Jump to content

மாவையுடன் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினர் சந்திப்பு


Recommended Posts

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில், இன்று (19)  நண்பகல் 12 மணியளவில், விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.

இதில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்

இதன் போது சமகால நிலைவரம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடலின் பின்னர், போராட்டத்தை விமர்சித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான கண்டன அறிக்கையை முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினர், மாவை சேனாதிராஜா, சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரிடம் கையளித்தனர்.

இதேவேளை, இந்தக் கண்டன அறிக்கையை, டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனிடமும் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/வன்னி/மவயடன-மனனள-பரளகள-மககள-அமபபனர-சநதபப/72-250496

Link to comment
Share on other sites

இந்த  போராளிகள் அமைப்பு என்பது இந்தியன் ஏஜென்டா அல்லது இலங்கை புலண்ணாய்வு பிரிவின் ஏஜென்டா?. சும்மா நிண்டவன், இருந்தவன் எல்லோரையும் பிடிச்சு உள்ளை போடுகின்றான், இவைகளை மட்டும் சும்மா விட்டு வைச்சுஇருக்கின்றான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் – வேலைவாய்ப்புக்கு  கூட்டமைப்பு உதவிக்கரமாக இருக்கவில்லை :

May 20, 2020

DSC_0751-800x533.jpg

முன்னாள் போராளிகள் யுத்தம் முடிந்ததன் பின்னர் பல வகையான இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும், தங்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உதவி கரமாக இருக்கவில்லை என முன்னாள் போராளிகள் கவலை தெரிவித்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனதிராஜா தெரிவித்தார்.

-இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனதிராஜாவிற்கும், முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை(19)  இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.

குறித்த சந்திப்பு தொடர்பாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனதிராஜா அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

நாங்கள் சென்ற ஆட்சிக் காலத்திலே அவர்கள் தொடர்பாகவும், குறிப்பாக பெண்கள் தலைமைத்துவம் தொடர்பாகவும் அரசுடன் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தமிழ் தேசியக் கட்டமைப்பு  முன்னாள் போராளிகள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பாக மிக அதிகமாக நிதி  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா அவர்களுடனும் இணைந்து   வரவு செலவு திட்டத்திலேயே பாரிய நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் குறித்த நிதி முழுமையாக பயன்படுத்தவில்லை என்கின்ற ஆதங்கம் எங்களிடம் இருக்கின்றது. மேலும் எங்களுடைய வேலைத்திட்டம் தொடர்பாகவும் முன்னாள் போராளிகள் எங்களிடம் வினா எழுப்பி இருந்தார்கள்.

எங்களுடைய வேலைத்திட்டத்தில் நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னரே இந்த போராளிகள் அவர்களது கொள்கை வாதிகளாக ஒரு இலட்சிய வாதிகளாக ஒரு தலைமைத்துவத்தின் கீழ் தங்களை அர்ப்பணித்தவர்கள் என்பதனை நாங்கள் நன்கு அறிந்தவர்கள். அவர்களில் பலர் உயிர் இழந்துள்ளார்கள்.

பொது மக்களும் உயிரிழந்துள்ளார்கள். குறிப்பாக முன்னாள் போராளிகளில் மாற்றுத்தினாளிகளாக அங்கங்களை இழந்து தற்போது நடமாட முடியாத நிலையில் இருக்கின்றார்கள். வாழ்வாதாரம் இன்றியும் உள்ளனர். முன்னாள் போராளிகளின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் என்னிடம் பேசி உள்ளார்கள்.அவர்கள் அரசியல் ரீதியாகவும்,தேசிய கூட்டமைப்பை பலமடைய செய்ய வேண்டும்.

சில வேளைகளில் குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்   கூறிய கருத்தை அவர்கள் மிகவும் கவலையோடு எங்களிடம் கூறி உள்ளார்கள்.முன்னாள் போராளிகளின் கருத்துக்களை கேட்க வேண்டும். அவர்களை மதிக்க வேண்டும். அவர்கள் இன விடுதலைக்காக தங்களை தியாகம் செய்தவர்கள்.

அவர்களின் துயரத்தை நாங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். கட்சியின் தலைவர் என்ற வகையில் கூட்டமைப்பின் ஏனைய இரண்டு அங்கத்துவக் கட்சிகளுடன் இணைந்து கூடிக் கதைத்துள்ளோம். விரைவில் எங்களுடைய உயர் மட்டக் குழு கூடி இந்த வாரம் கதைக்க இருந்த போது கொரோனா வைரஸ் காலம் மற்றும் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் வாரம் வந்தபடியால் உயர் மட்ட குழுவை கூட முடியவில்லை.

சம்பந்தன் தலைமையில் உயர் மட்ட குழுவை கூடி பல்வேறு விடையங்கள் தொடர்பாக கலந்துரையாடி முடிவை எடுக்க இருக்கின்றோம். கட்டுப்பாடான இயக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்றவர்கள் இருக்கின்றார்கள். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் போராளிகள் இருக்கின்றார்கள். அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எங்களுடைய இனப்பிரச்சினை எவ்வளவு முக்கியமானதாக இருக்கின்றதோ அதே போல் அவர்களுடைய எதிர் காலம்  அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும்,வாழ்வாதார ரீதியாகவும் பல்வேறு நல்ல யோசனைகளை முன் வைத்துள்ளார்கள்.  அவர்களின் யோசனைகளை என்னிடம் சமர்ப்பித்து உள்ளனர். முன்னாள் போராளிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகளும் மிக முக்கியமானவை.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு முன்னாள் போராளிகளையும் தேசிய அரசியல் நீரோட்டத்தில் ஈர்க்க வேண்டும் என்கின்ற வேலைத்திட்டத்தை நான் பகிரங்கமாக எழுந்த பிரச்சினைகளின் போது அறிவித்துள்ளேன்.

அனைத்து மாவட்டங்களிலும் குறித்த பிரச்சினைகளினால் எங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள்.மன்னார் மாவட்டம் போன்று ஏனைய மாவட்டங்களில் உள்ள முன்னாள் போராளிகளையும் சந்தித்து கலந்துரையாட உள்ளேன். முன்னாள் போராளிகளையும் இணைத்துக் கொண்டு செயற்பட உள்ளோம். அவர்களுக்கு நம்பிக்கையான பதிலை கூற வேண்டிய கடமை எமக்கு உள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார். #முன்னாள்போராளி #வாழ்வாதாரம்   #வேலைவாய்ப்பு   கூட்டமைப்பு
 

http://globaltamilnews.net/2020/143271/

Link to comment
Share on other sites

8 hours ago, zuma said:

இந்த  போராளிகள் அமைப்பு என்பது இந்தியன் ஏஜென்டா அல்லது இலங்கை புலண்ணாய்வு பிரிவின் ஏஜென்டா?. சும்மா நிண்டவன், இருந்தவன் எல்லோரையும் பிடிச்சு உள்ளை போடுகின்றான், இவைகளை மட்டும் சும்மா விட்டு வைச்சுஇருக்கின்றான்.

உருவாக்கின என்னவோ இந்தியன் ஏஜென்ட் தான். அதுக்கு வித்தியாதரன் கடும் முயற்சி எடுத்திருந்தார். வழமைபோல அத சிங்களவன் தன் வசதிக்கு யூஸ் பண்றானோ  தெரியல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, zuma said:

இந்த  போராளிகள் அமைப்பு என்பது இந்தியன் ஏஜென்டா அல்லது இலங்கை புலண்ணாய்வு பிரிவின் ஏஜென்டா?.

 

11 hours ago, Gowin said:

உருவாக்கின என்னவோ இந்தியன் ஏஜென்ட் தான். அதுக்கு வித்தியாதரன் கடும் முயற்சி எடுத்திருந்தார். வழமைபோல அத சிங்களவன் தன் வசதிக்கு யூஸ் பண்றானோ  தெரியல்ல.

ஆயுதம் தூக்கிய போராளிகளுக்கு தமிழ் சமுதாயத்தில் நல்ல மதிப்பு தான் இருக்கிறது.

ஆயுதபோராட்டத்தை பற்றி சுமந்திரன் சரியான முடிவிலே இருந்திருக்கிறார்.👍

Link to comment
Share on other sites

On 21/5/2020 at 03:59, விளங்க நினைப்பவன் said:

ஆயுதபோராட்டத்தை பற்றி சுமந்திரன் சரியான முடிவிலே இருந்திருக்கிறார்.

ம்ம்.
ஆயுத போராளிகளின் தியாகங்களை வித்து சுமந்திரன் போன்ற சந்தர்ப்பவாதிகள் சொந்த லாபங்களுக்கு பயன்படுத்துறதை சரி என்று சொல்ற ஆக்கள் இருக்கிறது ஆச்சரியம் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.