.

அருகில் பெரிய பங்கர் அமைத்த குடில். மக்கள் யாருமில்லை. இறங்கி பார்த்தேன். ரீவி டெக் எல்லாம் செற்பண்ணின படி இருந்தது. சோளர் மூலம் இயங்கும் படி அமைக்கப்பட்டிருந்தது. சுவிச்சை போட்டதும் தானாக படம் ஓடியது. டெக் கினுள் கொப்பி இருந்திருக்க வேண்டும். நகுல் நடித்த "சக்கரக்கட்டி" படம். பங்கர் நல்ல பாதுகாப்பாக இருந்தது. பொருட்கள் எல்லாம் அப்பிடியே இருந்தது. ஆட்கள் யாருமில்லை.

நான் மோட்டச்சைக்கிளை எடுத்து பெற்றோலை பார்த்தேன். பெற்றோல் இருக்கு. அதை ஸ்ராட் பண்ணி அதில் ஓடிக்கொண்டிருக்கிறேன். ரவைகள் செல்லும் சத்தமான "கினிச் கினிச்" கேட்டுக்கொண்டிருந்தன. வெள்ளா முள்ளிவாய்க்கால் என்று நினைக்கிறேன். த.போ.க பேருந்து ஒன்று வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்தது. மக்கள் நடமாடிக்கொண்டிருந்தனர்.

அழுகுரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. எறிகணைகள் விழுந்து கொண்டே இருந்தன. துப்பாக்கி ரவைகளும் சென்று கொண்டிருந்தன. இறந்தவர்களை அப்பிடியே விட்டுவிட்டு தான் மக்கள் ஓடினார்கள். காயப்பட்டவர்களைதூக்க கூட முடியாத தருணம் தான் அது.

வெடிச்சத்தம் கேட்டால் அங்கே அழுகுரலும் கேட்கும். நான் சென்று கொண்டிருந்த வேளை வீதியோரத்தில் ஆண் ஒருவரின் பிணம் ஒன்று அநாதராவாக இரத்தம் தோய்ந்தபடி கிடந்தது.

சற்று தள்ளி ஒரு அம்மா தனது பிள்ளை செத்திட்டான். பிள்ளையை அநாதை போல விட்டிற்று வந்திட்டன் என்று நிலத்தில் விழுந்து அழுதுகொண்டிருந்தார்..

நான் எனக்கு தெரிந்தவர்கள் யாரையாவது காணமுடியுமா என்று தேடுகிறேன். ஒரு ஐயா வந்தார். தம்பி நேற்று இதில நிண்டு சுப்பரொட்டை இழுத்துவிட்டு போக்கில ஒருத்தன் கதைச்சவன். கதைச்சிட்டு போன உடன செல்லடிச்சவங்கள். மனிசின்ர தம்பி குடும்பம் அதிலயே போய்ட்டினம். பிறகு தான் தெரிஞ்சது போக்கி கதைச்சவன் ஆமின்ர றெக்கி காரனாம். நீங்களும் போக்கி வைச்சிருக்கிறியள் கதைச்சு போடாதேங்கோ. என்றார்.

நான் சொன்னேன் விடுதலைப்புலிகளைப்போல மக்களுக்குள் ஒட்டுக்குழுக்கள் நிறைய ஊடுருவியிருக்கினம். மக்களை எல்லாம் அவங்கள் தான் சுடுறாங்கள். உள்ளுக்கு போற சனங்களை சுட்டு திருப்பி அனுப்பிறாங்கள் என்றேன். அவரும் ஓம் தம்பி என்றார். இனி உள்ளுக்கு போறது தான் சரி ஐயா என்றேன். எல்லாம் முடியயோகுது என்ன தம்பி என்று கவலையாக சொன்னார். என்ர இரண்டாவது பொடியனும் போராளிதானப்பு. அவன தேடிக்கொண்டிருக்கிறன். அவனை கூட்டி கொண்டுதான் போவன் என்றார்
சரி ஐயா கவனம் என்று விடை பெற்றேன்.

நினைவுகள் தொடரும்..

த.நிறஞ்சன்
மல்லாவி.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

Link to comment
Share on other sites

மலாலா'காகவும், நிர்பயாவுகாகவும் போராடி விட்டு #இசைப்பிரியா யாரென்றே தெரியாதவர்கள் தான் இங்குள்ள 'பெமினிஸ்ட்கள்'...

பாலஸ்தீன விடுதலையை ஆதரித்துவிட்டு, காஸ்மீர் விடுதலைகாக கதறி விட்டு, #தமிழீழ_விடுதலைக்காக தப்பித்தவறியும் வாய் திறக்காதவர்கள் தான் இங்குள்ள இடதுசாரி அறிவுசீவிகள்...

மத்தியகிழக்கு நாடுகளின் மீதான அமெரிக்க ஏகாதிபத்யத்தையும் அங்குள்ள எதிர்ப்பு கூறுகளையும் எதிர்த்து விட்டு, இது ரெண்டுமே நிகழ்ந்த #ஈழத்தை பற்றி பேச மறுப்பவர்கள் தான் இங்குள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள்...

இந்திய இந்துத்துவவினர், தலித் மக்களின் மீது நிகழ்த்தும் அநீதிகளுக்காக குரல் கொடுத்துவிட்டு #விடுதலைப்_புலிகளின் மீது நிகழ்ந்த ஒடுக்குமுறைகளை கண்டும் காணாமல் சென்றவர்கள் தான் இங்குள்ள தலீத்திய பாதுகாவலர்கள்...

உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சியை புகழ்ந்து பாடிவிட்டு, (சிறு)கடல் கடந்து வாழும் எம் #தமிழீழ சொந்தகளின் வெற்றியை கொண்டாட தவிர்த்த உத்தமர்கள் தான் இங்குள்ள ஒடுக்குமுறை எதிர்ப்பாளர்கள்...

_ஆகவே என் அன்பான #உலகமகா #நடிகர்களே நீங்கள் எதைப்பற்றி பேசுகிறீர்கள் என்பது அல்ல அரசியல், நீங்கள் எதை பேச மறுக்கிறீர்கள் என்பது தான் உங்கள் அரசியல்...

 

=== முகநூல் ==== 

Link to comment
Share on other sites

On 18/5/2020 at 15:01, ampanai said:

 

2009 இறுதிப்போர் காலகட்டம்...

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதவழங்கு வளங்கள் இந்திய அரசால் தடுத்து நிறுத்தப்பட்டு..,

இந்திய ராடார்கள் , எறிகணைகள் , தாக்குதல் திட்ட உதவிகள் , ஆளணி வழங்கல்கள் என இந்தியாவின் போரை இலங்கை இராணுவம் நடத்திக்கொண்டிருந்த நேரம்...

தம்பி பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்ட உடனே மத்தியில் ஆண்டு கொண்டிருந்த காங்கிரசின் இளம் தலைவர் ராகுல்காந்திக்கு தகவல் பறக்கிறது...!!

"பிடிபட்டிருப்பது சாதாரணமானவனல்ல...ஆயிரம் பிரபாகரன்களுக்கு சமம்...ஆனால் பாலச்சந்திரனை கொல்வது சர்வதேச போரியல் விதிகளுக்கு முரணான ஒன்று...ஏற்கனவே இனப்படுகொலை குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கிற நிலையில் இவனையும் கொல்வதா"..?

என்கிற கேள்விகள் அந்த இளம்தலைவர் முன் இலங்கை அரசால் வைக்கப்படுகிறது...!!

"பிரபாகரன் குடும்பத்தில் எவருமே மிஞ்சக்கூடாது...கொன்றுவிடுங்கள்" -என்ற உத்தரவு இங்கிருந்து தான் அனுப்பப்பட்டது...

இப்படித்தான் தம்பி பாலச்சந்திரன் பாய்ன்ட் ரேஞ்சில் நிறுத்தப்பட்டு 5 குண்டுகள் உள்ளிறங்க கொல்லப்பட்டது...!!

#இனப்படுகாெலை

 

அம்பனை இனப்படுகொலையை நினைவு கூரும் போது இப்படி ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை வைப்பது ஏன்? ராகுல் காந்தியிடம் இருந்து அப்படி ஒரு தகவல் பறந்த‍தாக ஒருவரின் கற்பனையில் உதித்த‍த்தை வரலாறாக மாற்றுவதால் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு என்ன லாபம்?  நினைவு கூரல் என்பது இப்படி பொய்களை கூறுவதா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

அம்பனை இனப்படுகொலையை நினைவு கூரும் போது இப்படி ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை வைப்பது ஏன்? ராகுல் காந்தியிடம் இருந்து அப்படி ஒரு தகவல் பறந்த‍தாக ஒருவரின் கற்பனையில் உதித்த‍த்தை வரலாறாக மாற்றுவதால் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு என்ன லாபம்?  நினைவு கூரல் என்பது இப்படி பொய்களை கூறுவதா?  

உங்களால் அது பொய் என ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியுமா?

Link to comment
Share on other sites

3 minutes ago, குமாரசாமி said:

உங்களால் அது பொய் என ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியுமா?

குற்றச்சாட்டை கூறுபவர்தான் அதை நீருபிக்க வேண்டும். இவ்வாறு  வாய்க்கு வந்தபடி எமது ஆத்திரத்தை யும் வெறுப்பையும் காட்டுவன் மூலம் எமக்கு நீதி கிடைக்காது என்பதை உணர வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

குற்றச்சாட்டை கூறுபவர்தான் அதை நீருபிக்க வேண்டும். இவ்வாறு  வாய்க்கு வந்தபடி எமது ஆத்திரத்தை யும் வெறுப்பையும் காட்டுவன் மூலம் எமக்கு நீதி கிடைக்காது என்பதை உணர வேண்டும். 

கண்டன் கிண்டவன் குருவி சுட்டவனேல்லாம் விடுதலைப்புலிகள் மீது எல்லா பழிகளையும் சுமத்தியதை பற்றியெல்லாம் பேசமாட்டீர்கள். 

Link to comment
Share on other sites

19 minutes ago, tulpen said:

அம்பனை இனப்படுகொலையை நினைவு கூரும் போது இப்படி ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை வைப்பது ஏன்? ராகுல் காந்தியிடம் இருந்து அப்படி ஒரு தகவல் பறந்த‍தாக ஒருவரின் கற்பனையில் உதித்த‍த்தை வரலாறாக மாற்றுவதால் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு என்ன லாபம்?  நினைவு கூரல் என்பது இப்படி பொய்களை கூறுவதா?  

எமக்கு நடந்த படுகொலையில், தமிழக உறவுகள் மத்தியில் கடந்த 11 வருடங்களாக அதிகமாக பேசப்படுவது தலைவரின் மகனின் படுகொலை. திருத்தம், ஒரு சிறுவனின் படுகொலை. அவ்வகையில், இதுவும் ஒரு தமிழக உறவின் குறிப்பு/கணிப்பு. 

பல சிறுவர்கள் சித்திரவதை முகாம்கள் சென்று திரும்பிய நிலையில், இவர் மீண்டும் வாழக்கூடாது என பெரிய இடத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

அந்த முடிவிற்கு நிச்சயம் சொந்தக்காரர்கள் சிங்களவர்களே. ஆனால், சோனியா குடும்பமும் நிச்சயம் பங்காளிகளே. அவர்கள், தலைவரின் குடும்பம் அழிக்கப்பட வேண்டும் என்பதற்கு "என்ன விலையை கொடுத்தேனும்" என்றே செயல்பட்டார்கள். அதனால், இணைத்தேன். 

யார் இந்த சிறுவனை படுகொலை செய்ய உத்தவிட்டார்கள் என விசாரணை செய்து, நீதியை நிலைநாட்டுங்கள், உண்மை வரட்டும். 

Link to comment
Share on other sites

3 minutes ago, குமாரசாமி said:

கண்டன் கிண்டவன் குருவி சுட்டவனேல்லாம் விடுதலைப்புலிகள் மீது எல்லா பழிகளையும் சுமத்தியதை பற்றியெல்லாம் பேசமாட்டீர்கள். 

விடுதலை புலிகள் மீது அபாண்டமான பழிகளை சுமத்துவதை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் அதற்காக நாமும் உணர்ச்சி வசப்பட்டு இப்படி அபாண்டமாக பழி சுமத்த வேண்டும் என்று கூறுவதும் சரியான அணுகுமுறை அல்ல. அதனால் எமக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.

3 minutes ago, ampanai said:

எமக்கு நடந்த படுகொலையில், தமிழக உறவுகள் மத்தியில் கடந்த 11 வருடங்களாக அதிகமாக பேசப்படுவது தலைவரின் மகனின் படுகொலை. திருத்தம், ஒரு சிறுவனின் படுகொலை. அவ்வகையில், இதுவும் ஒரு தமிழக உறவின் குறிப்பு/கணிப்பு. 

பல சிறுவர்கள் சித்திரவதை முகாம்கள் சென்று திரும்பிய நிலையில், இவர் மீண்டும் வாழக்கூடாது என பெரிய இடத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

அந்த முடிவிற்கு நிச்சயம் சொந்தக்காரர்கள் சிங்களவர்களே. ஆனால், சோனியா குடும்பமும் நிச்சயம் பங்காளிகளே. அவர்கள், தலைவரின் குடும்பம் அழிக்கப்பட வேண்டும் என்பதற்கு "என்ன விலையை கொடுத்தேனும்" என்றே செயல்பட்டார்கள். அதனால், இணைத்தேன். 

யார் இந்த சிறுவனை படுகொலை செய்ய உத்தவிட்டார்கள் என விசாரணை செய்து, நீதியை நிலைநாட்டுங்கள், உண்மை வரட்டும். 

பாலச்சந்திரனின் படுகொலைக்கு கோத்தாபாய பொறுப்பு என்றால் அது சரியாக இருக்கும். அதை எம்மாலும் விளங்கி கொள்ள முடிகிறது. ராகுல் காந்தி உத்தரவிட்டார் என்றால் அது எப்படி உண்மையாகும். யாரோ ஒரு பெயர் முகவரி தெரியாதவரின் கணிப்பை எல்லாம் உண்மை என்று நம்பமுடியாது. 

Link to comment
Share on other sites

4 minutes ago, tulpen said:

பாலச்சந்திரனின் படுகொலைக்கு கோத்தாபாய பொறுப்பு என்றால் அது சரியாக இருக்கும். அதை எம்மாலும் விளங்கி கொள்ள முடிகிறது. ராகுல் காந்தி உத்தரவிட்டார் என்றால் அது எப்படி உண்மையாகும். யாரோ ஒரு பெயர் முகவரி தெரியாதவரின் கணிப்பை எல்லாம் உண்மை என்று நம்பமுடியாது.

அப்படியானால், சிங்களம் ஒரு சர்வதேச நீதிமன்றத்தில் உண்மையை நிரூபிக்க உதவுங்கள். 

Link to comment
Share on other sites

4 minutes ago, ampanai said:

அப்படியானால், சிங்களம் ஒரு சர்வதேச நீதிமன்றத்தில் உண்மையை நிரூபிக்க உதவுங்கள். 

சரி உதவ நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள். இப்படியாக இணைத்தில் சகட்டு மேனிக்கு எழுதப்படும் பொய் குற்ற சாட்டுகளுக்கு ஜால்ரா அடிக்க வேண்டும். அல்லது நானும் எனது கற்பனையில் யார் மீதாவது வெறுப்பு பொய்குற்றசாட்டுகளை சாட்டவேண்டும் . அப்படி தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎18‎-‎05‎-‎2020 at 14:01, ampanai said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உறங்குகிறார்

2009 இறுதிப்போர் காலகட்டம்...

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதவழங்கு வளங்கள் இந்திய அரசால் தடுத்து நிறுத்தப்பட்டு..,

இந்திய ராடார்கள் , எறிகணைகள் , தாக்குதல் திட்ட உதவிகள் , ஆளணி வழங்கல்கள் என இந்தியாவின் போரை இலங்கை இராணுவம் நடத்திக்கொண்டிருந்த நேரம்...

தம்பி பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்ட உடனே மத்தியில் ஆண்டு கொண்டிருந்த காங்கிரசின் இளம் தலைவர் ராகுல்காந்திக்கு தகவல் பறக்கிறது...!!

"பிடிபட்டிருப்பது சாதாரணமானவனல்ல...ஆயிரம் பிரபாகரன்களுக்கு சமம்...ஆனால் பாலச்சந்திரனை கொல்வது சர்வதேச போரியல் விதிகளுக்கு முரணான ஒன்று...ஏற்கனவே இனப்படுகொலை குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கிற நிலையில் இவனையும் கொல்வதா"..?

என்கிற கேள்விகள் அந்த இளம்தலைவர் முன் இலங்கை அரசால் வைக்கப்படுகிறது...!!

"பிரபாகரன் குடும்பத்தில் எவருமே மிஞ்சக்கூடாது...கொன்றுவிடுங்கள்" -என்ற உத்தரவு இங்கிருந்து தான் அனுப்பப்பட்டது...

இப்படித்தான் தம்பி பாலச்சந்திரன் பாய்ன்ட் ரேஞ்சில் நிறுத்தப்பட்டு 5 குண்டுகள் உள்ளிறங்க கொல்லப்பட்டது...!!

#இனப்படுகாெலை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், 'NIRUPAMA RAO Murderer & Criminal N.Ram He HINDU M.K NARAYANAN VIJAY NAMBIAR' எனக் கூறும் சாத்தியமுள்ள உரை

இப்படி எழுதுவதன் மூலம் அந்த பிள்ளை கொலை செய்யப்பட்டதிற்கு நீங்களே சரியான  நியாயம் கற்பிக்கிறீர்கள்😟 
 

Link to comment
Share on other sites

1 minute ago, tulpen said:

சரி உதவ நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள். இப்படியாக இணைத்தில் சகட்டு மேனிக்கு எழுதப்படும் பொய் குற்ற சாட்டுகளுக்கு ஜால்ரா அடிக்க வேண்டும். அல்லது நானும் எனது கற்பனையில் யார் மீதாவது வெறுப்பு பொய்குற்றசாட்டுகளை சாட்டவேண்டும் . அப்படி தானே.

உண்மைகளை திட்டமிட்டு ஒளிக்கும்வரை, இதுவும் உண்மையே.  

நம்புவதும் மறுப்பதும் உங்கள் உரிமை, சுதந்திரம். 

Link to comment
Share on other sites

4 minutes ago, ampanai said:

உண்மைகளை திட்டமிட்டு ஒளிக்கும்வரை, இதுவும் உண்மையே.  

நம்புவதும் மறுப்பதும் உங்கள் உரிமை, சுதந்திரம். 

இதில் நம்புவது மறுப்பது என்று எதுவும் இல்லை அம்பனை.  வெறுப்பிற்காக குற்ற சாட்டுகளை சுமத்த கூடாது. அதுவும் ஏவரோ ஒர தெருவிலை போகும் ஒருவரின் அனுமானம் எல்லாம் உண்மை ஆகிவிடாது.  இப்படி கண்டவர் மீது எல்லாம் குற்றம் சாட்டுவதும் ஒரு தந்திரமாக கூட இருக்கலாம். 

Link to comment
Share on other sites

1 minute ago, tulpen said:

இதில் நம்புவது மறுப்பது என்று எதுவும் இல்லை அம்பனை.  வெறுப்பிற்காக குற்ற சாட்டுகளை சுமத்த கூடாது. அதுவும் ஏவரோ ஒர தெருவிலை போகும் ஒருவரின் அனுமானம் எல்லாம் உண்மை ஆகிவிடாது. 

துல்பன்,

"இதில் நம்புவது மறுப்பது என்று எதுவும் இல்லை" - என்பதை கண்டிக்கின்றேன். 

இது குற்றச்சாட்டு மட்டும் அல்ல. ஆதாரங்களை நிலைமைகளை நடந்தவற்றவைகளை கேட்டதுகளை வைத்து எடுக்கப்பட்ட அனுமானம். 

ஒன்றும் இல்லாமல் எழுந்தமானமாக வந்தது அல்ல. 

இந்தியா, குறிப்பாக அன்றைய காங்கிரஸ்,  தமிழின போராட்டத்தையும் தலைமையையும் என்ன விலை கொடுத்தேனும் அழிக்க வேண்டும் என்றதில் போர்க்குற்றம் புரிந்தவர்கள். 

நன்றி. 

Link to comment
Share on other sites

மாவிலாற்றில் நகரத் தொடங்கி.....
முள்ளிவாய்க்காலில் உயிர் துறந்து.....
தமிழினம் முழுவதற்கும் முகவரி தந்த
அனைத்து தமிழ் உறவுகளுக்குமான
என் படையல் ........

ஆதிலட்சுமி சிவகுமார்

UzpfSTEwMDAwOTM5MTQ5MTc0MjoyNjY5NTQ2Nzc2

Link to comment
Share on other sites

35 minutes ago, ampanai said:

துல்பன்,

"இதில் நம்புவது மறுப்பது என்று எதுவும் இல்லை" - என்பதை கண்டிக்கின்றேன். 

இது குற்றச்சாட்டு மட்டும் அல்ல. ஆதாரங்களை நிலைமைகளை நடந்தவற்றவைகளை கேட்டதுகளை வைத்து எடுக்கப்பட்ட அனுமானம். 

ஒன்றும் இல்லாமல் எழுந்தமானமாக வந்தது அல்ல. 

இந்தியா, குறிப்பாக அன்றைய காங்கிரஸ்,  தமிழின போராட்டத்தையும் தலைமையையும் என்ன விலை கொடுத்தேனும் அழிக்க வேண்டும் என்றதில் போர்க்குற்றம் புரிந்தவர்கள். 

நன்றி. 

அம்பனை இந்திய அரசு தமிழீழ விடுதலை போராட்ட‍த்திற்கு எதிரான நடவடிக்கைகளை 1985  ம் ஆண்டே ஆரம்பித்து விட்டது. அது இந்திய அரசின் கொள்கை. அது தெரிந்து  தான் பிரபாகரன் இந்தியாவில் இருந்த தனது தளங்களை மூடி விட்டு  ஈழம் திரும்பி  போராட்டத்தை ஆரம்பித்தார்.  இந்தியா இலங்கைக்கு உதவி செய்த‍த்து ஒன்றும் இரகசியம் அல்ல. அதற்காக ராகுல் காந்தி தனிப்பட்ட ரீதியில்  குறிவைத்தை பாலச்சந்திரனை கொலை செய்ய தகவல் அனுப்பினார் என்று  ஒவராக சீன் போடுவது  தேவையற்ற விடயம்.  இப்படி தான் இறுதி யுத்த காலத்தில்  ஆர்வ கோளாற்றால் எங்கோ ஆபிரிக்காவில் நடந்த படுகொலை படத்தை இலங்கையில் நடந்த‍தாக கூற புறப்பட்டு இலங்கை அரசால் அந்த படத்தின் உண்மைத்தன்மை  நிரூபிக்க பட உண்மை இழப்புகளை சந்தித்த நாம் பொய் சொன்னவர்கள் ஆகினோம். 

Link to comment
Share on other sites

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

 

And Genocides do not just happen. The Tamil Genocide of May 2009 was the culmination of a 60 year effort at ethnic cleansing by successive Sinhala Sri Lanka Governments. The record speaks…. @

https://tamilnation.org/indictment/index.htm

 

Link to comment
Share on other sites

“முள்ளிவாய்க்கால் கஞ்சி”

?__tn__=,dCH-R-R&eid=ARB6eCsrgaYfyimejvo

 
Link to comment
Share on other sites

தமிழின இன அழிப்பு நாளான நேற்று மட்டும் Australia, USA, Canada, பிரித்தானியா வில் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்த அரசியல் தலைவர்களின் சமூக வலைத்தளங்களின் செய்திகளுக்கு சிறிலங்கன் தமிழின எதிர்ப்பாளர்கள் கீழ்த்தரமாக தமது வக்கிரத்தை பின்னூட்டம் மூலம் காட்டியுள்ளனர்.. 

புலம் பெயர் தமிழர்களில் எத்தனையோ படித்தவர்கள் இருந்தும் தமது கருத்தை சொல்ல பின்னின்றனர். 

ஆனால் ஊர் சண்டை, பழைய மாணவர் சண்டை, பிரதேச சண்டை, மத விவாதங்கள் ... இப்படி தமக்குள் பக்கம் பக்கமாக புலம்புவார்கள். அந்த நிலை மாறட்டும்.  

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவுநாள் மே 18, 2020
எனது தந்தையின் தலைமுறை முதல், என் தலைமுறை ஊடாக ..எங்கள் பிள்ளைகளின் தலைமுறை..அவர்கள் பிள்ளைகளின் தலைமுறையென எம்மினத்தின் ஆறாத ரணத்தையும் சங்கிலித் தொடராக நிகழ்ந்த, நிகழும் இனப்படுகொலையின் வலிகளைப் பாடிக்கொண்டே இருப்பார்கள்..
 
எமக்கான தேசம் மீண்டும் எழும்வரை!
 
எங்கள் குடும்பத்தில் இருந்து ஒளிவிளக்கேற்றி இப்படிப் பாடுகிறாள் லக்சனியா நிதிகரன்.
 
 
Link to comment
Share on other sites

#Tamil #WeRemember2009 #Mullivaikal2009 #Tamileelam #May18thTamilGenocideRemembranceDay.

 

தமிழினப் படுகொலைகளுக்கான நீதி தாமதமாகலாம்! ஆனால் நிச்சயம் கிடைக்கும்; - ஜஸ்மின் சூக்கா!ஈழத்தமிழர்கள் போற்ற வேண்டிய தேவதைகளில் ஜஸ்மின் சூக்கா அம்மையாரும் ஒருவர்!
 
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் பான்கீமூனால் அமைக்கப்பட்ட குழுவின் இலங்கை தொடர்பான விவகாரத்திற்கு பொறுப்பாக இருந்த உறுப்பினரும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் (ITJP) நிறைவேற்றுப் பணிப்பாளருமாகஇருந்தவர்தான் இந்த ஜஸ்மின் சூக்கா.ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக சர்வதேச அரங்கில் குரல் கொடுத்து வருபவர்.ஈழத்தமிழர்கள் போற்ற வேண்டிய தேவதைகளில் ஜஸ்மின் சூக்கா அம்மையாரும் ஒருவர்!
 
முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட தமிழினப் படுகொலைகளுக்கான நீதி தாமதமாகலாம் . ஆனால் நிச்சம் கிடைக்கும் . அதுவரை நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்று இயக்குநர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
 
முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ள வீடியோ செய்தியொன்றில் அவா் இவ்வாறு கூறியுள்ளார்.
 
98472023_1184481021899379_7438191549109764096_n.jpg?_nc_cat=109&_nc_sid=8bfeb9&_nc_ohc=Xy4OeRzoPDwAX920b_z&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=9223fca93e3a838206e192fe511c139e&oe=5EEC0B03
 
பாதிக்கப்பட்டவா்களிடம் நான் கோருவது இதுதான். நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடாதீா்கள். கொல்லப்பட்ட மக்கள் குறித்க கதைகளை தொடா்ந்தும் பேசிக்கொண்டிருங்கள்.
 
இதன்மூலம் அந்த மரணங்கள் அா்த்தமற்றதாக மாறுவதைத் தடுக்க முடியும் எனவும் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளா்.
 
யுத்தத்தின் இறுதியில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோரை நினைவுகூரும் மே-18 இந்த நாளில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தைச் சோ்ந்த நானும் எங்கள் சகாக்களும் அஞ்சலியை செலுத்துகின்றோம்.
 
காணாமல்போனவர்களின் உறவினர்கள் குடும்பத்தவர்களிற்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
மோதல் முடிவிற்கு வந்து பல வருடங்களின் பின்னரும் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்து இறுதியான உறுதியான ஒரு எண்ணிக்கையை முன்வைக்க முடியாமலுள்ளதை கொடுமையான ஒரு செயலாக நாங்கள் கருதுகின்றோம்.
 
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு வெறுமனே உயிர்தப்பியவர்களின் ஆவணங்களை பதிவு செய்வதை மாத்திரம் மேற்கொள்ளவில்லை. மாறாக யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்கான ஆதாரங்கள், தடயங்களை சேகரித்து ஆவணப்படுத்திவருகிறது. 
 
இதன் காரணமாக ஒரு நாள் அவற்றிற்கு காரணமானவர்களை நாங்கள் பொறுப்புக்கூறச் செய்யலாம்.
 
கடந்த ஐந்து வருடங்களாக நாங்கள் எங்களிடமுள்ள ஆவணங்களை பயன்படுத்தி கொலைகளிற்கு காரணமானவர்களின் பெயர்களை பகிரங்கப்படுத்தி வருகின்றோம்.
மேலும் நாங்கள் சாத்தியமான சூழ்நிலைகளில் அவர்களிற்கு எதிராக சர்வதேச நியாயாதிக்க எல்லைக்குள் நீதிமன்ற நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்.
 
சிலர் வெளிநாடுகளிற்கு பயணம் செல்லமுடியாத நிலையையும் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் பணியாற்ற முடியாத நிலையையும் உருவாக்குவதில் நாங்கள் வெற்றியடைந்துள்ளோம்.
 
இலங்கை ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்ற பின்னர் அவர் முக்கிய பதவிகளிற்கு யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளார் என்பதையும் நாங்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்று இயக்குநர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.