Jump to content

Recommended Posts

ஆயுதப் போராட்டத்தை ஒருநாளும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்,

ஆயுதம் தூக்கியதால் பிரபாகரனையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை.

5 வயதில் இருந்து சிங்களவர்களுடன் வாழ்ந்து பழகிய நான், அவர்களுடன் வாழ்வதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்தானது தமிழர்கள் மத்தயில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது கருத்து தவறென பல்வேறுபட்டோர் சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்,

தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியும் அவர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பிலும் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்துக்கும் நியாயப்படுத்தல்களுக்கும் தமிழ்ப்பெண் வெளியிட்ட காணொளி இதோ,

https://www.ibctamil.com/srilanka/80/143353

Link to comment
Share on other sites

வரலாற்றை திருத்தி எழுத முனையும் சுமந்திரன் -மிகவும் ஆபத்து என எச்சரிக்கை

எம்.ஏ.சுமந்திரன் 2010 ஆண்டில் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் நுழைந்த காலத்தில் இருந்தே தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை வலுவிழந்துபோகச் செய்யக்கூடிய பல்வேறு வகையிலான செயற்பாடுகளைச் மேற்கொண்டுவருவதோடு, இந்நேரத்தில் வரலாற்றினைத் திருத்தியெழுத முயல்வது ஆபத்தானது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும், விடுதலைப்புலிகளின் சர்வதேச சட்ட ஆலோகராகவும் இருந்த வி.உருத்திரகுமாரன் அவர்கள் எச்சிரித்துள்ளார்;.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள கருத்துப்பதிவில்,

சிங்கள ஊடகவியலாளர் ஒருவருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்ளாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் அண்மையில் வழங்கிய செவ்வி தொடர்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சட்ட ஆலோசகராக இயங்கியவன் என்ற வகையிலும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற வகையிலும் எதிர்வினையாற்றுவது அவசியம் என உணர்கிறேன்.

சுமந்திரன் 2010 ஆண்டில் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் நுழைந்த காலத்தில் இருந்தே தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை வலுவிழந்துபோகச் செய்யக்கூடிய பல்வேறு வகையிலான செயற்பாடுகளைச் மேற்கொண்டுவருகின்றதொரு பின்னணியிலேயே இவர் வழங்கிய செவ்வியினையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம்.

மேலும் இச் செவ்வியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் உட்பட பல்வேறு குளறுபடியான தகவல்கள் உள்ளதனையும் கவனிக்க வேண்டியவர்களாக உள்ளோம். இது வரலாற்றினைத் திருத்தியெழுதும் ( Revisionism) ஓர் ஆபத்து மிக்க முயற்சியாகவே எமக்குத் தென்படுகிறது.

இச் செவ்வியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராட்டச் செயற்பாட்டை சுமந்திரன் நிராகரித்திருக்கிறார்.

தமிழ் மக்களின் தேசிய அரசியலைப் பிரிதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்லும் எந்தவொரு அரசியல் பிரதிநிதியும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமையில் நடைபெற்ற தமிழ் மக்களது ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டமானது சிறிலங்கா அரசின் இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கும், அரச பயங்கரவாதத்துக்கும் எதிராக தமிழ் மக்கள் சர்வதேச சட்டங்கள், தார்மீகக் கோட்பாடுகளின் அடிப்படையில் வழங்கிய எதிர்வினை என்பதனைப் புரிந்து கொண்டும், ஏற்றுக் கொண்டும் செயற்படுவதுதான் அரசியல் அறமாக இருக்க முடியும்.

இங்கு தனிப்பட்ட கருத்து என்பதற்கு இடமேதுமில்லை. இதனை ஏற்றுக் கொள்ள முடியாவிடின் அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டு தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஊறு விளைவிக்காமல் இருப்பதே சிறந்தது.

மேலும் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள், சுமந்திரன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராட்டச் செயற்பாட்டை நிராகரித்ததை அது தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு அல்ல என்றும், அது அவரது தனிப்பட்ட நிலைப்பாடு எனவும் கூறியுள்ளதுடன் சுமந்திரனின் கூற்றுப்பற்றிக் கண்டனமும் தெரிவித்திருக்கின்றனர்.

கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக உறுப்பினர் எவரும் செயற்படும்போது அதற்குரிய ஒழுங்கு நடவடிக்கையெடுக்கப்பட்டு அதன் விளைவுகளை அவ் உறுப்பினர் எதிர் கொள்ள வேண்டுமே தவிர, அவ்வாறு செய்யாது 'கட்சிக்கும் அதற்கும் தொடர்பில்லை' என மட்டும் கூறுவது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே இருக்க முடியும்.

இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் இவ்வாறான சறுக்கல்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும், இவற்றுக்கும் அப்பாற்பட்ட அரசியல் நாகரீகம் ஒன்றினை எம்மிடையே வளர்த்துக்கொள்ள வேண்டியது காலத்தின் அவசியம் என்பதனையும் தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கு இடித்துரைக்க விரும்புகிறேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் கலந்து கொள்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் சுமந்திரன் இப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

2017 ஆண்டில் தாயகத் தமிழ் மக்களும், புலம் பெயர் தமிழ் மக்களும் எவ்வாறு இணைந்து செயற்படலாம் என்பதனை ஆராய்வதற்காக, தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை அடித்தளமாகக் கொண்டு தாயகத்தில் இயங்கும் கட்சித் தலைவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாம் அழைப்பொன்றினை மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தோம்.

அவ் அழைப்பு சுமந்திரன் அவர்களுக்கும் அனுப்பப்பட்டது. அழைப்புக்கு நன்றி தெரிவித்த அவர், இது குறித்து இரண்டொரு நாட்களில் மீளத் தொடர்பு கொள்வதாகக் கூறி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு தொடர்பான ஒருங்கிணைப்பாளருக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.

பினனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அவர்களது கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு செய்தி ஒன்று அனுப்பவுள்ளதாக ஒருங்கிணைப்பாளருக்கு அறிவித்திருந்தார்கள். அப்படியே செய்தி கிடைக்கப்பெற்று அதனை அமர்வின்போது அவையில் நாம் வாசித்திருந்தோம்.

மேற்கூறிய அழைப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காரணத்தால் அனுப்பியிருந்தார்களே தவிர அவ் அழைப்பு சுமந்திரனுக்கு மட்டும் தனித்து அனுப்பப்பட்ட அழைப்பல்ல என்பதையும் இவ்விடத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இன்று தமிழ் மக்கள் ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளாததற்கான காரணம் சர்வதேச சட்டங்களுக்கோ அன்றி தார்மீகக் கோட்பாடுகளுக்கோ அது முரணானது என்பதால் அல்ல.

மாறாக இன்றைய உலக ஒழுங்கில் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்ற காரணத்தினால் தமிழ் மக்கள் பூகோள ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாகவும், சர்வதேச சட்டங்களை உரியவகையில் கையாளுதல் மூலமாகவும், உலகத் தமிழ் மக்கள் பலத்தின் ஊடாகவும் தமது போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

இறுதியாக, தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையில் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தினை நிராகரிப்போர் எவரதும் அரசியல் குறித்து தமிழ்மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளதையும் இவ்விடத்தில் பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன் என வி.உருத்திரகுமாரன் அவர்கள் கருத்தினை பதிவு செய்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/143371

Link to comment
Share on other sites

அப்படி என்றால் சுமந்திரனை தவிர தமிழர் பற்றி பேச யாருமே இல்லையா? அல்லது வேறு யாருடைய பேச்சையும் சிங்கள மக்கள் கேட்க மாடடார்களா? இது என்னடா தமிழனுக்கு வந்த சோதனை?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.