Jump to content

தனி மனிதராக எதையும் சாதிக்க முடியாது'-ஒபாமா


Recommended Posts

`தனி மனிதராக எதையும் சாதிக்க முடியாது' வைரலாகும் ஒபாமாவின் உரையின் முழுப்பகுதி!  #Graduation2020

ஒபாமா

ஒபாமா ( Instagram )

ஒபாமாவின் பேச்சு இந்தப் பேரிடர் காலத்தில் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது, மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இதைக் கேட்க வேண்டும் என ட்விட்கள் குவிந்தபடி இருக்கின்றன.

கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான 2020 பட்டமளிப்பு தினம் நேற்று அமெரிக்காவில் கொரோனா ஊரடங்குக்கு நடுவே வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 1.2 மில்லியன் பேர் இந்த ஆண்டு பட்டம் பெற்றுள்ளனர்.

கலிபோர்னியா மாகாணக் கலைக்கல்லூரியிலிருந்து இந்தாண்டு இளங்கலை கவின்கலைப் பட்டம் பெற்றிருக்கும் ரேச்சல் ஹேண்டலினுக்கு, இந்தப் பட்டமளிப்பு நாள் கூடுதல் ஸ்பெஷல். டவுன் சிண்ட்ரோம் நோயினால் பாதிக்கப்பட்டவர் ரேச்சல்.

ரேச்சல் ஹேண்டலின்
 
ரேச்சல் ஹேண்டலின்
Twitter

``தன்னைப் பற்றிப் புறம் பேசியவர்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறாள் என் மகள் ரேச்சல். நான், இந்த உலகத்திலேயே பெருமைக்குரிய தந்தையாகத் தற்போது உணருகிறேன்” எனத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ரேச்சலின் தந்தை ஜே ஹேண்டலின்.

முதல் தலைமுறையாக மேல்நிலைப்பள்ளியை முடித்தவர், ஆறு வருட கடும் உழைப்புக்குப் பிறகு முனைவர் பட்டம் பெற்றவர், பல போராட்டங்களைக் கடந்து கல்லூரிப் படிப்பை முடித்தவர் என நேற்றைய பட்டமளிப்பு நிகழ்வில் பங்கேற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் ரேச்சல்போல ஒவ்வொரு கதை இருக்கிறது. அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து முழுவதும் ஆன்லைன் வழியாக நடந்து முடிந்திருக்கும் இந்தப் பட்டமளிப்பு தினத்தில் முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், பாரக் ஒபாமா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் ஒபாமா நிகழ்த்திய உரைதான் தற்போது வைரலாகியுள்ளது. ஒபாமாவின் பேச்சு இந்தப் பேரிடர் காலத்தில் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது, மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இதைக் கேட்க வேண்டும் என ட்விட்கள் குவிந்தபடி இருக்கின்றன. அவர் பேசியதன் முழு மொழிபெயர்ப்பு பின்வருமாறு,

Obama
 
Obama

“இந்த ஆண்டு பட்டம்பெறும் மாணவர்கள் அவர்களது ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரிடமும் நான் பெருமை கொள்கிறேன். பட்டம் பெறுவது என்பது எந்த ஒரு சூழலிலும் பெரும் சாதனைதான். சிலர் பெரும் நோய்களைக் கடந்து வந்திருப்பீர்கள் அல்லது உங்களது பெற்றோரின் வேலை பறிக்கப்பட்டிருக்கும் அல்லது இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவராக இருந்திருப்பீர்கள். இவை தவிர சமூக ஊடகங்கள் கொடுக்கும் அழுத்தம், பள்ளிகளில் நிகழும் துப்பாக்கிச் சூடுகள் குறித்து வரும் செய்திகள், கண்முன்னே நிகழும் காலநிலை மாற்றம் என, அத்தனையும் கொடுக்கும் அழுத்தங்களையும் கடந்து பட்டமளிப்பு விழாக்களுக்காக நீங்கள் தயாராகிக் கொண்டிருந்தபோதுதான் இந்தச் சர்வதேசத் தொற்றால் தற்போது உலகமே தலைகீழாகிக் கிடக்கிறது. நாம் அனைவருமே நமது பெற்றோர்களை நேசிப்பவர்கள்தான் ஆனால், வீட்டிலேயே மாதக்கணக்கில் முடங்கியிருந்து அவர்களுடன் பொழுதைக் கழிக்கவேண்டியிருக்கும் என நாம் கடந்த காலங்களில் யோசித்துக்கூட இருக்க மாட்டோம்.

நான் தற்போது உங்களுடன் நேர்மையாகச் சிலவற்றைப் பகிர்கிறேன். பட்டமளிப்பு விழாவில் நேரடியாகப் பங்கேற்க முடியவில்லை என்கிற மனக்கஷ்டம் கால ஓட்டத்தில் மறைந்துவிடும். எனது பள்ளிப் பட்டமளிப்பு எப்படி நிகழ்ந்தது என்பது எனக்குத் தற்போது அவ்வளவாக நினைவில் இல்லை. என்னுடைய பட்டமளிப்பு உரைகள் மிக நீண்ட நேரம் நடக்கும். மற்றபடி பட்டமளிப்பு விழாக்களில் பேசுவதைக் கேட்பது அத்தனை மோசமானதாக இருந்ததில்லை. பட்டம் பெறும்போது அணிந்துகொள்ளும் கேப் எல்லோருக்கும் பொருந்தியும் போகாது. குறிப்பாக என்னைப் போன்ற பெரிய காதுகளை உடையவர்களுக்கு நிச்சயம் பொருந்திப் போகவே போகாது. மற்றபடி இந்தப் பொதுச்சுகாதாரச் சீர்கேடு சரியானதும் நண்பர்களைச் சந்தித்துப் பேசப் போதுமான கால அவகாசம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.

#Graduation2020
 
#Graduation2020
Ted S. Warren

உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டிய பருவம் இனி தொடங்குகிறது. நீங்கள் தேர்ந்தெடுத்துப் படிக்க விரும்பும் துறை, நீங்கள் உங்கள் வாழ்க்கைக்காகத் தேர்ந்தெடுக்கும் துணை, உங்கள் வாழ்க்கைக்கான கொள்கைப் பிடிமானம் அனைத்தையும் முடிவெடுக்க வேண்டிய காலம் இது. ஆனால், உலகம் தற்போது இருக்கும் சூழலில் இவற்றை யோசிப்பது அச்சத்துக்குரியதாக இருக்கிறது.

ஜனநாயகத்தின் இயங்குதல் நாம் ஒருவரைப் பற்றி மற்றொருவர் சிந்திப்பதில்தான் சாத்தியப்படும், சுற்றி இருப்பவர்கள் பசித்து நோயுற்றிருக்கும்போது வெறுமனே பணம் ஈட்டுவதில் எவ்விதப் பயனுமில்லை
ஒபாமா

இலையுதிர்காலத் தொடக்கத்தில் நாம் கல்லூரியில் சேர்ந்துவிடுவோம், கல்லூரி முதல் நாளில் பெற்றோர்கள் தங்களது காரில் அழைத்துச் சென்று நம்மை இறக்கிவிடுவார்கள் என்று இதுநாள் வரை நீங்கள் தேக்கி வைத்திருந்த கனவு நெடுந்தூரம் விலகி இருக்கிறது. பகுதிநேரமாக வேலை பார்த்துக் கொண்டே நீங்கள் படிக்க வேண்டும் என நினைத்திருந்தால் உங்களுடைய முதல் வேலையைப் பெறுவது தற்போது சந்தேகத்துக்குரியதாகி இருக்கிறது. நல்ல நிலையில் இருந்த பல குடும்பங்கள் தற்போது எதுவும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டு வருகின்றன. ஏற்கெனவே துன்பங்களைச் சந்தித்து வந்த குடும்பங்கள் தற்போது நூலிழையில் தங்களது நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு உள்ளார்கள்.

 

இதனால் இதற்கு முந்தைய தலைமுறைகளைவிட மிக வேகமாக வளரும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறீர்கள். இந்தச் சர்வதேசத் தொற்று நமது நாட்டின் தற்போதைய நிலையை ஆட்டம் காணச் செய்திருக்கிறது.அதன் வழியாக இந்த நாட்டில் மிக நீண்டகாலமாக ஆழமாக வேரூன்றி இருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, நிறவேற்றுமை, அடிப்படைச் சுகாதாரப் போதாமை உள்ளிட்டப் பிரச்னைகள் தற்போது வெட்டவெளிச்சமாகத் தெரியத் தொடங்கி இருக்கின்றன. இந்தச் சூழல் இனி பழைமைவாதம் இனி நமக்குப் பயன்படப்போவதில்லை என்பதை இளையதலைமுறைக்கு உணர்த்தி இருக்கிறது. ஜனநாயகத்தின் இயங்குதல் நாம் ஒருவரைப் பற்றி மற்றொருவர் சிந்திப்பதில்தான் சாத்தியப்படும், சுற்றி இருப்பவர்கள் பசித்து நோயுற்றிருக்கும்போது வெறுமனே பணம் ஈட்டுவதில் எவ்விதப் பயனுமில்லை என்பதை அவர்களுக்குப் புரியவைத்திருக்கிறது.

#Graduation2020
 
#Graduation2020
Ross D. Franklin

இந்தக் காலம் உங்களது பிள்ளைப்பருவத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. இவர்களால் தீர்வு கிடைக்கும் என நீங்கள் இதுநாள் வரை நம்பியிருந்தவர்களிடம் இந்தச் சூழலுக்கான பதில் இல்லை, சிலரிடம் இதற்கான சரியான கேள்விகளே இல்லை. ஆகையால், இனி இந்த உலகம் ஆற்றுப்படுவது உங்கள் கையில்தான் இருக்கிறது.

இந்த நிச்சயமற்றச் சூழலில் பெரியவர்கள் எவரும் `உனக்கு இது புரியாது நீ சிறுமி எனவோ ’இதை இதுநாள் வரை இப்படித்தான் செய்து வந்தோம் நீயும் இப்படித்தான் செய்ய வேண்டும்’ என்று கட்டளையிடவோ முடியாது. அதனால், இந்த உலகத்தை மறுமையாக வடிவமைக்கும் வாய்ப்பு நீங்கள் பற்றிக்கொள்ளக் கிடைத்திருக்கிறது.

இந்தப் பெரியவர்களின் கூட்டத்தில் நானும் ஒருவன் என்பதால் உங்கள் கையில் கிடைத்திருக்கும் ஆற்றலைக் கொண்டு, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என நான் சொல்லப் போவதில்லை ஆனால், மூன்றே மூன்று அறிவுரைகளை மட்டும் கூறிக் கொள்கிறேன்.

 
ஒருவர் மற்றொருவருடைய போராட்டங்கள் குறித்து விழிப்புணர்வோடு இருங்கள். ஒருவர் மற்றொருவருடைய உரிமைகளுக்காகக் குரல் கொடுங்கள்.
ஒபாமா
  • பயம்கொள்ளாதீர்கள். அமெரிக்கா இதற்கு முன்பும் பல கடினமான சூழல்களைக் கடந்து வந்திருக்கிறது. அடிமைமுறை, சிவில்யுத்தம்,பஞ்சம், பிணி, 9/11 என அத்தனையிலிருந்தும் நாம் மீண்டு வலுவாக எழுந்திருக்கிறோம். அந்தச் சூழல்களில் உங்களைப் போன்ற இளைய தலைமுறைகள்தான் கடந்தகாலத்தின் தவறுகளைத் திருத்தி அமெரிக்காவைக் கடைத்தேற்றியிருக்கிறார்கள்.

  • உங்களுக்குச் சரியெனத் தோன்றியதைச் செய்யுங்கள். தங்களால் முடிந்ததை, தங்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியதைத்தான் பிள்ளைகள் சிந்திப்பார்கள். ஆனால், அதனால்தான் நிலைமை சிக்கலாவதாகப் பெரியவர்கள், பெரும் பொறுப்புகளில் இருப்பவர்கள் சொல்லுவார்கள். ஆனால் நேர்மை, கடின உழைப்பு, பொறுப்பு, தாராளமனப்பான்மை, பிறருக்கு மரியாதை போன்ற நீட்டித்த பண்புகளால் நீங்கள் உங்களை உருவாக்கிக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். எல்லா நேரங்களிலும் உங்களது செயல் சரியாக அமைந்துவிடாது. சிலநேரங்களில் எங்களைப் போலவே நீங்களும் தவறிழைக்கக் கூடும். அத்தகைய கடினமான சூழல்களில்கூட உங்களது உண்மைத்தன்மைதான் அனைவரையும் உற்றுநோக்க வைக்கும். அவர்களை உங்களை நோக்கி ஈர்க்கும். பிரிதொரு நாளில் தீராத பிரச்னைகளின் பக்கமில்லாமல் தீர்வுகளின் பக்கம் நீங்கள் இருப்பீர்கள்.

  • இறுதியாக, தனியொரு மனிதராக எதையும் சாதித்துவிட முடியாது. ஒரு சமூகத்தைக் கட்டமையுங்கள். இந்த அச்சமூட்டும் காலத்தில் மனிதப் பண்புகளின்றிச் செயல்படுவது எளிது. நான், என் குடும்பம், என்னைப்போலவே சிந்திக்கும் என்னைப்போலவே இருக்கும் மக்களை மட்டும் பார்த்துக்கொள்கிறேன் என்கிற எண்ணத்தை நாம் எளிதில் வளர்த்துவிடலாம். ஆனால், இந்த ஊழிக்காலத்தைக் கடக்க வேண்டும் என்றால், அதற்குப்பிறகான உலகில் எல்லோருக்கும் கல்வியும் வேலைவாய்ப்பும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்றால், இனிவரும் காலங்களில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து இதுபோன்ற அச்சுறுத்தல்களைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் அதை நாம் ஒன்றிணைந்து செய்தால் மட்டுமே சாத்தியம். ஒருவர் மற்றொருவருடைய போராட்டங்கள் குறித்து விழிப்புணர்வோடு இருங்கள். ஒருவர் மற்றொருவருடைய உரிமைகளுக்காகக் குரல் கொடுங்கள். பாலியல்பொதுமைச் சிந்தனைகள், நிற வேற்றுமை, தகுதி, பேராசை என நம்மை இதுநாள் வரைப் பிரித்த பழைமைவாத எண்ணங்களைத் தூக்கியெறிந்துவிட்டுப் புதிய பாதையில் இந்த உலகத்தை வழிநடத்துங்கள்.

உங்களுக்காக மிஷலும் நானும் எங்களது பவுண்டேஷன் வழியாக உதவத் தயாராக இருக்கிறோம். ஆனால் உண்மையில் எங்களது உதவி உங்களுக்குத் தேவையாக இருக்காது, ஏனெனில் ஏற்கெனவே நீங்கள் உலகை வழிநடத்தத் தொடங்கிவிட்டீர்கள்.

வாழ்த்துகள்!

https://www.vikatan.com/news/world/obamas-inspiring-piece-of-advice-for-graduating-students-amid-pandemic?artfrm=v4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.