Jump to content

சுமந்திரனின் நாக்கு கரி நாக்கு! கட்சியில் இருந்து தூக்கி எறியுங்கள்


Recommended Posts

சுமந்திரனின் நாக்கு கரி நாக்கு! கட்சியில் இருந்து தூக்கி எறியுங்கள்: மறவன்புலவு க. சச்சிதானந்தன்
[

1961 அறப்போர் காலத்திலிருந்து இன்றுவரை தமிழ்த் தேசியம் ஈழத்தமிழர் நலம் எனத் தமிழரசுக் கட்சி சார்ந்து பணிபுரிந்து கொண்டிருக்கிற மறவன்புலவு க. சச்சிதானந்தன் கோருகிறேன்
சுமந்திரனைத் தமிழரசுக் கட்சியை விட்டுத் தூக்கி எறியுங்கள் என 2018 நவம்பர் 6இல் நான் திரு மாவை சேனாதிராஜா அவர்களுக்கு எழுதினேன்.

 

 

 

 

 

 

 

 

 

1961 அறப்போர் காலத்திலிருந்து இன்றுவரை தமிழ்த் தேசியம் ஈழத்தமிழர் நலம் எனத் தமிழரசுக் கட்சி சார்ந்து பணிபுரிந்து கொண்டிருக்கிற மறவன்புலவு க. சச்சிதானந்தன் கோருகிறேன் சுமந்திரனைத் தமிழரசுக் கட்சியை விட்டுத் தூக்கி எறியுங்கள் என 2018 நவம்பர் 6இல் நான் திரு மாவை சேனாதிராஜா அவர்களுக்கு எழுதினேன்.

    

சுமந்திரனின் நாக்கு , கரி நாக்கு. தமிழை தமிழரை தமிழ் தேசியத்தை உணராத அறியாத புரியாத தெரியாத விரும்பாத ஒருவரின் நாக்கே சுமந்திரனின் நாக்கு என நான் அன்று கூறினேன்.

எனவே தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்குங்கள் எனத் தலைவருக்குக் கடிதம் எழுதினேன்.

அதற்கு முன்பு 30.12.2015இல் வட மாகாணசபையை முடக்குவதற்கு அக்காலப் பிரதமர் இரணில் விக்கிரமசிங்கர் எடுத்த முயற்சிக்கு சுமந்திரன் கைகொடுத்தார் எனக் குற்றம்சாட்டி எழுதினேன்.

சென்னையில் 100 அடி சாலையில் அமர்ந்திருந்த உயர்தர விடுதியொன்றில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையினர் 2015இல் நடத்திய கருத்தரங்கில் முதல் முதலாகச் திரு சுமந்திரனைச் சந்தித்தேன். ஈழத்தமிழரின் சார்பில் அவர் அங்கு பேசினார்.

அங்கே அவரின் பேச்சைக் கேட்டேன். இவருக்கும் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் என்ன தொடர்பு? இத்தகைய கரிநாக்கராக இருக்கிறாரே என மனத்துள் சினந்தேன்.

1961 முதலாக தமிழ் தமிழர் தமிழ் தேசியம் ஈழத்தமிழரின் நன்மை என்பவற்றுக்காக தமிழகத்தில் நானும் இணைந்து சிறிது சிறிதாகக் கட்டியெழுப்பிய ஈழத்தமிழர் ஆதரவுக் கொள்கையைப் போட்டு உடைத்தார் 2015இல் சென்னையில் சுமந்திரன்.

சிங்களத் தொலைக்காட்சி பேட்டியில் சுமந்திரன் கொடுத்த விடைகள் கரிநாக்கராக அவரை உறுதி செய்துள்ளன.

தமிழர் இயல்பிலேயே அறநெறியாளர். ஆயுதங்களை 400 ஆண்டுகளாக அறியாதவர். அவர்களை ஆயுதம் தூக்குமாறு தூண்டியோர் 1948இல் விடுதலைக்குப் பின் வந்த சிங்கள அரசுகள். சிங்கள அரசுகளும் சிங்களக் குண்டர்களும் தொடர்ச்சியாக 1952இல் 56இல் 58இல் 61இல் 72இல் 74இல் 77இல் 82இல் 83 நடத்திய தமிழர் மீதான கொடும் பயங்கரவாதத்தை அரச பயங்கரவாதத்தை நினைவுகூரச் சுமந்திரன் தவறிவிட்டார்.

அப்பாவிகளாக இருந்த தமிழ் இளைஞர்களை ஆயுத தாரிகள் ஆக்கிய அரச பயங்கரவாதத்தை, சிங்களத் தலைவர்கள் பலரையும் ஒப்புக்கொண்ட எதார்த்த நிலையை சுமந்திரன் அடிக்கோடிட்டுக் கூறாமல் விட்டார்.

ஏனெனில் அவர் தமிழ் தமிழர் தமிழ்த்தேசியம் என்பவற்றைக் கிஞ்சித்தும் அறியாதவர் கொஞ்சமும் உணராதவர்.

இப்பொழுதும் காலம் கடந்து விடவில்லை.

தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு மாவை சேனாதிராஜா அவர்களே முதற்கட்டமாக அவரைக் கட்சியிலிருந்து இடை நிறுத்துங்கள். விசாரணையைத் தொடங்குங்கள். அவர் வேட்பாளர் இல்லை என்பதை மக்களுக்குத் தெரிவியுங்கள்.

அவருக்கு வாக்களிக்க வேண்டாம் எனத் தமிழ் மக்களிடம் கூறுங்கள்.

வரலாற்றை அறியாத தமிழ் தேசியத்தில் ஊறாத தமிழ்த் தேசியத்தில் ஈடுபாடற்ற ஒருவரை,

அகத்தே முரட்டுக் குணத்துடன் கொடிய நோக்கத்துடன் ஓநாயாகிப் புறத்தே ஆட்டுத்தோல் போர்த்திய பொய்யர்களான போலிகளை அடையாளம் கண்டு ஒதுக்குங்கள் என இயேசுபிரான் கூறியதாக மத்தேயு 7:15இல் கூறியதை இங்கு நினைவு கூர்வது பொருத்தம்

https://www.seithy.com/breifNews.php?newsID=245842&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

அடேயப்பா  பைபிள்  வசனத்தை  கூறியே  நீங்கள் அவரை தூக்க வைக்க சொன்னது என்னை ஆச்சரியப்படுத்தியது. அது அவரைபற்றியது அல்ல உங்களைப்பற்றியது.

அவர் ஒரு கிறிஸ்தவர் அவரை அகற்றுங்கள் என்று சொல்லியிருந்தால் மக்கள் சில வேளைகளில் அதை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். ஏன் என்றால் நீங்கள் யார் என்றும் , உங்கள் கொளகை என்ன என்றும் மக்கள் அறிந்திருக்கிறார்கள்.

இப்போது சுமந்தரன் என்னும் அவல் கிடைத்திருக்கிறது வாயை மெல்லுவதட்கு. அவர் மலசல கூடம் செல்வதும் செய்தியாக வந்தால் ஆச்சரியப்படுவதட்கில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனிண் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை என்பது உண்மை.. ஆனால் இதைக் கூறுவதற்கு சச்சியர் தகுதியற்றவர் என்பது அதைவிட உண்மை. 😂

Link to comment
Share on other sites

4 hours ago, nunavilan said:

தமிழர் இயல்பிலேயே அறநெறியாளர். ஆயுதங்களை 400 ஆண்டுகளாக அறியாதவர். அவர்களை ஆயுதம் தூக்குமாறு தூண்டியோர் 1948இல் விடுதலைக்குப் பின் வந்த சிங்கள அரசுகள். சிங்கள அரசுகளும் சிங்களக் குண்டர்களும் தொடர்ச்சியாக 1952இல் 56இல் 58இல் 61இல் 72இல் 74இல் 77இல் 82இல் 83 நடத்திய தமிழர் மீதான கொடும் பயங்கரவாதத்தை அரச பயங்கரவாதத்தை நினைவுகூரச் சுமந்திரன் தவறிவிட்டார்.

சச்சிதானந்தன் ஐயாவும் சுமந்திரனின் நரிக்குணத்தை பல இடங்களில் நேரில் அறிந்தவர் என்ற வகையில் சுமந்திரனின் நரிக்குணத்தை போட்டுடைத்துள்ளார்.

ஆனா தமிழர் உரிமைகளை அடகு வைச்சு பெட்டிபெட்டியா அன்பளிப்புகளை சொறிலங்கா அரசிடம் வாங்கியவங்கள், சொறிலங்கா அரசிடம் கிடைத்த சொகுசு மாளிகையில் வாழ்பவங்கள், இன்னமும் பலதை தங்களுக்கு எதிர் பார்ப்பவங்கள் சொறிலங்கா முகவர்களிடம் அடங்கியே போக விரும்புவாங்கள்.

Link to comment
Share on other sites

21 hours ago, Kapithan said:

சுமந்திரனிண் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை என்பது உண்மை.. ஆனால் இதைக் கூறுவதற்கு சச்சியர் தகுதியற்றவர் என்பது அதைவிட உண்மை. 😂

இவர் முதலில் தன்னை திருத்தினால் உலகம் தானாகவே திருந்தும். கருத்து சொல்லுவதட்கும் ஒரு தகுதி வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

இவர் முதலில் தன்னை திருத்தினால் உலகம் தானாகவே திருந்தும். கருத்து சொல்லுவதட்கும் ஒரு தகுதி வேண்டாம்.

யார் என்னையா கூறுகிறீர்கள் 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Vankalayan said:

இவர் முதலில் தன்னை திருத்தினால் உலகம் தானாகவே திருந்தும். கருத்து சொல்லுவதட்கும் ஒரு தகுதி வேண்டாம்.

 

1 hour ago, Kapithan said:

யார் என்னையா கூறுகிறீர்கள் 😂😂

அட... வலிய வந்து, தொப்பியை 🤠 எடுத்துப்  போட்ட, கபிதனை   நினைக்க பாவமாக உள்ளது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

 

அட... வலிய வந்து, தொப்பியை 🤠 எடுத்துப்  போட்ட, கபிதனை   நினைக்க பாவமாக உள்ளது. :grin:

திரியில் கடி Kஞ்சம் குறைந்து விட்டது. ஒரு சிறிய முயற்சி அவ்வளவுதான் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி சுமத்திரனின் பிரச்சனையை அங்குள்ள சனம்  முடிவெடுக்கும் அவ்வளவுக்கு அவரின் சுத்துமாத்துக்கள் சனத்துக்கு விளங்கி விடும் ஆனால் செத்த பாம்பை அடிக்குமாம்போல் கோமாவில் இருந்து எழும்பியதை போல் சச்சியர்  அறிக்கை விடுவது .

என்னிக்கு வேட்டியை கழட்டி சபையில் அமர்ந்தாரோ அன்றே அவரின் சுய ரூபம் அனைவருக்கும் விளங்கும் . இவர் உண்மையில் தமிழர்களில் கரிசனை உள்ளவர் என்றால் கிழக்கில் உடைக்கப்படும் கோவில்களுக்கு குரல் கொடுக்கணும்  கண்ணியாவில்  உடைக்கப்பட்ட பிள்ளையார் கோவிலை மறுபடியும் கட்டிவிக்கணும்  அது முடியாது இவரால் டெல்லி கூட்டத்தின் ஏவல்களுக்கு ஏட்ப  சவுண்டு விடும் ஆள் முக்கியமாய் வடகிழக்கு தமிழர்களுக்குள் பிரிவினையை உருவாக்க கொண்டுவரப்பட்டவர். 

Link to comment
Share on other sites

23 hours ago, Kapithan said:

யார் என்னையா கூறுகிறீர்கள் 😂😂

ஐயோ உங்களை இல்லை அப்பா. அந்த காவியை சொன்னேன். உங்கள் கருத்துக்கு உருவேற்றினேன். சில வேளைகளில் எனது தமிழ் பிழையாகிவிடுகின்றது. மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Vankalayan said:

ஐயோ உங்களை இல்லை அப்பா. அந்த காவியை சொன்னேன். உங்கள் கருத்துக்கு உருவேற்றினேன். சில வேளைகளில் எனது தமிழ் பிழையாகிவிடுகின்றது. மன்னிக்கவும்.

அட நான் நகைச்சுவையாகத்தான் குறிப்பிட்டேனய்யா. நீர்தான் பிழையாக விளங்கிக் கொண்டீர். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Vankalayan said:

ஐயோ உங்களை இல்லை அப்பா. அந்த காவியை சொன்னேன். உங்கள் கருத்துக்கு உருவேற்றினேன். சில வேளைகளில் எனது தமிழ் பிழையாகிவிடுகின்றது. மன்னிக்கவும்.

 

9 minutes ago, Kapithan said:

அட நான் நகைச்சுவையாகத்தான் குறிப்பிட்டேனய்யா. நீர்தான் பிழையாக விளங்கிக் கொண்டீர். 😂

ஹி... ஹீ.. ஹி ....  🤣  வங்காலையானுக்கும், கபிதனுக்கும்..... 
இந்தத் திரியை, அணைய விடாமல் பார்த்துக் கொள்ளும்... பொறுப்பு வழங்கப் படுகின்றது.  :grin:

Link to comment
Share on other sites

21 hours ago, தமிழ் சிறி said:

 

ஹி... ஹீ.. ஹி ....  🤣  வங்காலையானுக்கும், கபிதனுக்கும்..... 
இந்தத் திரியை, அணைய விடாமல் பார்த்துக் கொள்ளும்... பொறுப்பு வழங்கப் படுகின்றது.  :grin:

அண்மைக்காலமாக உறைப்பான செய்திகள் ஒண்டையும் காணவில்லை. இருந்தாலும் பொழுது போக வேண்டும்தானே.

அநேகமாக இனி நேரம் கிடைக்காதுபோல தெரிகின்றது. இருந்தாலும் காலையில் 6 : 30 இட்கும் 8 :00 மணிக்கும் இடையில்தான் இங்கு வருவேன். இன்னும் கொழும்பில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படவில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.