Jump to content

காலத்தின் சாட்சிகள் – ஆதிலட்சுமி சிவகுமார்….


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் சாட்சிகள் – ஆதிலட்சுமி சிவகுமார்….

உண்மை சம்பவத்தை தழுவிய சிறுகதை

On May 17, 2020

வலைஞர்மடம் கத்தோலிக்க தேவாலயத்தின் சுற்றாடலில் ஒரு கல்வீடு. அந்த வீட்டைச் சுற்றியிருந்த வெளிமுமுவதும் சனங்கள். திருவிழாக்கால வீதிகள்போல தோற்றங்காட்டியது அந்நிலப்பகுதி.

மேலே வானம் வில்லாய் வளைந்திருந்தது.

ஒவ்வொரு இடத்திலும் படையினரின் தாக்குதல்கள் தீவிரமடைய…. நகர்ந்து நகர்ந்து வலைஞர்மடம் என்ற இந்த கடலோரக் கிராமத்தை வந்தடைந்துவிட்டோம்.

01-7.jpgமேலே அடிக்கடி வந்து சுற்றிச் சுழன்று மிரட்டிவிட்டு… எங்காவது குண்டுகளைத் தள்ளிவிட்டுப் போகும் விமானங்கள்.  கூடவே எறிகணைகளின் இரைச்சலும் வெடிப்புகளும்….. தூரத்தே இடைவிடாது கேட்டுக்கொண்டிருக்கும் வேட்டொலிகள்…..

சனங்கள் ஆற்றாமையோடும் அழுகையோடும் அச்சத்தோடும் இருந்தார்கள்.

அபூர்வமாய் அந்தவெளியில் ஒருகாட்டுமரம். அங்கொன்றும் இங்கொன்றுமாக நீட்டியிருந்த கிளைகளில் கொஞ்சமாய் இலைகள். எஸ்கிமோவர்களின் பனிவீடுகளை நினைவுபடுத்தும் சனங்களின் தறப்பாட் கொட்டில்கள்….. இடைவெளிகளற்று நிறைந்து கிடந்தன…..

சனங்களின் மனங்களைப் போல…. அடுப்புகள் ஆங்காங்கே புகைந்துகொண்டிருந்தன…..

மரம் ஒன்றிற்கும்  ஒரு தறப்பாட் கொட்டிலுக்கும் இடையே கிடந்த சிறிய இடைவெளியில் இடம்பிடித்து நானும் என்னோடுவந்த இன்னொரு குடும்பத்தின் ஐவருமாக அமர்ந்துகொண்டோம்..

பேய்க்களை என்பார்களே…. அதற்கும் மேலாக களைத்துப்போயிருந்தோம். ஆனாலும் எறிகணைகள் துரத்திக்கொண்டுதான் இருந்தன.

மணல்தறை என்பதால் பாதுகாப்பு குழிகள் வெட்ட இயலாது. வெட்டுவதற்கும் சனங்களிடம் தெம்பில்லாதிருந்தது.

அந்தவீட்டின் ஒரேயொரு கழிப்பறை. எந்தநேரமும் வரிசையில் நிற்கும் பெண்கள். எல்லாமே எங்களுடைய சனங்கள் தான். சிலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தது…. வயதானவர்களும், காயமுற்ற சிலரும் இலையான்கள் மொய்க்கக் கிடந்தார்கள்.

நடமாடும் வலுவுள்ள ஆண்கள் பெரும்பாலும் இரவுகளில் கடற்கரையை கழிப்பிடமாக்கினார்கள்.

சிலநாட்களாக குளிக்கவோ… கடன்களைக் கழிக்கவோ எமக்கு  இடமில்லை. கழிப்பறை வரிசையில் நின்று நின்று நலைகுலைந்து போனோம். பசியையும் கழிப்பு உணர்வையும் அடக்கிக்கொண்டிருந்தோம். எல்லா இடத்திலும் ஈ மொய்த்தது போலச்சனம்.

ஒவ்வொருவரில் இருந்தும் கிளம்பிய துர்நாற்றம் அவரவர்க்கே  சகித்துக்கொள்ளவியலாத நிலை. இன்னொருவர் கிட்டவந்தால் மற்றவரால் தாங்கமுடியாத நிலை.

May-84.jpgதுணைவனையும் … மகனையும் எண்ணி எண்ணி மனது தளர்ந்துகொண்டிருந்தது….

கெட்ட சேதி வந்துவிடக்கூடாது என்கின்ற எண்ணம் கடந்து…. வரவுள்ள கெட்ட சேதியை தாங்கிக்கொள்ளவேண்டும் என மனது  அடிக்கடி தன்னைத்  தயார்ப்படுத்திக் கொண்டிருந்தது.

நாங்கள் இருந்த வளவின் முன்பக்கமாகவும் இடதுபக்கமாகவும் தெருக்கள் இருந்தன. தூரத்தூரவாக வீடுகள் தெரிந்தன… எல்லாவீடுகளும், வளவுகளும் சனங்களால் நிரம்பிவிட்டிருந்தன.

இரவுகளில் நிலாவும் நட்சத்திரங்களுமே உறவுகளாகின…. அவற்றோடு சேர்ந்து பழுத்துத் தொங்கும் பழங்களாய் வெளிச்சக்குண்டுகள்….

தேவாலயம் கடந்து போக…. தெருவின் ஓரங்களில், இடம்பெயர்ந்திருந்த சனங்கள் தங்களிடமிருந்த பாவனைப்பொருட்களை விற்றுக்கொண்டிருந்தார்கள்….

அவ்விடத்துக்கு போனால் யாராவது தெரிந்தவர்களைக் காணலாம். அப்படிக் கண்டால்… எங்காவது என் மகனைப் பார்த்தீர்களா எனக் கேட்கலாம்… இவ்வளவு நாட்கள் அவனைப் பிரிந்ததே இல்லை… பசிக்கும்போது என்ன செய்வான்…. எங்கே படுத்து உறங்குவானோ… என்றெல்லாம் மனது அந்தரித்தது……

நான் சேர்ந்திருந்த குடும்பத்து அம்மாவிடம் சொல்லிவிட்டு…. மெல்ல நடந்தேன்… யாரையும் உரசிக்கொள்ளாமல் தெருவில் நகரமுடியாதிருந்து.

May-200.jpgகளைத்துப்போன சனங்கள் தனியாகவும், குடும்பமாகவும், கூட்டமாகவும் அமர்ந்திருந்தார்கள்.

சாக்குருவி அகலத் திறந்த வாயுடன் அலைவது போன்ற உணர்வின் உறுத்தல் ஆட்கொண்டிருந்தது.

தெரிந்த ஆண்கள் சிலர் தோற்றம்மாறியிருந்தார்கள். என்னோடு வானொலியில் பணியாற்றிய ஒருவர், என்னைக்கண்டபோது…. பேசமுடியாமல் தலையை மட்டும் அசைத்தார். அவரது கோலம் மனதை வருத்தியது.

சனங்களைப் போலவே போராளிகளும் நடமாடிக்கொண்டிருந்தார்கள். தெரிந்த… பழக்கமான ஆண்பெண் போராளிகளைக் கண்டாலும் நின்று நிதானித்து கதைக்கக்கூடிய சூழ்நிலை இல்லாதிருந்தது.

தனித்துப்போன நிலையில்… கனத்துப்போன மனதுடன் கண்ணுக்கு தெரிந்தவர்களுக்கு புன்னகைத்துவைத்தேன்.

இப்போது ஒருபெரும் ஆலமரத்தடி. சனங்கள் மிக அதிகமாகத் தெரிந்தார்கள்.

தற்செயலாக அவளை அங்கு கண்டேன்.

அடிக்கடி என்னை தேடி வருபவள். அது அவளது கடமை. அதையும் தாண்டி நான் அவளையும், அவள் என்னையும் புரிந்து வைத்திருந்தோம். தன் பணியின் தன்மைகளை, அதில் ஏற்படும் நெளிவுசுழிவுகளை, இன்னும் பலவற்றை நாங்கள் பேசிக்கொள்வோம்.

“ அக்கா… எங்கை இருக்கிறியள்…. அண்ணை எங்கை…… “ என்று கைகளைப் பற்றி….நலம் விசாரித்தவளைப் பார்த்தேன்.

செம்மஞ்சள் நிறத்தில் ஒரு சுடிதாரும், நீலநிறத்தில் நீளக்காற்சட்டையும் அணிந்திருந்தாள். சத்தின்றி வெளிறிப்போன முகத்தில் வியர்வைபூத்திருந்தது.

இரண்டாவது தடைவையாக தாய்மையுற்றிருந்தாள். குழந்தைப் பேற்றை அண்மித்துவிட்டாள் எனப் புரிந்தது.

02.jpg“ கண்டமாதிரி செல் வருகுது…. இந்தநிலைமையில… அதுவும் தனியா ஏன் இதிலை….. “  கொஞ்சம் உரிமையெடுத்து, கடிந்தேன்.

“ இல்லையக்கா…. தெரியும் தானே…. ஒருவேலையா வந்தனான்…. போகப்போறன்…. நீங்கள் கவனம்…. அண்ணைக்கு ஒண்டும்நடக்காது… பயப்பிடாதேங்கோ…. போய் அங்கயே இருங்கோ…. திரியிறது தான் பயம்…..”

எனக்கு அறிவுறுத்தினாள்.

கருவைச் சுமந்தநிலையில் அவளும் அவளின் போராளித் துணைவனும் உடையார்கட்டுப் பகுதியில் காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பியதையும் நான் பார்த்திருந்தேன்.

இருவரும் விடைபெற்றோம்.

அவளது போராளித்துணைவன் இப்போது வேறுபணியில். இவள் இங்கே வேறுபணியில்.   கனத்துப்பருத்த இதயத்துடன், தங்கியிருந்த  மரத்தடிக்கே வந்துவிட்டேன்.

அதற்கு அடுத்தடுத்து வந்தநாட்களில் மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் என எல்லாஇடங்களையும் படையினர் எறிகணைகளால் பொழிந்து தள்ளினார்கள்.

ஓடி ஒளிவதற்கு இடமில்லை. உண்டியல்சந்தி……… முள்ளிவாய்க்கால்….. நந்திக்கடற்கரை  என ஓடினோம்.

உடல்கள் பலமிழந்து கண்கள் பழுத்துப்போய்விட்டன….. கால்கள் குச்சிகளாகி நடப்பதற்கு மறுப்புக்காட்டின….மரணம் எங்களுக்குள் நுழைந்து,  கிட்டத்தட்ட அரைப்பிணமாகிவிட்டார்கள் சனங்கள்.

கழுத்தில் கௌவிப்பிடித்துவிட்ட சிங்கத்தை பலமுள்ளவரை இழுத்துச் செல்லுமே சின்னஞ்சிறு மான்…. அந்த நிலையில் தான் இருந்தோம்.

போராளிகளை நானறிய யாரும் திட்டவில்லை.

“ இரவு பகலா ஓயவிடாம அடிச்சா… பிள்ளையளும் தான் என்ன செய்யிறது…. “ என கவலையோடு சொல்லிக்கொண்டுதான் சனங்கள் நகர்ந்தார்கள்.

சரியான சாப்பாடு இல்லாத நிலையிலும் காயப்பட்ட சனத்தைக் காப்பாற்றிக்கொண்டும், சனத்தின் காயங்களுக்கு  கட்டுப்போட்டுக்கொண்டும் இருந்த போராளிகளை என் கண்கள் கண்டதை நான் சொல்லித்தான் ஆகவேண்டும்.

இப்போது நடத்தப்படும் போர் என்பது… காட்டுமிராண்டித்தனமானது…. இது மிகவும் சூழ்ச்சிகரமாக….. தமிழ்ச்சனங்களின்மேல் அரசால் ஏவப்பட்டிருக்கிறது என்பது போகப்போக  எல்லோருக்கும் புரிந்தது.

நிறையப்பேர் இறந்துவிட்டார்கள். எஞ்சியிருப்பவர்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனப் பலரும் நினைத்திருக்கவேண்டும்.

okay-cc.jpgஅடித்துக்கொட்டும் பேய்மழையாய்…. குண்டுகளும் துப்பாக்கிச் சன்னங்களும் கொட்டத் தொடங்கிவிட்டன…..

உயிர்காக்க வேண்டி சனங்கள் ஓடத் தொடங்கிவிட்டார்கள்.

எல்லாமே மௌனித்துப் போனது….. முள்ளிவாய்க்கால் தமிழ்சனங்களின் மனங்களில் ஆறாத காயமாகிப்போயிருக்கிறது…..

காலத்தின் நகர்வில்…. எல்லோரும் எங்கெங்கெல்லாமோ விசிறப்பட்டோம். நான் வந்துவிழுந்த இடம் சுவிற்சர்லாந்து.

சுவிற்சர்லாந்தின் மிகப்பெரிய இரண்டாவது நகரமும், சர்வதேசமுக்கியத்துவம் கொண்டதுமான ஜெனிவாவில் ஒருபெரும் நிகழ்வு…..

முள்ளிவாய்க்கால் சனநெரிசலை நினைவுபடுத்தும் காட்சி. திரும்பிய இடமெங்கும் தமிழின் உரையாடல் காதில் ஒலித்தது.

“ அக்கா…. இஞ்சயா இருக்கிறியள்….. “ கைகளைப் பற்றிக்கொண்டாள் அவள். என்னுடைய அவளே தான்.

முன்னெற்றியில் இழையோடும் சில நரைமுடிகள் தான் புதிது. மற்றும்படி அப்படியே இருந்தாள் அவள்.

“ அக்கா… அண்ணை சுகமா இருக்கிறாரோ… வந்தவரோ…. “ என அக்கறையோடும் பெருகிவழியும் பேரன்போடும் கேட்டாள்.

பிறகு… அவளும் நானும் சனக்கூட்டத்தை விட்டு ஒரு மரத்தடியில் ஒதுங்கினோம்.

இன்னொரு அயல்நாட்டிலிருந்து ஜெனிவாவின் நிகழ்வுக்கு பேருந்தில் அவள் வந்திருந்தாள்.

பாயும் காட்டாறாய்…. பலவற்றைப் பேசினாள். அவள் பேசட்டும் என விட்டுக்கொடுத்து…. கேட்டுக்கொண்டிருந்தேன்.

“ உங்களைக் கண்டபிறகு ஒருதரம் என்ரை ஆளைக் கண்டனான் அக்கா…. ஒருநாளும் என்னட்டை அப்படிக் கதைக்கிறேல்லை… அண்டைக்கு… ‘பிள்ளையளுக்கு அம்மா கட்டாயம் தேவை…. கவனம்…. என்னைப்பற்றி கவலைப்படாதை…… காலம் நல்லமாதிரி மாறினால் நாங்கள் திரும்பவும் சந்திப்பம்……..ஒருவேளை நானில்லாம போனாலும்……நான் உன்னோடைதான் இருக்கிறன் எண்டு நினைச்சுக்கொண்டு………. பிள்ளைகளை வளர்த்தெடு ….எண்டு சொல்லிச்சுது….. தன்னை எதிர்பாக்க வேண்டாமெண்டும் சொல்லிச்சுது…. அவ்வளவும் தான்….. “

உதடுகள் துடிக்க…. அவளின் கண்கள் சிவந்தன.

அவளையும் மீறி அழப்போகிறாள் எனப் புரிந்தது.

“ அழவேண்டாம் பிள்ளை…. நான் தாங்கமாட்டன்…. “ அவளை அணைத்துக் கொண்டேன்.

அவள் தன்னைத் திடப்படுத்திக் கொண்டாள்……

“ இவர் நீங்கள் சின்னனாகப் பாத்த ஆள்… இவதான் நீங்கள் பாத்தநேரம்  வயித்தில இருந்த ஆள்…. இரண்டுபேரும் பெரியம்மாவுக்கு வணக்கம் சொல்லுங்கோ… “ என்றாள்.

தேன்தமிழில் வணக்கம் என்றார்கள்.  பிறகு நிகழ்வை வேடிக்கை பார்க்க தொடங்கினார்கள்.

“ சின்னனுக்கு தேப்பனை தெரியாது தானே… படத்தை வைச்சு ஏதோ கதைக்கும்…. தேப்பனிலை சரியான உயிர்…. பெடிப்பிள்ளை இப்ப கொஞ்சம் வளந்திட்டார்தானே…. நான் கவலைப்படக்கூடாதெண்டு நினைக்கிறார்….. “ என்றாள்.

பிறகும் பல விடயங்களை பேசினோம். பேற்றுக்காலம் அண்மித்துவிட்டது..

நகரமுடியாத சனநெரிசலில் அவளுக்கு குழந்தை பிறப்பதற்கான நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. அவளது சிறிய மகனும் இன்னும் இரண்டு தோழிகளும், அம்மாவும் அவளுடன் வந்தனர்.

கிபிர் விமானங்கள் இரண்டோ மூன்றோ தாழப்பறந்து கீச்சிட்டன……

குண்டுகள் விழுந்த அதிர்வு… அவள் நிலத்தில் கிடந்தாள். அம்மா அழுவது இலேசாகத் தெரிந்தது.

தோழிகள் காயப்பட்டுவிட்டனர். இவள் எப்படியோ அம்மாவுடனும் மகனுடனும் Zone 4 முகாமுக்கு வந்துவிட்டாள்.

படுத்த படுக்கையிலேயே கிடந்தாள். அம்மாதான் முகாமில் இராணுவத்தினருடனும், மருத்துவர்களுடனும் வாதாடி,  அவளை முகாமிற்கு வெளியே அரச மருத்துவமனைக்கு போக அனுமதி எடுத்தாள்.

வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது….. அவளுக்கு நினைவில்லை.

மயக்க நிலையிலேயே பெண்குழந்தை பிறந்தது.

எப்படியோ… இராணுவத்தினருக்கு அவளைப்பற்றிய தகவல்கள் கிடைத்துவிட்டன. வெளியேறிவிட இயலாத உடல்நிலை. மருத்துவ மனையிலேயே கண்காணிக்கப்பட்டு வந்தாள்.

ஒருநாள் அங்கு கடமையில் இருந்த…… இளகிய மனங்கொண்ட மருத்துவர் ஒருவரின் உதவியோடு, அவள் வெளியே வர முடிந்தது.

உடல்நிலை தேறமுடியாத நிலையில் போக்கிடமின்றி… குழந்தையோடு யாருமற்று, தனித்து   நின்றவளை….

“ பயப்பிட வேண்டாமக்கா…. நாங்கள் கடமைகளுக்காக முதலே இங்க வந்திட்டம்…. “

எனச் சொல்லிய முகம்தெரியாத இளைஞர்கள் பாதுகாத்தனர்.

ஒருவாறு அம்மாவின் தொடர்பு கிடைத்து…. வெளிநாட்டில் இருந்த, மைத்துனனுக்கு தகவல் சொல்லி…. ஓரிரு வாரங்களில்

அயல்நாடு வந்தாள்.

அங்கேயும் பாதுகாப்பற்ற நிலை. வெவ்வேறு பிரச்சனைகள் வெவ்வேறு வடிவங்களில் துரத்தின…. தெரிந்தவர்களிடம் கூட பழகுவதற்கு பயப்படவேண்டிய சூழலும் மனநிலையும்.

அதன்பிறகுதான் அவள் புலம்பெயர்ந்து வந்தாள்.

இப்படியே கதைசொன்னவள்…. தன்னுடன் நின்று, உயரிழந்தவர்களை… அவர்களின் குடும்பங்களைப் பற்றி கவலையோடு சொன்னாள்.

“ நாங்களெண்டாலும் போராட வந்தனாங்களக்கா…. எதையும் தாங்கத்தான் வேணும்…. ஆனா….எங்கட சனம் பாவம்…. சனம் கஸ்டப்படுறதைதான் தாங்கேலாம கிடக்கு…..பிள்ளையளுக்கும் எல்லாம் சொல்லித்தான் வளக்கிறன்…நானில்லாட்டிலும் எங்கட சனத்துக்கு எல்லாம் செய்யவேணும்……“

அவள் சொல்லிய அந்த வார்த்தைகள் மனதை எதுவோ செய்தன.

அவளின் போராளித் துணைவனுக்கு என்ன ஆயிற்று என்பது தெரியாது.

அவளைப் போல தங்கள் தேசத்திற்காக… போராடி… இழப்புகளையும் துயரங்களையும் தாங்கிக்கொண்டும் ஏற்றுக்கொண்டும் இன்னும் பலபேர் இருக்கிறார்கள். இவர்கள் ஒரு காலத்தின் சாட்சிகள்
 

https://www.thaarakam.com/news/131216

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.