Jump to content

`பிரதமராக இருந்தாலும் அதே ரூல்தான்!' -ஜெசிந்தாவுக்கு அனுமதி மறுத்த நியூஸி., உணவகம்; சுவாரஸ்ய சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

`பிரதமராக இருந்தாலும் அதே ரூல்தான்!' -ஜெசிந்தாவுக்கு அனுமதி மறுத்த நியூஸி., உணவகம்; சுவாரஸ்ய சம்பவம்

பிரதமர் ஜெசிந்தா

 

உணவு உண்ணச் சென்ற நியூஸிலாந்து பிரதமருக்கு அனுமதி மறுத்து, காக்க வைக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் நிகழ்ந்துள்ளது. தற்போது, இந்தச் செய்தி வைரலாகிவருகிறது.

அனைத்து நாடுகளைப் போலவே நியூஸிலாந்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,499 - ஆக உள்ளது. அதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர், 1,433 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் சிலர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். அந்நாட்டு அரசால் எடுக்கப்பட்ட மிகக் கடுமையான நடவடிக்கைகளால் அங்கு வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் கொரோனா இல்லாத நியூஸிலாந்து உருவாகும் என பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சீனாவில் வைரஸ் உறுதியான அடுத்த மாதம், அதாவது பிப்ரவரி இறுதியில், நியூஸிலாந்தில் முதல் வைரஸ் பரவல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தங்கள் நாட்டுக்குள் நுழையும் அனைவரும் கட்டாயமாக இரண்டு வாரங்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து அங்கு வைரஸ் பரவல் அதிகரிக்கவே, மார்ச் மாத மத்தியில் வெளிநாட்டு மக்கள் நியூஸிலாந்துக்கு வர தடை பிறப்பிக்கப்பட்டு, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஆரம்பம் முதலே மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்ட ஊரடங்கில், மக்கள் வெளியில் நடமாடுவது முதல் பெரும் தொழிற்சாலை உற்பத்தி வரை என அனைத்துக்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. இதன் விளைவாக, ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஒரே மாதத்தில் அங்கு வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கமாகக் குறைந்துள்ளது. இதையடுத்து, ஏப்ரல் இறுதியிலிருந்து தற்போது வரை அங்கு வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்துக்கு வந்துள்ளது. இதனால் நியூஸிலாந்தில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் முதல் கட்டமாக, கடுமையான விதிகளுடன் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக விலகல் என்பதுதான் அந்நாட்டின் முக்கிய தாரக மந்திரமாக உள்ளது. எனவே, முதல்கட்ட தளர்வில் பொதுமக்கள் கட்டாய சமூக இடைவெளியுடன் வெளியில் நடமாடலாம், உணவகங்கள், போக்குவரத்து போன்றவற்றில் எண்ணிக்கையில் கட்டுப்பாடு, சில தொழில்கள் இயங்க அனுமதி, ஆகிய பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் நியூஸிலாந்து பிரதமர். கொரோனாவை வெற்றிகரமாகக் கட்டுக்குள் கொண்டுவந்த குஷியில் உள்ளது நியூஸிலாந்து.

இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் விதித்த கட்டுப்பாடுகளால் அவருக்கே ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று, நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், தன் வருங்கால கணவர் கிளார்க் கேஃபோர்ட் மற்றும் சில நண்பர்களுடன் அந்நாட்டு தலைநகரான வெல்லிங்டனில் இருக்கும் ஒரு கஃபேவுக்குச் சென்றுள்ளார். நியூஸிலாந்து அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே உணவகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில், பிரதமர் ஜெசிந்தா அங்கு சென்றபோது அனைத்து இருக்கைகளும் நிரம்பி இருந்துள்ளன

 

 

ஜெசிந்தா ஆர்டர்ன்

 

இதனால் பிரதமரை உள்ளே அனுமதிக்க முடியாது என அந்த கஃபே நிர்வாகம் தெரிவித்துள்ளது. எந்த விதிமுறைகளையும் மீறாமல், எதையும் மாற்றாமல், சிறிது நேரம் அங்கேயே காத்திருந்து பின் இருக்கை கிடைத்ததும் உணவு உண்டுவிட்டுச் சென்றுள்ளார் ஜெசிந்தா. அப்போது, அங்கிருந்த கஃபே ஊழியர்களிடம், ஊரடங்கு காலத்தில் அவர்கள் அனுபவித்த சிரமங்களையும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

அந்த கஃபேயில் நடந்த அனைத்து சம்பவங்களையும் நேரில் பார்த்த ஒரு வாடிக்கையாளர், தன் ட்விட்டர் பக்கத்தில் அதைப் பதிவிட்டுள்ளார். இதற்கு, ஜெசிந்தாவின் வருங்கால கணவர் கிளார்க் பதில் அளித்துள்ளார். அதில், “ இந்தக் குழப்பத்துக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். சரியான முறையில் இதைக் கையாளத் தவறிவிட்டேன், முன்கூட்டியே இருக்கை புக் செய்யவில்லை. ஆனால், அவர்களுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார். நியூஸிலாந்து பிரதமரின் செயலைப் பாராட்டியும், அனைத்து ஆண்களும் இறுதியில் இப்படித்தான் செய்வார்கள் எனவும் ஜெசிந்தாவின் காதலரை கிண்டல் செய்தும் நெட்டிசன்கள் கருத்து பகிர்ந்துவருகின்றனர்.

https://www.vikatan.com/news/international/new-zealand-pm-denied-table-in-cafe-due-to-social-distancing

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

" அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி" இப் பொன்மொழி நியூஸிக்கு மட்டுமல்ல நம்ம நாடுகளுக்கும் மிக மிக பொருந்தும்.......!    👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

இதனால் பிரதமரை உள்ளே அனுமதிக்க முடியாது என அந்த கஃபே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

A Man Stopped Boris Johnson in a Park to Speak to Him. It's Not ...

அங்குதன்னும்  கடைசியில் உள்ளே விட்டார்கள் இங்கு uk யில் பார்க்கில்  நடந்து போற பிரதமருக்கு பார்க்கில் நடக்க வந்த ஒன்று அட்வைஸ் குடுக்குது எல்லாம் கொரனோ காலம் .😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

A Man Stopped Boris Johnson in a Park to Speak to Him. It's Not ...

அங்குதன்னும்  கடைசியில் உள்ளே விட்டார்கள் இங்கு uk யில் பார்க்கில்  நடந்து போற பிரதமருக்கு பார்க்கில் நடக்க வந்த ஒன்று அட்வைஸ் குடுக்குது எல்லாம் கொரனோ காலம் .😃

கைநீட்டி பயங்கர அட்வைஸ் போல்😃, அவரும் நின்று கதை கேட்கின்றார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Politicians London Stock Photos (Exclusive) | Shutterstock

3 minutes ago, உடையார் said:

கைநீட்டி பயங்கர அட்வைஸ் போல்😃, அவரும் நின்று கதை கேட்கின்றார் 

இவரும்  கோஸ்ரா  கோப்பி யை சூடு ஆறுமுன்  சாவகாசமாய் குடித்தபடியே மண்டையை ஆட்டி கேட்டு விட்டு ஆவண செய்கிறேன்  என்று சொல்லிக்கொண்டு நகர்ந்து இருக்கிறார் .

இப்படியான செய்திகள் கொர்னோ திசை திருப்பல் வகைக்குள்  வரும் .நாதமுனி வடிவா விளங்கப்படுத்துவார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

கைநீட்டி பயங்கர அட்வைஸ் போல்😃, அவரும் நின்று கதை கேட்கின்றார் 

 

5 hours ago, பெருமாள் said:

Politicians London Stock Photos (Exclusive) | Shutterstock

இவரும்  கோஸ்ரா  கோப்பி யை சூடு ஆறுமுன்  சாவகாசமாய் குடித்தபடியே மண்டையை ஆட்டி கேட்டு விட்டு ஆவண செய்கிறேன்  என்று சொல்லிக்கொண்டு நகர்ந்து இருக்கிறார் .

இப்படியான செய்திகள் கொர்னோ திசை திருப்பல் வகைக்குள்  வரும் .நாதமுனி வடிவா விளங்கப்படுத்துவார் .

போட்டிருக்கிற உடைகளை பார்த்தா ஓடப் போன ஆளாத் தெரியலை.

5 hours ago, பெருமாள் said:

இப்படியான செய்திகள் கொர்னோ திசை திருப்பல் வகைக்குள்  வரும் .நாதமுனி வடிவா விளங்கப்படுத்துவார் .

நாதமுனி உடனடியாக மேடைக்கு வரவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

போட்டிருக்கிற உடைகளை பார்த்தா ஓடப் போன ஆளாத் தெரியலை.

நாதமுனி உடனடியாக மேடைக்கு வரவும்.

 

5 hours ago, பெருமாள் said:

Politicians London Stock Photos (Exclusive) | Shutterstock

இப்படியான செய்திகள் கொர்னோ திசை திருப்பல் வகைக்குள்  வரும் .நாதமுனி வடிவா விளங்கப்படுத்துவார் .

நாதமுனி வந்து.. என்ன சொல்கிறார் என்று பார்க்க ஆவலாக உள்ளேன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

நாதமுனி வந்து.. என்ன சொல்கிறார் என்று பார்க்க ஆவலாக உள்ளேன். :grin:

ஓ பிரதமர் ஓடுற உடுப்பை போட மறந்துட்டார் என்று சொல்வாரோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.