Jump to content

அம்பன் புயல் தாக்கத்தினால் கிளிநொச்சியில் பாதிப்பு


Recommended Posts

 

In இலங்கை     May 18, 2020 10:30 am GMT     0 Comments     1347     by : Jeyachandran Vithushan

kilinochchi-amphan.jpg

அம்பன் புயல் தாக்கத்தினால் கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் அடிப்படையில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் குறித்த புயல் தாக்கத்தினால் பள்ளிக்குடாவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும், கௌதாரி முனையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு நபரும், முழங்காவில் பிரதேச்ததில் 2 குடும்பங்களை சேர்ந்த 9 பேரும், கிராஞ்சியில் 6 குடும்பங்களைச்சேர்ந்த 24 பேரும், பொன்னாவெளியில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும், இரணைமாதாநகர் கிராமத்தில் 1 குடும்பத்தை சேர்ந்த மூவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் 3 வீடுகள் முழுமையாகவு்ம, 2 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களிற்கான உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையமும், பூநகரி பிரதேச செயலகமும் மேற்கொண்டு வருவதாக பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன் தெரிவிக்கின்றார்.

இதேவேளை குறித்த புயல் தாக்கத்தினால் கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக தற்காலிக வீடு சேதமடைந்துள்ளது. இதன்போது வீட்டில் தங்கியிருந்த 70 வயதான குடும்பஸ்தர் காயமடைந்த நிலையில் அக்கராயன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் 8 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களை கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இரவு வீசிய பலத்த காற்று காரணமாக கண்டாவளை பிரதேசத்தில் புன்னைநீராவி கிராமசேவையாளர் பிரிவில் 06 வீடுகளும், உமையாள்புரம் கிராமசேவையாளர் பிரிவில் 02 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களிற்கான உடனடி தேவைகள் தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலகம் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. குறித்த புயல் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலும் வீடுகள் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அம்பாம்-புயல்-தாக்கத்தின/

Link to comment
Share on other sites

யாழில் சீரற்ற வானிலை காரணமாக 66 குடும்பங்கள் பாதிப்பு

In இலங்கை     May 19, 2020 12:15 pm GMT     0 Comments     1084     by : Jeyachandran Vithushan

IMG-64f806cafd108ae36715de8686569f9a-V-720x450.jpg

யாழ்ப்பாணத்தில் காற்றின் தாக்கம் காரணமாக 66 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் தெரிவித்தார்

அம்பன் சூறாவளியின் தாக்கமானது நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் வேகமானது உயர்வாக உணரப்பட்டுள்ளது

யாழ்ப்பாண மாவட்டத்தை பொருத்தவரை காற்றின் தாக்கத்தின் காரணமாக 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமை பிரிவிற்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் என்.சூரிராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த 17 மற்றும் 18 ஆம் திகதி வீசிய காற்றின் தாக்கத்தின் காரணமாக குறித்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 14குடும்பங்களைச் சேர்ந்த 54 அங்கத்தவர்களும் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 அங்கத்தவர்களும் நல்லூர் பிரதேச செயலகத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று அங்கத்தவர்களும் பருத்தித்துறை பிரதேசசெயலகத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 166 குடும்பங்களுமாக மொத்தமாக 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த காற்றின் தாக்கத்தின் காரணமாக 47 வீடுகள் இதுவரை பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மேலும் ஓரிரு நாட்களுக்கு குறித்த காற்றின் தாக்கமானது கூடுதலாக காணப்படுவதன் காரணமாக கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டவியல் திணைக்களத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மீனவர் சமூகத்தினர்விழிப்பாக செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது

காற்றின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

http://athavannews.com/யாழில்-சீரற்ற-வானிலை-கார/

Link to comment
Share on other sites

சூறாவளியால் இந்தோனேசியாவுக்கு அடித்துச் செல்லப்பட்ட 150 இலங்கையர்கள்

திருகோணமலை - குடாவெல பகுதியியைச் சேர்ந்த 150 மீனவர்களுடன் 30 படகுகள் இந்தோனேசியாவுக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பன் சூறாவளியின் தாக்கம் காரணமாக பலத்த அலைகளால் குறித்த படகுகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர்களுடன் தொடர்புகொள்ள முடிந்துள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் வானிலை காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை இலங்கையில் அம்பன் சூறாவளி புயலின் தாக்கம் இன்று முதல் குறைந்து செல்லும் நிலை காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/143662?ref=imp-news

Link to comment
Share on other sites

யாழில் காற்றின் தாக்கத்தால் தூக்கி வீசப்பட்ட வீட்டு கூரைகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக 66 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் தெரிவித்தார்.

அம்பன் சூறாவளியின் தாக்கமானது நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் வேகமானது உயர்வாக உணரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை காற்றின் தாக்கத்தின் காரணமாக 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமை பிரிவிற்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் என்.சூரிராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த பதினேழு மற்றும் பதினெட்டாம் திகதி வீசிய காற்றின் தாக்கத்தின் காரணமாக குறித்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 14 குடும்பங்களைச் சேர்ந்த 54 அங்கத்தவர்களும் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 அங்கத்தவர்களும் நல்லூர் பிரதேச செயலகத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று அங்கத்தவர்களும் பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த குடும்பங்களுமாக மொத்தமாக 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் குறித்த காற்றின் தாக்கத்தின் காரணமாக 47 வீடுகள் இதுவரை பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மேலும் ஓரிரு நாட்களுக்கு குறித்த காற்றின் தாக்கமானது கூடுதலாக காணப்படுவதன் காரணமாக கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலத்திணைக்களத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மீனவர் சமூகத்தினர் விழிப்பாக செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/143589

Link to comment
Share on other sites

கடும் காற்றால் பாதையின் குறுக்கே வீழ்ந்த பாலை மரம் மின் விநியோகமும் துண்டிப்பு

Weather-3-720x450.jpg

கிளிநொச்சி – இரத்தினபுரம் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பாலைமரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பல கிராமங்களிற்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) பகல் 1.30 மணியளவில் வீசிய பலத்த காற்றினாலேயே குறித்த மரம் முறிந்து விழ்ந்துள்ளது. இதனால் மின்சார சபை மற்றும் ரெலிகொம் நிறுவனத்திற்கும் நட்டம் ஏற்பட்டுள்ளது.

மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்துள்ளன. அத்துடன் கம்பங்களும் முறிந்துள்ளன. இதன் காரணமாக வட்டக்கச்சி, இராமநாதபுரம், திருவையாறு, பன்னங்கண்டி உள்ளிட்ட பல கிராமங்களிற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த மரத்தினை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Weather-6.jpg

Weather-9.jpg

 

 

யாழில் கடும் காற்றினால் வாழைத்தோட்டங்கள் சேதம் விவசாயிகள் கவலை

VideoCapture_20200521-155546-720x450.jpg

யாழில் நேற்று மாலை முதல் கடும் காற்று வீசி வருகின்ற நிலையில் நீர்வேலி, கோப்பாய், புன்னாலைக்கட்டுவன் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள வாழைத் தோட்டங்கள் அழிவடைந்துள்ளன.

பல வாழைகள் குலைகளுடன் முறிந்து விழுந்துள்ளன. வாழை குலைகள் முற்ற முதல் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளனர்.

கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக பல விவசாயிகள் தமது விளைபொருட்களை சரி வர சந்தைப்படுத்த முடியாத நிலையில் நஷ்டப்பட்டுப் போயுள்ள சூழலில் வாழை, பப்பாசி போன்ற இலகு மரங்கள் கடும் காற்றினால் சேதமடைந்து விவசாயிகளை மேலும் கவலையுள் ஆழ்த்தியுள்ளது.

http://athavannews.com/யாழில்-கடும்-காற்றினால்/

Link to comment
Share on other sites

முல்லைத்தீவில் வீசிய கடும் காற்று; வீடுகள் பகுதியளவில் சேதம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீசி வரும் காற்று மற்றும் பலத்த மழை காரணமாக நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கின்றது

இந்த வகையில் மாங்குளம் பகுதியில் ஒரு வீட்டின் உட்கூரை முற்றுமுழுதாக தூக்கி வீசப்பட்ட நிலையில் வீட்டில் இருந்த தாயாரும் பிள்ளைகளும் பாதுகாப்பான முறையில் வெளியேறி இருக்கிறார்கள் இந்த சம்பவம் இரவு 1.10 மணியளவில் இடம் பெற்றிருக்கின்றது.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் வீசிய காற்று மற்றும் பலத்த மழை காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் இரண்டு வீடுகளும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடும் ஆக நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கின்றது.

குறிப்பாக இந்த பயனாளிகளுக்கான அனர்த்த கொடுப்பனவாக முதல்கட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வீடுகளில் சேதங்கள் கணக்கிடப்பட்டு அதற்கான கொடுப்பனவுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/143702

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் வீசிய கடும் காற்றில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம் (காணொளி)

82-3.jpeg

 

யாழ்ப்பாணத்தில் அண்மையில் வீசிய கடுங்காற்று காரணமாக கோப்பாய், நீர்வேலி, அச்செழு போன்ற பிரதேசங்களில் சுமார் ஐநூறு ஏக்கர் பிரதேசத்தி்ல் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து அழிவடைந்துள்ளன.

இந்நிலையில் குறித்தபிரதேசத்திற்கான இன்று நேரடியாக சென்ற கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏற்பட்டுள்ள பல இலட்சம் ரூபாய் பெறுமதியான அழிவுகளை நேரடியாக அவதானித்தார்.

அத்துடன், ஏற்பட்ட அழிவுகள் தொடர்பான மதிப்பீடுகளை உடனடியாக மேற்கொண்டு தனக்கு வழங்குமாறு சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் யாழ். அரசாங்க அதிபர் ஆகியோரை கேட்டுக் கொண்டார்.

மேலும், குறித்த மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்து அழிவுகளுக்கான நஸ்ட ஈட்டினை பெற்று தருவதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் உறுதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://thinakkural.lk/article/43170

Link to comment
Share on other sites

யாழ் மாவட்ட மக்களுக்கு அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ள தகவல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள நிலைமைகள் தொடர்பில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்க அதிபர் தொடர்ந்து தெரிவிக்கையில்..

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 21ஆம் திகதியில் இருந்து காற்று அதிகரித்து காணப்பட்டது. புயல் அபாயத்தை தொடர்ந்து வீசிய காற்று மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியதன் காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 79 வீடுகள் சேதமடைந்துள்ளன. அதில் ஒரு வீடு முழுமையாகவும், மிகுதி 78 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருக்கிறது. அதேபோல் 204 குடும்பங்களைச் சேர்ந்த 658 பேர் 3 நாள் வீசிய காற்றின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கைதடி கலை வாணி வித்தியாலய பாடசாலை கட்டடம் ஒன்றும் சேதத்திற்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெல்லிப்பளை பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்து ஒரு பெண்மணி காயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்.

சிறு முயற்சியாளர்களுடைய தொழில் பாதிப்படைந்துள்ளதுள்ளது. 6 பேர் தொழில் பாதிப்பு அடைந்துள்ளார்கள் அதிலும் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காற்றின் காரணமாக மரம் ஒன்று முறிந்து விழுந்து அவரது படகு சேதமடைந்துள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவில் வாழை செய்கை மற்றும் பப்பாசி செய்கை பாதிப்படைந்துள்ளது எனினும் வீடுகள் பாதிப்படைந்த அனைவருக்கும் நஷ்ட ஈடு வழங்குவதற்கான முயற்சிகள் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்தோடு தொழில் முயற்சி பாதிக்கப்பட்ட சிறு முயற்சியாளர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்குவதற்குரிய முயற்சிகள் மாவட்ட செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது காற்றின் பாதிப்பு தொடர்பான அறிக்கையினை எமது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பி யுள்ளோம்.

தொழில் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் ஏதாவது உதவிகள் வழங்க முடியுமா எனவும் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

இன்றும் நாளையும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டத்தின் பின்னர் செவ்வாய்க்கிழமை நாடு புதிய விதிப்படி இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரைக்கும் ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படஇருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை தொடக்கம் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தும் ஆரம்பிக்கப்படவுள்ளது கொழும்பு கம்பகா தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் போக்குவரத்து சேவைகள் மற்றும் ஏனைய விடயங்களை செயற்படுத்துவதற்காக தீர்மானித்துள்ளோம்.

தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது உள்ளூர் போக்குவரத்து சற்று அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.

தனியார் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டளவில் இடம் பெற்று வருகின்றது அதிலும் குறிப்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றப்படுவதோடு அவை தொடர்ச்சியாக பின்பற்றப்படுகின்றதா என அவதானிக்க வேண்டிய தேவை உள்ளது.

அதோடு தனியார் போக்குவரத்துச் சேவையில் நின்டுகொண்டு பயணிகள் பயணம் செய்வது தொடர்பில் எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது எனவே இது தொடர்பில் நாங்கள் தனியார் போக்குவரத்து சபையினருடன் பேச உள்ளோம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் பஸ் சேவையை அதிகரிப்பதற்காக வேலைத்திட்டத்தினை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம்.

அத்தோடு தீவு பகுதிக்கான போக்குவரத்துக்கும் வழமைபோல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்று வருகின்றது. காற்றின் தாக்கத்தின் காரணமாக சிறு தடங்கல் ஏற்பட்டுள்ள போதிலும் தீவு பகுதிக்கான போக்குவரத்து சேவையும் வழமைபோல் ஆரம்பிக்கப்பட்டு நடைபெறுகிறது.

ஆலயங்கள் மற்றும் மக்கள் ஒன்று கூடுவதற்கான செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் நாங்கள் அறிவித்துள்ளோம் அதிலும் மத வழிபாட்டுத்தலங்கள் சுகாதார நடைமுறையை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றேன்.

எங்களுடைய உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக "சௌபாக்கியா "கொள்கை அதாவது விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்கும் முயற்சி உங்களுடைய யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறிப்பாக வீட்டு தோட்டங்கள். விதை நாற்றுகள் மரக்கன்றுகள் போன்றவை சுமார் 26,000 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன அதே போல உரவிநியோகமும் விவசாய உள்ளீடுகள் போன்றவையும் வழங்கப்பட்டு வருகின்றன.

விவசாய உள்ளீடுகள் போதுமானஅளவு கையிருப்பில் வைத்திருப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் நாங்கள் உரிய இடத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம் அதேபோல் விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் என்பன இந்த விடயத்தை மிகவும் சிறப்பாக செயற்படுத்தி வருகின்றார்கள்.

சௌபாக்கியா வேலைத்திட்டமானது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

உரத் தட்டுப்பாடு நிலவி வருவதாக பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது எனினும் அது ஒரு தற்காலிகமான தட்டுப்பாடேயன்றி அது ஒரு பிரச்சினையான விடயமல்ல அது விரைவில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/143908

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.