Jump to content

Recommended Posts

spacer.png

மிழினப் படுகொலையின் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் இன்று!

ஆம்! ஒன்றரை இலட்சம் தமிழர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை இந்த உலகம் வேடிக்கை பார்த்துப் பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டன!

ஒரே இரவில் நாற்பதாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டதை இந்த உலகம் வெறும் செய்தியாகக் கடந்து சென்று பதினோரு ஆண்டுகள் முடிந்து விட்டன!

கொசுக்களும் ஈக்களும் கூட ஒரே நாளில் இத்தனை ஆயிரம் எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் மனிதர்களான நாம் கொல்லப்பட்டோம்! ஆயினும் இன்னும் நமக்கு நீதி வழங்க இந்த உலகம் ஒரு தப்படி கூட இதுவரை எடுத்து வைக்கவில்லை.

இந்தப் பதினோரு ஆண்டுகளாக நாமும் என்னென்னவோ செய்து கொண்டுதான் இருக்கிறோம். நினைவேந்தலுக்கு விளக்கேற்றுவதிலிருந்து ஐ.நா., அவையில் உரையாற்றுவது வரை. ஆனால் இவற்றால் ஏதாவது பலன் உண்டா என்பது பலரின் அடிமனத்துக் கேள்வியாக இருக்கிறது. எனக்கும் இந்தக் கேள்வி இருந்தது, இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்வைப் பார்க்கும் வரை.

இனப்படுகொலை நினைவேந்தல் காலமான இந்த மே மாதம் வந்தாலே இணையத்தில் ஈழ ஆதரவாளர்களுக்கும் தி.மு.க-வினருக்குமிடையே சொற்போர் நடப்பது வழக்கம்தான். இந்த முறை அது கொஞ்சம் பெரிதாகவே போய் விட்டது. ஆனால் செய்தி அஃது இல்லை! வரம்பு மீறிப் பேசிய தி.மு.க-வினரை இந்த முறை அந்தக் கட்சியே முறைப்படி அறிக்கை விட்டு அப்படிப் பேசுவதைத் தவிர்க்குமாறு கோரியதுதான் யாருமே எதிர்பாராத அந்த நிகழ்வு!

spacer.png

கடந்த ஆண்டு குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்பொழுது, இந்தியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலியர்களை அந்தச் சட்டத்தின் கீழ் ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை என்று கேட்டு நாடாளுமன்றத்தில் தி.மு.க., குரல் எழுப்பியது.

அதைத் தொடர்ந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (Citizenship Amendment Act-CAA) எதிராகக் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் “ஈழத் தமிழர் எங்கள் ரத்தம்” என்று தி.மு.க., தலைவர் முழக்கமிட்டார். இப்பொழுது ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதைத் தவிர்க்கும்படி வேறு அக்கட்சி தன் தொண்டர்களுக்கு அறிவுறுத்துகிறது.

அடுத்தடுத்து நடக்கும் இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்பொழுது தி.மு.க., ஈழப் பிரச்சினையில் மீண்டும் இறங்கி வருவதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

அவர்களும் (தி.மு.க-வினர்) இந்தப் பதினோரு ஆண்டுகளாக எத்தனையோ மாய்மாலங்களைச் செய்து பார்த்தார்கள்.

“ஆயிரம்தாம் இருந்தாலும் ஈழ விவகாரம் வேற்று நாட்டுச் சிக்கல். அதில் நாம் ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது” என்று மக்களைத் திசை திருப்பப் பார்த்தார்கள்; நடக்கவில்லை.

இனப்படுகொலை நேரத்தில் தி.மு.க., எந்த விதத்திலும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இங்கே நடந்து கொள்ளவில்லை என்று நம்ப வைக்கப் பார்த்தார்கள்; முடியவில்லை.

விடுதலைப்புலிகளையும் ஈழப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி அதன் மூலம் ஈழத் தமிழர்கள் மீதான தமிழ்நாட்டு மக்களின் அன்பைக் குறைக்க முயன்றார்கள்; பலிக்கவில்லை.

இப்படி எல்லா வழிகளிலும் முயன்று பார்த்து விட்டுத்தான் எதற்குமே தமிழ்நாட்டு மக்கள் மசியவில்லை, ஈழத் தமிழர்களுடனான இவர்களுடைய உள்ளார்ந்த நேசப் பிணைப்பை அறுக்கவே இயலவில்லை என்றானதும் வேறு வழியின்றி இப்பொழுது தங்கள் கட்சிக்காரர்களையே திருத்த வேண்டிய நிலைமைக்குச் சென்றுள்ளது தி.மு.க.!

ஈழ விவகாரத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாதெனத் தி.மு.க., தலைமைக்குப் புரியத் தொடங்கியுள்ளது என்பதன் சிறு அறிகுறியே இது!

இஃது ஈழ உறவுகளைக் காப்பாற்றத் தமிழ்நாட்டிலிருந்து நம்மால் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட இயலாவிட்டாலும் அவர்களுக்காகப் பேசுவது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது, இணையத்தில் பதிவிடுவது, சமுக ஊடகங்கள் வாயிலாகக் குரல் கொடுப்பது, நினைவேந்துவது எனக் கடந்த பதினோரு ஆண்டுகளாகச் செய்து வந்தோமே அந்த அத்தனை முயற்சிகளுக்கும் கிடைத்துள்ள மிகச் சிறு வெற்றி!

ஆட்சி, அதிகாரம், சட்டம் என அத்தனையும் தங்களுக்கு எதிராக இருந்தும் அஞ்சாமல், இத்தனை காலமாகியும் சோர்வுறாமல் நம் தமிழீழச் சொந்தங்களுக்காக இங்கே இடைவிடாது இயங்கி வந்த ஈழ ஆதரவு இயக்கங்கள் – கட்சிகள் – தலைவர்கள் – பொதுமக்கள் ஆகியோரே இதற்கு முழுக் காரணம்!

தி.மு.க-வைப் பொறுத்த வரை, ஆட்சியில் இல்லாவிட்டால் ஈழத்துக்காகக் கழுத்து நரம்பு தெரிய முழங்குவதும் ஆட்சியைப் பிடித்து விட்டால் இரண்டகம் (துரோகம்) புரிவதுமே வாடிக்கை. இந்த முறை அவர்கள் இறங்கி வருவதும் அப்படி வழக்கமான ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் அதற்காக நமக்கு ஆதரவான எந்த ஒரு சிறு மாற்றத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்து விடக்கூடாது; அது மிகப் பெரும் வரலாற்றுப் பிழையாகப் போய்விடும் என்பதே என் கோரிக்கை!

இன்றைய சூழலில், வட இந்தியா முழுவதையும் சமயப் போதையில் ஆழ்த்தி வைத்திருக்கும் பா.ச.க-வுக்கு எதிராகக் காங்கிரசு இங்கே அரசியல் செய்ய வேண்டுமானால் அதற்குத் தென்னாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான தி.மு.க-வின் ஆதரவு இன்றியமையாதது. பத்தாண்டுக் காலமாக ஆட்சி இழந்து நிற்கும் தி.மு.க-வுக்கோ எந்த விதத்திலும் மக்களோடு முரண்படாமல் இணங்கிப் போக வேண்டிய கட்டாயம். அதனால்தான் ஈழ விவகாரத்திலும் இறங்கி வருகிறார்கள் என்பது என் பணிவன்பான கருத்து.

இவர்களுடைய இந்த அரசியல் நெருக்கடியை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவர்களுக்காகப் போராடி வரும் இயக்கங்களின் வரலாற்றுக் கடமை! பெரியோர்களே! எங்கள் முன்னோடிகளே! வழிகாட்டிகளே! இதை விட்டால் இனி இப்படி ஓர் அரிய வாய்ப்பு அமையாது!

எனவே ஈழத் தமிழர் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்கங்கள், கட்சிகள், தலைவர்கள், போராளிகள் அனைவரும் இனி ஈழ விவகாரத்தில் தி.மு.க-வுக்கு எதிராக அரசியல் செய்வதை விட, இறங்கி வரச் செய்கை (signal) காட்டும் தி.மு.க-வை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வழிக்குக் கொண்டு வர முயலுமாறு இந்தப் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் நாளில் வேண்டி வலியுறுத்திக் கோருகிறேன்!

அரசியல்வாதிகளைப் பொறுத்த வரை அரசியல் எனும் சொல்லுக்கு எத்தனையோ பொருள்கள் இருக்கலாம். ஆனால் போராளிகளைப் பொறுத்த வரை அதிகாரத்தில் இருப்பவர்களையும் அதிகாரத்துக்கு வர இருப்பவர்களையும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் வகையில் அழுத்தம் கொடுப்பது மட்டுமே அரசியல் எனும் சொல்லுக்கான ஒரே பொருள் என்பது நீங்கள் அறியாதது இல்லை!

தமிழீழ ஆதரவுத் தலைவர்கள் அந்த அழுத்தத்தைத் தர இப்பொழுதும் தவற மாட்டீர்கள் எனும் நன்னம்பிக்கையுடன் இதோ உங்களோடு சிறியேனும் குடும்பத்தினருடன் ஏற்றுகிறேன் எங்கள் வீட்டு வாசலில் மெழுகுத்திரி!

இந்த மெழுகுத்திரியின் கண்ணீர் போலவே விரைந்து தீரட்டும் தமிழர் கண்ணீரும்!

வாழ்க தமிழ்!
வளர்க தமிழர்!!
மலர்க தமிழீழம்!!!

பி.கு.: உலகத் தமிழ் நெஞ்சங்களே! தமிழ் இன அழிப்பை எப்படியாவது தடுத்திருக்க முடியாதா எனும் தமிழர் ஒவ்வொருவரின் ஏக்கத்தையும் கற்பனையிலாவது தணித்துக் கொள்ளும் சிறு முயற்சியே கடந்த ஆண்டு நான் எழுதிய 13ஆம் உலகில் ஒரு காதல் புதினம்! எனவே இனப்படுகொலை நாளை ஒட்டி அந்த நூல் இன்றும் நாளையும் இலவசம்! இதுவரை படிக்காத உணர்வாளர்கள் இப்பொழுதாவது படியுங்கள்! உங்கள் கருத்தைப் பதியுங்கள்! நூலைப் பெற - https://amzn.to/2qFuL4z

படம்: நன்றி மாவீரம்.

Link to comment
Share on other sites

நண்பர் @ampanai அவர்களே! முதல் ஆளாக இந்தப் பதிவுக்கு நீங்கள் நன்றிக்குறி அளித்திருப்பது கண்டு உண்மையிலேயே மிகவும் மகிழ்கிறேன். இது கொஞ்சம் சர்ச்சைக்குரிய பதிவு. ஈழத் தமிழ் மக்கள் ஒருவேளை இதைப் படித்துச் சீற்றம் கொள்வீர்களோ என்று அஞ்சினேன். உங்கள் நேர்மறையான எதிர்வினை எனக்கு மிகுந்த ஆறுதல்! மிக்க நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இ.பு.ஞானப்பிரகாசன் said:

ஈழ விவகாரத்தில் தி.மு.க-வுக்கு எதிராக அரசியல் செய்வதை விட, இறங்கி வரச் செய்கை (signal) காட்டும் தி.மு.க-வை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வழிக்குக் கொண்டு வர முயலுமாறு இந்தப் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் நாளில் வேண்டி வலியுறுத்திக் கோருகிறேன்!

வேண்டுதலைப் பலர் புரிந்துகொண்டாலும், ஈழத்தமிழர்களில் சிலர் எல்லாத் தோல்விகளுக்கும் அவலங்களுக்கும் பிறரையே குற்றம்சாட்டுவதை ஒரு கொள்கையாகக் கொண்டுள்ளதால் மாறமாட்டார்கள். ஆனால் காலங்கள் நகர அவர்கள் வரலாற்றிலும் ஒரு புள்ளியாகவும் இருக்கமாட்டார்கள். 

Link to comment
Share on other sites

உங்கள் இணைப்பிற்கு நன்றி ஞானப்பிரகாசன் அவர்களே. ஈழத்தமிழர்களாகிய நாம் தமிழக அரசியலில் தலையாடாமல் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் இருப்பதே உண்மையான ராஜதந்திரம். விடுதலைப்புலிகள் இருந்தவரை தமிழக உள்ளூர் அரசியல் தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்தத‍து அதற்கு தான். 1985 எம்..ஜி. ஆரின் அரசின் உதவியை பெற்ற போதோ 1989 திமுக அரசின்  உதவயை பெற்ற போதோ உள்ளூர் அரசியல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்தார்கள்.  ஏன் பிரபாகரனை பிடித்து வந்து இந்தியாவில் தூக்கில் இடவேண்டும் என்று ஜெயல‍லிதா சட்ட மன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றிய போது கூட அது தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்க வில்லை.  அதுவே சரியான அணுகு முறை. உண்மையில் தமிழகத்தில் யாரை ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் தமிழக மக்களே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

உங்கள் இணைப்பிற்கு நன்றி ஞானப்பிரகாசன் அவர்களே. ஈழத்தமிழர்களாகிய நாம் தமிழக அரசியலில் தலையாடாமல் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் இருப்பதே உண்மையான ராஜதந்திரம். விடுதலைப்புலிகள் இருந்தவரை தமிழக உள்ளூர் அரசியல் தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்தத‍து அதற்கு தான். 1985 எம்..ஜி. ஆரின் அரசின் உதவியை பெற்ற போதோ 1989 திமுக அரசின்  உதவயை பெற்ற போதோ உள்ளூர் அரசியல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்தார்கள்.  ஏன் பிரபாகரனை பிடித்து வந்து இந்தியாவில் தூக்கில் இடவேண்டும் என்று ஜெயல‍லிதா சட்ட மன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றிய போது கூட அது தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்க வில்லை.  அதுவே சரியான அணுகு முறை. உண்மையில் தமிழகத்தில் யாரை ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் தமிழக மக்களே. 

மிகச்சரியான கருத்து tulpen . ஆனால் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு  இலங்கை தமிழரின் நலன்களுக்காக குரல் கொடுத்தாலும் திமுகவால் அதனை நடைமுறைப்படுத்த முடியுமென்று நினைக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

வேண்டுதலைப் பலர் புரிந்துகொண்டாலும், ஈழத்தமிழர்களில் சிலர் எல்லாத் தோல்விகளுக்கும் அவலங்களுக்கும் பிறரையே குற்றம்சாட்டுவதை ஒரு கொள்கையாகக் கொண்டுள்ளதால் மாறமாட்டார்கள். ஆனால் காலங்கள் நகர அவர்கள் வரலாற்றிலும் ஒரு புள்ளியாகவும் இருக்கமாட்டார்கள். 

நீங்கள் சொல்வது உண்மை தான். அங்கே சீமான் கட்சி மட்டும் என்னவாம்? யாழ்களத்திலேயே மற்ற பகுதியில் திமுகவிற்கு எதிரான சீமானின் முழக்கம் நடைபெற்று கொண்டிருக்கிறதே :rolleyes:

Link to comment
Share on other sites

8 hours ago, இ.பு.ஞானப்பிரகாசன் said:

நண்பர் @ampanai அவர்களே! முதல் ஆளாக இந்தப் பதிவுக்கு நீங்கள் நன்றிக்குறி அளித்திருப்பது கண்டு உண்மையிலேயே மிகவும் மகிழ்கிறேன். இது கொஞ்சம் சர்ச்சைக்குரிய பதிவு. ஈழத் தமிழ் மக்கள் ஒருவேளை இதைப் படித்துச் சீற்றம் கொள்வீர்களோ என்று அஞ்சினேன். உங்கள் நேர்மறையான எதிர்வினை எனக்கு மிகுந்த ஆறுதல்! மிக்க நன்றி!

நன்றி எல்லாம் தேவையில்லை. ஒரு கருத்தை உண்மையாகவும் நேர்மையாகவும் முன்வைக்க எந்த தமிழனும் தயங்க தேவையில்லை, தயங்கவும் கூடாது. 

தாய்த்தமிழகம் என்றும் தமிழீழ மக்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதும், அவர்களே என்றும் எமக்கு  காப்பரண்கள் என்பதும் எனது நிலை. 

ஈழ மக்கள் பாதுகாப்புடன் சுய மரியாதையுடன் கௌரவத்துடன் வாழ ஒரு அரசியல் தீர்வு / பகிர்வு தேவை. அதற்கு, நாம் உண்மையான நண்பர்களை தேடவும் சேர்க்கவும் வேண்டும். என்றும் சிங்களவர்களுக்கு அருகே ஒரு பக்கமும், தாய்த்தமிழகத்திற்கு மறு பக்கமும் தான் வாழவும் வேண்டும். 

தமிழக அரசியலை பொறுத்தவரையில் யார் ஆட்சியிலும் இருந்தாலும், அவர்களை ஈழ நலம் சார்ந்து உண்மையாக செயல்பட வைக்கும் அரசியல் திறமையும் ஒருங்கிணைப்புமே என்றும் தேவை. அமேரிக்கா வாழ் யூதர்களை உதாரணத்திற்கு கூறலாம். எந்த கட்சியை சார்ந்தவர் சனாதிபதி என்றாலும், அவர்களை யூத நலம் சார்ந்து முடிவுகளை எடுக்கும் அரசியல் பண்பை அமெரிக்க யூதர்கள் தக்கவைத்துள்ளார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சொல்வது உண்மை தான். அங்கே சீமான் கட்சி மட்டும் என்னவாம்? யாழ்களத்திலேயே மற்ற பகுதியில் திமுகவிற்கு எதிரான சீமானின் முழக்கம் நடைபெற்று கொண்டிருக்கிறதே :rolleyes:

உதிரிகளாக இருப்பவர்களின் உணர்ச்சிக் கூச்சல்களுக்கும் இரசிகர்கள் இருப்பார்கள்தானே.

தமிழக மக்களின் கணிசமான ஆதரவுடன் ஆளும்கட்சியாகவும், அல்லது எதிர்க்கட்சியாகவும் இருக்கும் முக்கிய கட்சிகளை ஈழத்தமிழர் விவகாரத்தில் இதயசுத்தியுடன் செயற்படச் செய்வதற்கான வழிவகைகளைப் பார்க்கவேண்டும்.

சீமானின் முழக்கம் ஒரு சிறிய வட்டத்திற்கு அப்பால் கேட்காது!

Link to comment
Share on other sites

12 hours ago, Eppothum Thamizhan said:

மிகச்சரியான கருத்து tulpen . ஆனால் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு  இலங்கை தமிழரின் நலன்களுக்காக குரல் கொடுத்தாலும் திமுகவால் அதனை நடைமுறைப்படுத்த முடியுமென்று நினைக்கிறீர்களா?

எப்போதும்  தமிழன் இந்திய அரசின் தேசிய இனங்களை அடக்கி வைக்க வேண்டும் அல்லது அவர்கள் பலம் பெறுவது தடுக்க வேண்டும் என்ற கொள்கை  இந்கதுயாவை ஆளும் கட்சிகளைகளுக்கு அப்பாற்பட்ட சில சக்திகளால் எடுக்கப்படுபவை.

ஆனால் தமிழகத்தில்  உள்ள எல்லா கட்சிகளுக்குள்ளும் ஈழத்தமிழர் ஆதரவு சக்திகள் உண்டு. ஆகவே அவர்களது அரசியல் கட்சிகளுக்குள் உள்ள முரண்பாடுகளில் நாம் எமது ஈழத்தமிழ் அமைப்புக்கள் கருத்து  சொல்வது. ஒரு கட்சியை ஆதரிப்பது என்பது  பாதகமான விளைவையே எமக்கு ஏற்படுத்தும்.  எல்லாக் கட்சிகளுக்குள்ளும் உள்ள எமது ஆதரவு சக்திகளோடு நட்புறவு பாராட்டுவதே புத்திசாலித்தனமான நடவடிக்கை. 

Link to comment
Share on other sites

14 hours ago, கிருபன் said:

வேண்டுதலைப் பலர் புரிந்துகொண்டாலும், ஈழத்தமிழர்களில் சிலர் எல்லாத் தோல்விகளுக்கும் அவலங்களுக்கும் பிறரையே குற்றம்சாட்டுவதை ஒரு கொள்கையாகக் கொண்டுள்ளதால் மாறமாட்டார்கள். ஆனால் காலங்கள் நகர அவர்கள் வரலாற்றிலும் ஒரு புள்ளியாகவும் இருக்கமாட்டார்கள். 

கருத்துக்கு நன்றி நண்பரே! ஆனால் இந்த வேண்டுகோளை நான் ஈழத் தமிழர்களிடம் முன்வைக்கவில்லை. ஈழத் தமிழர்களுக்காகத் தமிழ்நாட்டிலிருந்து குரல் கொடுக்கும் எனதருமைத் தமிழீழ ஆதரவுத் தலைவர்களுக்கும் இயக்கங்களுக்குமானது இது. இப்படி ஒரு வேண்டுகோளை அவர்களிடம் முன்வைக்கிறேன் என்பதை ஈழத் தமிழ் மக்களின் பார்வைக்கு வைக்கவே இங்கு இதைப் பகிர்ந்தேன். ஏனெனில் ஒருவேளை என்னுடைய இந்த வேண்டுகோள் தவறானதாக இருந்தால் இதனால் பாதிக்கப்படப் போவது ஈழத் தமிழ் மக்கள்தாம் அல்லவா? ஆகவே இங்கு பகிர்ந்தால் இது தவறெனில் ஈழ உறவுகள் பார்த்து என்னைத் திருத்துவீர்கள் என்பதற்காகத்தான். உங்கள் கருத்தை அறியத் தந்தமைக்கு நன்றி!

14 hours ago, tulpen said:

உங்கள் இணைப்பிற்கு நன்றி ஞானப்பிரகாசன் அவர்களே. ஈழத்தமிழர்களாகிய நாம் தமிழக அரசியலில் தலையாடாமல் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் இருப்பதே உண்மையான ராஜதந்திரம். விடுதலைப்புலிகள் இருந்தவரை தமிழக உள்ளூர் அரசியல் தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்தத‍து அதற்கு தான். 1985 எம்..ஜி. ஆரின் அரசின் உதவியை பெற்ற போதோ 1989 திமுக அரசின்  உதவயை பெற்ற போதோ உள்ளூர் அரசியல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்தார்கள்.  ஏன் பிரபாகரனை பிடித்து வந்து இந்தியாவில் தூக்கில் இடவேண்டும் என்று ஜெயல‍லிதா சட்ட மன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றிய போது கூட அது தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்க வில்லை.  அதுவே சரியான அணுகு முறை. உண்மையில் தமிழகத்தில் யாரை ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் தமிழக மக்களே. 

நன்றி tulpen அவர்களே! ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டு அரசியல் குறித்து இப்படி ஒரு நிலைப்பாட்டில் இருப்பது எனக்குத் தெரியாது. அறியத் தந்தமைக்கு நன்றி! ஆனால் நான் மேலே கிருபன் அவர்களுக்கான மறுமொழியில் தெரிவித்தது போல், இந்த வேண்டுகோளை நான் ஈழத் தமிழர்களிடம் முன்வைக்கவில்லை. ஈழத் தமிழர்களுக்காகத் தமிழ்நாட்டிலிருந்து குரல் கொடுக்கும் எனதருமைத் தமிழீழ ஆதரவுத் தலைவர்களுக்கும் இயக்கங்களுக்குமானதே இது. இப்படி ஒரு வேண்டுகோளை அவர்களிடம் முன்வைக்கிறேன் என்பதை ஈழத் தமிழ் மக்களின் பார்வைக்கு வைக்கவே இங்கு இதைப் பகிர்ந்தேன். ஏனெனில் ஒருவேளை என்னுடைய இந்த வேண்டுகோள் தவறானதாக இருந்தால் இதனால் பாதிக்கப்படப் போவது ஈழத் தமிழ் மக்கள்தாம் அல்லவா? ஆகவே இங்கு பகிர்ந்தால் இது தவறெனில் ஈழ உறவுகள் பார்த்து என்னைத் திருத்துவீர்கள் என்பதற்காகத்தான். நன்றி!

Link to comment
Share on other sites

8 hours ago, ampanai said:

நன்றி எல்லாம் தேவையில்லை. ஒரு கருத்தை உண்மையாகவும் நேர்மையாகவும் முன்வைக்க எந்த தமிழனும் தயங்க தேவையில்லை, தயங்கவும் கூடாது. 

மிக்க நன்றி நண்பரே!

Quote

தாய்த்தமிழகம் என்றும் தமிழீழ மக்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதும், அவர்களே என்றும் எமக்கு  காப்பரண்கள் என்பதும் எனது நிலை.

உண்மையிலேயே நெகிழ்கிறேன்! இனப்படுகொலை நேரத்தில் உங்களைக் காப்பாற்றத் தவறி விட்டோம் என்கிற குற்ற உணர்ச்சி இன்றும் எங்களில் ஏராளமானோருக்கு உண்டு. ஆனால் நீங்கள் இன்னும் எங்கள் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பது கண்டு நெக்குருகி நிற்கிறேன். நன்றி!

Quote

தமிழக அரசியலை பொறுத்தவரையில் யார் ஆட்சியிலும் இருந்தாலும், அவர்களை ஈழ நலம் சார்ந்து உண்மையாக செயல்பட வைக்கும் அரசியல் திறமையும் ஒருங்கிணைப்புமே என்றும் தேவை. அமேரிக்கா வாழ் யூதர்களை உதாரணத்திற்கு கூறலாம். எந்த கட்சியை சார்ந்தவர் சனாதிபதி என்றாலும், அவர்களை யூத நலம் சார்ந்து முடிவுகளை எடுக்கும் அரசியல் பண்பை அமெரிக்க யூதர்கள் தக்கவைத்துள்ளார்கள். 

இதைத்தான் நானும் செய்ய நினைக்கிறேன். அதுவும் மிகச் சில நாட்களாகத்தாம் எனக்கு இந்தப் புரிதல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதைச் சொன்னாலே இங்கே நம் மக்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள். இனப்படுகொலை செய்த தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பேசுகிறேன் எனக் குற்றம்சாட்டுகிறார்கள். உண்மையில் நான் தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பேசவில்லை; மாறி வரும் அரசியல் சூழல்களுக்கேற்ப அரசியலாளர்கள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வது போல் மக்களான நாமும் அவ்வப்பொழுது இடனறிந்து செயல்பட வேண்டும் என்றுதான் சொல்கிறேன். உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி!

20 minutes ago, tulpen said:

எப்போதும்  தமிழன் இந்திய அரசின் தேசிய இனங்களை அடக்கி வைக்க வேண்டும் அல்லது அவர்கள் பலம் பெறுவது தடுக்க வேண்டும் என்ற கொள்கை  இந்கதுயாவை ஆளும் கட்சிகளைகளுக்கு அப்பாற்பட்ட சில சக்திகளால் எடுக்கப்படுபவை.

ஆனால் தமிழகத்தில்  உள்ள எல்லா கட்சிகளுக்குள்ளும் ஈழத்தமிழர் ஆதரவு சக்திகள் உண்டு. ஆகவே அவர்களது அரசியல் கட்சிகளுக்குள் உள்ள முரண்பாடுகளில் நாம் எமது ஈழத்தமிழ் அமைப்புக்கள் கருத்து  சொல்வது. ஒரு கட்சியை ஆதரிப்பது என்பது  பாதகமான விளைவையே எமக்கு ஏற்படுத்தும்.  எல்லாக் கட்சிகளுக்குள்ளும் உள்ள எமது ஆதரவு சக்திகளோடு நட்புறவு பாராட்டுவதே புத்திசாலித்தனமான நடவடிக்கை. 

உங்கள் புரிதல் கண்டு வியந்து நிற்கிறேன்! அலாதி!... அலாதி!...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.