Jump to content

ஒட்டாவா வாகன விபத்தில் தேசிய செயல்பாட்டாளர் சுரேஸ் பலி


Recommended Posts

கனடா ஒட்டாவா நகரில் ஏற்பட்ட வாகன விபத்தில் தேசிய செயல்பாட்டாளர் சுரேஸ் பலி.

இன்று மாலை (May 15, 2020, 5:30 PM) கனடா ஒட்டாவா மாநகருக்கு அருகில், ஸ்மித்ஸ் நீர்வீழ்ச்சிக்கு தெற்கே (Smiths Falls) மூன்று வாகனங்கள் மோதியதில், அதில் ஒரு வாகனத்தை செலுத்தி சென்ற சுரேஷ் தம்பிராஜா என்ற தமிழர் கொல்லப்பட்டுள்ளார். மற்றைய வாகன சாரதி ஒருவர் சிறு காயம் அடைந்துள்ளார். போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ottawa-suresh1-1.png

ஒட்டாவா சுரேஷ் என எல்லோராலும் அறியப்பட்ட 5 பிள்ளைகளின் தந்தையான சுரேஷ் அவர்கள் புத்தூரை பிறப்பிடமாகவும், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒட்டாவாவில் வசித்தும் வருகிறவருமாவார். ஓட்டவா நகரில் உள்ள மக்களின் தொடர்புகளை பேணுதலும் பல அரசியல் வேலை திட்டங்களயும் தமிழ்த் தேசியத்திற்க்காக முன்னெடுத்தவர்.

கணனி துறையில் சிறந்து விளங்கிய இவர் பன்முக ஆளுமையை கொண்டிருந்தார்.

ஒட்டாவா தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC) பொறுப்பாளராகவும், தாயக செயட்பாடுகளில் எண்பது (1980s) காலப்பகுதி முதல் 2009 வரை தனது முழுப்பங்களிப்பினையும் வழங்கியவராவார்.

ottawa-suresh2-e1589609575418.jpeg

2004ம் ஆண்டு டொரோண்டோவில் பிரமாண்டமாக குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வை முற்றுமுழுதாக ஒழுங்கமைத்தவர் சுரேஷ் அவர்கள்.

2000 ஆண்டு இறுதியில் கனடிய தமிழ் காங்கிரஸ் (Canadian Tamil Congress), மற்றும் டொரோண்டோவில் இயங்கிவரும் TVI, CMR வானொலி ஆகியவற்றின் ஆரம்ப உருவாக்கத்தில் சுரேஷின் பங்களிப்பு பெரியது.

ஈழ போராட்டத்தின் பதிவுகளை தனது கேமரா ஒவியம் மூலம் வெளிப்படுத்தியவர் சுரேஷ் அவர்கள். புகைப்படக்கலையில் சிறந்து விளங்கிய இவர், 2002 – 2006 சமாதான காலப்பகுதியில் வன்னி சென்று புலிகளின் படையணிகள் முதல், தேசியத்தலைவர் வரை புகைப்பட தொகுப்புகளை உருவாக்கியவராவார்.

ஒட்டாவா, கால்ரன் பல்கலைக்கழகங்களில் கல்விபயின்ற மாணவர்களை தாயகம் நோக்கிய செயல்பாடுகளில் உள்வாங்கி இன்றும் அவர்கள் சிறந்த நாட்டுப்பற்றாளர்களாக இருக்க சுரேஷின் பங்களிப்பு மிகப்பெரும் காரணமாகும்.

கடந்த பலவருடங்களாக ஒட்டாவாவில் கட்டுமான துறையில் ஈடுபட்டு வருகின்றார்.

சுரேஷ் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள். அவரின் பணிகளுக்கு எமது சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.

https://ottawa.ctvnews.ca/mobile/52-year-old-from-nepean-dies-in-fatal-crash-south-of-smiths-falls-1.4942314

https://www.torontotamil.com/2020/05/15/ottawa-suresh-dies-in-fatal-crash-south-of-smiths-falls/

Link to comment
Share on other sites

13 minutes ago, ampanai said:

ஈழ போராட்டத்தின் பதிவுகளை தனது கேமரா ஒவியம் மூலம் வெளிப்படுத்தியவர் சுரேஷ் அவர்கள். புகைப்படக்கலையில் சிறந்து விளங்கிய இவர், 2002 – 2006 சமாதான காலப்பகுதியில் வன்னி சென்று புலிகளின் படையணிகள் முதல், தேசியத்தலைவர் வரை புகைப்பட தொகுப்புகளை உருவாக்கியவராவார்.

இன்று இந்த களத்தில் உள்ள புகைப்படம் உட்பட பல நிழல் மற்றும் வீடியோ பதிவுகள், பல புத்தகங்களில், நாட்காட்டிகளில்  இவரின் கை திறமை கொண்ட படங்கள் என பல ஆயிரங்கள். 

Link to comment
Share on other sites

16 minutes ago, ampanai said:

2004ம் ஆண்டு டொரோண்டோவில் பிரமாண்டமாக குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வை முற்றுமுழுதாக ஒழுங்கமைத்தவர் சுரேஷ் அவர்கள்.

எந்த கடினமான பயணத்திலும் முதலில் பாதை போடுவது கடினம். போட்ட பாதையில் பயணிக்கும் மக்களுக்கு அதை போட்டவர் யார் என தெரிவதில்லை. போட்டவர்கள் எதிர்பார்ப்பதும் இல்லை. 

'அவர்கள்' கேட்டார்கள் என்ற ஒரு ஒற்றை சொல்லை வைத்து பம்பரமாக சுழன்று முதலாவது நிகழ்வை வெற்றிகரமாக நிகழ்த்த அடித்தளம் போட்டவர். பல இரவுகள் பகல்கள் என உழைத்த செயல்வீரன். அதனால், ' என்றும் அவர்களின்' நம்பிக்கைக்கு உரியவரானார்.   

Link to comment
Share on other sites

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், கேமரா, 'Nikon' எனக் கூறும் சாத்தியமுள்ள உரை

பதின்ம வயதில் கனடா வந்தும் ஏதோ ஒரு வழியில் தாயகத்தின் பால் அதீத ஆழமான அதற்கும் மேலாக 'முடியும்' என்கின்ற ஓர்ம வைராக்கியம் உடையவர். 

பல வேறு தொழில்நுட்பங்களை இரவிரவாக தானே தேடி கற்றுக்கொண்டு பலருக்கும், தாயக உறவுகள் உட்பட கற்றும் கொடுத்தார்.

புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் உலகிலேயே வீத அளவில் அதிகளவில் பல்கலைக்கழகம் சென்று வாழுபவர்கள் கனடாவின் தலைநகரத்தில் தான் உள்ளார்கள். இவர்கள் மத்தியில் மனம் சோராமால், பலவேறு அவமானங்கள் மத்தியிலும், எதிர்பார்ப்புக்களையும் மீறி செயலில் காட்டியவர். 

கனடாவில் 'தடை' விதிக்கப்பட்ட பொழுது அதை 'உடை' என திட்டங்கள் தீட்டி பல பல வழிகளில் முயன்றார்.  

மேலாக, "உன்னால் முடியும்" என அடிக்கடி கூறி இன்றும் உலகமெல்லாம் பல உணர்வாளர்களும் செயல்பாட்டாளர்களையும் உருவாக்கி சென்றுவிட்டார். 

வீர வணக்கங்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  இவரை இழந்து துயருறும் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

தமிழ் செயற்பாட்டாளர் சுரேஷ் தம்பிராஜா அவர்களின் மறைவிற்கு ஒட்டாவா தமிழ் ஒன்றியம் விடுக்கும் இரங்கல் செய்தி.

சுரேஸ் அண்ணாவின் இழப்பு ஒட்டாவா தமிழர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது!

May 15, 2020 ஒட்டாவாவிற்கு அண்மையில் உள்ள Smith Falls என்ற நகரில் பயணித்து கொண்டு இருந்தவேளை விபத்துக்குள்ளான இன்னுமொரு வாகனத்தில் இருந்தோருக்கு உதவிசெய்யும் போது ஏற்பட்ட விபத்தில் மறைந்தார் என்ற செய்தி, ஒட்டாவா தமிழர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த சோகத்திலும் ஆழ்த்தியது.

ஒட்டாவா சுரேஸ் அண்ணா என்று தமிழீழ ஆதரவாளர்களாலும், தமிழ் தேசிய உணர்வாளர்களாலும் அன்பாக அழைக்கப்படும் திரு சுரேஸ் தம்பிராஜா, ஒட்டாவாவில் நீண்ட நாள் தமிழ் செயல்பாட்டாளர். கனடிய தமிழ் பேரவையை (Canadian Tamil Congress - CTC) 2008 இற்கு முன்னர் பலவருடங்கள் முன்னெடுத்தவர். கனடிய தமிழர் பேரவை 2000 இல் ஆரம்பிக்கப்பட்ட போது அதை உருவாக்கியதிலும் முன்னின்றவர். கனேடிய தமிழர்களில் ஈழ தமிழர்களின் விடுதலையில் தொடர்ச்சியாக முன்னின்று உழைப்பவர்கள் மிக குறைவு. சுரேஸ் அண்ணா அவர்கள் 90 களிலிருந்து 2009 வரை தொடர்ச்சியாக ஈழதமிழர்கள் உரிமைகள் சார்ந்து பல செயல்பாடுகளை முன்னெடுத்தவர்.

ஒட்டாவா தமிழ் ஒன்றியம் 2014 காலப்பகுதியில் ஆரம்பித்த போதும், சுரேஸ் அண்ணாவுடன் ஈழ தமிழர் உரிமை விடுதலை விடயங்களில் அவருடன் சேர்ந்து பணியாற்றிய பலருக்கு அவரின் நினைவுகள் இன்றும் பசுமையாக உள்ளது. நமது இனத்தை ஆழமாகக் காதலித்து தனது வாழ்வின் பெரும்பகுதியை தமிழ் இனத்திற்காக அர்ப்பணித்தவர்களில் அண்ணாவுமொருவர். பலரை தனது பேச்சாலும் செயலாலும் நமது இனத்திற்காக செயல்பட வைத்தவர்.

சுரேஸ் அண்ணா ஏனையவர்களுக்கு உதவி செய்வதில் என்றும் பின்நின்றதில்லை. ஆதனால் தான் ஈழ தமிழர்களின் நிலை அறிந்து அந்த அறம் சார் உரிமை மீட்பு போராட்டத்திற்கு முன்னின்று உழைத்தார். பலரும் அஞ்சி பின்னிற்கும் பல தமிழர்சார் விடயங்களை 2009 இற்கு முன்னர் துணிந்து செய்த கடின உழைப்பாளி அவராவார். தமது தொழில் நுட்ப முழு நேர வேலைகளையும் குடும்பத்தையும் கவனிக்கும் அதே நேரம், ஈழ தமிழர் உரிமை சார் கடின பணிகளில் சலிப்போ சோர்வோ அடையாமல் பல வருடங்கள் தொடர்ந்து செயல்பட்ட இவர், கனடா மட்டுமன்றி உலகின் பல பாகங்களிலும் உள்ள தமிழர்களால் அன்புடன் நினைவுகூரப்படுபவர்.

ஒரு சிறந்த, அயராத செயல் வீரர் ஆன அவர், ஒரு சிறந்த புகைப்பட கலைஞரும் ஆவர். பல ஆளுமைகளை தன்னகத்தே கொண்டவர். இவரின் இழப்பு ஒட்டாவா தமிழர்களுக்கு மட்டுமல்ல கனடிய, புலம்பெயர் தமிழ் உலகத்துக்கே ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். அவரின் குடும்பத்தினருக்கும் இந்த தாங்கமுடியாத இழப்பை தாங்கும் பலத்தை கொடுக்க இறைவனை வேண்டுகிறோம். அவர்களின் துயரில் ஒட்டாவா தமிழ் ஒன்றியம் பங்கு கொள்கிறது.

ஒட்டாவா தமிழ் ஒன்றியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் ..

Link to comment
Share on other sites

விடுதலைப்பறவையை ”கிளிக்” செய்த சுரேஷ்!

 

கனடாவின் தலைநகரான ஒட்டாவில் தமிழீழ தாயகத்தை நேசித்த ஒரு தேசப்பற்றாளரான ஒட்டாவா சுரேஷ் என்று அழைக்கப்படும் ந்திரன் தம்பிராஜா சாவடைந்துள்ளார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் வீதியில் ஏற்பட்ட வாகன விபத்து ஒன்றுக்கு உதவுவதற்காக தனது வாகனத்திருந்து மனைவியுடன் இறங்கி உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

5 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய சுரேஷ் யாழ்ப்பாணம் புத்தூரைப் பிற்பிடமாகக் கொண்டவர். கனடாவில் 30 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்தவர்.

ஒட்டாவா மாநிலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவு தளத்தை விதைக்கவும் தமிழ்த் தேசியத்தை கட்டியெழுப்பவும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராகச் 2009 ஆண்டு வரை தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றியிருந்தவர் சுரேஷ்.

இவரின் விடுதலைச் செயற்பாடுகளை நன்கறிந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அவரின் விடுதலைப் பற்றை மதிக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டு வன்னிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

வன்னிக்கு வந்த சுரேஷ் அவர்களை வெளிநாட்டிலிருந்து வருவோரை வரவேற்கும் கிளிநொச்சியில் அமைந்த நந்தவனம் வரவவேற்றது. அவர் தங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் அவர்கள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து விசுமடு புளியடியில் அமைந்துள்ள அனைத்துலகத் தொடர்பகத்தில் பொறுப்பாளர் வீ.மணிவண்ணனுடன் (கஸ்ரோ) சந்திப்பும் விருந்தோம்பலும் நடைபெற்றன. கனடாவில் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து பல மணி நேர உரையாடல்கள் நடைபெற்றன.

சுரேஷ் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்காக 2004 ஆண்டு காலகட்டத்தில் உலகத் தரத்தில் மிக விலையுயர்ந்த கனோன் புகைப்படக் கருவியை (Canon Camera) வாங்கி வந்திருந்தார்.

தேசியத் தலைவருடனான சிறப்பு சந்திப்பும் மறுநாளே ஒழுங்கு செய்யப்பட்டது. தேசியத் தலைவர் அனைத்துலகத் தொடர்பகத்திற்கு வருகை தந்து சுரேஷை சந்திக்கிறார். ஒரிரு மணி நேர உரையாடலும் விருந்தோம்பலும் தேசியத் தலைவரால் வழங்கப்பட்டது.

சந்திப்பின் முடிவில் தேசியத் தலைவருக்காக சுரேஷ் கமெரா எடுத்து வந்த விடயத்தைக் கஸ்ரோ அவர்கள் தேசியத் தலைவரிடம் குறிப்பிட்டார். தலைவரும் அக் கமெராவை எடுத்து வரும்படி கஸ்ரோவிடம் தெரிவித்துக்கொண்டு சந்திப்பை முடித்து கொட்டகையிலிருந்து தன்னுடைய இருப்பிடம் நோக்கிச் செல்வதற்கு கதைத்துக்கொண்டு வெளியேறினார்.

அப்போது போராளி ஒருவர் கமெராவை எடுத்து வருகிறார். வரும் வழியில் தேசிய தலைவரின் பாதுகாப்புக்குப் பொறுப்பாகவும் இம்பிரான் – பாண்டியன் படையணிக்குப் பொறுப்பாகவும் இருந்த ரட்ணம் மாஸ்டர் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட (பெயர் குறிப்பிட முடியாது) போராளி ஒருவராலும் குறித்த கமெரா பாதுகாப்பு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் அக்கமெரா சுரேசின் கைகளில் போராளியால் வழங்கப்பட்டது. குறித்த கமெராவை தலைவர் அவர்களிடம் கையளித்த சுரேஷ், கமெராவின் சிறப்பு அம்சங்கள் குறித்து ஆர்வமாக சுரேசிம் தலைவர் கேட்கவே நின்றநிலையில் உரையாடல் மீண்டும் ஒரு மணி வரை தொடர்ந்தது. கமெராவோ மிகப் பொியது, எடையும் கூடியது, லென்சுகளும் பிரமாண்டமானவை.

இயக்கத்திடமே அத்தரத்தில் கமெரா இல்லை என்பதை தேசியத் தலைவர் தன்னைச் சுற்றி நின்றவர்களிடம் குறிப்பிடுகின்றார். அதன் பிறகு அக்கமெராவை இயக்குவது குறித்த விளக்ககும் சுரேசால் செய்முறையில் செய்து காண்பிக்கப்பட்டது. தலைவரும் அதை ஆர்வமாகக் கேட்டறிந்தார்.

Screenshot_2020-05-17-06-22-08-73-200x30

அதைத் தொடர்ந்து தேசியத் தலைவர் ”என்னை எடுங்கள்” உங்கள் கமெராவின் தரத்தைப் பார்ப்போம் என்று கூறவே சுரேஷ் மிக உச்சாகத்துடன் தலைவரை மாமரத்தின் கீழ் நிறுத்தி படத்தினை எடுத்தார். ஒரு கிளிக் படபடபடபட என சந்தம் சுற்றியிருந்தவர்களை வியக்க வைத்தது. சுரேசும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மிக நேர்த்தியாக படங்களை எடுத்தார்.

பின்னர் எடுத்த படங்களை தலைவரிடம் கமெரா திரையில் சுரேஷ் காண்பிக்கிறார். படங்கள் மிகத்தெளிவாகவும் மிகத் துல்லியமாகவும் இருந்ததைப் பார்த்து தலைவரும் வியந்தார். வியந்தது மட்டுமல்லாமல் சுரேசையும் பாராட்டினார்.

தேசியத் தலைவரை சுரேஸ் எடுத்த படம் அன்றை ஆண்டே அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப் பிரிவால் புலம் பெயர் நாடுகளில் வெளிவரும் தமிழ் தாய் நாட்காட்டியில் பிரசுரிக்கப்பட்டது மட்டும் அல்லாம் இன்று வரை அப்படம் வெளியீடுகளிலும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தேசியத் தலைவரும் சுரேசும் இணைந்து நிற்க அக்கமெராவால் போராளி ஒருவர் படம் எடுத்தார்.

தொடர்ந்து உரையாடிய தேசியத் தலைவர்கள் அவர்கள் இக்கமெராவை நிசாமிடம் (அருச்சுனா புகைப்படப் பிரிவுப் பொறுப்பாளர்) கொடுக்கும் படி கஸ்ரோவிடம் கூறி சிறிது நேரத்தின் பின் அங்கிருந்து வெளியேறினார்.

பின்னர் வெளிநாட்டிலிருந்து செல்வோர் தேசியத் தலைவருடனான சந்தித்திப்பில் புகைப்படம் எடுக்கும் டிஜிட்டல் மயமான புதிய கலாச்சாரமும் அவ்விடத்திலேயே ஆரம்பமாகியது.

தங்கியிருந்த ஒவ்வொருநாளும் தமிழீழ கட்டுமானங்களை பார்வையிட போராளிகளால் அழைத்துச் செல்லப்பட்டார் சுரேஷ். அவர் அங்கிருந்த நாட்களில் தமிழர் தாயகத்தின் இயற்கை அழகுகள், மக்கள், வாழ்வியல், புலிகளின் கட்டுமானங்களை புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தினார்.

தாயகத்திலிருந்து திரும்புப் போது தனது சொந்த தேவைக்காக எடுத்து வந்த அதே மாதிரியான மற்றொரு கமெராவையும் கஸ்ரோ அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்தார். அக்கமெரா வெளிநாடுகளிலிருந்து சென்ற தழிழர் ஒருங்கிணைப்புக்குச் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், தேசியத் தலைவருடனும், கஸ்ரோ அவர்களுடன் புகைப்படங்கள் எடுப்பதற்கு நிலவன் என்ற போராளியால் இறுதி வரை பயன்படுத்தப்பட்டது சுட்டிக்காட்டத்தக்கது.

கனடா திரும்பியதும் தாயக நோக்கிய வேலைத் திட்டங்களை இறுதி வரை முன்னெடுத்தார். 2004 ஆம் ஆண்டு டொரோண்டோவில் பிரமாண்டமாக Queens park முன்றலில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வை முற்றுமுழுதாக ஒழுங்கமைத்தவரும் சுரேஷ் அவர்களே.

தாயகத்தில் எடுத்த புகைப்படங்களை சுரேன் என்ற இணையத்தில் மக்கள், வாழ்வியல், செஞ்சோலை, அறிவுச்சோலை, நவம் அறிவுக்கூடம், மயூரி இல்லம், முதியோர் இல்லங்கள், பராமரிப்பு இல்லங்கள் போன்ற பொதுவெளியில் பார்வையிடக்கூடிய படங்களை தரவேற்றம் செய்திருந்தார்.

தமிழீழ கனவை சுமந்து பணியாற்றிய தேசப்பற்றாளனான சுரேஷ் அவர்களின் இழப்பு என்பது பேரிழப்பாகும். அவர் ஆற்றிய விடுதலைப் பணிக்கு தலை வணங்கி வீர வணக்கம் செலுத்துவோம்.

மீளும் நினைவுகளுடன்
-அகராதி-

http://eelamurasu.com.au/?p=27662

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுரேஸ் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

//

சுரேஸ் அவர்கள் பற்றிய விரிவான பல தகவல்களை இணைத்தமைக்கு நன்றி அம்பனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/5/2020 at 13:03, நியாயத்தை கதைப்போம் said:

சுரேஸ் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

//

சுரேஸ் அவர்கள் பற்றிய விரிவான பல தகவல்களை இணைத்தமைக்கு நன்றி அம்பனை.

வட்ஸப் வீடியோ ஒன்று பார்த்தேன் சி.டி.வி இன். விபத்தில் சிக்கிய இன்னோர் சாரதிக்கு உதவி செய்ய சென்றபோது மறைந்தார் என. பிள்ளைகளும் கதைக்கின்றார்கள். மிகவும் கவலை தரும் செய்தி. பலமான ஓர் தூணாக நின்று உள்ளார் தமிழ் சமூகத்துக்கு. ஆழ்ந்த அனுதாபங்கள்.

https://ottawa.ctvnews.ca/family-friends-remember-ottawa-man-killed-while-helping-crash-victim-1.4945801

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.