Jump to content

நாம் கடந்து வந்த புரளிப்பாதைகள்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nedukkalapoovan said:

 

0:18   யோகி பேசுகிறார் 

மாத்தையா அண்ணனும் பிரபாகரனும் சண்டை பிடித்ததாக ஒரு கதை.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று ஒரு கதை.

நாங்கள் குடும்பம், சாதாரண குடும்பங்கள் வேலிக்காக சண்டை பிடிக்கும்

நாங்கள் நாட்டின் எல்லைக்காக சண்டை பிடிப்பவர்கள்.

 

இந்த நிகழ்வு நடந்து சில வாரங்களிற்குள்ளாகவே

புலிகள் அமைப்பை பிளவு படுத்தவும் தலைவர் பிரபாகரனை இந்திய உளவு அமைப்பின் வழிகாட்டுதலின்படி கொல்ல முனைந்ததாகவும் மாத்தையா கைது செய்யப்பட்டார்,

அவரின் குழுவை சேர்ந்தவர்கள் என்று சொல்லி 400 வரையான போராளிகளுடன்..

அவரும்  சுட்டு கொல்லப்பட்டார்,

மாத்தையாவின் சதி திட்டங்களில் சம்பந்தப்பட்டிருந்தார் என்ற ஊகத்தில் யோகியும் கைது செய்யப்பட்டு  காவலில் இருந்தார்.

பின்பு அவர்மீதான குற்றம்  நிரூபிக்கபடவில்லை என்றபோதும்,

அன்ரன் பாலசிங்கத்துக்கு அடுத்தபடியாக புலிகளின் அரசியல் பயணத்தில் நீண்ட வரலாற்றை கொண்ட யோகி அவர்கள் ஏறக்குறைய குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவரைபோலவே 

ஒப்புக்கு ஏதோ ஒரு பதவியுடன்  இறுதி யுத்தம் வரை புலிகள் கூடவே இருந்தார்,

பின்னர் என்னவானார் என்று யாருக்கும் தெரியாது,

விடுதலை போராட்டத்துக்கு வெளியில் சந்தித்த புரளிகளைவிட விடுதலை போராட்டத்திற்குள் நாம் சந்தித்த புரளிகள்தான் ஏராளம்,

அதில் ஒன்றுதான் காசு சேர்த்தவர்கள் தலைவர் இன்னும் இருக்கிறார் என்று அவருக்கு அஞ்சலி செய்யவிடாமல் தடுத்ததும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, valavan said:

0:18   யோகி பேசுகிறார் 

மாத்தையா அண்ணனும் பிரபாகரனும் சண்டை பிடித்ததாக ஒரு கதை.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று ஒரு கதை.

நாங்கள் குடும்பம், சாதாரண குடும்பங்கள் வேலிக்காக சண்டை பிடிக்கும்

நாங்கள் நாட்டின் எல்லைக்காக சண்டை பிடிப்பவர்கள்.

 

இந்த நிகழ்வு நடந்து சில வாரங்களிற்குள்ளாகவே

புலிகள் அமைப்பை பிளவு படுத்தவும் தலைவர் பிரபாகரனை இந்திய உளவு அமைப்பின் வழிகாட்டுதலின்படி கொல்ல முனைந்ததாகவும் மாத்தையா கைது செய்யப்பட்டார்,

அவரின் குழுவை சேர்ந்தவர்கள் என்று சொல்லி 400 வரையான போராளிகளுடன்..

அவரும்  சுட்டு கொல்லப்பட்டார்,

மாத்தையாவின் சதி திட்டங்களில் சம்பந்தப்பட்டிருந்தார் என்ற ஊகத்தில் யோகியும் கைது செய்யப்பட்டு  காவலில் இருந்தார்.

பின்பு அவர்மீதான குற்றம்  நிரூபிக்கபடவில்லை என்றபோதும்,

அன்ரன் பாலசிங்கத்துக்கு அடுத்தபடியாக புலிகளின் அரசியல் பயணத்தில் நீண்ட வரலாற்றை கொண்ட யோகி அவர்கள் ஏறக்குறைய குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவரைபோலவே 

ஒப்புக்கு ஏதோ ஒரு பதவியுடன்  இறுதி யுத்தம் வரை புலிகள் கூடவே இருந்தார்,

பின்னர் என்னவானார் என்று யாருக்கும் தெரியாது,

விடுதலை போராட்டத்துக்கு வெளியில் சந்தித்த புரளிகளைவிட விடுதலை போராட்டத்திற்குள் நாம் சந்தித்த புரளிகள்தான் ஏராளம்,

அதில் ஒன்றுதான் காசு சேர்த்தவர்கள் தலைவர் இன்னும் இருக்கிறார் என்று அவருக்கு அஞ்சலி செய்யவிடாமல் தடுத்ததும்.

இந்தச் சம்பவங்கள் நடந்தது.. 1992 இல்.

எந்த ஒரு பெரிய விடுதலைப் போராட்ட இயக்கத்துள்ளும் அந்நிய.. எதிரி உளவுப் பிரிவுகள் ஊடுருவதும்.. அதற்கு தேசத்துரோகிகளை பயன்படுத்துவதும்.. போராளிகளை விலைகொடுத்து வாங்குவதும் புதிய விடயங்கள் அல்ல. விடுதலைப்புலிகளும் இந்த அச்சுறுத்தல்களை கண்டு தாண்டித்தான் வந்தார்கள்.

ஆனால்.. இயக்கம்.. முக்கியமாக ஹிந்தியப் படைகளுக்கு எதிரான காலக் கட்டத்தில்.. பல துரோகங்களை சந்தித்தாலும்.. தலைமைக் கட்டமைப்பை உறுதியாக பேணியது.

மாத்தையா பிளவு.. நீங்கள் சொல்வது போல்.. போராளிகள் கொல்லப்பட்டனர் என்பது தொடர்பில் ஆதாரங்கள் இல்லை. கருணா பிளவின் போதும்.. இதையே பலர் சொன்னார்கள். 

யோகி அண்ணர் இடையில் தமிழீழ விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி கட்சி செயற்பாட்டில் இருந்து விலகிய பின்..  கடைசி வரை முக்கிய பொறுப்பில் இருந்தார். சமராய்வுப் பொறுப்பு அவரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. 

சும்மா கதை விடக் கூடாது.. கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் வரலாற்றைக் குழப்பி அடிக்கிற வேலை எதற்கு..?!  

இது ஒட்டுக்குழு வேலை போல் தான் தெரியும். அவர்கள் தான் புலிகள் இல்லாத வேளைகளில் எல்லாம் புலிகளின் பெயரால்.. போலிப் பிரசுரங்களை விட்டு மக்களைக் குழப்புவது. ஆனால்.. மக்கள் குழம்பியது கிடையாது.. ஒட்டுக்குழுக்கள் அடையாளம் காணப்பட்டதே வரலாறு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

 

மாத்தையா பிளவு.. நீங்கள் சொல்வது போல்.. போராளிகள் கொல்லப்பட்டனர் என்பது தொடர்பில் ஆதாரங்கள் இல்லை. கருணா பிளவின் போதும்.. இதையே பலர் சொன்னார்கள். 

 

மாத்தையா பிளவின்போது அவருடன் இருந்த  போராளிகள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லையென்று உறுதியாக சொல்கிறீர்கள்,

இதுவும் ஒருவகையான புரளியாக கடந்த காலங்களை அறிந்தவர்கள் பார்வையில் புலப்படலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

மாத்தையா பிளவின்போது அவருடன் இருந்த  போராளிகள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லையென்று உறுதியாக சொல்கிறீர்கள்,

இதுவும் ஒருவகையான புரளியாக கடந்த காலங்களை அறிந்தவர்கள் பார்வையில் புலப்படலாம்.

 

மாத்தையாவுக்கான தலைவரின் அணியில் போரிட்டு.. பின் மாத்தையாவின் துரோகத்தனத்தின் பின் இயக்கத்தை விட்டு சொந்த விருப்பின் பேரில் அனுப்பி வைக்கப்பட்ட போராளிகள்.. சாட்சியங்களாக பதிவு செய்தவை என் நினைவலையில் இப்போதும் தெளிவாக உள்ளது.

போராளிகள் சிலர் மாத்தையாவோடு தனிமைப்படுத்தப்பட்டார்கள். ஆனால் இன்று வரை அவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பது மர்மமே. மாத்தையாவுக்கு கூட என்ன நிகழ்ந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதில் கூட நிறைய மர்மங்கள் நிலவியே வருகின்றது. இவை புரளிகள் அல்லவே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, valavan said:

-----பின்பு அவர்மீதான குற்றம்  நிரூபிக்கபடவில்லை என்றபோதும்,

அன்ரன் பாலசிங்கத்துக்கு அடுத்தபடியாக புலிகளின் அரசியல் பயணத்தில் நீண்ட வரலாற்றை கொண்ட யோகி அவர்கள் ஏறக்குறைய குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவரைபோலவே 

ஒப்புக்கு ஏதோ ஒரு பதவியுடன்  இறுதி யுத்தம் வரை புலிகள் கூடவே இருந்தார்,

பின்னர் என்னவானார் என்று யாருக்கும் தெரியாது,

eelamaravar – Page 38 – eelamview

இனப் படுகொலை – Page 32 – Eelamaravar

யோகி அண்ணா  அவர்கள்.. முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவிற்கு, வந்த பின்...
இலங்கை அரசால்,  கைது செய்யப் பட்டவர்  என அறிந்தேன்.

அதன் பின்... அவரை, வெளிநாட்டுக்கு தப்பிச்  செல்ல நினைக்கும், 
சந்தேகத்துக்கிடமான  தமிழர்களை... அடையாளம் காட்ட , 
ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறை... அவரை குடி வரவு, குடி அகல்வு (பாஸ் போர்ட் எடுக்கும் இடம்) திணைக்களத்தில்... சில நாட்கள் வைத்திருந்ததாக,
அங்கு நேரில் கண்டவர்கள், தெரிவித்ததை... யாழ். களத்தில்  முன்பு வாசித்தேன்.

யோகி அண்ணா  அவர்கள்....  தம்மை  அடையாளம் கண்ட போதும்,
தங்களை... தெரியாத மாதிரி இருந்து விட்டதாக, கூறினார்கள்.

அதன் பின்... அவரைப் பற்றிய தகவல் எதுகும் வரவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

பின்...
இலங்கை அரசால்,  கைது செய்யப் பட்டவர்  என அறிந்தேன்.

அதன் பின்... அவரை, வெளிநாட்டுக்கு தப்பிச்  செல்ல நினைக்கும், 
சந்தேகத்துக்கிடமான  தமிழர்களை... அடையாளம் காட்ட , 
ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறை... அவரை குடி வரவு, குடி அகல்வு (பாஸ் போர்ட் எடுக்கும் இடம்) திணைக்களத்தில்... சில நாட்கள் வைத்திருந்ததாக,
அங்கு நேரில் கண்டவர்கள், தெரிவித்ததை... யாழ். களத்தில்  முன்பு வாசித்தேன்.

யோகி அண்ணா  அவர்கள்....  தம்மை  அடையாளம் கண்ட போதும்,
தங்களை... தெரியாத மாதிரி இருந்து விட்டதாக, கூறினார்கள்.

அதன் பின்... அவரைப் பற்றிய தகவல் எதுகும் வரவில்லை.  

நீங்கள் சொன்னது சரிதான் அந்த காலகட்டத்தில், இளம்பருதி,பாப்பா,தமிழினி போன்றவர்களும்  குடிவரவு குடியகல்வு திணக்களத்தில் தலையாட்டிகளாக  நிறுத்தப்பட்டிருந்தார்கள் , இருந்தபோதும்  அவர்கள் யாரையும் காட்டி கொடுக்கவில்லை என்ற ஒரு செய்தி உலாவியது.

Link to comment
Share on other sites

3 hours ago, nedukkalapoovan said:

மாத்தையாவுக்கான தலைவரின் அணியில் போரிட்டு.. பின் மாத்தையாவின் துரோகத்தனத்தின் பின் இயக்கத்தை விட்டு சொந்த விருப்பின் பேரில் அனுப்பி வைக்கப்பட்ட போராளிகள்.. சாட்சியங்களாக பதிவு செய்தவை என் நினைவலையில் இப்போதும் தெளிவாக உள்ளது.

போராளிகள் சிலர் மாத்தையாவோடு தனிமைப்படுத்தப்பட்டார்கள். ஆனால் இன்று வரை அவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பது மர்மமே. மாத்தையாவுக்கு கூட என்ன நிகழ்ந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதில் கூட நிறைய மர்மங்கள் நிலவியே வருகின்றது. இவை புரளிகள் அல்லவே. 

ஆம் இவை புரளிகள் அல்ல. மாத் தயாவும்  அவருடன்  சில போராளிகளும்  அவர்களின் சுய விருப்பின் பெயரில் காட்டு வழியாக   செல்கையில் பறந்து வந்த சிட்டுக் குருவி ஒன்றை பிடித்து தருமாறு  தோழர்கள் கேட்க மாத்தயா அதை பிடித்து வர சென்ற போது திடீரென்று அந்த சிட்டுக்குருவி மாத்தயாவை தூக்கிக் கொண்டு பறந்ததை நேரில்  பார்தாக என்து நண்பன் கூறினான். அது புரளி அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் போதும் இதற்கு மேல் ஈழம் தாங்காது tw_lol:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சிலருக்கு பொழுதுபோக்க இயக்கத்தின்ர கொசிப் தேவைப்படுகிறது. நீங்களும் சரி.. புலிகள் பற்றி பக்கம் பக்கமா அவதூறு எழுதுபவர்களும் சரி.. சிங்கள இராணுவத்தை பற்றியோ அங்கு நடக்கும் சீர்கேடுகள் பற்றியோ அதிகாரப் போட்டிகள் பற்றியோ மூச்சும் விடுவதில்லை. அதேபோல் ஹிந்திய இராணுவம்.

எப்பவும் புலிகளை நோண்டி நோண்டி மக்களின் நம்பிக்கைகளை சீர்குலைப்பது தான் வேலை. இதுவும் எதிரிக்கு இலகுவாக ஒரு உளவியல் யுத்தத்தை புலிகள் மீது தொடுக்க இலகுவாகி விட்டது.

புலிகள் காலத்தில் சொறீலங்கா இராணுவத்துக்குள் முப்படைக்குள் எத்தனையோ புடுங்குப்பாடுகள்.. அதிகாரப் போட்டிகள்... படையை விட்டு ஓடியோர் என்று ஆயிரம் பிரச்சனைகள். இதில் எதனையும் எம்மவர்கள் சிலாகிப்பதும் இல்லை.. மீளாய்வு செய்கிறம் என்று வெட்டிப்புடுங்குவதும் இல்லை. மாறாக விடுதலைப்புலிகளின் சிறிய விவகாரங்களையும் பெரிதாக்கிக் காட்டி.. உளவியல் ரீதியில்.. போராளிகளையும் மக்களையும் பலவீனப்படுத்துவதே நோக்கம். இத்தனைக்கும் உங்களைப் போன்றோர் போராட்டத்துக்கு அளித்த பக்களிப்பு என்பது எதுவும் இல்லை. 

எந்த ஒரு விடுதலை அமைப்புக்குள்ளும்.. இராணுவத்துக்குள்ளும்.. அதிகாரப் போட்டிகள்.. நிதிப் பிரச்சனைகள்.. துஷ்பிரயோகங்கள்.. காட்டிக்கொடுப்புக்கள் இருக்கவே செய்யும். சில வெளியில் இருந்து தூண்டப்படுவையாக இருக்கும். சில.. அதிகார ஆசை.. சேவை முதிர்ச்சி.. திமிர் இவை சார்ந்து எழும்.

இவை எல்லாவற்றையும் சரியாக முறியடித்து அல்லது சமாளித்து அதுவும் ஒரு அரசுக்கு எதிராக.. பிராந்திய அரசுகளின் சவால்களுக்கு எதிராக.. உலக வல்லரசுகளின் இராணுவ யுக்திகளை கடந்து.. ஒரு இயக்கம் தனது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது எவ்வளவு சவால் மிக்கது என்ற புரிதல் இன்றும் தமிழர்கள் பலரிடம் இல்லை.

ஆனால்.. சிங்களவர்களுக்குள் தமது இராணுவத்தின் முப்படைகளின் பலவீனங்களை மறைத்து அதனைப் பலமாகக் காட்டும்.. மனநிலை எப்போதும் உறுதியாக இருந்துள்ளதைக் காண முடிகிறது. அதுவும் அவர்கள் உளவியல் ரீதியில் எந்த இராணுவப் பின்னடைவுகளை வரினும் அதில் இருந்து மீள முடியும் என்ற நம்பிக்கையை வளர்க்க உதவியுள்ளது.

ஆனால்.. புலிகளைப் பொறுத்தவரை எம்மவர்களே அவர்களை விமர்ச்சிக்கிறம்.. என்ற தோறணையில் வகை வகையாக எதிரிக்குக் காட்டிக்கொடுத்ததும்.. உளவியல் ரீதியில் மக்களையும் போராட்டத்தையும் பலவீனப்படுத்தியதே நடந்தது. 

புலிகள் ஒரு அரசு அல்ல. அவர்கள் ஒரு உறுப்பினரை சேர்த்து பயிற்சி அளித்து அவருக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி ஒரு தாக்குதலை திட்டமிட்டு.. அதை நடத்தி வெற்றி காண அவர்கள் சந்திக்கும் சவாலும்.. ஒரு அரச இராணுவ வீரன் சந்திக்கும் சவாலும் ஒன்றல்ல. புலிகள் சந்திக்கும் சவால்கள் மிக அதிகம். அதிலும் எம்மவர்களின் அநாவசிய சந்தேகங்களும்..விமர்சனக் காட்டிக்கொடுப்புக்களும் புலிகளுக்கு மேலதிக சுமை.. உளவியல் பலவீனத்துக்கு காரணி. 

ஹிந்தியப் படைகள் காலத்தில்.. அடிக்கடி ஹிந்திய வானெலிகளில்.. அந்த தலைவர் சரண்.. இந்த தலைவர் பலி.. கடைசியில்.. தேசிய தலைவரும் பலி.

அதன் தொடர்ச்சி.. மாங்குள முகாம் தகர்ப்பு வேளையில்... புலிகளிடையே மோதல்.. பால்ராஜ் பலி. கோட்டை சண்டையின் போது.. அன்ரன் பாலசிங்கம் புலித் தலைமையோடு முரண்பாடு.  ஊரியான் பகுதியில் புலிகளின் கட்டுப்பாடு ஓங்கிய வேளையில்.. குண்டுவெடிப்பில்.. பொட்டம்மான் பலி. யாழ் தேவி நடவடிக்கை முறியடிப்பின் போது இளம்பரிதி பலி. 

இப்படி.. புலிகள் எப்போது களத்தில் மேல் எழுகின்றனரோ அப்போதெல்லாம்.. புலிகளில் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவர்களை கொல்வது.. எதிரிகள் மட்டுமல்ல.. துரோகிகளும் தான். இதனை கச்சிதமாக ஆரம்பித்து வைத்தவர் லலித் அத்துலத்முதலி. தொடர்ந்தது பிரேமதாச. இன்று வரை இது தான் கதை. இது எதிரி பக்கமிருந்தான உளவியல் போர்.

இங்கால்.. எமது பக்கமிருந்து.. வவுனியாவில் நிற்கும் ஒட்டுக்குழுக்கள்.. புலிவிரோதக் கட்டுக்கதைகள். வெளிநாடுகளில் குறிப்பாக சுவிஸ் கனடா பிரித்தானியா  மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கொண்டு புலிகளை விட்டி ஓடியவர்களும் விரட்டப்பட்டவர்களும்..துரோகிகளும் தமக்குள்.. புலியெதிர்ப்பு இலக்கியம்.. பேப்பர்.. புத்தகம்.. வெளியீடு. வானொலி.. வசை பாடல். இது இன்னொரு வகை தொடர் உளவியல் யுத்தம்.

அண்மையில் ஒரு கட்டுரை படித்தேன்..

அதில்.. கிட்டுவுடன் யாழ் கோட்டையில் பேச்சு நடத்திய சிங்களப் படை அதிகாரி.. கொத்தலாவல.. தமிழ் மக்களின் அவசியமான உரிமைக்கு போராடும்.. புலிகளோடு மோதுவது அர்த்தமற்றது.. என்று தானே தன்னை படையில் இருந்து விலகி வெளிநாடு சென்று வாழ்ந்து வருவதாக. 

புலிகளோடு நேரடியாக மோதிய ஒரு சிங்களப் படை அதிகாரிக்கிருந்த அந்தப் புரிதல்.. எம்மவர்களுக்கு இல்லாமல் போனதும்.. புலிகள் உளவியல் யுத்தத்தில் தோற்க ஒரு காரணம்.

ஒரு போராளியின் ஆயுதம் பேசுவதை விட அவனின் உள உறுதி தான் ஓங்கி இருக்க வேண்டும். அதுபோல்.. அவன் யாருக்காகப் போராடுகிறானோ அந்த மக்களின் உள உறுதி அவனைப் பற்றி நிற்க வேண்டும்.

ஆனால்.. எம்மவர்கள்.. புலிகளையும்.. கொழும்பில் இருந்து கொண்டு அரசியல் செய்த வெங்காயங்களையும்.. இராணுவத்தோடு நின்று வேலை செய்து வயிறுவளர்த்த.. பழிக்குப்பழி வாங்கித் திரிந்த ஒட்டுக்குழுக்களையும்.. ஒரே தராசில் வைத்து.. விமர்சனம்.. என்ற போர்வையில் எதிரியின் உளவியல் போர் வடிவம் அறியாமல்.. கோமாளித்தனத்தால் காட்டிக்கொடுத்தது தான் அதிகம்.

இதுவும்.. நாம் களத்தில் பலவீனமாக ஒரு காரணம்.

மாத்தையா விடயத்துக்கு வந்தால்..

தேசிய தலைவரிடம்... ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது.. மாத்தையா விடயம் பற்றி..

அதற்கு அவர் சொன்னது.. எனது வாய்க்குள் இருந்த சூத்தையை நானே கவனிக்கத்தவறிவிட்டேன்..

ராஜீவ் கொலை தொடர்பில்.. புலிகளிடம் கேட்ட போது..

அது ஒரு துன்பியல் சம்பவம்..

இதற்கு மேல் அவர்கள் எதுவும் உத்தியோகபூர்வமாகச் சொல்லவில்லை.

ஆனால்.. நம்மவர்கள் கட்டிவிட்டிருக்கும்.. கதைகள்.. விமர்சனப் பித்தலாட்டங்கள்.. கொசிப்.. புலிகளின் போராட்டத்தை எந்தளவுக்கு உளவியல் ரீதியில்.. பாதித்தது என்றால்.. அது உள்நாட்டு.. வெளிநாட்டு உளவுப் பிரிவுகள் விரும்பிப் போதும் போதும் என்றளவுக்கு இருந்துள்ளது.

இவை தாம் நாம் ஆற்றிய பங்களிப்பு.. எமது போராட்டத்துக்கு.

இன்றும் அதையே.. செய்து கொண்டு.. திருந்தாத மூடர்கள் போல் மீண்டும் மீண்டும்.. எதிரியின் உளவியல் போருக்கு உதவிய படி. 

எல்லாம்.. எனக்குத் தெரியும் என்ற மமதை தான் எம்மவர்களை இன்று நாடற்ற அடிமைகளாக்கி உள்ளது. சிங்களவனுக்கு இலகுவாக தமிழரை தமிழர் நிலத்தை அடிமைப்படுத்த உதவியுள்ளது.

இன்று உலகில் உங்களை யாருமே கண்டுகொள்வதில்லை. காரணம்.. உங்களிடம் ரகசியம் என்ற ஒன்றைக் கூட காண முடியாது. ஆளையாள் வெட்டிப் பெருமைக்காக எல்லாத்தையும் பேசி.. பறைச்சே.. தேவையானதை எதிரிக்கு வழங்கிவிடுவீர்கள். அப்புறம் எங்கே இருக்கப் போகிறது ரகசியம். அதனால்.. உங்களை யாருமே எதற்கும் நம்பமாட்டார்கள். இதை தான் நீங்கள் உங்களின் போலித்தன மேதாவிச் சிந்தனையால் செய்து கொண்டிருக்கிறீர்கள். 

இந்த நிலையை ஒரு புத்திசாலித்தனமான விடுதலையை விரும்பும் சமூகம் செய்யாது. யூதர்கள் இஸ்ரேலை அடைய இன்றும் அவர்களின் ரகசியம் காக்கும் திறன் தான் அவர்களை முன்னேற்றி இருக்கிறது.. தமக்குள் ஆயிரம் புடுங்குப்பாடு இருந்தாலும். இஸ்ரேல்.. வெளியாரல் அசைக்கப்பட முடியாத நாடாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். வலுவான உளவியல் அந்த மக்களிடம் இருப்பதே அவர்களின் சாதிப்போம் என்பதற்கான அடிப்படைப் பலம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.