Jump to content

முன்னாள் இராணுவ அதிகாரிகளிற்கு அரச பதவிகளில் இடமளிக்கப்படுவது நாங்கள் பதவியிலிருக்கும்வரை தொடரும்- மகிந்த


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் இராணுவ அதிகாரிகளிற்கு அரச பதவிகளில் இடமளிக்கப்படுவது நாங்கள் பதவியிலிருக்கும்வரை தொடரும்- மகிந்த

விடுதலைப்புலிகளை தோற்கடித்த படையினரும் பொலிஸாரும் சுகாதார தரப்பினருடன் இணைந்து கொவிட் 19ற்கு எதிரான இன்னொரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வெற்றிபெறவே முடியாத யுத்தம் என பரந்துபட்ட அளவில் கருதப்பட்ட யுத்தத்தில் வெற்றிபெற்றதன் மூலம் படையினரும் காவல்துறையினரும் உலகிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினர் என அவர் தெரிவித்துள்ளார்.200315-SLN-coronavirus-1-300x199.jpg
இது தமிழ் மக்களிற்கு எதிரான யுத்தமல்ல எவ்பிஐயினால் மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்ட அமைப்பிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட யுத்தம் என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளிற்கு எதிரான வெற்றி காரணமாக தமிழ் மக்கள் தற்போது தாங்கள் விரும்பியபடி வாழ முடிகின்றது என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச தமிழ் சிறுவர்கள் தற்போது பலவந்தமாக விடுதலைப்புலிகளால் படையணிகளில் சேர்க்கப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.sl-army.jpg
தமிழ் அரசியல்வாதிகள் முன்னர் போல விடுதலைப்புலிகளின் படுகொலைகள் குறித்து அச்சத்தில் வாழவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விடுதலைப்புலிகள் இல்லாததன் காரணமாக வடக்குகிழக்கில் தேர்தல்களை நடத்தலாம் என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக அந்த மாகாணங்களை சேர்ந்த வாக்களிப்பதற்கான உரிமையை பாதுகாக்க முடிகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கொவிட் 19ற்க்கு எதிரான யுத்தத்திலும்; வெல்கின்றது என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச பொதுமக்களுடன் இணைந்து படையினரும் காவல்துறையினரும் ஆற்றியுள்ள முக்கிய பங்களிப்பு கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதில் சுகாதார துறைக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.1589794044-Ex-military-officers-will-alw
இது மீண்டும் படையினரும் பொலிஸாருமே தேசத்தின் பாதுகாவலர்கள் என்பதை உறுதி செய்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழமைவில் நல்லாட்சி அரசியல் கட்சிகள் பொதுமக்களிற்கும் படையினருக்கும் இடையில் செயற்கையான சமூக வேறுபாட்டை உருவாக்குவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளை நான் கடுமையாக கண்டிக்கின்றேன் என பிரதமர்மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.mr-army2-300x111.jpg
ஆயுதப்படையை சேர்ந்த ஒருவருக்கு அரசாங்கத்தில் ஏதாவது பதவி வழங்கப்பட்டால் அதனை இராணுவமயப்படுத்தல் என எதிர்கட்சியினர் சித்தரிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
படையிலிருந்து ஒருவர் ஓய்வுபெற்றுவிட்டால் அவர் அதன் பின்னர் சாதாரண பிரஜையாகிவிடுகின்றார் அவர் அதன் பின்னர் படைததரப்பை சேர்ந்தவரில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.mahinda-rajapaksa-300x255.jpg
இலங்கையின் ஜனநாயக முறைiயிலான ஆட்சியை அழிப்பதற்கான முயற்சிகளை முறியடித்து மக்களின் வாக்குரிமையை அடிப்படையாக கொண்ட இறைமையை ஏற்படுத்துவதற்கு படையினர் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை நாங்கள் எப்போதும் மனதில் வைத்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அவமரியாதையையும் துன்புறுத்தலையும் எதிர்கொண்ட படையினருக்கு நீதி நிலைநாட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் பதவியிலிருக்கும் வரை படைத்தரப்பையும் காவல்துறையையும் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்களிற்கு அரசாங்கத்தில் இடமளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள பிரதமர் பௌத்த சிங்கள வரலாற்றை இதற்கு உதாரணம் காட்டியுள்ளார்.

 

http://thinakkural.lk/article/42282

 

Link to comment
Share on other sites

14 minutes ago, உடையார் said:

ஆயுதப்படையை சேர்ந்த ஒருவருக்கு அரசாங்கத்தில் ஏதாவது பதவி வழங்கப்பட்டால் அதனை இராணுவமயப்படுத்தல் என எதிர்கட்சியினர் சித்தரிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

படையிலிருந்து ஒருவர் ஓய்வுபெற்றுவிட்டால் அவர் அதன் பின்னர் சாதாரண பிரஜையாகிவிடுகின்றார் அவர் அதன் பின்னர் படைததரப்பை சேர்ந்தவரில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய மக்களாட்சி நாடாக கருதப்படும் இந்தியா முதல், பலமான மக்களாட்சி நாடாக கருதப்படும் அமெரிக்காவரை சேவையில் இருந்து இளைப்பாறிய முப்படையினர் தனியார் நிறுவங்களில் வெளி செய்வதே வழமை. 

அந்த பண்பை, அதற்கான காரணத்தை ஒளிக்கின்றார் போர்க்குற்றவாளி. 

ஒருநாள், அந்த முப்படையினரே இவர்களுக்கு ஆப்பாகி விடுவார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ampanai said:

மிகப்பெரிய மக்களாட்சி நாடாக கருதப்படும் இந்தியா முதல், பலமான மக்களாட்சி நாடாக கருதப்படும் அமெரிக்காவரை சேவையில் இருந்து இளைப்பாறிய முப்படையினர் தனியார் நிறுவங்களில் வெளி செய்வதே வழமை. 

அந்த பண்பை, அதற்கான காரணத்தை ஒளிக்கின்றார் போர்க்குற்றவாளி. 

ஒருநாள், அந்த முப்படையினரே இவர்களுக்கு ஆப்பாகி விடுவார்கள்.  

அப்படி நடந்தால் மிக்க நன்று, எமக்கு விடிவு வரலாம் 

Link to comment
Share on other sites

25 minutes ago, உடையார் said:

வெற்றிபெறவே முடியாத யுத்தம் என பரந்துபட்ட அளவில் கருதப்பட்ட யுத்தத்தில் வெற்றிபெற்றதன் மூலம் படையினரும் காவல்துறையினரும் உலகிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆணவம் அழிவிற்கே வித்திடும். 

ஒருவேளை, விடுதலைப்புலிகள் ஆனந்தபுரம் சண்டையில் வெறிக்கரமாக அரச படையை வென்றிருந்தால், இன்று அங்கே அந்த ஒரு தூபி இருந்திருக்கும், சிங்கள தாய்மார்கள் உறவுகள் வந்து மரியாதை செய்ய வழி தரப்பட்டிருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ ஆட்ச்சிகான அறிவித்தலைப் பகிரங்கமாகவே கூறும் துணிச்சலை மகிந்தவுக்கு யார் கொடுத்தது ?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இராணுவ ஆட்ச்சிகான அறிவித்தலைப் பகிரங்கமாகவே கூறும் துணிச்சலை மகிந்தவுக்கு யார் கொடுத்தது ?🤔

 

போராட்டத்தையும் கொரானா வைரைசயும் ஒன்றாக ஒப்பிடும் துணிச்சல் நம்ம தலக்குத்தான் உலகத்தில உண்டு

LTTEஎன்ற பயங்கரவாத அமைப்பு கொடுத்துபோட்டுது போல.....

கொரானா வைரைசையும் LTTE யையும் வீழ்த்திய அப்பே மகிந்தா மாத்தையாட்ட ஜெயவேவா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

ஒருவேளை, விடுதலைப்புலிகள் ஆனந்தபுரம் சண்டையில் வெறிக்கரமாக அரச படையை வென்றிருந்தால், இன்று அங்கே அந்த ஒரு தூபி இருந்திருக்கும், சிங்கள தாய்மார்கள் உறவுகள் வந்து மரியாதை செய்ய வழி தரப்பட்டிருக்கும். 

இரசாயன தாக்குதல் நடைபெறாமல் இருந்திருந்தால் மேலே சொன்னது நடந்திருக்கும்.அதன் தாக்கத்தை உணர்ந்தே இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவமே ஆட்சி செய்கிறது. இதில பதவி கொடுத்தாலென்ன? கொடுக்காவிட்டாலென்ன? வெகு சீக்கிரம் அது எப்படிப்பட்டது என்பதை நீங்களும் உணருவீர்கள்., எதற்கும் இடி அமீன் முஷாரப் அவர்களின் சரித்திரத்தையும் படித்து வையுங்கள். எதிர்காலத்தில் உதவலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ampanai said:

ஆணவம் அழிவிற்கே வித்திடும். 

ஒருவேளை, விடுதலைப்புலிகள் ஆனந்தபுரம் சண்டையில் வெறிக்கரமாக அரச படையை வென்றிருந்தால், இன்று அங்கே அந்த ஒரு தூபி இருந்திருக்கும், சிங்கள தாய்மார்கள் உறவுகள் வந்து மரியாதை செய்ய வழி தரப்பட்டிருக்கும். 

 

8 hours ago, ஈழப்பிரியன் said:

இரசாயன தாக்குதல் நடைபெறாமல் இருந்திருந்தால் மேலே சொன்னது நடந்திருக்கும்.அதன் தாக்கத்தை உணர்ந்தே இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பதினோரு நாடுகளின் துணையுடன்... சர்வதேசத்தால் தடை செய்யப் பட்ட,
இரசாயன   குண்டுகளை பாவித்து, கோழைத்தனமாக வென்ற ஸ்ரீலங்காவிற்கு...
போர் வெற்றியை கொண்டாடுவதற்கு... எந்த அடிப்படைத் தகுதியும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் சர்ச்சைக்குள்ளான பிரிகேடியருக்கு பதவி உயர்வு வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய.!

priyanka.jpg

போர் நிறைவடைந்து 11 ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் 17 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா மேற்கொண்ட கோரிக்கைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரத்திற்கு முன்னால் கூடிய தமிழர்களின் கழுத்தை வெட்டுவதாக சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவுக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்ட அதிகாரிகளில் மேஜர் ஜெனரால்களாக 5 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.vanakkamlondon.com/priyanka-19-05-2020/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

 

பதினோரு நாடுகளின் துணையுடன்... சர்வதேசத்தால் தடை செய்யப் பட்ட,
இரசாயன   குண்டுகளை பாவித்து, கோழைத்தனமாக வென்ற ஸ்ரீலங்காவிற்கு...
போர் வெற்றியை கொண்டாடுவதற்கு... எந்த அடிப்படைத் தகுதியும் இல்லை. 

அதை மறைப்பதற்குத்தான், அடிக்கடி பயங்கரவாதத்தை வெற்றிகொண்ட எமது  படைகள் என்று எதற்கெடுத்தாலும் மார்பு தட்டிக்கொள்ளுகினம். சொல்லியாவது மகிழட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

 

பதினோரு நாடுகளின் துணையுடன்... சர்வதேசத்தால் தடை செய்யப் பட்ட,
இரசாயன   குண்டுகளை பாவித்து, கோழைத்தனமாக வென்ற ஸ்ரீலங்காவிற்கு...
போர் வெற்றியை கொண்டாடுவதற்கு... எந்த அடிப்படைத் தகுதியும் இல்லை. 

சிறித்தம்பி அந்த பக்கத்து சகுனி நாடு தான் எமக்கு முழு தரித்திரமே?
சிங்களம் 30 வருசமாய் முக்கினதுக்கு மிண்டு குடுத்து அழிச்ச நாதாரிகள்.

Link to comment
Share on other sites

On 18/5/2020 at 08:13, உடையார் said:

இலங்கையின் ஜனநாயக முறைiயிலான ஆட்சியை அழிப்பதற்கான முயற்சிகளை முறியடித்து மக்களின் வாக்குரிமையை அடிப்படையாக கொண்ட இறைமையை ஏற்படுத்துவதற்கு படையினர் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை நாங்கள் எப்போதும் மனதில் வைத்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சீன அரசின் அறிவுறுத்தல் படியே இலங்கையில் மக்கள் ஆட்சிப்பொறுப்புக்களில் முப்படையினர் சேர்க்கபபட்டு வருகின்றனர். 

சீனாவில் நடப்பது - அரைவாசி கம்னியூச ஆட்சி. ( ஒரு கட்சி, திறந்த பொருளாதரம், அழுங்கு பிடி கொண்ட முப்படைகள்) 

சிங்களத்தில் நடந்து கொண்டு இருப்பது - அரைவாசி இராணுவ ஆட்சி ( பல கட்சிகள், திறந்த பொருளாதரம் (?), அழுங்கு பிடிக்குள் கொண்டுவரப்படும் முப்படைகள்) 

இன்று அண்ணளவாக 200000 சீனர்களை கொண்ட 1948ல் 'சுதந்திரம்" அடைந்த இலங்கை, கிட்டத்தட்ட 1000000 சொந்த மக்களை அகதிகளாகவும் குடியேறிகளாகவும் வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது. 

2048இல், சிங்கள தேசிய கீதம் சீன மொழியிலும் கூட பாடப்படலாம்.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/5/2020 at 19:27, Kapithan said:

இராணுவ ஆட்ச்சிகான அறிவித்தலைப் பகிரங்கமாகவே கூறும் துணிச்சலை மகிந்தவுக்கு யார் கொடுத்தது ?🤔

வழக்கம்போல் மீனுக்கு வாலும்  பாம்புக்கு தலையும் காட்டி கடன் என்ற பெயரில் பிச்சை எடுக்க வெளிக்கிட்டவை இன்றைய கொவிட்  -19 நிலவரத்தில் உலகவங்கி கையை விரித்து விட்டது வழக்கம்போல் பாம்புக்கறி தலையங்களிடம் கடன் வாங்கலாம் ஆனால் இம்முறை கட்டுநாயக்கா சுதந்திரவர்த்தகவலையத்த  கெட்டுபோடுவாங்களே என்ற பயம் வேறை இன்னும் சில நாடுகள் கடன் இல்லை என்று தங்கள் நாட்டை தாழ்த்தி கொள்வதை விட தமிழரின் விடயத்தில் நீதியுடன் நடந்து கொள்ளுங்கோ என்று அறிக்கை விட்டது மகிந்தவுக்கு இவ்வளவு கோபத்தை கொண்டுவந்து விட்டது .பக்கத்தில ஒன்று வம்பரசு கனவில் கொறட்டை  விடுவது ஏதாவது ஒப்பேத்தும் என்று நம்பினம்  இல்லாட்டி தாங்களே தங்களை தனிமைப்படுத்தல்  செய்ய வேண்டியதுதான் .

Link to comment
Share on other sites

ஒரு இராணுவம் என்பது நாட்டிற்கு உள்ளே இல்லை வெளியே பாதுகாப்பு தேவை என்றால் மட்டுமே பொதுவாக வீதிகளில் இறங்குவார்கள். இந்த ஆட்சியில் புத்த பிக்கு அழைத்தாலும்  வருவார்கள். 
99090656_10158068616556855_46833268288389120_n.jpg?_nc_cat=109&_nc_sid=730e14&_nc_ohc=ri0rbdouAQIAX8j5wQ4&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=0ae8a1cc66b2f4b03bcc24e156407d7d&oe=5EEBC6CC

What is the perceived threat to national security that warranted a rushed visit by the Secretary Defence, himself a famous combat general, and two serving chiefs of the armed forces (with the only absentee being the Air Force Chief) to the Muhudu Maha Vihara and Digavapi in the Eastern Province?

Link to comment
Share on other sites

On 19/5/2020 at 16:23, குமாரசாமி said:

சிறித்தம்பி அந்த பக்கத்து சகுனி நாடு தான் எமக்கு முழு தரித்திரமே?
சிங்களம் 30 வருசமாய் முக்கினதுக்கு மிண்டு குடுத்து அழிச்ச நாதாரிகள்.

இதைத்தான் நான் அடிக்கடி குறிப்பிடுவது, எல்லாவற்றிட்கும் அந்த இந்தியாக்காரன்தான் முக்கிய காரணம் எண்டு. பிள்ளையையும்  கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் கூடடம்.

Link to comment
Share on other sites

4 minutes ago, Vankalayan said:

இதைத்தான் நான் அடிக்கடி குறிப்பிடுவது, எல்லாவற்றிட்கும் அந்த இந்தியாக்காரன்தான் முக்கிய காரணம் எண்டு. பிள்ளையையும்  கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் கூடடம்.

இந்திய மத்திய அரசு என்றும் முக்கியமானது. அவர்களை மீறி இந்த பிராந்தியத்தில் பெரிதாக எதுவும் நடை பெறாது, சீன உட்பட. மாலைதீவில் ஆட்சியை சீனாவின் பிடியில் இருந்து இந்தியா மாற்றியது. 

அங்கே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தமிழர் தரப்பிற்கு  நட்பு முக்கியமானது என்ற அடிப்படை உண்மைகளை மறுப்பதும் மறைப்பதும் ஆபத்தானது. 

Link to comment
Share on other sites

57 minutes ago, ampanai said:

இந்திய மத்திய அரசு என்றும் முக்கியமானது. அவர்களை மீறி இந்த பிராந்தியத்தில் பெரிதாக எதுவும் நடை பெறாது, சீன உட்பட. மாலைதீவில் ஆட்சியை சீனாவின் பிடியில் இருந்து இந்தியா மாற்றியது. 

அங்கே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தமிழர் தரப்பிற்கு  நட்பு முக்கியமானது என்ற அடிப்படை உண்மைகளை மறுப்பதும் மறைப்பதும் ஆபத்தானது. 

அப்படி என்றால் TNA  செய்வதையும் கூறுவதையும் ஆதரிக்க வேண்டும். அவர்கள் இந்தியனின் அனுமதி இல்லாமல் எதையும் பேசுவதுமில்லை, செய்வதுமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Vankalayan said:

அப்படி என்றால் TNA  செய்வதையும் கூறுவதையும் ஆதரிக்க வேண்டும். அவர்கள் இந்தியனின் அனுமதி இல்லாமல் எதையும் பேசுவதுமில்லை, செய்வதுமில்லை. 

அப்படியா....

எப்படி அடுத்த பொங்கலுக்கு தீர்வு, அடுத்த தீபாவளிக்கு தீர்வு

என்றதையா....

அல்லது

MY3 காலத்தில் அரசியல் கைதிகளை விடுவிக்கும் திறப்பு என்னிடம் இல்லை இப்போ அரசியல் கைதிகளின் விபரம் சனாதிபதியிடம் கையளிப்பு

என்றதையா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.