Jump to content

முன்னணி செய்தி இணையத்தளம் முடக்கப்பட்டது; இன்று காலை சைபர் தாக்குதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முன்னணி செய்தி இணையத்தளம் முடக்கப்பட்டது; இன்று காலை சைபர் தாக்குதல்

cyber-attack.jpgஇலங்கையின் முன்னணி செய்தித் தளங்களில் ஒன்றான ஹிரு நியூஸ் (hirunews.lk) செய்தித் தளம் வைபர் தாக்குதலுக்குள்ளாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக குறிப்பிட்ட இணையத்தளம் இன்று காலை முதல் முடக்கப்பட்டிருக்கின்றது.

Tamil Eealam Cyber Arm என்ற அமைப்பே இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருப்பதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

தமது வலைத்தளம் ‘ஹேக்’ செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ள குறிப்பிட்ட இணையத்தள முகாமைத்துவம், இதை தமது செய்தி குழுவுக்கு இலங்கை விமானப்படை சைபர் கட்டளை மையம் உறுதிப்படுத்தியது எனவும் குறிப்பிட்டுள்ளது.

http://thinakkural.lk/article/42203

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tamil Eealam Cyber Arm என்ற பெயர் நன்றாகவே உள்ளது.
ஆனால்... சிங்கள போட்டி இணையத் தளங்கள், இந்த வேலையை செய்து விட்டு, 
தமிழரின் மேல் பழியை போட்டு... தப்பிக்க பார்க்கிறார்களோ, என்ற சந்தேகமும் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தாக்குதலை செய்தவர்களுக்கு பாராட்டுக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tecf.jpg

‘ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்’ என்ற பெயரில் மூன்றாவது தடவையாக சைபர் தாக்குதல்!

ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்என ற பெயரில் மூன்றாவது தடவையாக 05 இணையத்தளங்கள் மீது தமிழீழம் சைபர் அணி சைபர் தாக்குதலை மேற்கொண்டுள்ளது என இலங்கை சைபர் கட்டளை மையம் தெரிவித்துள்ளது.

மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாளான இன்று, இலங்கையின் அமைச்சரவை அலுவலக இணையம், தூதரகத்தின் இணையத்தளங்கள், அரச நிர்வாக இணையங்கள் மற்றும் அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட இணையத் தளங்கலுக்குள் ஊடுருவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைப் படங்களை பதிவேற்றியும் அதை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவேற்றியுள்ளனர். இருப்பினும் 05 இணையத்தளங்கள் மீது மட்டுமே சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017ம் ஆண்டு, 2018ம் ஆண்டு, 2019ம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதியில் இணையத்தளங்களை தமிழீழம் சைபர் போர்ஸ் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சைபர் தாக்குதலை இலங்கை விமானப்படை சைபர் கட்டளை மையம் உறுதிப்படுத்தியுள்ளதுடன் மேலதிக நடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றது.

 

EYQ_d43XgAIrWaD.jpg

 

EYRPy4VXQAUwyj4.jpg

 

EYRKLjaXQAEELdr.jpg

 

EYRFVtyX0AELuUA.jpg

http://athavannews.com/ஒப்பரேசன்-முள்ளிவாய்க்/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கத்தின் பல இணையத்தளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல்

இலங்கை அரசாங்கத்தின் பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் இடம்பெற்றறுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

cyber-attack1-1.jpg
சுகாதார அமைச்சின் இணையத்தளத்தினை இலக்குவைத்து சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. எனினும் இணையத்தளம் தற்போது மீட்கப்பட்டுள்ளது.cyber-attack-3.jpg
இதேவேளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினதும் பொதுநிர்வாக அமைச்சினதும் இணையத்தளங்களும் சைபர் தாக்குதல்களிற்கு இலக்காகியுள்ளன.

http://thinakkural.lk/article/44163

Link to comment
Share on other sites

கோவிட்19 இனை வெற்றிகரமாக முடிவிற்கு கொண்டுவந்த 'எமது வீரர்கள் (?)', இந்த மின்வலை தாக்குதல்களையும் ஒரு கை பார்த்து விடுவார்கள் (?) - ரம்புக்கலை (?) ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைபர் தாக்குதல்களை மேற்கொண்டவர்களின் நோக்கம் என்ன? இலங்கை அதிகாரி தகவல்

இலங்கையில் சில இணையத்தளங்கள் சைபர் தாக்குதலிற்குள்ளாகியுள்ளன என்பதை உறுதி செய்துள்ள இலங்கையின் கணிணி அவசர தயார்நிலை ஒருங்கிணைப்பு நிலையம் எனினும் எனினும் தரவுகள் எவையும் திருடப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.certc-300x143.jpg
பலதரப்பட்டவர்களின் கவனத்தை ஈர்ப்பதும் வெறுப்பை தூண்டும் செய்திகளை பரப்புவதுமே இந்த சைபர் தாக்குதல்களை மேற்கொண்டவர்களின் நோக்கம் என இலங்கையின் கணிணி அவசர தயார்நிலை ஒருங்கிணைப்பு நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி லால் டயஸ் தெரிவித்துள்ளார்.cyber-attack1-2.jpg
இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு தேவையற்ற முக்கியத்துவத்தை வழங்ககூடாது என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த காலங்களில் இதேபோன்ற தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளோம்,இவ்வாறான தாக்குதல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

http://thinakkural.lk/article/44380

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சைபர் தாக்குதலுக்கு அறிவுறுத்தலை பின்பற்றாமையே காரணம்’ – கமல் தெரிவிப்பு

 

Add-a-subheading-1-4.jpg?189db0&189db0

 

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றாமை காரணமாகவே, அண்மையில் அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியதாக கமல் குணரத்ன தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று (16) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், இலங்கையில் அண்மையில் அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இலங்கையில் இணைய பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு காணப்படுகின்றது. அத்துடன், விமானப்படையினரின் கணினிப்பிரிவும் மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. இவை இரண்டும் இணைந்து செயலாற்றுகின்றன.

இந்த நிலையில், சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு வழங்கியுள்ளது.

பெரும்பாலான அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் அதனை பின்பற்றியுள்ளன. எனினும், ஒரு சிலர் அதனை பின்பற்றவில்லை. உரிய நேரத்தில் உரிய அறிவுறுத்தல்களை பின்பற்றாமை காரணமாக குறித்த திணைக்களங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளானமைக்கான பிரதான காரணமாக நாங்கள் பார்க்கின்றோம் என்றார்.

https://newuthayan.com/சைபர்-தாக்குதலுக்கு-அறி/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.