Jump to content

Recommended Posts

Gotabaya-Rajapaksa-1-720x450.jpg

பிரிவினைவாத பயங்கரவாதிகளை முற்றாக தோல்வியுறச் செய்து நாட்டுக்கு சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தித் தந்த துணிச்சல் மிக்க படைவீரர்களுக்கு நன்றி நவிலும் படைவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் இந்த வாழ்த்துச் செய்தியை தெரிவிக்கின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2009 மே மாதம் 19ஆம் திகதி வெற்றியுடன் நிறைவடைந்த போரின் நோக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக மாற்ற முடிந்திருப்பது எமது படைவீரர்களுக்கு வழங்கும் உயர்ந்த கௌரவமாகும்.

பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றி தேசத்தின் சுதந்திரம், ஐக்கியம், ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு பற்றிய எதிர்பார்ப்புகளின் அடையாளமாகும்.

அந்த அபிலாஷைகளை அடைந்துகொண்டுள்ள ஒரு சூழலில் இம்முறை படைவீரர்கள் நினைவு தினத்தை அனுஷ்டிக்கக் கிடைத்திருப்பதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.

கடந்த காலத்தில் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலுக்கு மத்தியில் தாய்நாட்டின் மீது பற்றுகொண்ட அனைத்து பிரஜைகளும் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்திருந்தனர்.

உலகின் ஒழுக்கக் கட்டுப்பாடான இராணுவம் என்ற கீர்த்திக்குரிய எமது இராணுவ அதிகாரிகளின் கௌரவத்தைப் பாதிக்கும் பல நிகழ்வுகள் அக்காலப் பகுதியில் இடம்பெற்றன.
இதனால் மனவேதனையடைந்திருந்த மக்களின் எதிர்பார்ப்பு சட்டமற்ற நிலைக்கு பதிலாக சட்டத்தையும், அநீதிக்கு பதிலாக நீதியையும் உறுதிப்படுத்தி படைவீரர்கள் செய்த அர்ப்பணிப்புகளுக்கான உரிய கௌரவத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதாகும். இந்த எதிர்பார்ப்புகளை எமக்கு நிறைவேற்ற முடியுமாக இருந்தது.

நாம் அடைந்த சுதந்திரத்தையும் சமாதானத்தையும் அர்த்தப்படுத்துவதற்கு ஒரு சுதந்திர தேசம் என்ற வகையில் நாம் ஒன்றுபட்டு எழுந்திருக்க வேண்டும். பலமான தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அதேநேரம் தேசத்தின் நன்மையை முதன்மைப்படுத்தி உலகின் ஏனைய நாடுகளுடனும் இணைந்து எமது இலக்குகளை அடைந்துகொள்ள வேண்டும்.

கொவிட் 19 நோய்த்தொற்று போன்ற தடைகள் வந்தாலும் நாம் ஒரு போதும் பின்னோக்கிச் செல்லப்போவதில்லை. தேசத்தின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள், சுகாதார சேவைகள் மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அரச பொறிமுறையினால் தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட்டு வருகிறது.

நாடு பிளவுபடுவதை தடுத்து நிறுத்திய படைவீரர்களுக்கும் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய மக்களுக்கும் வழங்கமுடியுமான உயர்ந்த கௌரவம் அதுவாகும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

தாய்நாட்டிற்காக உயிர்நீத்த மற்றும் பல்வேறு தியாகங்களை செய்த படைவீரர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

http://athavannews.com/ஜனாதிபதி-யுத்த-வெற்றிநாள/

Link to comment
Share on other sites

லண்டனில் தமிழர்களை அச்சுறுத்திய பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவுக்கு பதவி உயர்வு வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய

லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரத்திற்கு முன்னால் கூடிய தமிழர்களின் கழுத்தை வெட்டுவதாக சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவுக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போர் நிறைவடைந்து 11 ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் 17 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிலையில், இராணுவ தளபதி சவேந்திர சில்வா மேற்கொண்ட கோரிக்கைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்ட அதிகாரிகளில் மேஜர் ஜெனரால்களாக 5 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரத்திற்கு முன்னால் கூடிய தமிழர்களின் கழுத்தை வெட்டுவதாக சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/143557

சிங்கள-பௌத்த மிலேச்ச கொலைகாரர்களுக்கும் சிங்கள-பௌத்த மிலேச்ச பயங்கரவாதிகளுக்கும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் பதவியுயர்வு அளித்து எக்காளமிடுகின்றனர்!

Link to comment
Share on other sites

11 minutes ago, போல் said:

mulli-415x260.jpg

625.368.560.350.390.830.053.800.560.160.

images?q=tbn:ANd9GcSLHkGdvhJcdsEZ9I86gqU

Mullivaikal-Tamil-Genocide-84.jpg

2.jpg

3513945555_1741f2bf15_z.jpg

sYaahlD6yJsV2vVhg0yCRx52IYQagNC8NGz1qvOO

இலங்கையின் வெறிநாள் வாழ்த்து செய்தி எண்டு வரவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா பெளத்த சிங்களவர்களின் சனாதிபதி என்பதை நிரூபிக்கிறார். வாக்குப் போட்ட மக்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்.

ஆனால்.. எங்கட சம் சும் மாவை கும்பல்.. உட்பட பலரும்.. ஒரு இரங்கல் செய்தியைக் கூட மே 18 இல் விடவில்லை. அவர்கள் சொந்த மக்களுக்கு.. வாக்குப் போட்ட மக்களுக்கே விசுவாசமாகவில்லை. இதில... இவர்கள்.. மக்கள் பிரதிநிதிகள் என்று கொண்டிருக்க.. எம்மவர்கள் வாக்குப் போடுவது தான்.. மனச்சாட்சியை உறுத்துகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த நினைவஞ்சலிகள் இந்த ஏழை மக்களுக்கு. 

சுமந்திரன், பிரபாகரன் ஆயுதம் தூக்கியது தவறு என்று கூறியது ஒருவேளை இந்த துன்ப நிகழ்வை கருத்தில் கொண்டோ தெரியவில்லை. அதிலும் ஓரளவு உண்மயுண்டு.

உங்களை நம்மி வ‌ந்த எங்களை கடைசியில் இப்படியான நிலயில் விட்டிட்டு எல்லோரும் ஓடிவிட்டீர்களே ஐயா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  

18 minutes ago, colomban said:

ஆழ்ந்த நினைவஞ்சலிகள் இந்த ஏழை மக்களுக்கு. 

சுமந்திரன், பிரபாகரன் ஆயுதம் தூக்கியது தவறு என்று கூறியது ஒருவேளை இந்த துன்ப நிகழ்வை கருத்தில் கொண்டோ தெரியவில்லை. அதிலும் ஓரளவு உண்மயுண்டு.

உங்களை நம்மி வ‌ந்த எங்களை கடைசியில் இப்படியான நிலயில் விட்டிட்டு எல்லோரும் ஓடிவிட்டீர்களே ஐயா 

71/72 மற்றும் 88/89 ஜே வி பி அரசுக் கவிழ்ப்பு புரட்சிகளின் போது.. இலட்சத்துக்கும் மேல் சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள். ரோகண விஜயவீர கொல்லப்பட்டார். இங்கெல்லாம் ஏன் வெற்றி விழா கொண்டாடவில்லை..??!

மேலும்.. சுமந்திரன் என்ற பன்னாடை.. இதே ஜே வி பி பயங்கரவாதிகளுடன் சிவப்புச் சட்டை போட்டு வீதி உலா வந்தது.. மட்டும் எப்படிங்கோ..?!

ஒரு அரச பயங்கரவாத்திற்கு எதிரான.. ஆட்சிக்கவிழ்ப்பு சிங்கள ஆயுதப் பயங்கரவாதத்திற்கு ஒத்தூதும்.. சுமந்திரன்... தனக்கு வாக்குப் போட்ட சொந்த மக்களின் உரிமை.. துயரில் பங்கெடுக்க வக்கில்லாமல் போவது கொடுமையிலும் கொடுமை.

இவை தங்களின் கொழும்புப் பார்வைக்கு புலனாகவில்லைப் போலும்..??!

1983 இல் கொழும்பில் இருந்து தமிழர்கள் அடித்துவிரட்ட பட்ட போதும்.. கொலை செய்யப்பட்ட போதும்.. சொத்துக்கள் எரிக்கப்பட்டும் சூறையாடப்பட்ட போதும்.. உங்களை ரட்சித்தவர்கள் யாராம்..???! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, colomban said:

ஆழ்ந்த நினைவஞ்சலிகள் இந்த ஏழை மக்களுக்கு. 

சுமந்திரன், பிரபாகரன் ஆயுதம் தூக்கியது தவறு என்று கூறியது ஒருவேளை இந்த துன்ப நிகழ்வை கருத்தில் கொண்டோ தெரியவில்லை. அதிலும் ஓரளவு உண்மயுண்டு.

உங்களை நம்மி வ‌ந்த எங்களை கடைசியில் இப்படியான நிலயில் விட்டிட்டு எல்லோரும் ஓடிவிட்டீர்களே ஐயா 

அவர்களும் இறந்து மடிந்துபோய்விட்டார்களே, பிறகு என்ன ஒடிபோய்விட்டார்கள் என்று சொல்லுறீயள்.....

போர், யுத்தம் தவிர்க்கபட வேண்டிய ஒன்று அதை யாரும் ஏற்றுகொள்ளவில்லை....இவ்வளவு அழிவிக்கு பின்பும் அரசுகள் பயங்கரவாதிகளை( ஒருவனின் போராளி மற்றவனுக்கு பயங்கரவாதி) உருவாக்குவதில் முன்னின்று செயல்படுகின்ற‌தே...அரசுகள்தான் பய‌ங்கரவாதிகள் உருவாகாமல் தடுக்க வேண்டும் அதைவிடுத்து மீண்டும் மீண்டும் பயங்கரவாதிகளை உருவாக்குவதிலயே முழுமூச்சாக் செயல் படுகின்றனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

ஆழ்ந்த நினைவஞ்சலிகள் இந்த ஏழை மக்களுக்கு. 

சுமந்திரன், பிரபாகரன் ஆயுதம் தூக்கியது தவறு என்று கூறியது ஒருவேளை இந்த துன்ப நிகழ்வை கருத்தில் கொண்டோ தெரியவில்லை. அதிலும் ஓரளவு உண்மயுண்டு.

உங்களை நம்மி வ‌ந்த எங்களை கடைசியில் இப்படியான நிலயில் விட்டிட்டு எல்லோரும் ஓடிவிட்டீர்களே ஐயா 

ஈழத்தமிழின வரலாறு தெரியாதவர்களும் சுயநலவாதிகளும் இப்படித்தான் மற்றவர்கள் மீது பழியை சுமத்திவிட்டு வயிறு நிரப்பிக்கொண்டு திரிவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழின வரலாறு தெரியாதவர்களும் சுயநலவாதிகளும் இப்படித்தான் மற்றவர்கள் மீது பழியை சுமத்திவிட்டு வயிறு நிரப்பிக்கொண்டு திரிவார்கள்.

உங்களை போன்ற வசதியானவர்கள் ஒருவாறு வெளி நாட்டிட்கு தப்பி போட்டியள். என்னிடம் அப்படியல்லவே. 


என்னுடய சகோதர சகோதரிகளை நிர்வாணமாக்கி தலைசுட்டுக்கொன்ற‌ நாள் இது. என்ன செய்ய கேட்டால் நான் சுயலவாதி.   யுத்தெமொன்றே இனி வேண்டாம் எங்களுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, colomban said:

உங்களை போன்ற வசதியானவர்கள் ஒருவாறு வெளி நாட்டிட்கு தப்பி போட்டியள். என்னிடம் அப்படியல்லவே. 


என்னுடய சகோதர சகோதரிகளை நிர்வாணமாக்கி தலைசுட்டுக்கொன்ற‌ நாள் இது. என்ன செய்ய கேட்டால் நான் சுயலவாதி.   யுத்தெமொன்றே இனி வேண்டாம் எங்களுக்கு

இயக்கங்கள்/போர்கள் ஆரம்பிக்க முதல் இலங்கையில் இனக்கலவரங்கள் நடந்தனவே...!

அப்போதெல்லாம் சிங்கள இனவாதிகளால் ஈழத்தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டும்,மார்பங்கள் அறுக்கப்பட்டும் வீடுகள் இருப்பிடங்கள் எரிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டும் சொத்துக்கள் சூறையாடப்பட்டும் சொந்த மண்னிலையே விரட்டியடிக்கப்பட்டார்களே? 

அப்போது என்ன கோமாவிலா இருந்தீர்கள்?

Link to comment
Share on other sites

6 hours ago, போல் said:

பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றி தேசத்தின் சுதந்திரம், ஐக்கியம், ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு பற்றிய எதிர்பார்ப்புகளின் அடையாளமாகும்.

ஒரு நாடு இரு தேசம்.

ஏன் தமிழர்கள் பிரிவினை கேட்கிறார்கள் என்பதற்கு விடை காணாதவரைக்கும் ...
ஏன் இன்றும் நல்லிணக்கம் இந்த நாட்டில் இடம்பெற வழி சமைக்காத வரைக்கும் ....

இது ஒரு நாடு ஒரு தேசங்கள்  

7 hours ago, போல் said:

உலகின் ஒழுக்கக் கட்டுப்பாடான இராணுவம் என்ற கீர்த்திக்குரிய எமது இராணுவ அதிகாரிகளின் கௌரவத்தைப் பாதிக்கும் பல நிகழ்வுகள் அக்காலப் பகுதியில் இடம்பெற்றன.

இன்றும் நாளையும் அது தொடரவே செய்யும். 

காரணம், நீங்கள் மனிதம் அற்ற கொடியவர்கள். இராணுவ உடைக்குள் மறைந்திருக்கும் வெறியர்கள். 

நீங்கள், ஐ.நா. படை போர்வைக்குள்ளேயா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியவர்கள், அதுவும் சிறுவர்களை. 
 

Link to comment
Share on other sites

7 hours ago, போல் said:

கொவிட் 19 நோய்த்தொற்று போன்ற தடைகள் வந்தாலும் நாம் ஒரு போதும் பின்னோக்கிச் செல்லப்போவதில்லை. தேசத்தின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள், சுகாதார சேவைகள் மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அரச பொறிமுறையினால் தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட்டு வருகிறது.

பொருளாதாரம் கோவிட்19 னால் சிதைவடைந்து உங்கள் முப்படைகளுக்குமான செல்வுகளை குறைக்கவேண்டிய தருணம் வரும். அப்பொழுது வரும் சிக்கல். 

Link to comment
Share on other sites

7 hours ago, போல் said:

இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2009 மே மாதம் 19ஆம் திகதி வெற்றியுடன் நிறைவடைந்த போரின் நோக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக மாற்ற முடிந்திருப்பது எமது படைவீரர்களுக்கு வழங்கும் உயர்ந்த கௌரவமாகும்.

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

உங்களை போன்ற வசதியானவர்கள் ஒருவாறு வெளி நாட்டிட்கு தப்பி போட்டியள். என்னிடம் அப்படியல்லவே. 


என்னுடய சகோதர சகோதரிகளை நிர்வாணமாக்கி தலைசுட்டுக்கொன்ற‌ நாள் இது. என்ன செய்ய கேட்டால் நான் சுயலவாதி.   யுத்தெமொன்றே இனி வேண்டாம் எங்களுக்கு

"என்னுடய சகோதர சகோதரிகளை நிர்வாணமாக்கி தலைசுட்டுக்கொன்ற‌ நாள் இது"
கொழும்பாருக்கு தவறுகளை சுட்டிக்காட்டும் , ஞாயத்துக்கு குரல் கொடுக்கும் பேராண்மை இல்லையோ.
எய்தவனை விட்டு அம்பை நோகும் கதை இது. 

Link to comment
Share on other sites

 

4 hours ago, colomban said:

உங்களை போன்ற வசதியானவர்கள் ஒருவாறு வெளி நாட்டிட்கு தப்பி போட்டியள். என்னிடம் அப்படியல்லவே. 


என்னுடய சகோதர சகோதரிகளை நிர்வாணமாக்கி தலைசுட்டுக்கொன்ற‌ நாள் இது. என்ன செய்ய கேட்டால் நான் சுயலவாதி.   யுத்தெமொன்றே இனி வேண்டாம் எங்களுக்கு

 

8 hours ago, colomban said:

ஆழ்ந்த நினைவஞ்சலிகள் இந்த ஏழை மக்களுக்கு. 

சுமந்திரன், பிரபாகரன் ஆயுதம் தூக்கியது தவறு என்று கூறியது ஒருவேளை இந்த துன்ப நிகழ்வை கருத்தில் கொண்டோ தெரியவில்லை. அதிலும் ஓரளவு உண்மயுண்டு.

உங்களை நம்மி வ‌ந்த எங்களை கடைசியில் இப்படியான நிலயில் விட்டிட்டு எல்லோரும் ஓடிவிட்டீர்களே ஐயா 

பிரபாகரனும், தமிழ் மக்களும் ஏதோ முசுப்பாத்திக்கு சண்டை பிடித்தது மாதிரியல்லோ நீங்கள் நினைக்கிறீர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sasi_varnam said:

"என்னுடய சகோதர சகோதரிகளை நிர்வாணமாக்கி தலைசுட்டுக்கொன்ற‌ நாள் இது"
கொழும்பாருக்கு தவறுகளை சுட்டிக்காட்டும் , ஞாயத்துக்கு குரல் கொடுக்கும் பேராண்மை இல்லையோ.
எய்தவனை விட்டு அம்பை நோகும் கதை இது. 

நாங்கள் சாதரண மனிதர்கள் அநீதியை சகித்து வாழப்பழகிவிட்டோம் எதிர்க்க சக்தியில்லை இனியும் இழந்து போகவும் எதுமில்லை
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, colomban said:

நாங்கள் சாதரண மனிதர்கள் அநீதியை சகித்து வாழப்பழகிவிட்டோம் எதிர்க்க சக்தியில்லை இனியும் இழந்து போகவும் எதுமில்லை
 

ஊரில் வ‌சிக்கும் என‌து அத்தை சிங்கள‌வ‌னின் அட‌க்குமுறைக்கு ஒரு போதும் ப‌ய‌ந்த‌வா இல்லை /

போராட்ட‌த்தில் பெத்த‌ ம‌க‌னையே இழ‌ந்த‌வா , பெத்த‌ ம‌க‌ன் என்ன‌ ல‌ச்சிய‌த்துக்காக‌ நாட்டுக்காக‌ உயிரை விட்டானோ , அந்த‌ ல‌ச்சிய‌ நெருப்பு தாயின் ம‌ன‌சிலும் இருக்கு / அதே போல் போராட்ட‌த்தில் த‌ங்க‌ளின் பிள்ளைக‌ளை இழ‌ந்த‌ எத்த‌னையோ ஆயிர‌ம் பெற்றோர்க‌ள் ம‌ன‌திலும் இதே நிலை தான் / 

அவ‌ர்க‌ளின் ல‌ச்சிய‌ம் த‌மிழீழ‌ம் , போராட்ட‌த்தில் பிள்ளைக‌ளை இழ‌ந்த‌ பெற்றோர்க‌ள் ஒரு போதும் சிங்க‌ள‌வ‌னுக்கு ஜ‌ல்ரா அடிக்க‌ மாட்டின‌ம் / பிள்ளைக‌ளின் க‌ன‌வை ந‌ன‌வாக்க‌வே விரும்புவின‌ம் ,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.