Jump to content

நள்ளிரவு முதல் பெற்றோல் விலையில் அதிகரிப்பு


Recommended Posts

லங்கா IOC நிறுவனம், நள்ளிரவு முதல் 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை 5 ரூபாயால் அதிகரித்துள்ளது.

அதன்படி, 137 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 92 ஒக்டேன் பெற்றோலின் லீட்டர் ஒன்றின் விலை தற்போது 142 ரூபாயாக அதிகரித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/நள்ளிரவு-முதல்-பெற்றோல்-விலையில்-அதிகரிப்பு/175-250366

Link to comment
Share on other sites

உலக சந்தையில் மசகு எண்ணெய் குறைந்தும், பல மாதங்களாக விலையை குறைக்க மறுத்த அரசு, மாறாக விலையை அதிகரித்ததுள்ளது. 

இதனால், அன்றாட பொருட்கள் விலையேற, வாழ்க்கை சுமை மேலும் அதிகரிக்கும்.

வ்ருமானமும் குறைந்த இல்லை இல்லாத நிலையில் ஏன் இந்த மக்கள் வெறுப்பு நடவடிக்கை ?

ஒரே ஒரு காரணம் தான் பதிலாக அமையும். பணம் தேவை அரசிற்கு. 

அரசிற்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாத்தியங்கள் தென்படுகின்றன. 

Link to comment
Share on other sites

பெற்றோல் விலையை அதிகரித்தமைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கம்

(நா.தனுஜா)

இலங்கை - இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் பெற்றோலின் விலையை அதிகரித்திருப்பது தவறு எனவும், இது குறித்து அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியிருக்கிறது.

இதுகுறித்து நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,</p>
இலங்கை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (லங்கா ஐ.ஓ.சி) கடந்த 17 ஆம் திகதியிலிருந்து ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 5 ரூபாவினால் அதிகரித்திருக்கிறது.

அரசாங்கத்தினால் பெற்றோலுக்கான வரி அதிகரிக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உலக சந்தையில் எரிபொருள் விலை பாரிய வீழ்ச்சி கண்டிருக்கும் நிலையில் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் பெற்றோல் விலையை அதிகரிப்பது ஆச்சரியமளிக்கிறது.

இவ்வாறு விலையை அதிகரிப்பதால்,பெற்றோலுக்கான கேள்வி குறைந்து, இலாபம் குறைவடையும். அவ்வாறிருக்கையில் பெற்றோல் விலையை அதிகரித்தமைக்கான காரணம் என்ன? இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் வெளிநாட்டுக் கப்பல்களுக்கு எரிபொருள் வழங்குவதன் ஊடாகப் பெருமளவு இலாபத்தை உழைக்குறது. எனவே அவர்களுக்கு உள்நாட்டு நுகர்வோரைப் பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை.

எனவே எரிபொருளை அத்தியாவசியப் பொருளாக அறிவிப்பதுடன், அதன் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை நுகர்வோர் அதிகார சபையிடம் கையளிக்குமாறு வலியுறுத்தி நாம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருக்கிறோம். அதேவேளை, இவ்விலை உயர்வு அநீதியானது என்பதுடன், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.

 

https://www.virakesari.lk/article/82286

Link to comment
Share on other sites

எரிபொருள் விலை அதிகமென்றால் பெற்றோலியவள கூட்டுத்தாபன எரிபொருள் நிலையங்களை நாடுங்கள் - அரசாங்கம் 

(ஆர்.யசி)

தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிக விலையில் எரிபொருள் வழங்கப்படுகின்றது என்றால் அவற்றை நிராகரித்துவிட்டு இலங்கை பெற்றோலியவள கூட்டுத்தாபன எரிபொருள் நிறைப்பு நிலையங்களை மக்கள் நாடுங்கள். அரசாங்கம் நிர்ணய விலையிலேயே எரிபொருள் வழங்குகின்றது என்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,
யுத்தம் முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் மிக வேகமாக நாடு வளர்ச்சி கண்டது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் ஐக்கியமும் ஒற்றுமையும் உருவாகியது. நாட்டில் ஒரு மின் பிறப்பாக்கி கூட வெடிக்காத நாடாக இலங்கை மாற்றம் பெற்றது. 2010 - 2014 ஆம் ஆண்டுகாலம் இலங்கையின் பொற்காலம் என்றே கூறவேண்டும். மஹிந்த ராஜபக்ஷ யுகம் அவ்வாறான நன்மைகளை நாட்டுக்கு கொண்டுவந்தது.

பொருளாதார வளர்ச்சி மிகவும் உயரிய மட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் இவை அனைத்தையும் புரட்டிப்போடும் விதத்தில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் நாட்டில் பல நாசகார வேலைகளை செய்தது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிக கீழ் மட்டத்திற்கு வீழ்ச்சி கண்டது. இந்நிலையில் இப்போது எமது அரசாங்கதிற்கு முன்னாள் பிரதமர் பொருளாதார ஆலோசனைகளை வழங்கியுள்ளார். கடந்த காலத்தில் இவர்கள் ஆட்சில் முன்வைக்காத யோசனைகளை, எமது ஆட்சியாளர்களால் பின்பற்றக்கூடிய ஆலோசனைகள் இருப்பின் அதனை நாம் கவனத்தில் கொள்ள தயாராக உள்ளோம்.

மேலும் எண்ணெய் விலை குறைப்பு குறித்து எமது அரசாங்கம் நிலையான திட்டமொன்றை உருவாக்கியுள்ளது. எரிபொருள் விலையில் மாற்றங்களை செய்யாது ஒரு நிர்ணய விலையில் கடைப்பிடிப்பதாகும். அதாவது உலக சந்தையில் கச்சாய் எண்ணெய் பீப்பாய்களின் விலை அதிகரித்தால் இலங்கையில் எண்ணெய் விலை அதிகரிக்காது.

அதேபோல் கச்சாய் எண்ணையின் விலை குறைந்தால் அதன் சாதகத்தை அரசங்கம் பயன்படுத்திக்கொள்ளும், அதேபோல் மத்திய வங்கியில் இதற்கென உருவாக்கியுள்ள எரிபொருள், கணியெண்ணெய் தொடர்பிலான கணக்கில் இலாபங்களை சேமிப்போம், பெற்றோலிய கூட்டுத்தாபனம் பல கோடி ரூபாய்கள் கடனில் இயங்குகின்றது, மின்சாரசபை பல கோடி ரூபாய்கள் கடனில் இயங்குகின்றது. இவற்றின் கடன்களை நாம் செலுத்தி முடித்தால் எதிர்காலத்தில் இந்த நிறுவனங்கள் கடன் இல்லாது செயற்பட முடியும். மக்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும்.

தனியார் எரிபொருள் நிரப்பு நிலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாலும் இலங்கை பெற்றோலியவள கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிர்ணய விலையில் எரிபொருள் வழங்கப்படுகின்றது.

தனியார் நிறுவனங்கள் குறித்து எமக்கு எதனையும் கூற முடியாது. ஆனால் மக்களுக்கு ஆலோசனையாக ஒரு விடயத்தை கூற முடியும். தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விலை அதிகமென்றால் இலங்கை பெற்றோலியவள கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/82290

Link to comment
Share on other sites

25 minutes ago, ampanai said:

பெற்றோலிய கூட்டுத்தாபனம் பல கோடி ரூபாய்கள் கடனில் இயங்குகின்றது, மின்சாரசபை பல கோடி ரூபாய்கள் கடனில் இயங்குகின்றது.

இலாபத்தில் எது உள்ளது ? 

- பெருந்தோட்ட துறை, ஆனால் அந்த மக்கள் தமிழர்கள் என்பதால் அவர்களுக்கு நியாயமான ஊதியம் கொடுப்பதில்லை 
- உல்லாசத்துறை, கோவிட்19 னால் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் முற்றாக முடக்கப்படும் 
- புலம்பெயர்ந்து வேலை செய்யும் இலங்கையர்கள், பலரும் நாட்டிற்கு திரும்பி விட்டார்கள். அந்த வருமானமும் இல்லை 

ஆக, செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், இராணுவ செலவுகளை ... உங்கள் கொலைகார இராணுவம் முன்னரே களவு, கடத்தல், போதைப்பொருள் என ஈடுபட் டது. வரும் காலங்களில் அது அதிகரிக்கும். 

Link to comment
Share on other sites

வாகனதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஸ்ரீலங்காவில் ஐ ஓ சி எரிபொருள் விலை அதிகரிப்பினை மேற்கொண்டுள்ள நிலையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் எரிபொருட்களின் விலை குறைவடைந்துள்ள போதிலும் அரசாங்கம் எரிபொருள் விலையில் அதிகரிப்பை செய்வதற்கு தீர்மானித்துள்ளது என சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் போலியானவை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐஓசி தனது சொந்த முடிவின் அடிப்படையிலேயே விலையதிகரிப்பை செய்தது அரசாங்கத்தின் தலையீடு எதுவுமில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐ ஓ சி யில் எரிபொருள் விலை அதிரிப்பு என்றால் அரசால் நடத்தப்படும் எரிபொருள் நிலையங்களுக்கு மக்கள் செல்ல முடியுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/143540?ref=imp-news

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.