Jump to content

பாராளுமன்றமில்லாத ஒரு நாடு ஜனநாயகமற்றது – சுமந்திரன்


Recommended Posts

பாராளுமன்றமில்லாத ஒரு நாடு ஜனநாயகமற்றது – சுமந்திரன்

பாராளுமன்ற கலைப்பு மீதான உச்சநீதிமன்ற விசாரணைகள் ஆரம்பம்

பாராளுமன்றத் தேர்தல் திகதி மற்றும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவிப்பது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட 8 அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

கடந்த பாராளுமன்றத்துக்கும், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவுக்குமிடையில் இடையில் எழுந்துள்ள அரசியலமைப்பு சட்ட இழுபறி தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இலங்கையின் அரசியலில் பாரிய விளைவுகளைத் தோற்றலாம் என அவதானிகள் கருதுகின்றனர்

இவ் வழக்கில் சட்டமா அதிபரை மேலதிக வழக்குரைஞர் நாயகம் இண்டிகா டெமுனி டிசில்வாவும், ஜனாதிபதி செயலர் பி.பி.ஜயசுந்தர சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவும் வாதாடுகிறார்கள்.

அடிப்படை உரிமைகள் தொடர்பாக வழக்குப்பதிந்திருந்தவர்களில் இருவரான, ஊடகவியலாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான விக்டர் ஐவன் மற்றும் சரிதா குணரட்ன சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதாடுகிறார்.

 

“பாராளுமன்றம் ஒரு தொடர் நடைமுறை. அது ஒருபொழுதும் இல்லாமல் போய்விடுவதில்லை. கலைக்கப்படும்போது தூக்க நிலைக்குப் போகும் அதை ஒரு அவசரகால நிலையில் மீண்டும் கூட்டுவதற்கு அரசியலமைப்பின் கட்டளை 70(7) இடம் தருகிறது” எனக்கூறி சுமந்திரன் தனது விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.

பாராளுமன்றத்தை அதன் 5 வருடகால தவணை முடிவதற்கு முன்னரே கலைக்கும்போது அது மூன்று மாதங்களுக்குப் பிந்தாமல் மீளவும் கூட்டப்படவேண்டுமென்பது அரசியலமைப்பின் கட்டளை 70(5) மூலம் தெளிவு படுத்தப்படுகிறது. இதன் பிரகாரம் ஜூன் 2ம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படவேண்டும்.

தேர்தல் ஆணையத்தினால் குறிக்கப்பட்ட தேர்தல் திகதியான ஜூன் 20 ஏற்கெனவே கால அவகாசத்தை மீறி விட்டது. அரசியலமைப்பின் பிரகாரம் ஒரு நாடு பாராளுமன்றம் இயங்க முடியாது. கோவிட்-19 மிக மோசமான தாக்கத்தைத் தந்துகொண்டிருப்பது தெரிந்திருந்தும், உலக சுகாதார நிறுவனம் இது ஒரு கொள்ளை நோய் என்பதைப் பிரகடனப்படுத்தி சில நாட்களே சென்றிருந்தும், ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் திகதியை அறிவித்திருக்கிறார்.

“இதற்கிடையில், தேர்தல் ஆணையம், அரசியலமைப்பின் விதிகள் பற்றி எந்தவித அக்கறையுமின்றி ஜூன் 20 தேர்தல் நடைபெறுமென்று அறிவித்திருக்கிறது. இது என்ன நிறைவேற்று ஜனாதிபதியும், தேர்தல் ஆணையமும் ஒரு சுதந்திரமான மக்கள் மீது விடும் பகிடியா?” எனச் சுமந்திரன் தனது விவாதத்தின்போது வினவினார்.

“ஏப்ரல் 25 செய்யப்பட்ட பிரகடனப்படி மே 14 தேர்தல்கள் நடைபெற்றிருக்க வேண்டும். அது திகதி கடந்து விட்டது. எனவே அந்தப் பிழையான திகதியைக் கொண்ட பிரகடனம் செல்லுபடியாகாமல் போகிறது.


“இப் பிரச்சினையைத் தீர்க்க ஜனாதிபதிக்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அதில் ஒன்று உச்ச நீதிமன்றம். அதை பயன்படுத்திக்கொள்ள அவர் தவறி விட்டார். எனவே தற்போது பூட்டப்பட்டு இராணுவத்தினரின் கைகளில் இருக்கும் பாராளுமன்றத்தை இந்த உச்சநீதிமன்றம் பாதுகாக்கவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார் சுமந்திரன்.

அடிப்படை உரிமைகள் மீதான வழக்குப் பதிவு கொடுத்த கா அவகாசம் போதாமை, வழக்கில் ஜனாதிபதியின் பெயர் குறிக்கப்படாமை போன்ற விடயங்களில் தமது எதிர்க் கருத்துக்களைக் கூறிய பிரதிவாதிகளின் வழக்கறிஞர்கள் அடுத்த விசாரணை நாளின்போது தொடர்வதாகக் கூறியுள்ளார்கள்.

டாக்டர் பாக்கியசோதி சரவணமுத்து, சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க, குமார வெல்கம, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் இளங்கோவன் ஆகியோரது வழக்குகள் மீ 19 ம் திகதி எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது.

https://marumoli.com/பாராளுமன்றமில்லாத-ஒரு-நா/?fbclid=IwAR3x5i2Tx-UN-e-A4AqsxAHDIEAa8Ox9I_7w9NeSToJhWkqUVZ5lubm_cEY

Link to comment
Share on other sites

கூட்டமைப்பிலேயே நீண்டகாலமா தன்னிச்சையா இயங்கி ஜனநாயகம் பேணத் தெரியாத சுத்துமாத்து சுமந்திரன் ஜனநாயகம் பற்றி பேசுவது வேடிக்கை தான். கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு கொள்கைகள் இருக்க முடியாதல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

கூட்டமைப்பிலேயே நீண்டகாலமா தன்னிச்சையா இயங்கி ஜனநாயகம் பேணத் தெரியாத சுத்துமாத்து சுமந்திரன் ஜனநாயகம் பற்றி பேசுவது வேடிக்கை தான். கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு கொள்கைகள் இருக்க முடியாதல்லவா?

சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்த... நல்ல கருத்து, ராஜேஷ். :)

Link to comment
Share on other sites

3 hours ago, Rajesh said:

கூட்டமைப்பிலேயே நீண்டகாலமா தன்னிச்சையா இயங்கி ஜனநாயகம் பேணத் தெரியாத சுத்துமாத்து சுமந்திரன் ஜனநாயகம் பற்றி பேசுவது வேடிக்கை தான். கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு கொள்கைகள் இருக்க முடியாதல்லவா?

உண்மை!

சிங்கள-பௌத்த கொலைகாரக் கலாச்சாரத்தை சனநாயக  கலாச்சாரமாக சுமந்திரன் போன்ற கூலிக்கு மாரடிப்பவர்கள் கருதுவதில் வியப்பில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் ஜனநாயக தூண்களில் இவரும் ஒரு தூண்..கண்டியளோ ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தான் பிரதிநிதிப்படுத்தும் மக்களின் துயரில் பங்கெடுக்க முடியாத.. இதெல்லாம் சனநாயகம் பற்றிக் கதைக்கிது. கேவலம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, போல் said:

உண்மை!

சிங்கள-பௌத்த கொலைகாரக் கலாச்சாரத்தை சனநாயக  கலாச்சாரமாக சுமந்திரன் போன்ற கூலிக்கு மாரடிப்பவர்கள் கருதுவதில் வியப்பில்லை!

8 hours ago, Rajesh said:

கூட்டமைப்பிலேயே நீண்டகாலமா தன்னிச்சையா இயங்கி ஜனநாயகம் பேணத் தெரியாத சுத்துமாத்து சுமந்திரன் ஜனநாயகம் பற்றி பேசுவது வேடிக்கை தான். கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு கொள்கைகள் இருக்க முடியாதல்லவா?

2 hours ago, putthan said:

சிறிலங்காவின் ஜனநாயக தூண்களில் இவரும் ஒரு தூண்..கண்டியளோ ....

2 hours ago, nedukkalapoovan said:

தான் பிரதிநிதிப்படுத்தும் மக்களின் துயரில் பங்கெடுக்க முடியாத.. இதெல்லாம் சனநாயகம் பற்றிக் கதைக்கிது. கேவலம். 

புலம்பெயர்ந்த தமிழர் சிலர் முகநூலில் தாங்கள் புலிக்கோட்டையில் வளர்ந்தவர்கள் என்றும் தலைவர் பாதையே தங்கள் மந்திர பாதை என இன்றும் கூவிக்கொண்டு சுமந்திரனுக்கு சொம்பு தூக்குபவர்களை என்னவென்பது?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

பாராளுமன்றமில்லாத ஒரு நாடு ஜனநாயகமற்றது – சுமந்திரன்

இதுவரை பாராளுமன்றில் கண்ட ஜனநாயகம் தான் என்ன?
ஒருக்கா பட்டியலிடுங்க சார்.

Link to comment
Share on other sites

6 hours ago, putthan said:

சிறிலங்காவின் ஜனநாயக தூண்களில் இவரும் ஒரு தூண்..கண்டியளோ ....

ஊருக்கெல்லாம் சொல்லுமாம் பல்லி

உழுந்ததாம் பள்ளத்திலே துள்ளி.

 

12 hours ago, Rajesh said:

கூட்டமைப்பிலேயே நீண்டகாலமா தன்னிச்சையா இயங்கி ஜனநாயகம் பேணத் தெரியாத சுத்துமாத்து சுமந்திரன் ஜனநாயகம் பற்றி பேசுவது வேடிக்கை தான். கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு கொள்கைகள் இருக்க முடியாதல்லவா?

 

Link to comment
Share on other sites

12 hours ago, nunavilan said:

“இப் பிரச்சினையைத் தீர்க்க ஜனாதிபதிக்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அதில் ஒன்று உச்ச நீதிமன்றம். அதை பயன்படுத்திக்கொள்ள அவர் தவறி விட்டார். எனவே தற்போது பூட்டப்பட்டு இராணுவத்தினரின் கைகளில் இருக்கும் பாராளுமன்றத்தை இந்த உச்சநீதிமன்றம் பாதுகாக்கவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார் சுமந்திரன்.

சிங்களம் தவற விட்டதா? சுத்தப்பொய்

Link to comment
Share on other sites

13 hours ago, nunavilan said:

கடந்த பாராளுமன்றத்துக்கும், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவுக்குமிடையில் இடையில் எழுந்துள்ள அரசியலமைப்பு சட்ட இழுபறி தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இலங்கையின் அரசியலில் பாரிய விளைவுகளைத் தோற்றலாம் என அவதானிகள் கருதுகின்றனர்

ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் இந்த பாராளு"மந்தத்தால்" தமிழ் பேசும் மக்களுக்கு அதிக பலன் இல்லை.  

Link to comment
Share on other sites

" பாராளுமன்றமில்லாத ஒரு நாடு ஜனநாயகமற்றது – சுமந்திரன் "

தமிழ் மக்களின் மக்களாட்சி பிரதிநிதியாக இருக்கும் சுமந்திரன் அவர்கள், கடந்த பத்து ஆண்டுகளில் இந்த பாராளுமன்ற பிரதிநிதாக என்ன செய்துள்ளார்? 

ஆனால், தன்னை சிங்களவர்கள் மத்தியில் ஒரு மென்போக்காளர் என காட்டிட முனைகிறார்.  

இவரையும் நாளை சிங்களம் ஏமாற்றும் என்பதை வரலாறு காட்டி நிற்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ampanai said:

" பாராளுமன்றமில்லாத ஒரு நாடு ஜனநாயகமற்றது – சுமந்திரன் "

தமிழ் மக்களின் மக்களாட்சி பிரதிநிதியாக இருக்கும் சுமந்திரன் அவர்கள், கடந்த பத்து ஆண்டுகளில் இந்த பாராளுமன்ற பிரதிநிதாக என்ன செய்துள்ளார்? 

ஆனால், தன்னை சிங்களவர்கள் மத்தியில் ஒரு மென்போக்காளர் என காட்டிட முனைகிறார்.  

இவரையும் நாளை சிங்களம் ஏமாற்றும் என்பதை வரலாறு காட்டி நிற்கின்றது. 

உவர் பாராளுமன்றம் போய் என்ன செய்யப்போறாராம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை 9 மணி - மாலை 3 : 30 இடையில் 1/2 மணி நேரம் தனிப்பட்ட அல்லது குழுவாக சுற்றி பார்க்கலாமாம்.. ஆராவது விசிற்றர் பொஸ் போட்டு விடுங்கப்பா..👌

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர்ந்த தமிழர் சிலர் முகநூலில் தாங்கள் புலிக்கோட்டையில் வளர்ந்தவர்கள் என்றும் தலைவர் பாதையே தங்கள் மந்திர பாதை என இன்றும் கூவிக்கொண்டு சுமந்திரனுக்கு சொம்பு தூக்குபவர்களை என்னவென்பது?

கருணா, செல்வராசா பத்மநாதன் வழியில் செல்லும் துஷ்டர்களாக இருக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர்ந்த தமிழர் சிலர் முகநூலில் தாங்கள் புலிக்கோட்டையில் வளர்ந்தவர்கள் என்றும் தலைவர் பாதையே தங்கள் மந்திர பாதை என இன்றும் கூவிக்கொண்டு சுமந்திரனுக்கு சொம்பு தூக்குபவர்களை என்னவென்பது?

 

 

முதல் தமிழ்தேசிய செம்பை இறக்கி வைத்துவிட்டு விரும்பிய செம்பை தூக்கலாம்

Link to comment
Share on other sites

இங்குள்ள எல்லா கருத்துக்களுக்கும் வருகிற தேர்தலில் இலங்கை தமிழ் மக்கள் பதிலளிப்பார்கள். அவர்கள்தான் அதை தீர்மானிக்க வேண்டும். ஏன் அவர்களை தெரிவு செய்கிறோம் என்பதட்கும் பதில் அவர்களிடம்தான் உண்டு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.