Jump to content

மே 18 பிரகடனம் - 2020.11 ஆண்டுகள் முள்ளிவாய்க்கால்


Recommended Posts

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தர சர்வதேசம் முன்வர வேண்டும் என முள்ளிவாய்க்காலில் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

மிருசுவிலில் அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்த வழக்கில் நீதிமன்ற விசாரணையின் பின் சிறையில் அடைக்கப்பட்ட சுனில் இரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரியை, உயர் நீதிமன்றம் குற்றத்தை உறுதி செய்திருந்த நிலையிலும் தற்போதைய ஜனாதிபதி பொது மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்ததன் மூலம் மீண்டும் ஒருமுறை சிறிலங்கா நீதித்துறைமீதான தமிழரின் அவநம்பிக்கையை உறுதிசெய்துள்ளது.

IMG_3301.jpg


எனவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தர சர்வதேசம் முன்வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

மே 18 பிரகடனம் - 2020.11 ஆண்டுகள்முள்ளிவாய்க்கால்

பேரன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழின உறவுகளே,

சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதம் நிறுவனமயப்படுத்தப்பட்டு, வரலாற்றில் கட்டமைக்கப்பட்ட வன்முறையின் உச்சமாக முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலை நடந்தேறி இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

கொத்துக் கொத்தாக, துடி துடிக்க, கொல்லப்பட்ட எம் இரத்தச் சொந்தங்களின் குருதி தோய்ந்த மண்ணில், அவர்களின் கனவுகளைச் சுமந்து தமிழினத் தேசிய இனவழிப்பு நாளை நெஞ்சுறுதியுடன் நினைவுகூருகின்றோம்.

ஆண்டாண்டு காலமாக, ஈழத்தமிழினம் சிங்கள-பௌத்த தேசியவாதத்தால் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு, காலம் காலமாகத் தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றி வந்துள்ளது. ஆனால் சர்வதேசமே கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்க்க, இந்த நூற்றாண்டில் அரங்கேற்றப்பட்ட மிகப்பாரிய இனப்படுகொலை, முள்ளிவாய்க்காலில் சில நாடுகளின் உதவியுடன் அரங்கேற்றப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை தமிழினத்துக்கெதிராக, பூகோள ஒழுங்கை திரிவுபடுத்தி, சிங்கள-பௌத்த பேரினவாதம் தொடர்ந்தும், கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையைத் தமிழர் தாயகமெங்கும் புரிந்து வருகிறது. தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கைப் பிளவுபடுத்தி, செறிவாக இராணுவ மயப்படுத்தி ஓர் உளவியல் போரினூடு, தமிழ் மக்கள் மத்தியில் இன அடிப்படையில் கூட்டுக் கோரிக்கைகள் எழாது, இரும்புப்பிடிக்குள் ஈழத்தமிழ் மக்களாகிய எம்மை அடக்குமுறையினோடு நசுக்கி வருகின்றது.

IMG_3411.jpg


கடந்த ஜனாதிபதித் தேர்தலின் மூலம் சிறிலங்கா புதிய அரசியல் கலாசாரத்தைக் கட்டமைத்திருக்கின்றது. அக்கட்டமைப்பு சிங்கள-பௌத்த தேசிய வாதத்தின் கோரிக்கையை இன்னும் சனநாயக செயன்முறையினூடு வலுப்படுத்தியுள்ளது. சிங்கள-பௌத்த அறுதிப் பெரும்பான்மை வாக்குகளோடு சிறிலங்கா தனக்கான ஆட்சியாளரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றது.

தெரிந்தெடுத்த ஆட்சியாளர் போர்க்குற்றவாளியாகச் சர்வதேசத்தினால் இனங்காணப்பட்டவர். சிறுபான்மையினரது வாக்குகள் இல்லாமலேயே சிறிலங்கா தனக்கான ஆட்சியாளரைத் தெரிந்தெடுக்கலாம் என்ற புதிய அரசியல் கலாச்சாரம், சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் ஏகாதிபத்தியத் தன்மையை வலுப்படுத்தியுள்ளது. சிறிலங்கா சிங்கள-பௌத்தர்களுக்கானது என்பதைச் சிங்கள தேசம் வரலாற்றில் தமிழ் மக்களுக்குத் தொடர்ந்தும் நினைவூட்டி வருகின்றது. பெரும்பான்மை தேசியவாதம் தமிழினத்தைத் தொடர்ந்தும் இனப்பலி கடாவாக்கி வருகின்றது. அது இன்றுவரைக்கும் தொடர்கின்றது.

IMG_3469.jpg


போர்க்குற்றவாளியை சனாதிபதியாக்கிய சிங்கள தேசம், குற்றவாளிகளிடமே நீதியைக் கோருவதற்கு தமிழினத்தைத் வற்புறுத்தி வருகின்றது. போர்க்குற்றவாளியிடம் நீதி கேட்டல் வேடிக்கையாகவுள்ளது. போர்க் குற்றவாளியை அரசாட்சிக்குக் கொண்டு வந்ததன் மூலம் போரையும், இனப்படுகொலையையும் பாரிய மனித உரிமை மீறல்களையும் நியாயப்படுத்த முனைப்புக்காட்டுகிறது. போருக்கு அற ஒழுக்கச் சாயம் பூச எத்தனிக்கிறது.

போர்க் குற்றவாளிகளுக்குப் பதவி உயர்வு வழங்குவதன் மூலம் சிங்கள தேசம் அவர்களைக் கதாநாயகர்களாகக் கட்டமைத்துக் குற்றங்களை மறைத்து, இவ்வாறு தண்டனை விலக்கீட்டுக் கலாச்சாரத்தை நிறுவனமயப்படுத்துகின்றது.

இதன் நீட்சியாகவே மிருசுவிலில் அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்த வழக்கில் நீதிமன்ற விசாரணையின் பின் சிறையில் அடைக்கப்பட்ட சுனில் இரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரியை, உயர் நீதிமன்றம் குற்றத்தை உறுதி செய்திருந்த நிலையிலும் தற்போதைய சனாதிபதி பொது மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்ததன் மூலம் மீண்டும் ஒருமுறை சிறிலங்கா நீதித்துறைமீதான தமிழரின் அவநம்பிக்கையை உறுதிசெய்துள்ளது.
சிறிலங்கா நீதித்துறை வரலாற்றில் மிக அரி;தான சம்பவம்தான் சுனில் இரத்நாயக்காவின் கைதும், தடுப்பும், சிறைத்தண்டனையும். கொல்லப்பட்ட எண்மரில் மூவர் சிறுவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகளிடமே நீதி கேட்டால் என்ன விளைவு நேரும் என்பதற்கு இந்நிகழ்வு மிகச்சிறந்த உதாரணம்.

IMG_3452.jpg


தமிழர்கள் சிறிலங்காவின் நீதித்துறை கட்டமைப்பில் நம்பிக்கையிழந்து பல தசாப்தங்கள் கடந்த நிலையிலும், பட்டறிவின் அடிப்படையிலும் பாரிய மனித உரிமை மீறல்களுக்குச் சர்வதேச விசாரணையைக் கோரியிருந்தனர். அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு கலப்பு பொறிமுறையை ஐ.நா பரிந்துரைத்தது. கலப்புப் பொறிமுறை ஏற்கனவே தோல்வி கண்டிருந்தது தெரிந்தும் ஐ.நா மீண்டும் கலப்புப் பொறிமுறையைப் பரிந்துரைத்தது வேடிக்கையானதும் கவலைக்குமுரிய விடயமுமாகும்.

மேற்குலக நாடுகளும் ஐ.நாவும் சிறிலங்கா தொடர்பில் மென்போக்கைக் கடைப்பிடிப்பது என்பது, அதனது பாரிய மனித உரிமை மீறல் தன்மையைக் குறைத்து மதிப்பிடுவதற்கு ஏதுவாக அமைவதுடன் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை வடக்கு-கிழக்கில் இன்றும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றது. அவற்றின் பார்வையாளர்களாக ஐ.நாவும் மேற்குலகும் இருப்பது பாதிக்கப்பட்டவர்கள் என்றரீதியில் எமக்கு ஆழ்ந்த கவலையையும் ஏமாற்றத்தையும் அளிக்கின்றது.

IMG_3474.jpg


ன்முள்ளிவாய்க்கால் வரலாற்று அரசியல் தளத்தில், தமிழ் மக்கள் இனி யாரையும் நம்பி ஏமாறத் தயாராகவில்லை என்பதற்கான அறிகுறிகள் ஆங்காங்கே வெளித்தோன்றத் தொடங்கியுள்ளன. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட சூழ்நிலையில், இன்று எமக்கு இருக்கும் பலமான ஆயுதங்கள், தமிழர்களின் பாதிக்கப்பட்டமையும் ;தமிழ்த் தேசிய நினைவுத் திறமும் ஆகும். சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் ஏகாதிபத்தியத் தன்மை தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வைத் தரப்போவதில்லை. தமிழ்; பாதிக்கப்பட்மையும், தமிழ்த் தேசிய நினைவுத்திறமும் கட்டமைக்கப்பட்டு நிறுவனமயப்படுத்தப்படாத வெளி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

தமிழ்க்; கூட்டுப் பாதிக்கப்பட்டமை , வெவ்வேறு தளங்களினூடு கட்டமைக்கப்பட்டுக் கூட்டாக நிறுவனமயப்படுத்தப்பட்டு, பொறுப்பக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்படவேண்டும். இதற்கு ஒட்டு மொத்தத் தமிழினமும் தனது வளங்களைத் திரட்டிச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

IMG_3461.jpg


தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டிய பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குவதற்கான நியாயப்பிரச்சாரங்களும், சாட்சியங்களை நிறுவனமயப்படுத்தவதற்கும், ஒட்டுமொத்தத் தமிழர்களும் தமிழ் தேசியத்தின் அடிப்படையில் சமூக இயக்கமாதல் அவசியமாகின்றது. சமூக இயக்கத்தினூடு தமிழ்த் தேசத்தையும் அதன் இறைமையையும் அங்கிகரித்த தீர்வே தமிழரின் கூட்டு இருப்புரிமைக்கான தீர்வாகும்.

இனப்படுகொலைக்கான நீதியினைக் கோருவதன் மூலம் தான், சிறிலங்காவின் தமிழினப்படுகொலையின் உள்நோக்கம் வரலாற்றில் கட்டமைக்கப்பட்டு மிகத்திட்டமிடப்பட்ட இனப்படுகொலை நடந்தேறியது என்பதை நிரூபிப்பதன் மூலம், தமிழர்கள் ஒரு தேசிய இனம், ஒரு தேசத்திற்கு உரியவர்கள் என்பதை மிக ஆணித்தரமாக நிரூபிக்க முடியும். தமிழர்கள் இன அடையாளத்தால் தனித்துவமானவர்கள்.

மொழி, பண்பாடு, கலாச்சாரம், வரலாறு இவை எல்லாமே அத்தனித்துவத்திற்கு வலுச்சேர்க்;கின்றது. தமிழர்கள் வடக்கு-கிழக்கைப் பூர்வீக தாயகமாகக் கொண்டவர்கள். சிறிலங்கா அரசின் தமிழினப்படுகொலைக்கான உள்நோக்கத்தை நிரூபித்து சர்வதேசப் பொறிமுறையினூடு நீதி கோருவதன் மூலம் தான், தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கையை வலுப்படுத்த முடியும்.

சர்வதேசப் பொறிமுறைக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்ற தருணத்தில், அதற்குச் சமாந்தரமாக தமிழ்த் தேச கட்டுமானத்திற்குரிய நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும். தமிழின அடையாளங்களைப் பலப்படுத்துகின்ற, பேணுகின்ற முயற்சிகளும், சமூக அகக்கட்டுமானம் தொடர்பில் முற்போக்கான கருத்தியல்க் கட்டமைப்புக்களும், தமிழ்த் தேசியத்தின் செல்நெறியை சிதைக்கின்ற கட்டமைப்புக் கட்டவிழ்ப்புக்களும், தமிழ்த் தேசியத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட இலக்கு மைய தந்திரோபாய உத்திகளும், தமிழினப் பொருளாதாரத்தை உரமூட்டுகின்ற, நிலைத்த தன்மை கொண்ட பொருளாதாரக் கொள்கைக் கட்டமைவுகளும், தேசங்களால் கட்டப்படுகின்ற சனநாயகப் பொறிமுறை நோக்கிய நகர்வும் தமிழினத்தின் வரலாற்றுத் தேவையாக, கடமையாக எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஓற்றையாட்சிக்குள் பேச்சுவார்த்தை என்பது காலத்தை இழுத்தடிப்பதும், தமிழரின் கூட்டு இருப்புரிமையை சிதறடித்தலுக்குமான திட்டமிட்ட பொறிமுறை என்பதற்கு, கடந்த கால வரலாறு சாட்சி. தேசங்கள் ஒன்றாக கட்டமைக்கப்பட்ட சமஷ்டி பொறிமுறை சர்வதேசரீதியில் வெற்றியளித்தமைக்கான சான்றாக நாடுகள் பலவற்றைச் சொல்லமுடியும். இவ்வாறு தேசங்கள் ஒன்றாக வாழக்கூடிய அரசியல் வெளியில்தான், தமிழர்களுக்கான தீர்வும் சாத்தியமாகும் என நாம் உறுதியாக நம்புகின்றோம்.

இந்த ஈழத்துப் பெருந்துயர் நாளிலே, எமது உறவுகளின் நினைவுகளைப், புதுப்பித்து அவர்கள் சுமந்த தேசத்திற்கான கனவுகளை முன்வைத்து, அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் தமிழினத்திற்கு விடுதலை வேண்டி, எமது மக்களின் பலத்திலும், தமிழ்த் தேசியத்திலும் நம்பிக்கை வைத்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் தேசிய எழுச்சி கொள்ள இந்த நாள் எங்களுக்கு நினைவூட்டட்டும்!

விடுதலைத் தாகத்தினால் வழிநடத்தப்பட்டு தமிழினமாக எழுச்சி பெறுவோம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படங்களுக்கு - https://www.virakesari.lk/collections/537 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11 ஆவது ஆண்டு நினைவேந்தல் - கண்ணீர்மல்க மக்கள் அஞ்சலி

https://www.virakesari.lk/article/82252

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.