Jump to content

குடும்ப ஆட்சியை மீண்டும் முன்னெடுத்துள்ள ராஜபக்ஷக்களின் ஆட்சியை இல்லாதொழிக்க வேண்டும் - நளின் பண்டார


Recommended Posts

(செ.தேன்மொழி)

ஐக்கியமக்கள் சக்தி அரசாங்கத்திற்கும், ஐக்கிய தேசியக்கட்சிக்கும் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளதால், இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக போலி பிரசாரங்களை முன்னெடுப்பதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, குடும்ப ஆட்சியை மீண்டும் முன்னெடுத்திருக்கும் ராஜபக்ஷாக்களின் ஆட்சியை இல்லாதொழிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

nalin_bandara.jpg

 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அரசாங்கம் உண்மைத்தகவல்களை மறைத்து வருகின்றது. தற்போது வைரஸை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளையும் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அரசாங்கம் கொரேனா வைரத் யுத்தத்தை வெற்றிக் கொண்டதாவ விழா நடத்துவதையே எதிர்பார்த்திருக்கின்றது.

கொரோனா தொற்றுக் குள்ளானவர்களில் 60 சதவீதமானவர்கள் இராணுவத்தினர்களே. இதற்கு காரணம் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளாகும். யுத்தத்தை வெற்றிக் கொள்வதற்கே இராணுவ தளபதி ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

ஆனால் தொற்று நோயை தடுப்பதற்காக வைத்தியர்களே செயற்பட வேண்டும். ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் கொரோனா தொற்றை கேலிசெய்யும்வகையிலேயே செயற்பட்டது. மூன்றுகாலங்களையும் பற்றி சிந்திக்கும் தலைவர் என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாச இது தொடர்பில் பாராளுமன்றத்தில் உறையாற்றினார். அதற்கும் ஆளும் தரப்பினர் கேலிச் செய்தனர்.

தற்போது ஆளும்தரப்பினர் , முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டதரப்பினர் மற்றும் இன்னும் சிலர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவுச் செய்யப்பட்டிருந்தால், இந்த கொரேனா நெருக்கடியை மேலும் குழப்பகரமாக ஏற்படுத்திருப்பார் என்று அவர்மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஏன் என்றால் இன்று இவர்களுக்கு சஜித் பெரும் சவாலாக மாறியுள்ளார். அவரை வீழ்த்துவதற்கே இவர்கள் தற்போது முயற்சித்து வருகின்றனர். யாராரும் கொரேனாவை கட்டுப்படுத்த முயற்சிப்பதாக தெரியவில்லை. சஜித்துக்கு சாதாரணமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் சில மறைமுக சக்திகள் அவருக்கு எதிராக செயற்பட்டமையே ஆகும். இதற்கு எமது முகாமைச்சேரந்த சிலரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு எதிராக போட்டியிடுவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு முடியாத நிலைமையில் யார் போட்யிடுவது தொடர்பில் கேள்வியிருந்தது. பரிசில் ராஜபக்ஷ தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அவரே அறிவித்திருந்தார். இந்நிலையில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவை களமிறக்குவதற்காக , வியத்மக குழுவினரும், வெளிச்சம் குழுவினரும் பெரும் பங்காற்றினர்.

ஆனால் தேர்தலை வெற்றிக் கொண்டதன் பின்னர் அவர்களுக்கு எந்த வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்திருப்பதாக தெரியவில்லை.அதனால் அனைவரும் வெறுப்புற்று இருக்கின்றனர். இதேவேளை வியத்மகவில் இருந்த மோசடியாளர்கள் சிலருக்கு பதவிகளை வழங்கி தம்முடன் இணைத்துக் கொண்டுள்ளனர்.இதனால் இந்த ராஜபக்ஷாக்களின் குடும்பா ஆட்சியை இல்லாதொழிப்பதற்காக சஜித் தலைமையில் ஒன்றுக் கூடியுள்ள எம்முடன் அறிவுபூர்வமான மக்களை இணைந்துக் கொள்ளுமாறு அழைப்புவிடுக்கின்றோம்.

கோதாபய இன்று தலைமைத்துவத்திற்கு பொறுத்தமட்டவராக விளங்குகின்றார். பெயரளவிலே ஜனாதிபதியாக இருக்கின்றார். சிறந்த தலைவராக கோதாபயவை களமிறக்கியவர்கள் இன்று, திருப்தியற்று இவ்வாறான ஒருவருக்கா நாட்டின் தலைமைத்துவத்தை வழங்கியுள்ளோம் என்று மனவருத்த்தில் இருக்கின்றனர். அவர் இன்று யாரோ ஒருவரின்இயக்கத்தில் இயங்கிவருகின்றார். எப்போதாவது ஊடகத்திறகு முன் கலந்துரையாடினாலும் அதனை ஆரம்பத்திலே திட்டமிட்டுள்ளார்.

உலகச் சந்தையில் எரிப்பொருள் விலை குறைந்துள்ளது ஆனால் சலுகைகள் மக்களுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் பருப்பு மற்றும் டின் மீனின் விலையை குறைப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதுவும் நடைமுறை சாத்தியமாகவில்லை. எல்லோரும் கோதாபய அமைத்தியாக செயலாற்றுபவர் என்று காண்பிக்க முற்பட்டனர். அமைதியாக அவர் எதனை சாதித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித் மாத்திரமல்ல அவரைச் சுற்றிநிபுணர்கள, வைத்தியர்கள், சட்டதரணிகள், ஆசிரியர்கள் வர்த்தகர்கள் என பலர் இணைந்துள்ளனர். அதனாலேயே எம்மீது போலிப் பிரசாரங்களை பரப்பி வருகின்றனர். ஒருசிலர் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்தெரிந்து வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.நாங்கள் ஒருபோதும் ஐ.தே.காவை பிளவுப்படுத்த விரும்பவில்லை. ஐ.தே.க.வைச்சேர்ந்த சிலர் தங்களது சுயலாபத்திற்காக ஐ.தே.க.வின் கொள்கைக்கு புறம்பாக செயற்படுத்துவதற்கு எதிராகவே. ஐக்கிய மக்கள் சக்தியே ஐ.தே.க.வின் கொள்கையை முழுமையாக நிறைவேற்றுபவர்கள்.அதனால் எமக்கு பொதுத் தேர்தலில் வெற்றிப் பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

தேர்தல் காலத்தில் உழைக்கும் போராளிகள் தொடர்பில் பெரும் பிரசாரங்களை செய்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அவர்கள் தொடர்பில்எந்த பயன்தரும் விடயங்களும் செய்தார்களா? தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாட்டு தொழிலாளர்கள் பெரும் ஆவலடன் நாட்டுக்கு அழைத்து வந்தார்கள் தற்போது அவர்களின் நலக்தொடர்பில் சிறிதளவேனும் சிந்திப்பதில்லை. நல்லாட்சி அரசாங்கதர்திலே அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. அதனையும் மறந்து அரச ஊழியர்கள் கோதாபயவுக்கு ஆதவளித்திருந்தனர். தற்போது போராசிரியர் பி.பீ.ஜயசுந்தர அவர்களது ஊதியத்தை அறவிடுவதாக தெரிவித்தன் பின்னரே, அரச ஊழியர்களுக்கு எங்களை நினைவில் வந்திருக்கின்றது. அதனால் இவருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். இதனால் நன்கு சிந்தித்து ஐக்கிய மக்கள் சக்திக்கு பொதுத் தேர்தலில் மக்கள் ஆதரவை பெற்றுக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

https://www.virakesari.lk/article/82363

Link to comment
Share on other sites

5 minutes ago, ampanai said:

கொரோனா தொற்றுக் குள்ளானவர்களில் 60 சதவீதமானவர்கள் இராணுவத்தினர்களே. இதற்கு காரணம் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளாகும். யுத்தத்தை வெற்றிக் கொள்வதற்கே இராணுவ தளபதி ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

மக்கள் மத்தியில் ஒரு 'ஹீரோக்களாக' காட்டப்படும் இவர்கள், தம்மை கோவிட்19 ஒன்றும் செய்யாது என எண்ணியுள்ளார்கள். 

அதனால், கிருமி காவிகளாக மாறி மக்கள் மத்தியிலும் பரப்பும் காவிகளாகி விட்டார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
    • பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். மலையகப் பகுதிகளிலிருந்து தோட்டத்தொழிலாளர்கள் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். https://thinakkural.lk/article/299640
    • Published By: NANTHINI   19 APR, 2024 | 01:12 PM   1974 கச்சதீவு தொடர்பில் இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன. கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் இன்றைய நவீன உலகில் குறிப்பாக சமூக ஊடகங்களில் வைரலாக (trending) காணப்படுகிறது. கச்சதீவு வைரலாவதற்கு (trending) பல காரணங்கள் பலராலும் கூறப்படுகின்றன. ஆனால், வரலாற்றை மீட்டுப் பார்க்கும்போது “கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது! 45 வருடகாலத் தகராறு தீர்ந்துவிட்டது!!” என்ற தலையங்கத்துடன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் இவ்வாறு உள்ளது. https://www.virakesari.lk/article/181449
    • எப்படியோ இனி நீங்கள் யாழுக்கு வர ஒரு வருசம் எடுக்கும்…. நீங்கள் இப்படி எழுதியதை எல்லாரும் மறந்து விட்டிருப்பார்கள் என்ற தைரியத்தில் உருட்டவில்லைத்தானே? ஒன்றின் பெயர் மிர்சேல் ஒபாமா என நினைக்கிறேன். ஏனையவற்றின் பெயர்கள் என்னவாம்? அம்பானிக்கும் தெரியாதாம்
    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.