Jump to content

யோக சித்தி. ஆக்கம்: சுவாமி சுத்தானந்த பாரதி


Recommended Posts

84 இல் எனது 12 ஆம் வயதில் நான் ஓடத் தொடங்கியது இப்போது சில வருடங்களாகத்தான் ஓய்திருக்கிறேன்.எனது ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஒவ்வொரு விடயங்களில் தீவிரமாக இருந்திருக்கிறேன்.எனது 92 தொடக்கம் 93 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் கொழும்பில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது. கொழும்பு எனக்கு ஏற்கனவே பழக்கமான இடந்தான் (90 இல் இந்துக் கல்லூரியில் சில மாதம் படித்திருந்தேன்) என்றாலும் எதாவது செய்ய வேண்டுமே என்ன செய்யலாம் என்று யோசித்த போது பழம்தமிழ் புத்தகங்களை சேகரிக்கும் எண்ணம் தோண்றியது. மிக நல்ல புத்தகங்களைச் சேர்த்தேன்.நான் நோர்வேக்கு இடம்பெயரும் போது அனைத்து புத்தகங்களையும் இங்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்திருந்தென். ஆனால் பல பொதிகள் வழியில் தொலைந்து போயின.

எனது உள்ளங் கை அளவேயான இந்தப்புத்தகம் இப்போதும் நான் வைத்திருக்கும் புத்தகங்களில் நான் விரும்புவது. இங்கு சில மத வெறியர்களுடன் வாதிடுவதிலும் பார்க்க இங்கு இந்த புத்தகத்தை பதிவிடுகிறேன்.

எனக்கு நேரம் இருக்கும் போது மட்டும்தான் இங்கு பதிவு வரும். வேறு எவருடமும் சம்பளத்துக்கு வேலை செய்யும் போது நான் எதையும் பதிவு செய்ய மாட்டன். ஆனால் இங்கை????

Link to comment
Share on other sites

புத்தகம் பற்றி:

Yoga Siddhi

(perfect life in tune with the divine spirit)

பதிப்பு: 1942

Published by:

THE ANBU NILAYAM

Ramachandrapuram::Trichy Dt.

Shakti press Ltd,. Karaikudi

Link to comment
Share on other sites

பொருளடக்கம்

பதிப்புரை

அணிந்துரைகள்

திருவிண்ணப்பம்

இயலடக்கம்

கடவுளியல்

உலகியல்

அறவியல்

அறிவியல்

அன்பியல்

நடையியல்

இல்லறவியல்

குலவியல்

தொழிலியல்

அருளரசியல்

யோகவியல்

சித்தியியல்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பதிப்புரையை அன்புநிலையத்தாரும் அணிந்துரையை டாக்டர் உ.வே. சாமிநாதையர் வி.கல்யாண சுந்தரனார் கவிஞர் திரு.தேசிக வினாயகம் பிள்ளை ஆகியோரும் எழுதியுள்ளனர். முன்னுரையும் தவிர்த்து நூலுக்குள் நுழைகின்றேன்.

Link to comment
Share on other sites

கடவுளியல்

1. கடவுள்

ஓங்கார மாகி

யொளியா யுயிர்க்குயிராய்

நீங்காதான் இன்ப நிறைவு.

உள்ளத்தான், ஓங்கு

மூலகத்தான், பேரின்ப

வெள்ளத்தான் விண்ணின் விளக்கு.

எண்குணத்தான், ஏகனே,

எல்லா மடங்கவுளான்

புண்ணியனாம் போதப் பொருள்.

காற்றைக் கனலைக்

கதிரைக் கடலுலகைத்

தோற்றினா னன்பர் துணை.

எல்லா மவனுடைமை்்;

எல்லா மவனாணை;

எல்லா மவன்; பொதுவென் றெண்.

Link to comment
Share on other sites

2. உள்ள பொருள்

பெயர்வடி வாதியதோர்

பேதங் கடந்த

வுயர்பொருளொன் றுண்டென் றுணர்.

பலர்பற் பலவாகப்

பாரிற் பகர்வர்;

உளனெருவ னென்றே யுனர்.

ஐங்கோட்டைக் குள்ளே

யரசாளு மன்னவனை

ஐந்தடங்கி யன்பா லறி.

அருளாலே யுள்ளத்

தறிவா யிலங்கும்

பொருளாலே யின்பம் பொலிவு.

விழிமி னெழுமினுள்ளே

விண்ணரசைக் கண்டு

செழிமின்சத் சித்தா னந்தம்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

நான் இந்த புத்தகத்தை சுமார் பதின்னான்கு வருடங்களின் முன் படித்துள்ளேன். சூப்பரான, மணியான ஒரு புத்தகம்... யோகசித்தி என்ற சுத்தானந்த பாரதியால் எழுதப்பட்ட அற்புதமான இந்த நூலை அனைவரும் ஒருமுறை வாசித்து மகிழ வேண்டும். இங்கு சுத்தானந்த பாரதியின் அழகான, அற்புதமான கவித்துவத்தை, திறமைகளை காணலாம். இதை எழுதிய இவர் எவ்வளவு பெரிய மகானாக இருக்கவேண்டும் என்பது புத்தகத்தை முழுதாக வாசித்தவர்களிற்கு விளங்கும்.. மேலே வாசகன் குறிப்பிட்டவற்றில் எனக்கு அப்போது பிடித்தமான வரிகள் இப்போது நினைவில் திரும்பவும் வருகின்றது...

காற்றைக் கனலைக்

கதிரைக் கடலுலகைத்

தோற்றினா னன்பர் துணை. :lol:

ஐங்கோட்டைக் குள்ளே

யரசாளு மன்னவனை

ஐந்தடங்கி யன்பா லறி. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள செயல். தொடரட்டும் வாழ்த்துக்கள்.

ஆம் அங்கிங்கெனைதபடி எங்குமுள்ள இறையை அதன் சக்தியைத்தான் நாம் தேடுகிறோம். வணங்குகிறோம்.

'அவன் தேவனுமல்லன், அசுரனுமல்லன், மனிதனுமல்,லன் பசுபஷியுமல்லன், பெண்ணுமல்லன், ஆணுமல்லன், அலியுமல்லன், பிறப்பிறப்புடையவனுமல்லன், குணத்திற்கும் கர்மத்திற்குமப்பால், உளதிற்கும் இலதிற்குமப்பால், மீதியுள்ள எலிலாம் நீங்கிய பின்னும் நீக்கமற நிறைகின்றவன் அவன்". ஸ்ரீமத் பாகவதம். 8.3.24.

திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகரும் அதைத்தான் வணங்கி அதில் ஐக்கியமானைர்.

உயர்திரு வள்ளளாரும் 'அருட்பெருஞ் ஜோதி , தனிப்பெருங் கருணை" யென அதையே கூறினைர்.

திரு வண்ணைமலை ஜோதியும் அதையே உணர்த்துகின்றது.

இவற்றுக்கு முன்னால் உருவ வழிபாடுகள் இதைத் தேடவும், அடையவும் அலையும் மனசை இழுத்து ஒரு முகப் படுத்தவே உதவுகின்றன.

Link to comment
Share on other sites

மஹரிஷி சுத்தானந்த பாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

1984 தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜராஜன் விருதைப் பெற்ற பெருமை கவியோகி மஹரிஷி சுத்தானந்த பாரதி அவர்களையே சேரும். அவர் எழுதிய ஆயிரமாயிரம் நூல்களில், மாபெரும் காவியமான "பாரத சக்தி மஹாகாவியம்" அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய ஒப்பற்ற படைப்பு! அதை படிப்பவர்க்கு கவிதை வீச்சும், தேசப்பெருங்கனலும், தெய்வீகமும் தமிழ் மேல் ஆராக் காதலும் ஏற்பட்டுவிடும் என்றால் அது மிகையில்லை! இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கே அக்காவியம் மிகப்பொருந்தும். ஆனால் அவர் செய்தது ஒரு தமிழனாய் அதுவும் நிஜத் துறவியாய் இருந்ததே! இதே, மற்ற நாட்டினராய் இருந்திருந்தால், இம்மாபெரும் தேசீய கவி, வானளாவும் புகழ் உச்சியில் சென்றிருப்பார். ஆனால், தமிழ் கூறும் நல்லுலகம் அவரது புத்தகங்களை நாடிச்செல்ல, அவர் நிறுவிய தொண்டு நிறுவனமான யோக சமாஜம், சோழபுரம், சிவகங்கை மாவட்டத்திலிருந்து செயல் பட்டு வருகிறது!

shuddha.jpg

படத்தில் இருக்கையில் இருப்பவர் சுத்தானந்தபாரதி

மூலம்: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%...%AE%A4%E0%AE%BF

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.