Jump to content

கரு. நாகராஜன் வந்தால் பெண்கள் வரமாட்டோம்: விவாதத்தில் ஆபாசம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கரு. நாகராஜன் வந்தால் பெண்கள் வரமாட்டோம்: விவாதத்தில் ஆபாசம்!

 

தமிழக செய்தித் தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்களில் பெண்களுக்கு எதிரான ஆபாசத் தாக்குதல்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் நியூஸ் 7 தொலைக்காட்சியில் நேற்று (மே 18) நடந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியிடம், பாஜகவைச் சேர்ந்த கரு. நாகராஜன் கடுமையாக தனி நபர் தாக்குதலில் ஈடுபட்டார். இதையடுத்து விவாதத்தில் இருந்து வெளியேறினார் ஜோதிமணி.

இதுகுறித்து ஜோதிமணி எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று ( 18/05/2020 ) நியூஸ் 7 தமிழின் கேள்வி நேரம் விவாதத்தில் இருந்து பாஜகவின் கரு. நாகராஜன் என்கிற மூன்றாந்தரமான மனிதரின் தரம்கெட்ட பேச்சால் வெளியேறினேன். புலம் பெயர்த்தொழிலாளர்களின் வேதனையை பட்டியலிட்டு அரசு செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பினேன். தொடர்ந்து 45 நாட்களாக களத்தில் நிவாரணப் பணியில் இருந்து மக்களின் பசியை,வறுமையை,கண்ணீரை, வேதனையை,வலியை பக்கத்தில் இருந்து பார்ப்பதால் கடந்த சில தினங்களாக மக்களின் வேதனையை ஊடகங்களின் வழியே வெளிப்படுத்தி வருகிறேன்.

 

மோடி அரசு மக்களை எப்படி இரக்கமற்று கை கழுவி விட்டது என்பதை மக்களின் குரலாக பதிவு செய்து வருகிறேன். என்னை ,நான் கூறும் கசப்பான உண்மையை எதிர்கொள்ள பாஜகவினரால் முடியவில்லை. கரு.நாகராஜன் என்னை மிகத் தரக்குறைவாக மலிவான வார்த்தைகளில் ஒருமையில் விமர்சிக்கத் தொடங்கினார். நான் தொடர்ந்து அந்த விவாதத்தில் பங்கேற்க விரும்பாமல் எனது கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்துவிட்டு வெளியேறினேன். திமுக வின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலாநிதி வீராசாமியும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

 

ஊடக விவாதங்களில் பாஜக வினர் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஊடகங்களையும், நெறியாளர்களையும் , எதிர்க்கட்சிகளையும் மிரட்டியே பணிய வைக்கலாம் என்று எண்ணுகின்றனர். பெண் என்றால் கூடுதலாக ஒரு ஆபாச அணுகுமுறை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஊடகங்களும் பாஜக வின் இந்தப் போக்கை அனுமதிக்கக் கூடாது.

பாஜக என்னிடம் இப்படி ஆபாசமாக நடந்துகொள்வது முதல்முறையல்ல. இதற்கு முன்பு இதேபோல பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மோடியையும்,பிஜேபியையும் தோலுரித்தேன் என்பதால் என்னை ஒரு ஆபாச வாட்ஸ் அப் குழுவில் இணைத்து என்னை அசிங்கப்படுத்த முயன்றார்கள். இதில் அசிங்கப்படவேண்டியது பிஜேபிதான் என்று வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட்டுகளை பொதுவெளியில் வெளியிட்டு பிஜேபியின் ஆபாச அரசியலை வெளிப்படுத்தினேன். தமிழகமே அதிர்ந்தது #IStandwithJothimani லட்சக்கணக்கானவர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது. ஊடகங்கள் பிஜேபியை மேலும் தோலுரித்தன. பிஜேபி பொதுவெளியில் அசிங்கப்பட்டு நின்றது. அந்த வழக்கு இன்னும் நடந்துகொண்டிருக்கிறது.

 

ஒரு பெண்ணை அவருடைய கேரக்டரை சிதைப்பதன் மூலம் பொதுவெளியில் இருந்து வெளியேற்றி விடலாம் என்று பிஜேபி நினைக்குமானால் அவர்கள் ஆபாச அரசியல் என்னிடம் வெற்றியடையாது. என்போன்ற பெண்கள் முறத்தால் புலி விரட்டிய வீரத்தமிழச்சியின் அம்சம்

"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் " கொண்ட பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் வம்சம்.

பிரதமர் முதல் பிஜேபியின் கரு. நாகராஜன் போன்ற பிஜேபியின் மூன்றாம் தர பேச்சாளர்கள் வரை எதிர்க்கட்சியினரை ,ஊடகங்களை ஒடுக்க ஆபாச அரசியலை முன்னெடுக்கலாம் . பெண்களை ஆபாசமாகப் பேசுவது,கொலை,பாலியல் வன்புணர்வு மிரட்டல் விடுவதுமான செயல்பாடுகளை செய்பவர்களை ஊக்குவிக்க சமூக வலைத்தளங்களில் பிரதமர் அவரை பின் தொடரலாம் (இது குறித்து பத்திரிக்கையாளர் ஸ்வாதி சதுர்வேதி விரிவாக ஒரு புத்தகமே- I am A Troll) எழுதியுள்ளார். ) ஆனால் நான் களத்தில் இருந்து நேர்மையோடும்,அன்போடும், கண்ணியத்துடனும் அரசியல் செய்ய வந்தவள்.ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் 25 ஆண்டுகளாக கரடுமுரடான பாதையினைக் கடந்து நாடாளுமன்றத்தில் கால் பதித்தவள். எனது நேர்மையை இந்த உலகறியும். அதனால் தான் எனது கரூர் தொகுதி மக்கள் எனது தேர்தலை தாங்களே களம் கண்டதாக கொண்டாடினார்கள்.எனது வெற்றி தங்கள் குடும்பத்துப் பெண்ணொருத்தியின் வெற்றியெனெ 4,20,000 வாக்கு வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை அளித்தார்கள். இந்த வெற்றி எனது வெற்றியல்ல. சாமானிய மக்களின் வெற்றி என்பதை நான் உணர்ந்துள்ளேன். பொதுவாழ்வை உண்மை,நேர்மை,அன்பின் வழியே ஒரு தவமென வாழ்கிறேன். இதை உலகறியும்.

இம்மாதிரியான விமர்சனங்களினால் பெண்களை முடக்கிவிட முடியும் என நினைக்கும் பிஜேபி தான் முடங்கிப்போகும்.

இன்றைய விவாதத்தின் தரத்தை கரு.நாகராஜன் சிதைத்த பிறகும் அவரை நியூஸ் 7 தமிழ் பேச அனுமதித்தது அதிர்ச்சியளிக்கிறது. நாகரீக அரசியலை கற்றுக் கொள்ளாத வரை பாஜக வினர் கலந்து கொள்ளும் எந்த விவாதங்களிலும் நான் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணத்தில் என்னோடு நிற்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும்,அன்புச் சகோதர,சகோதரிகளுக்கும் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து பயணிப்பேன். எனது மக்களோடு களத்தில் நிற்பேன்” என்று கூறியுள்ளார்.

திமுக மகளிரணிச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி, “தரம் கெட்டவர்கள்தான் மனிதர்களையும் பெண்களையும் தரம் பிரிப்பார்கள். தன் கீழ்த்தரமான குணத்தைக் காட்டிவிட்டார் பிஜேபியை சேர்ந்த கரு.நாகராஜன்” என்று சாடியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாதர் சங்க முக்கியத் தலைவருமான திண்டுக்கல் பாலபாரதி, “

இனி கரு நாகராசன் கலந்துகொள்ளும் டிவி விவாதங்களில் பெண்கள் சார்பாக யாரும் பங்கெடுக்கமாட்டோம் என்பதை ஊடக உரிமையாளர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, “பாஜகவின் சித்தாந்தம் பெண்மைக்கு எதிரானது. பொதுவெளியில், இந்த 21ம் நூற்றாண்டில் ,பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களை இழிவாகப் பேசுகிற பாரதிய ஜனதா நண்பர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் தமிழ் சமூகம் அவர்களுக்கு நல்ல பாடத்தைப் புகட்டும் என தமிழக காங்கிரஸ் மிகக் கடுமையாக தெரிவித்துக்கொள்கிறது” என்று கூறியுள்ளார்.

பாஜகவினரோ, “குறிப்பிட்ட அந்த விவாதத்தில் மோடியை கல்லால் அடிக்கும் அளவுக்கு மக்கள் கோபத்தில் இருப்பதாகக் கூறினார் ஜோதிமணி. இது எப்படி சரியாகும்? இது வன்முறையைத் தூண்டிவிடுவது போல பேசக் கூடாது என்று விவாத நெறியாளரே கூறினார். அதற்கு எதிர்வினையாக கரு நாகராஜன் பேசப் போய்தான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்” என்கிறார்கள்.
 

https://minnambalam.com/politics/2020/05/19/33/tv-debate-jothimani-karu.nagarajan-women

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

‘நீங்க எம்பி-யா இல்ல…’- காங்கிரஸின் ஜோதிமணி பற்றி பாஜகவின் கரு.நாகராஜன் சர்ச்சை கருத்து!

கிருபன் ஜீ....  இந்தத் தலைப்பை,  வைத்தே....
இரண்டு நாள்... பொழுது போக்கலாம். :grin:

நமக்கு... பா.ஜ.க. என்றாலும், காங்கிரஸ் என்றாலும்.... காரியமில்லை. 🤠
📢  இரண்டையும்... கழுவி ஊத்துவதில்,  😎
வரும் சந்தோசத்திற்கு... எல்லையே.. இல்லை   ஐயா.  🤣

💥  1..   🥁    2..  🎷     3...  🎹   ஸ்ரார்ட்  🎵 மியூசிக். 🎼   😅

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

33 minutes ago, இசைக்கலைஞன் said:

 

என்ன சொல்ல வாறீர்கள் இசைக்கலைஞன். அவர்களும் ஆபாசமாக திட்டினார்கள், ஆகவே பிஜேபியினரும் ஆபாசமாக திட்டுகின்றார்கள்...ஆகவே இரண்டும் ஒன்றுதான்..அப்படியே ஜோதிமணியை ஆபாசமாக திட்டியது தொடர்பாக எதிர்க்காமல் இருக்க வேண்டும் என்றா?

ஒருவரின் தவறை சுட்டிக்காட்டும் போது, ஏன் மற்றவர்களும் தவறு செய்யவில்லையா என நியாயப்படுத்தும் போக்கின் தொடர்ச்சி தான் உங்களின் இந்த வீடியோவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நீங்கள் காணொளியை முழுமையாகக் காணவில்லைப் போலும். காணொளியின் இறுதியில் நாம் தமிழர் கட்சி சார்ப்பாக சாட்டையில் சொல்கிறார்களே... நாங்கள் இதுவிடயத்தில் (அவர் பரம எதிரியான காங்கிரஸ் கட்சியை சார்ந்திருந்தாலும்) ஜோதிமணி அக்கா சார்ப்பாக நிற்கிறோம்.. ஆனால்.. எல்லோரும் எல்லாக் கட்சியினரும் இப்படியான வாதங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தானே கேட்கிறார்கள். அதில் என்ன தவறிருக்கிறது.

Link to comment
Share on other sites

முக நூல்களில் மற்றவர்களை அசிங்கமாக ஆபாசமான அருவருக்கத்தக்க வார்ததைகளை உபயோகித்து  திட்டுவதில் நாம் தமிழர் கட்சி விசிலடிச்சான் குஞ்சுகளும் கில்லாடிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, tulpen said:

முக நூல்களில் மற்றவர்களை அசிங்கமாக ஆபாசமான அருவருக்கத்தக்க வார்ததைகளை உபயோகித்து  திட்டுவதில் நாம் தமிழர் கட்சி விசிலடிச்சான் குஞ்சுகளும் கில்லாடிகள். 

முத‌ல் உண்மையை தெரிந்து விட்டு நாக‌ரிக‌மாக‌ எழுத‌ ப‌ழ‌குங்கோ /

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி எதை வைச்சு சொல்லுறீங்க‌ள் விசில் அடிச்சான் குஞ்சுக‌ள் என்று / 

முக‌ நூலில் ‌ஒருத‌னே  ப‌ல‌ நூறு பேக் ஜ‌டி வைத்து இருப்பான் , அதில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தையோ அல்ல‌து அண்ண‌ன் சீமானின் ப‌ட‌த்தை போட்டு அவ‌தூறு எழுதினா அது க‌ட்சி தொண்ட‌ன் எழுதின‌து என்று ஆகிடுமா /

என்ர‌ முக‌ நூலில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி உற‌வுக‌ளை த‌விற‌ வேறு ஒரு த‌ரும் இல்லை / 

என் பார்வையில் நீங்க‌ள் சொல்வ‌தை அவ‌ர்க‌ள் ஒரு போதும் செய்த‌து இல்லை ,

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி உற‌வுக‌ளோடு நீண்ட‌ ந‌டைப‌ய‌ண‌மும் செய்த‌ நான் அவ‌ர்க‌ளின் நாக‌ரிக‌த்தை ப‌ற்றி என‌க்கு ந‌ல்லாவே தெரியும் / 

இதுக்கு மிஞ்சி உங்க‌ளுக்கு விள‌க்க‌ம் த‌ர‌ முடியாது / 
உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி மேல் க‌ல் எறிய‌ விருப்ப‌ம் இருந்தா திருட்டு திராவிட‌ கும்ப‌லுட‌ன் சேருங்க‌ள் அவ‌ர்க‌ள் சொல்லி த‌ருவின‌ம் குறுக்கு வ‌ழியில் போய் இப்ப‌டி எறிந்தா எறி ஒழுங்காய் விழும் என்று 😉

Link to comment
Share on other sites

16 hours ago, பையன்26 said:

முத‌ல் உண்மையை தெரிந்து விட்டு நாக‌ரிக‌மாக‌ எழுத‌ ப‌ழ‌குங்கோ /

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி எதை வைச்சு சொல்லுறீங்க‌ள் விசில் அடிச்சான் குஞ்சுக‌ள் என்று / 

முக‌ நூலில் ‌ஒருத‌னே  ப‌ல‌ நூறு பேக் ஜ‌டி வைத்து இருப்பான் , அதில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தையோ அல்ல‌து அண்ண‌ன் சீமானின் ப‌ட‌த்தை போட்டு அவ‌தூறு எழுதினா அது க‌ட்சி தொண்ட‌ன் எழுதின‌து என்று ஆகிடுமா /

என்ர‌ முக‌ நூலில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி உற‌வுக‌ளை த‌விற‌ வேறு ஒரு த‌ரும் இல்லை / 

என் பார்வையில் நீங்க‌ள் சொல்வ‌தை அவ‌ர்க‌ள் ஒரு போதும் செய்த‌து இல்லை ,

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி உற‌வுக‌ளோடு நீண்ட‌ ந‌டைப‌ய‌ண‌மும் செய்த‌ நான் அவ‌ர்க‌ளின் நாக‌ரிக‌த்தை ப‌ற்றி என‌க்கு ந‌ல்லாவே தெரியும் / 

இதுக்கு மிஞ்சி உங்க‌ளுக்கு விள‌க்க‌ம் த‌ர‌ முடியாது / 
உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி மேல் க‌ல் எறிய‌ விருப்ப‌ம் இருந்தா திருட்டு திராவிட‌ கும்ப‌லுட‌ன் சேருங்க‌ள் அவ‌ர்க‌ள் சொல்லி த‌ருவின‌ம் குறுக்கு வ‌ழியில் போய் இப்ப‌டி எறிந்தா எறி ஒழுங்காய் விழும் என்று 😉

பையன் பொதுவாகவே இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் பெரும்பாலோனோர்  நாகரீகமாக பேச தெரியாதவர்கள்.  அதற்கு சீமானும் விதி விலக்கு அல்ல. நான் பதவிக்கு வர முன்னர் எனது அரசியல் எதிரிகள் இறந்து விடுங்கள். இல்லை யென்றால் உங்களை கொன்று அந்த கொலைப்பழியை நான் ஏற்க வேண்டிவரும்” என்று பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியது இவரைப்போன்ற  கேவலமான அரசியல்வாதிகள், தலைவர்கள்  பலர்  இந்தியாவில் உள்ளார்கள் என்பதற்கான ஒரு உதாரணம். நீங்கள் உங்கள் கட்சிக்காக வக்காலத்து வாங்குவதைப்போல் ஒவ்வொரு கட்சி ஆதரவாளர்களும் தமது கட்சிக்காக வாதாடுவார்கள். சாமான்ய மக்கள் இதை கணக்கெடுக்க வேண்டியதில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, tulpen said:

பையன் பொதுவாகவே இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் பெரும்பாலோனோர்  நாகரீகமாக பேச தெரியாதவர்கள்.  அதற்கு சீமானும் விதி விலக்கு அல்ல. நான் பதவிக்கு வர முன்னர் எனது அரசியல் எதிரிகள் இறந்து விடுங்கள். இல்லை யென்றால் உங்களை கொன்று அந்த கொலைப்பழியை நான் ஏற்க வேண்டிவரும்” என்று பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியது இவரைப்போன்ற  கேவலமான அரசியல்வாதிகள், தலைவர்கள்  பலர்  இந்தியாவில் உள்ளார்கள் என்பதற்கான ஒரு உதாரணம். நீங்கள் உங்கள் கட்சிக்காக வக்காலத்து வாங்குவதைப்போல் ஒவ்வொரு கட்சி ஆதரவாளர்களும் தமது கட்சிக்காக வாதாடுவார்கள். சாமான்ய மக்கள் இதை கணக்கெடுக்க வேண்டியதில்லை.  

சீமான் ஆயிர‌ம் ந‌ல்ல‌து சொல்லி இருப்பார் , அது உங்க‌ள் காதுக்கு கேட்டு இருக்காது , உதார‌ன‌த்துக்கு போலிம‌ர் தொலைக் காட்சியில் வ‌ரும் சிறு காணொளிக‌ளை பார்த்து அண்ண‌ன் சீமானை ம‌ட்ட‌ம் த‌ட்டுவ‌து உங்க‌ட‌ இய‌லாமை / 

போலிம‌ர் தொலைக் காட்சியை போல் இந்த‌ உல‌கில் ஒரு கேடு கெட்ட‌ தொலைக்காட்சியை பார்க்க‌ முடியாது , அவ‌ங்க‌ளின் பிராட்டுத‌ன‌ங்க‌ளை அன்மையில் ப‌ட‌ இய‌க்கின‌ர் வெளிச்ச‌ம் போட்டு காட்டினார் ம‌ற்ற‌ ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் /

ஊழ‌ல் ச‌ம்ம‌ந்த‌ ப‌ட்ட‌ க‌தை வ‌ரும் போது தான் அண்ண‌ன் சீமான் சொன்ன‌த‌ வெட்டி போட்டு , நான் ஆட்சிக்கு வ‌ர‌ முன் நீங்க‌ள் செத்துடுங்க‌ள் என்று சொன்ன‌த‌ வெட்டி ஒட்டி ப‌ர‌ப்புவ‌துக்கு 200ரூபாய்க்கு கூலிக்கு மார் அடிக்கும் கூட்ட‌ம் அத‌ ப‌ர‌ப்பின‌து  /

அது ச‌ரி அண்ண‌ன் சீமான் க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌தில் இருந்து குறைந்த‌து ம‌க்க‌ள் முன் மாண‌வ‌ர்க‌ள் முன் 400 மேடையில் பேசி இருப்பார் அதில் எத்த‌ன‌ பேச்சை காணொளி மூல‌ம் பார்த்திங்க‌ /

வைக்கோ மாதிரி அண்ண‌ன் சீமான் த‌னது தொண்ட‌ர்க‌ளுக்கு முன்னால் நின்று ஆவேச‌ பேச்சு பேசின‌து கிடையாது /

வைக்கோ க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் எவ‌ளவ‌த்தை சொன்னார் , ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ஒன்னு ந‌ட‌ந்தா த‌மிழ் நாட்டில் ர‌த்த‌ ஆறு ஓடும் என்று / க‌ட‌சியில் முத்துகுமார் தான் எம் இன‌ம் அழிவ‌தை பார்த்து த‌ன‌க்கு தானே தீ மூட்டினார் , முத்துகுமாரின் தியாக‌த்தையும் திராவிட‌ம் கொச்சை ப‌டுத்தின‌து காத‌ல் தோல்வியில் தீமுட்டினார் என்று /

அன்மையில் த‌ன‌து தொண்ட‌ர்க‌ளுட‌ன் போய் ஈழ‌த்தை மீட்பேன் என்று மேடையில் இருந்து வைக்கோ பேச‌ அவ‌ரின் தொண்ட‌ர்க‌ள் விசில் அடிச்சு கோச‌ம் போட்ட‌து உங்க‌ளுக்கு வேனும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் என‌க்கு எல்லாம் தெரியும் /

அன்பும‌ணி
வைக்கோ 
ராம‌தாஸ் 
திருமாள‌வ‌ன் - இவ‌ர்க‌ளை ந‌ம்பினா இன்னொரு முள்ளிவாய்கால் உறுதி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, tulpen said:

. நான் பதவிக்கு வர முன்னர் எனது அரசியல் எதிரிகள் இறந்து விடுங்கள். இல்லை யென்றால் உங்களை கொன்று அந்த கொலைப்பழியை நான் ஏற்க வேண்டிவரும்” என்று பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியது 

அந்த பதிவை இங்கு இணைக்க முடியுமா? 

முழு பதிவையும் பார்த்தால்தான் அவர் ஏன் அப்படி பேசினார் என விளங்கமுடியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, உடையார் said:

அந்த பதிவை இங்கு இணைக்க முடியுமா? 

முழு பதிவையும் பார்த்தால்தான் அவர் ஏன் அப்படி பேசினார் என விளங்கமுடியும் 

நான் மேல‌ அத‌ற்கு விளக்க‌ம் குடுத்து இருக்கிறேன் உடையார் ஜ‌யா /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பையன்26 said:

நான் மேல‌ அத‌ற்கு விளக்க‌ம் குடுத்து இருக்கிறேன் உடையார் ஜ‌யா /

நன்றி பையா, நுனிபுல் மேய்ந்தால், இப்படிதான் எழதுவார்கள். ஒருவர் என்ன நிலையில் அந்த வார்த்தை பிரயோகத்தை வெளியிடுகின்றார் என்பது முக்கியம், நானும் பல தடவை நிலை தடுமாறியுள்ளேன், மனிதருக்கு இது சகஜம்

Link to comment
Share on other sites

12 minutes ago, உடையார் said:

அந்த பதிவை இங்கு இணைக்க முடியுமா? 

முழு பதிவையும் பார்த்தால்தான் அவர் ஏன் அப்படி பேசினார் என விளங்கமுடியும் 

உடையார் அவர் ஏன் சொன்னார் எதுக்கு சொன்னார் என்பதெல்லாம் முக்கியமில்லை. சொன்னார் என்பது தான் முக்கியம். இங்கு நான் குறிப்பிடுவது  இந்திய அரசியல்வாதிகளில்  பெரும்பான்மையானவர்கள் இப்படித்தான் என்பதைத்தான். சீமான் எனபவர்  மட்டுமல்ல பெரும்பாலான அரசியல்வாதிகள்  அப்படித்தான். அந்த அரசியல்வாதிகள்  வரிசையில்  ஒருவரே இந்த சீமான்  எனபவர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

உடையார் அவர் ஏன் சொன்னார் எதுக்கு சொன்னார் என்பதெல்லாம் முக்கியமில்லை. சொன்னார் என்பது தான் முக்கியம். இங்கு நான் குறிப்பிடுவது  இந்திய அரசியல்வாதிகளில்  பெரும்பான்மையானவர்கள் இப்படித்தான் என்பதைத்தான். சீமான் எனபவர்  மட்டுமல்ல பெரும்பாலான அரசியல்வாதிகள்  அப்படித்தான். அந்த அரசியல்வாதிகள்  வரிசையில்  ஒருவரே இந்த சீமான்  எனபவர்.  

துல்பன் நம்பிக்கையிருக்கு சீமான் மற்றவர்கள் மாதிரியிருக்கமாட்டார் என்று, காலம் பதில் சொல்லும்

Link to comment
Share on other sites

26 minutes ago, உடையார் said:

துல்பன் நம்பிக்கையிருக்கு சீமான் மற்றவர்கள் மாதிரியிருக்கமாட்டார் என்று, காலம் பதில் சொல்லும்

நம்பிக்கை தமிழக மக்களுக்கு தான் வர வேண்டும். அங்கு ஆட்சிக்கு அவரை அந்த மக்கள் தெரிவு செய்தால்  அங்கு நிர்வாகத்தை நன்றாக கவனிக்கட்டும். 

  எமது பிரச்சனையில் சீமான் எதுவும் வெட்டிப் புடுங்க முடியாது.   என்பது தான் ஜதார்ததம். அது சீமானுக்கும் தெரியும். சும்மா கத்திக் குளறி உள்ளதையும்  கெடுக்காமல்  விட்டால் அதுவே பெரிய காரியம். 

சீமான் மட்டுமல்ல எந்த தமிழக கட்சியாலும்  எமக்கு எதுவும் செய்ய முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/5/2020 at 20:25, தமிழ் சிறி said:

‘நீங்க எம்பி-யா இல்ல…’- காங்கிரஸின் ஜோதிமணி பற்றி பாஜகவின் கரு.நாகராஜன் சர்ச்சை கருத்து!

கிருபன் ஜீ....  இந்தத் தலைப்பை,  வைத்தே....
இரண்டு நாள்... பொழுது போக்கலாம். :grin:

நமக்கு... பா.ஜ.க. என்றாலும், காங்கிரஸ் என்றாலும்.... காரியமில்லை. 🤠
📢  இரண்டையும்... கழுவி ஊத்துவதில்,  😎
வரும் சந்தோசத்திற்கு... எல்லையே.. இல்லை   ஐயா.  🤣

💥  1..   🥁    2..  🎷     3...  🎹   ஸ்ரார்ட்  🎵 மியூசிக். 🎼   😅

எனது ஆதரவு நாகராசு மாமாவுக்கு தான்....

இந்த ஜோதிமணி ஒரு கேவலமான பெண் என்பதில் சந்தேகமில்லை.

நடத்தையினை சொல்லவில்லை. மனதளவில்...

2009ல் ஈழ அவலத்துக்கு பிறகான தேர்தலில், காங்கிரஸ் தமிழகத்தில் பெரும் தோல்வி அடைந்திருந்தது.

கீச்சகத்தில் பிரசாந்த் ரங்கசாமி என்பவர், "தெய்வம் நின்று கொல்லும். ஈழத்தில் தமிழர்கள் கதறிய போது, இங்கே அதிகார மமதையில், ஆணவத்துடன் சுத்திய அதனை பேரையும் தெய்வம் நின்று கொல்லும்' என்று பதிவிட்டார்...

காங்கிரஸ் காரர்கள் எல்லாம் அமைதியாக இருக்க, இந்தம்மா மட்டும் வந்து போட்ட பதில், 'போடா முட்டாள்'.

உண்மையில் தவறாக அவர் போட்டது: 'போடா மூமுட்டாள்'.

இப்ப இந்த கூமுட்டை, தானே ஒரு திரியை ஆரம்பித்திருக்கிறது: 'Support Jothimani'.

நாமழும் முடிந்தால் 'Support Nakaraja' என்று ஆரம்பிக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, tulpen said:

நம்பிக்கை தமிழக மக்களுக்கு தான் வர வேண்டும். அங்கு ஆட்சிக்கு அவரை அந்த மக்கள் தெரிவு செய்தால்  அங்கு நிர்வாகத்தை நன்றாக கவனிக்கட்டும். 

  எமது பிரச்சனையில் சீமான் எதுவும் வெட்டிப் புடுங்க முடியாது.   என்பது தான் ஜதார்ததம். அது சீமானுக்கும் தெரியும். சும்மா கத்திக் குளறி உள்ளதையும்  கெடுக்காமல்  விட்டால் அதுவே பெரிய காரியம். 

சீமான் மட்டுமல்ல எந்த தமிழக கட்சியாலும்  எமக்கு எதுவும் செய்ய முடியாது. 

சீமானால் ஒன்றும் வெட்டி புடுங்க‌ முடியாது என்று தெரிந்தால் அவ‌ர் அவ‌ர‌து ஆர‌ம்ப‌ தொழில‌ செய்ய‌ தொட‌ங்கி இருப்பாரே /

இந்த‌ 11வ‌ருட‌த்தில் நீங்க‌ள் ஈழ‌த்துக்காக‌ என்ன‌த்த‌ வெட்டி புடுங்கி நீங்க‌ள் அதை முத‌ல் சொல்லுங்கோ , 

எம் பிர‌ச்ச‌னையை இன‌ அழிப்பை த‌மிழ‌க‌ ம‌க்க‌ளிட‌ம் எடுத்து சொன்ன‌தே அண்ண‌ன் சீமான் தான் /

எம் இன‌த்தை அழித்த‌வ‌ங்க‌ளை க‌ட்டி பிடிக்க‌வும் இல்லை அவ‌ர்க‌ள் கூட‌ அண்ண‌ன்  சீமான் கைகுலுக்க‌வும் இல்லை /

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு சொறில‌ங்காவில் ந‌ட‌க்கும் அர‌சிய‌லை புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் எட்டியும் பார்ப்ப‌து இல்லை / 

யாழுக்கை வ‌ந்து முர‌ட்டு த‌ன‌மாய் இர‌ண்டு ப‌திவு போட்ட‌ உட‌ன் நீங்க‌ள் நினைத்த‌த‌ சாதிச்சிட்டீங்க‌ள் என்று நினைக்க‌ வேண்டாம் , க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பாருங்கோ இப்ப‌ இருக்கிற‌ இளைஞ‌ர்க‌ள் யார் ப‌க்க‌ம் நிக்கின‌ம் என்று / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, tulpen said:

நம்பிக்கை தமிழக மக்களுக்கு தான் வர வேண்டும். அங்கு ஆட்சிக்கு அவரை அந்த மக்கள் தெரிவு செய்தால்  அங்கு நிர்வாகத்தை நன்றாக கவனிக்கட்டும். 

  எமது பிரச்சனையில் சீமான் எதுவும் வெட்டிப் புடுங்க முடியாது.   என்பது தான் ஜதார்ததம். அது சீமானுக்கும் தெரியும். சும்மா கத்திக் குளறி உள்ளதையும்  கெடுக்காமல்  விட்டால் அதுவே பெரிய காரியம். 

சீமான் மட்டுமல்ல எந்த தமிழக கட்சியாலும்  எமக்கு எதுவும் செய்ய முடியாது. 

நீங்கள் சொல்வது தர்க்கரீதியாக தவறு.

மேற்கு வங்கத்தின் சித்தார்த்த சங்கர ராஜின் பேரழுத்தத்தினால் தான் இந்திரா காந்தி இந்திய ராணுவத்தினை கிழக்கு பாகிஸ்தானுள் அனுப்பினார்.

1520ல் யாழ்பாணமும், 1529ல் தமிழகமும் அந்நியர்களிடம் வீழ்ந்தது. இருபக்கமும் இன்னமும் எழவில்லை, எழமுடியவில்லை.

தமிழகம் எழுந்து தனது காலில் நின்றால், அதுவே போதும்.

சீமான் தமிகத்தினை மீட்டாலே போதும். ஏனையவை தானே நடக்கும்.

இப்போது சீமான் தமிழகத்தினை மீட்க்கும் முயல்வுகளுக்கு கை கொடுக்கமுடியாவிடின், தார்மீக ஆதரவினை கொடுக்க வேண்டும்.

தான் போக வழி இல்லாத மூன்சூறு, ஈழம் என்ற விளக்குமாறை இப்போது காவும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

எதிர்பார்ப்பினை ஒரு பக்கம் வைத்து, தமிழனாக, சீமானுக்கு ஆதரவு தருவோம். உங்களது இந்த கருத்தினை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

  • நம்பிக்கை தமிழக மக்களுக்கு தான் வர வேண்டும். அங்கு ஆட்சிக்கு அவரை அந்த மக்கள் தெரிவு செய்தால்  அங்கு நிர்வாகத்தை நன்றாக கவனிக்கட்டும். 

அடுத்த இரு கருத்துக்களும் இன்றய நிலையில் யதார்த்தம் தான்.

ஆனாலும், சூரியன் மறையாத சாம்ராஜ்யத்தினை, கீரிடத்தில் இருந்த முத்து, இந்தியாவினை அசைத்தது... காந்தியின் உண்ணாவிரதம் இல்லை. ஆஸ்திரியாவில் பிறந்து, ஜெர்மனியில் குடியேறிய ஹிட்லர்.

ஆகவே ஒரே நாளில் எதுவும், எங்கோ மாறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

நீங்கள் சொல்வது தர்க்கரீதியாக தவறு.

மேற்கு வங்கத்தின் சித்தார்த்த சங்கர ராஜின் பேரழுத்தத்தினால் தான் இந்திரா காந்தி இந்திய ராணுவத்தினை கிழக்கு பாகிஸ்தானுள் அனுப்பினார்.

1520ல் யாழ்பாணமும், 1529ல் தமிழகமும் அந்நியர்களிடம் வீழ்ந்தது. இருபக்கமும் இன்னமும் எழவில்லை, எழமுடியவில்லை.

தமிழகம் எழுந்து தனது காலில் நின்றால், அதுவே போதும்.

சீமான் தமிகத்தினை மீட்டாலே போதும். ஏனையவை தானே நடக்கும்.

இப்போது சீமான் தமிழகத்தினை மீட்க்கும் முயல்வுகளுக்கு கை கொடுக்கமுடியாவிடின், தார்மீக ஆதரவினை கொடுக்க வேண்டும்.

தான் போக வழி இல்லாத மூன்சூறு, ஈழம் என்ற விளக்குமாறை இப்போது கவும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

எதிர்பார்ப்பினை ஒரு பக்கம் வைத்து, தமிழனாக, சீமானுக்கு ஆதரவு தருவோம். 

ஆமாம் நாதமுனி, தமிழனாக சீமனுக்கு என் ஆதரவுகள், மலரட்டும் தமிழ்ஆட்சி தமிழ் நாட்டில், ஈழத்தில் தானாக மலரும்

Link to comment
Share on other sites

3 minutes ago, பையன்26 said:

சீமானால் ஒன்றும் வெட்டி புடுங்க‌ முடியாது என்று தெரிந்தால் அவ‌ர் அவ‌ர‌து ஆர‌ம்ப‌ தொழில‌ செய்ய‌ தொட‌ங்கி இருப்பாரே /

இந்த‌ 11வ‌ருட‌த்தில் நீங்க‌ள் ஈழ‌த்துக்காக‌ என்ன‌த்த‌ வெட்டி புடுங்கி நீங்க‌ள் அதை முத‌ல் சொல்லுங்கோ , 

எம் பிர‌ச்ச‌னையை இன‌ அழிப்பை த‌மிழ‌க‌ ம‌க்க‌ளிட‌ம் எடுத்து சொன்ன‌தே அண்ண‌ன் சீமான் தான் /

எம் இன‌த்தை அழித்த‌வ‌ங்க‌ளை க‌ட்டி பிடிக்க‌வும் இல்லை அவ‌ர்க‌ள் கூட‌ அண்ண‌ன்  சீமான் கைகுலுக்க‌வும் இல்லை /

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு சொறில‌ங்காவில் ந‌ட‌க்கும் அர‌சிய‌லை புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் எட்டியும் பார்ப்ப‌து இல்லை / 

யாழுக்கை வ‌ந்து முர‌ட்டு த‌ன‌மாய் இர‌ண்டு ப‌திவு போட்ட‌ உட‌ன் நீங்க‌ள் நினைத்த‌த‌ சாதிச்சிட்டீங்க‌ள் என்று நினைக்க‌ வேண்டாம் , க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பாருங்கோ இப்ப‌ இருக்கிற‌ இளைஞ‌ர்க‌ள் யார் ப‌க்க‌ம் நிக்கின‌ம் என்று / 

பையன் ஈழத்திற்காக  எதையாவது சாதிக்கும் வலு 11 வருடங்களுக்கு முன்பே புலிகளிடம் மட்டும்  இருந்தது.அப்போது எம்மால் இயன்றதை எல்லா மக்களைப்போல நாமும் செய்தோம்.  விடுதலைப்புலிகளை முற்றாக நம்பினோம்.  சாதிக்க கூடிய வலுவுடன் இருந்தவர்களே தமது  தவறான அரசியலால் அதை கோட்டை விட்ட பிறகு என்னிடம் இந்த கேளவியை கேட்கிறீர்களே! 2009 ன் முன்னர் சுவிஸ் வாழ் தமிழர் நாம் என்ன உதவிகளைச் செய்தோம் என்பதை இப்போது சொல்லி என்ன பிரயோசனம். யாழுக்கை இல்லை யாழ்பாணத்திற்கு சென்று சாதாரண மக்களிடம் சீமானைப்பற்றிச்  சொல்லிப் பாருங்கள் அந்த மக்களின் நக்கல் சிரிப்பை காண முடியும். ஏனெனில் தாயகத்தில் வாழும் தமது பட்டறிவால் அரசியலில் தெளிவாக உள்ளனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

பையன் ஈழத்திற்காக  எதையாவது சாதிக்கும் வலு 11 வருடங்களுக்கு முன்பே புலிகளிடம் மட்டும்  இருந்தது.அப்போது எம்மால் இயன்றதை எல்லா மக்களைப்போல நாமும் செய்தோம்.  விடுதலைப்புலிகளை முற்றாக நம்பினோம்.  சாதிக்க கூடிய வலுவுடன் இருந்தவர்களே தமது  தவறான அரசியலால் அதை கோட்டை விட்ட பிறகு என்னிடம் இந்த கேளவியை கேட்கிறீர்களே! 2009 ன் முன்னர் சுவிஸ் வாழ் தமிழர் நாம் என்ன உதவிகளைச் செய்தோம் என்பதை இப்போது சொல்லி என்ன பிரயோசனம். யாழுக்கை இல்லை யாழ்பாணத்திற்கு சென்று சாதாரண மக்களிடம் சீமானைப்பற்றிச்  சொல்லிப் பாருங்கள் அந்த மக்களின் நக்கல் சிரிப்பை காண முடியும். ஏனெனில் தாயகத்தில் வாழும் தமது பட்டறிவால் அரசியலில் தெளிவாக உள்ளனர். 

உங்கள் விரக்தி புரிகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுடன் நானும் பேசி இருக்கிறேன்.

இன்று நேற்று அல்ல. பல்லாண்டு கால விரக்தி... 1520ல் இருந்து இரத்தத்தில் ஊறிய விரக்தி.

புலிகள் என்னும் மாபெரும் சக்தியாலேயே முடியாமல் போனதே என்னும் விரக்தி.

அதே நேரம் சீமானுக்கு பேராதரவு இல்லாமலும் இல்லை.

இருந்தாலும், புலிகள் தோல்விக்கு புறக்காரணிகள் பல. சில புலிகளே உருவாக்கியவை.

உதாரணமாக, நீங்கள் வேறு திரியில் பதிந்த மகிந்த வெற்றி.

உன்னிப்பாக தமிழக அரசியலை கவனித்தால், இலங்கை அரசியல் வரலாறுடன் பார்த்தால், உங்களுக்கு ஒரு விடயம் புலப்படும்.

பண்டாரநாயக்கா, ஜெயவர்த்தனே, சிறிமா இன்று மகிந்த ஆகியோரின் வெற்றிக்கு காரணம், இனவாதம்... அதே போல மோடி வெற்றிக்கு காரணம் மதவாதம்.

சீமானின் அரசியலும் ஒருவகையில் இனவாதம் தான். அதுதான், கோசன், நிழலி போன்றோர் சொல்வது. ஆனால் அது எடுபடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, tulpen said:

பையன் ஈழத்திற்காக  எதையாவது சாதிக்கும் வலு 11 வருடங்களுக்கு முன்பே புலிகளிடம் மட்டும்  இருந்தது.அப்போது எம்மால் இயன்றதை எல்லா மக்களைப்போல நாமும் செய்தோம்.  விடுதலைப்புலிகளை முற்றாக நம்பினோம்.  சாதிக்க கூடிய வலுவுடன் இருந்தவர்களே தமது  தவறான அரசியலால் அதை கோட்டை விட்ட பிறகு என்னிடம் இந்த கேளவியை கேட்கிறீர்களே! 2009 ன் முன்னர் சுவிஸ் வாழ் தமிழர் நாம் என்ன உதவிகளைச் செய்தோம் என்பதை இப்போது சொல்லி என்ன பிரயோசனம். யாழுக்கை இல்லை யாழ்பாணத்திற்கு சென்று சாதாரண மக்களிடம் சீமானைப்பற்றிச்  சொல்லிப் பாருங்கள் அந்த மக்களின் நக்கல் சிரிப்பை காண முடியும். ஏனெனில் தாயகத்தில் வாழும் தமது பட்டறிவால் அரசியலில் தெளிவாக உள்ளனர். 

ஒரு சில‌ உற‌வுக‌ள் சொன்ன‌த‌ வைச்சு ஒட்டு மொத்த‌ யாழ்பாண‌ உற‌வுக‌ள் சீமானை ப‌ற்றி சிரித்தார்க‌ள் என்று சொல்லுவ‌து ந‌ம்பும் ப‌டியாய் இல்லை ,

ஏன் யாழ்பாண‌த்தில் போரால் பாதிக்க‌ ப‌ட்ட‌ ம‌க்க‌ள் என‌க்கு முன்னால் த‌லைவ‌ரை கெட்ட‌ வார்தையால் பேசினார்க‌ள் , அதுக்கா ஒட்டு மொத்த‌ யாழ்பாண‌த்து ம‌க்க‌ளும் பிர‌பாக‌ர‌னுக்கு எதிரான‌ ம‌க்க‌ள் என்று ஆகிவிடுமா /

 

சிரிப்பையே பொழுது போக்காக‌ கொண்ட‌வ‌ர்க‌ள் சிரிக்க‌ தான் செய்வின‌ம் / 

போராட்ட‌த்தில் பிள்ளைக‌ளை இழ‌ந்த‌ பெற்றோர்க‌ளை ச‌ந்திச்சு  க‌தைச்சு பாருங்கோ அவை என்ன‌ சொல்லுகின‌ம் என்று 🙏💪

 எம்ம‌வ‌ர்க‌ள் போச்சு வார்த்தையில் விட்ட‌ த‌வ‌றுட‌ன் ஒத்து போகிறேன் /
ஆனால் அவ‌ர்க‌ள் சிந்தின‌ வேர்வை தியாக‌ங்க‌ளை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் கொச்சை ப‌டுத்துவ‌தை வேடிக்கை பார்க்க‌ முடியாது /

என‌து பார்வையில் புல‌ம் பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் இளைஞ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமான் பின்னால் நிக்கின‌ம் , 

Link to comment
Share on other sites

5 minutes ago, பையன்26 said:

என‌து பார்வையில் புல‌ம் பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் இளைஞ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமான் பின்னால் நிக்கின‌ம் , 

ஒரு சிறு திருத்தம்

“ எனது பார்வையில் உள்ள சில இளைஞர்கள் சீமானின் பின்னால் நிற்கினம்”   

மற்றய இளைஞர்கள்  படித்து  முன்னேறி  உள்ளனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

ஒரு சிறு திருத்தம்

“ எனது பார்வையில் உள்ள சில இளைஞர்கள் சீமானின் பின்னால் நிற்கினம்”   

மற்றய இளைஞர்கள்  படித்து  முன்னேறி  உள்ளனர். 

உங்கண்ட கதை பிழை கண்டியளே....

அப்ப.... நாங்கள் உங்களை மாதிரியே  படிச்சு முன்னேற வேண்டும் எண்டு சொல்லுறியளோ? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

ஒரு சிறு திருத்தம்

“ எனது பார்வையில் உள்ள சில இளைஞர்கள் சீமானின் பின்னால் நிற்கினம்”   

மற்றவர்கள் படித்து  முன்னேறி  உள்ளனர். 

புல‌ம்பெய‌ர் நாட்டில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ளுக்கு எம் போராட்ட‌ம் ப‌ற்றி பெரிய‌ புரித‌ல் இல்லை , இது நித‌ர்ச‌ உண்மையும் கூட‌ , நான் சொல்ல‌ வ‌ந்த‌து ஈழ‌த்தில் பிற‌ந்து புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் இளைஞ‌ர் கூட்ட‌த்தை /

இங்கை பிற‌ந்த‌ பிள்ளைக‌ளுக்கும் சீமான் என்றால் யார் என்று தெரியும் , அவ‌ர் முன்னொடுக்கும் அர‌சிய‌ல் ப‌ற்றி தெரிய‌ வாய்ப்பு இல்ல‌ ,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.